நவம்பர் 17, 2022
நவம்பர் 13, 2022
என்செய்வோம் மாமழையே
முன்னெப்போதுமான
மழையல்ல நீ
உன்னோடிப்போது
விளையாட முடிவதில்லை
கொஞ்சமே மழையென்று
கொஞ்சினால்
அஞ்சி விலகும்படி
அலையடிக்க வைக்கிறாய்
சாலைக் குழிகளை
மறைக்கிறாய்
சாக்கடையை வீட்டிற்குள்
நிறைக்கிறாய்
எப்போதோ வீசிய குப்பைகளை
வட்டியுடன் வந்திறக்கி
வைக்கிறாய்
ஆறுகள் மீது கோடுகள்
போட்டு
வீடுகள் கட்டினால்
ஏழரையாய் கூரையில்
எங்களை கூட்டம் போட வைக்கிறாய்
இனி உன்னை நம்பி
நனைந்தாடவோ
முழுக்க குளித்து
விளையாடவோ முடியாது
எங்கள் அலட்சியங்களை எப்போது
நீ கணக்கிட ஆரம்பித்தாயோ
எங்கள் குப்பைகளை எப்போது
உனக்கு அஜீரணம் என கண்டாயோ
இனி நாங்கள் வேறெங்கும்
செல்ல முடியாது
எங்களாலான கழிவுகளுக்கு
நாங்களே பொறுப்பேற்க வேண்டும்
என சொல்வதற்கா
இப்படி பாடம் புகட்டுகிறாய்
தூறு
பொழி
நனை
சொல்
நாங்கள் வேறு
என் செய்ய வேண்டும்
மாமழையே
நவம்பர் 10, 2022
வேறென்ன செய்ய முடியும்
யாரோ சொல்லிய உன்
பெயரில்
ஏதோ மெல்லிய ஓர்
உணர்வு
அந்த யாரோ
அழைத்த எவரோ
நிச்சயம் நீயாக இருக்கக்கூடாது
நீ என் முன்னே
வரவே கூடாதென்று
வாசலிலேயே காத்திருப்பவனால்
வேறென்ன செய்ய முடியும்...
நவம்பர் 02, 2022
- உனக்கென்ன வேணும் சொல்லு -
கைக்கு எட்டா தூரம் என்றாலும்
நீ ஏன் கலங்க வேண்டும்
கொடுக்க வேண்டியவன்
நானல்லவா
எத்துணை தூரம் என்றாலும்
நீ ஏன் கலங்க வேண்டும்
கடக்க வேண்டியவன்
நானல்லவா
பரிசுகள் என்றால் கேட்பவளுக்கு
மட்டுமல்ல
கொடுப்பவனுக்கும் மகிழ்ச்சிதானே
பெற்றுக்கொள்
நீ
கற்றுக்கொடுக்கும் காதலுக்கு
ஈடாக எதுவேண்டுமென்றாலும்
கொடுக்கலாம்
ஒரு விண்ணப்பம் மட்டுமே
கம்பெனியின் போனஸ் போடும்வரை
கொஞ்சம் காத்திரு
சம்பளத்திற்கு செலவிருக்கிறது....
#தயாஜி
அக்டோபர் 07, 2022
கண்ணீர்க்குடி நாகங்கள்
இங்கு காரணங்களின்றி கண்ணீர் வருவதில்லை
சிலரின் காரியங்களில்லாமல் நாம் அழுதிடுவதுமில்லை
நம்மை அழவைப்பதில் அப்படியென்ன ஆனந்தத்தைக் கண்டிடப்போகிறார்கள்
சொல்ல முடியாது
அவர்கள் தின்ற சோறு செரிக்க
யாரும் அழத்தான் வேண்டும் போல
கண்களில் என்ன அட்ச்சயப்பாதிரத்தையா வைத்திருக்கிறோம்
அழ அழ கண்ணீர் வர வர
வறட்சியின்றி வருகை தருகிறது த(க)ண்ணீர்
ஒருத்தனுக்கு அழது சாவதா
இல்லை
ஒவ்வொருவருக்குமாகச் சிரித்து வாழ்வதா என்ற
சுயவிசாரனையே நம் சுயத்தின் விசாரணை
கண்ணீர்ப்பட்ட ஈர
கைக்குட்டையைப்
புன்னகையென்னும் குளிர்நெருப்பில் உலர வைப்போம்
கண்ணீரை விட பலம் கொண்ட ஆயுதம்
புன்னகை என
உணர வைப்போம்
கண்ணீர்க்குடி நாகங்களை இன்றுமுதல்
பசியில் வைப்போம்....
#தயாஜி
பிப்ரவரி 25, 2022
- ஒற்றைச்சாபம் -
ஜூலை 31, 2021
அப்போதும் இப்போதும்
- அப்போதும் இப்போதும் -
அப்போது
அங்கு ஒரு குழந்தை
பால் குடித்துக் கொண்டிருந்தது
அப்போது
அங்கு ஒரு சிறுமி
படம் வரைந்துக் கொண்டிருந்தாள்
அப்போது
அங்கு ஒரு சிறுவன்
விளையாடிக் கொண்டிருந்தான்
அப்போது
அங்கு ஓர் அம்மா
சமைத்துக் கொண்டிருந்தார்
அப்போது
அங்கு ஓர் அப்பா
வேலைப் பார்த்துக் கொண்டிருந்தார்
அப்போது
அங்கு ஒரு பள்ளிக்கூடம்
நடந்துக் கொண்டிருந்தது
அப்போது
அங்கு ஒர் ஓடை
ஓடிக் கொண்டிருந்தது
அப்போது
அங்குச் சில பாட்டிகள்
வெற்றிலை இடித்துக் கொண்டிருந்தார்கள்
அப்போது
அங்குச் சில தாத்தாக்கள்
கலந்துப் பேசிக் கொண்டிருந்தார்கள்
இப்போது
இங்கு ஒரேயொரு
நட்சத்திர நீச்சல் குளம்
இருக்கிறது
டிக்கட் உள்ளவர்களுக்கு
அனுமதியுடன்
#தயாஜி
ஜூலை 30, 2021
- முகவரியற்ற கடிதம் -
- முகவரியற்ற கடிதம் -
ஏன் எழுதுகிறேன்
என்கிற கேள்வியின்
நுனியில் அமர்ந்துக் கொண்டே
எழுதவேண்டி உள்ளது
பதில் கிடைக்காத
எத்தனையோ கேள்விகள்
இதனையும் இணைத்துவிட
தோன்றவில்லை
விட்டு விலகவும்
முடியவில்லை
உலகின் ஏதோ ஒரு
மூலையில்
அழுபவனுக்கு அருகில்
நானும்தான் அழுதேன்
என ஆறுதல் செல்வதற்கு
பெயர் தெரியாத
மனிதனொருவனின்
சொல்ல முடியாத துயரில்
பங்கு கொள்வதற்கு
அழுது அழுது
ஆவப்போவது ஒன்றுமில்லை
என்கிற அனுபவத்தைச்
சொல்லிச் செல்வதற்காவது
ஒருவன் எழுத வேண்டாமா
சொல்லுங்கள்
#தயாஜி
- யாராக பிறக்கலாம் -
- யாராக பிறக்கலாம் -
நிசப்தத்தின் பேரிரைச்சலைத்தனிமையில்கேட்பதென்பதுகண்களைக் கட்டி கடலில்தள்ளிவிடுவது போலானது
உதவிக்கு அழைக்கவும் முடியாதுஉடன்குதித்தவர்கள் யாரென்றும் தெரியாது
மங்கிப்போன மின்விளக்கின்கீழ்அழுவதுவேறு யாரோ அல்லநிச்சயம் என் கனவுதான்
அதோ நிழலாக தன்னைநினைத்துக் கொண்டநாயின் வாலொன்றுவெளிச்சம் வரும் வரைஅசைமாட்டேன் என்கிறது
நீ நிழலல்லநிஜமெனயார்தான் சென்று சொல்வது
எதிர்கால ஆசைதலைப்பில் எழுதிவைத்த நேரத்தில்எதையாவது பூசிதோளை வெளுத்திருந்தால்கறுப்பாக இல்லாமல்கல்லூரியில் இடம் பெற்றிருப்பேன்
படித்ததைஎழுதி பெற்றமதிப்பெண்களைவிடயார் வீட்டில் என்னவாக பிறந்தோம்என்ற அடையாளமேபோதுமானதாக இருக்கும் போதுஎதற்கு இத்தனைச் சிரமங்களில்பரிட்சைக்கு பழகுகின்றோம்
ஆனால் ஒன்றுநாயாகக்கூட பிறக்கலாம்நாடற்வனாக பிறக்கவே கூடாது
- நேசத்திற்குரிய இரவுகளே -
- நேசத்திற்குரிய இரவுகளே -
இரவுகள் சுதந்திரமானவை
கண்ணைச் சூழ்ந்த
இருளில் திரையில்
யாரை வேண்டுமானாலும்
வரச்சொல்லி அழைக்கலாம்
எந்த வாசத்தையும்
முகர்ந்துக் காட்டலாம்
எந்த உணர்விலும்
வாழ்ந்துப் பார்க்கலாம்
எப்போதோ செய்த தவறுக்கு
வருந்தி அழலாம்
நண்பர்கள் செய்த துரோகத்தை
மீண்டும் காணலாம்
அமைதியின் பேரிரைச்சல்
காதுகளை கிழித்தாலும்
சிரித்துக் கொள்ளலாம்
இரவுகள் எப்போதும்
தெய்வீகமானவை
அதன் ஆழம் அறிய
இருளின் இருளாக
கரையவேண்டும்
நம் நிழலாக நாமே
பிறக்க வேண்டும்
ஒட்டிக் கொண்டிருக்கும் உடலை
ஒதுக்கி
சுவர்களில் பிரதிபலிக்க வேண்டும்
நிழலானப் பின்பும்
நிச்சயம் நினைவுகள்
வந்தேத்தீரும்
சமாளிக்க கொஞ்சம்
தைரியமும் கொஞ்சமேனும்
அழுகையும்
வேண்டும்...
- தயாஜி
- பகல்கள் விற்பனைக்கு -
உங்கள் இரவுகளைஎனக்களிக்க இயலுமாபதிலாக என் பல பகல்களைத்தந்துவிடுகிறேன்எனக்கு இரவுகள் போதும்எல்லார்க்கும் உறக்கம்உண்டானப்பின்னேதான்ஏதோ கொஞ்சம்அழ முடிகிறதுஅழ அழ மட்டுமேமனம் லேசாகிறதுஅழுதப்பின்னே அதன்பாரம் இரட்டிப்பாகிவிடுகிறதுஎத்தனைக் கனவுகளுடன்கால்தடம் வைத்தோம்அத்தனையுமா அடைந்துவிடுகிறோம்பித்தனைப் போல் அலையவும்முடியவில்லைபுத்தனைப் போல் அமரவும்இயலவில்லைஅழும் கண்ணீரோசையில்காதுகள் கொஞ்சமேனும்அடைத்துக் கொள்கின்றனதேம்பித் தேம்பி அழவும்விம்மி விம்மி ஆழவும்காரணங்களா இல்லைஏதோ ஒன்றுகாத்திருப்பதாகநமக்கு நாமே சொல்லிக்கொள்ளும் ஆறுதல்களுக்குபஞ்சமில்லாத பகல்களைஎடுத்துக் கொண்டுநிசப்தமான இரவுகளைகொடுத்து உதவுங்கள்தூரத்து நட்ச்சத்திரங்களுடனாவதுபேசிவிட்டு வருகிறேன்அவை போலியாய் புன்னகிக்ககற்றுக்கொள்ளாதவை....
ஜூலை 08, 2021
புத்தகவாசிப்பு_2021 ‘கடலெனும் வசீகர மீன் தொட்டி’
புத்தகவாசிப்பு_2021 ‘கடலெனும் வசீகர மீன் தொட்டி’
- அழுகை -
- அழுகை -
அழுவதற்கே ஆசைப்படுகிறேன்கண்ணீரில் ஏதோவொன்றுஇருந்திடவேச் செய்கிறதுசிலவற்றை நினைக்கஇனித்திடவும் செய்கிறதுஏதோ ஒன்றைவெறித்துப்பார்த்து அழட்டுமாஏதுமில்லாதததைநினைத்துக்கொண்டே அழட்டுமாகண்களில் வழியும்நீர்மட்டுமா அழுகைகண்களுக்கேத் தெரியாமல்வலிப்பதுதானே அழுகைஅழுதுவிட்ட பொழுதில்பாரம் குறைந்து லேசாகிறேன்இத்தனைப் பாரத்தை எங்குதான்பதுக்கியிருந்தேன்மூச்சு வாங்கிக்கொண்டு அழுகிறேன்மூச்சு விடுவதற்காகவாவது அழ வேண்டாமாஅழுத கண்ணில் மங்கலாய்த் தெரியும்உருவங்களின்உள்ளத்தை எப்படி தெளிவாகக் காண்கிறேன்சின்ன வயதின் பிடிவாத அழுகைசிதைத்துப்போன வாழ்விற்கான அழுகைஎன அழுவதற்கானகண்ணீர்த்துளிகளின்அட்சயப்பாத்திரம் எங்குதான் மறைந்திருக்கிறதோஎப்போது கலங்கினாலும்கண்ணீரை வழியவிடுகின்றதுஅழுவது ஒன்றும்அற்பச்செயல் அல்லஅது ஆன்மாவைச்சுத்தம் செய்யும் ஆசீர்வாதம்மனசை லேசாக்கும் மார்க்கம்..#தயாஜி






