பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

ஜூன் 29, 2025

- மனமலர் -


- மனமலர் -

நீண்ட நாட்களுக்கு பிறகான மலர்தல்.
சிறுசிறு விதைகளாய் விழுந்ததில் இருந்து தான் மட்டும் தப்பிப் பிழைத்ததில்  ஒன்று இந்த நித்திய கல்யாணி. 

அதன் மலர் போல அவள் பெயரும் அழகானது. வசீகரமானது. முதலில் இவளை நித்திய கன்னி என்றே புரிந்து கொண்டிருந்தேன்.  வயதின் காரணமாகவும் அது கொடுக்கும் கிளர்ச்சியின் காரணமாகவும் இருக்கலாம். இனி இல்லை, ஏனெனில் நாங்கள் வளர்ந்துவிட்டோம். 

முதல் பூ என்பதால் மட்டுமே, அவள் மலர்த்தும்வரை காத்திருந்து அந்த மலரை பார்க்கிறேன். இந்த இரவில் மெல்லிய மழையில் நிலவற்ற குறையைத் தீர்க்கிறாள்.

ஏதாவது ஓர் உயிரை நம் வாழ்நாள் முழுக்க உடன் வைத்துக்கொண்டே இருக்க வேண்டும். மனம் துவண்டழும் போதெல்லாம் ஆறுதலுக்கு அவை முன் வந்து நிற்கும்.

என்னைப் பார்க்காத போதெல்லாம் வாடி வதங்கும் செடிகளைவிட்டு, எனக்காக மலர்விடும் அரும்புகளைவிட்டு, என்னைப் பார்த்து தலையசைக்கும் அதன் குறும்புகளைவிட்டு, என்னால் எப்படி போக முடியும். நீங்கள் வெறும் செடிகளா என்ன?
என் சகாக்கள் அல்லவா...

ஏனோ எனக்கு நண்பர்கள் அதிகமில்லை. ஆனால் எந்த / எதன் நட்பில் இருந்தும் நான்  ஒருபோதும் தனித்துவிடப்படவில்லை.

மண்படும் எல்லாமும், காற்றணைக்கும் ஒவ்வொன்றும் என்னை அதனதன் சகாவாகவே பார்க்கின்றன...

#தயாஜி #புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்