பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

ஜனவரி 16, 2016

விதையாவேன்

என்றோ ஒரு நாள்
பூமி வந்துச் சென்றவனாய்
அவ்வபோது நினைக்கிறேன்
திரும்ப திரும்ப
வந்து போகும் நினைவுகளின்
விளைவுகள் மட்டுமே
எனக்கு நெருக்கமானவையாக
மாயத்தோற்றம் போடுகின்றன
என் மனத்தோற்றம் முன்
இந்த மாயத்தோற்றங்களுக்கு
ஏமாற்றம்தான்
மாயை சூழ் மனதின குலத்தின்
மிஞ்சப்போகும்
ஒற்றையறிவு உயிர் நான்
நானே மீண்டுமொரு பரிணாமத்திற்கு
விதையாவேன்

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்