பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

ஏப்ரல் 23, 2023

உரையாடுவோம்


நண்பர்களும் தம்பிகளுமான ஆதித்தன் மகாமுனி, இளமாறன் ஆகிய இரண்டு இளம் படைப்பாளிகளுடன் நேற்றிரவு ஒரு அசத்தலான சந்திப்பு நடந்தது.

கவிதைகள் கதைகள் எழுத்தாளர்கள் என பலவற்றைப் பேசிப்பேசி நேரம் போனதே தெரியவில்லை.

இளம் கவிஞர் இளமாறன், அவர் எழுதிய கவிதைகளில் சிலவற்றை கொண்டு வந்திருந்தார். கவிதை வாசிப்பு கவிதையுள் வாசிப்பு என கிடைத்த நேரத்தைச் சரியாக பயன்படுத்திக் கொண்டோம். இளம் படைப்பாளியாக அவர்களிடமிருந்து வந்த கேள்விகள் முக்கியமானவை. என் பார்வையில் இருந்து சிலவற்றை பேசினேன். உண்மையில் பேசினோம். பயனாக இருக்கும் என நம்புகிறேன்.

மீண்டும் பேசுவோம். வாய்ப்புள்ளவர்கள் நீங்களும் கூட வரலாம். உங்கள் கவிதைகளையோ கதைகளையோ அல்லது நீங்கள் ரசித் படைப்புகளையோ கொண்டு வாருங்கள். நாம் உரையாடுவோம்......

இளமாறனின் கவிதைகளில் ஒன்றை மட்டும் அவர் அனுமதியின்றி இங்கு பகிர்கிறேன். எனக்கு பிடித்த கவிதைகளில் இதுவும் ஒன்று..

'ஊமைச்சொல்'

வேண்டாத பார்வையாக
இறுக்கமாய் வந்து
விழுகிறது
மனதை பெயர்த்தெறியும்
உன்
வார்த்தை

- கவிஞர் இளமாறன்.

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்