பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

ஜனவரி 08, 2016

தாயாக்கி அழகு பார்ப்பவர்கள்





குழந்தைகள் எப்போதும்
குழந்தைகளாக இருப்பதில்லை
அவர்கள் வளர்ந்துவிடுவார்கள்
வயதில் முதிர்ந்துவிடுவார்கள்

தங்களின்
குழந்தைத்தன்மையை தொலைத்துவிடுவார்கள்


ஆனால்

இவர்கள்
எவ்வளவு வளர்ந்தாலும்
எவ்வளவு முதிர்ந்தாலும்
எப்போதும் குழந்தைகள்தான்

தங்களுக்கென்று ஒரு மொழி
தங்களுக்கென்று ஒரு சிரிப்பு
தங்களுக்கென்று ஒரு அசைவு
என தனித்தனியே

தங்களுக்கான உலகத்தை
தாங்களே
உருவாக்கிய பிரம்மாக்கள்

வயது கடந்தும்
கொஞ்சி பேச வாய்ப்பளிப்பவர்கள்
யாரென்ன சொன்னாலும்
எந்த பெயர் வைத்து அழைத்தாலும்
நீங்களும் நாங்களும்

'ஆட்டிஸம் ' குழந்தைகளுக்கு தாய்தான்

நம்மை
தாயாக்கி அழகு பார்ப்பவர்களை
சேயாக்கி அன்பு செய்வோம்.....

அன்புடன் தயாஜி

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்