பிப்ரவரி 28, 2022
பிப்ரவரி 26, 2022
- இயந்திரப்பறவை -
பிப்ரவரி 25, 2022
புத்தகவாசிப்பு_2022_7_நிலவழி
- ஒற்றைச்சாபம் -
- நிறுத்து... நிறுத்து... நிறுத்து... -
"அம்மா... "
"எனக்கு அப்பா.."
"எனக்கு எங்க வீடு.."
"எனக்கு என்னோட கால்.."
"எனக்கு என்னோட கண்ணு.."
"எனக்கு எங்க ஸ்கூலு டீச்சர்.."
"எனக்கு என் தங்கச்சியோட கரடி பொம்மை.."
" எனக்கு நான் ஸ்கூலுக்கு போகனும்.."
"நான் கொஞ்ச நேரம் தூங்கனும்..."
"எங்கப்பாவை ஒரு தடவையாச்சும் பார்க்கனும்.."
எல்லோரும் என்னவேண்டுமென கேட்டார்கள். ஒருவன் மட்டும் எதுவும் கேட்கவில்லை. அவனால் முடியவில்லை. கண்களில் இன்னமும் கலவரம் தெரிகிறது. குண்டு வெடித்து உடல் சிதறியத் தாயைப் பார்த்த அதிர்ச்சியில் பேச்சறுந்து போனவன் அவன்.
அவனுக்காகவும் அவர்களுக்காகவும் நமக்காகவும், நாம் கேட்போம்.
"யுத்தங்களை நிறுத்து..."
"யுத்தங்களை நிறுத்து..."
"யுத்தங்களை நிறுத்து...."
பிப்ரவரி 24, 2022
- நண்பர்களை அழைக்கிறேன் -
போட்டிக்கு முன்பதாக பங்கேற்பாளர்களுக்கு ஒரு நாள் பயிற்சி பட்டறையையும் வழிநடத்தினோம். மாணவர்கள் ஆர்வத்துடனும் எதிர்ப்பார்ப்புடனும் கலந்துகொண்டார்கள். ஒரு நாள் பயிற்சி பட்டறையில் அவர்கள் பெற்ற அறிமுகத்தைத் தொடர்ந்து ஆளுக்கொரு குறுங்கதையை எழுதி போட்டிக்கு அனுப்பி வைத்தார்கள்.
அத்தோடு நின்றுவிடாமல் தொடர்ந்து குறுங்கதைகளை எழுதிக்கொண்டும் இருக்கிறார்கள்.
ஆர்வத்துடன் இருக்கும் இதுபோன்ற இளம் தலைமுறைக்கு தம்மால் இயன்ற பங்களிப்பையும் பல இடங்களில் புதிய தொடக்கத்தையும் ஏற்படுத்தி கொடுத்துக்கொண்டிருக்கும் 'மலேசியத் தமிழ் இயல் எழுத்தாளர் மன்றத்திற்கு' எனது அன்பு.
25-02-2022-டில் நடக்கவிருக்கும் குறுங்கதைப் போட்டி வெற்றியாளர் அறிவிப்பு நிகழ்ச்சியில் நீங்களும் கலந்து சிறப்பிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். நமது கைத்தட்டல்களும் மனதார சொல்லும் பாராட்டு வார்த்தைகளும் இளம் தலைமுறையினர்க்கு அவசியம் என்று நம்புகிறவன் என்கிற முறையும் உங்களையும் அழைக்கிறேன்.
மலேசிய இலக்கியச்சூழல் எப்படி இருக்கிறது என அமர்ந்து குறை பேசாமல், எப்படி இருக்க வேண்டும் என களத்தில் இறங்கி நிறை காணுவதற்கான காரியங்கள் சாதித்துக் கொண்டிருப்பவர்களில் நானும் சிறுபுள்ளி என இருப்பதில் மகிழ்ச்சி...
இக்குறுங்கதை போட்டியின் பயிற்றுனராக எனக்கு கிடைக்கப்பெற்ற கதைகளில் பலவும் புதிய பாணி, புதிய கதைக்களன்களைக் கொண்டிருந்தன. அவை பற்றி நாளை நிகழ்ச்சியில் பேசுகிறேன்.....
பிப்ரவரி 23, 2022
- அம்மா வருவேன் -
"நீங்க ரொம்ப பாவம். இப்படி ஓர் அம்மாவை நான் பாக்கல... ஆனா நீங்க எனக்காக எல்லாமே செய்றீங்க... என்னால உங்களுக்கு ஒன்னுமே செய்ய முடியலம்மா..."
"பெத்த பிள்ளைக்கு செய்யாத அம்மா எங்கயா இருக்காங்க.. உனக்கு ஒன்னும் ஆகாது.. அம்மா இருக்கேன்.. உனக்கு ஒன்னுமில்ல.. நீ நல்லாய்டுவ.... மறுபடியும் அம்மாகூட கடைக்கு வருவ.. பேசுவ.. சமைக்க உதவி செய்வ.. சண்டை போடுவ.. விளையாடுவ..."
"அம்மா ரொம்ப வலிக்குதுமா...."
"கொஞ்சம் பொறுத்துக்கய்யா... இப்பதான் மருந்து சாப்டிருக்க கொஞ்ச நேரத்துல சரியாகிடும்.. ஆம்பிலன்ஸும் வந்துகிட்டு இருக்கு...."
"மா.. நீங்க போய் தூங்குங்க.. என் கூடயே இருக்கீங்க... சரியா தூங்கியே ரொம்ப நாள் ஆச்சிமா...."
"தூக்கமாய்யா முக்கியம்... உன்னையை இப்படி விட்டுட்டு அம்மாவால எப்படியா நிம்மதியா தூங்க முடியும்..."
"நானே உன் நிம்மதியைக் கெடுத்துட்டேன் மா... மன்னிச்சிடும்மா..."
"அப்படிலாம் பேசாதப்பா..."
"வலிக்குதும்மா...ரொம்ப வலிக்குதும்மா..."
"அம்மா மடில படித்துக்கப்பா.. எல்லாம் சரியாகிடும்... ஆம்பிலன்ஸும் வந்துகிட்டு இருக்கு...."
"ம்மா....ம்மா...."
"அம்மா இருக்கேன்.. உனக்கு ஒன்னும் ஆகாது.... "
"ம்மா....."
"தோ ஆம்புலன்ஸ் வந்துடிச்சி...."
ஆம்புலன்ஸ் வந்துவிட்டது. அவசரமாக இறங்கியவர்கள் கூடியிருந்த உறவினர்களை நகரச்சொன்னார்கள். பாதி மயக்கத்தில் இருந்தவனை கட்டிலில் தூக்கி வைத்தார்கள். அம்மா வாசலுக்கு சென்றுவிட்டார்.
அவர்கள் அவனை கட்டிலில் வைத்து வெளியே கொண்டு வந்துகொண்டிருக்கிறார்கள். வாசலில் நின்றிருந்த அம்மாவின் வெண்புகையை ஊடுருவி அவன் கட்டிலில் கடந்து சென்றுக்கொண்டிருக்கிறான்.
"ம்ம்மா...மா..." முனகினான்.
"உனக்கு ஒன்னும் ஆகாதுயா.. நீ எப்ப கூப்டாலும் அம்மா வருவேன்.... உனக்கு ஒன்னும் ஆகாது...."