பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

பிப்ரவரி 18, 2014

கிடக்கும் மனிதனில் நடக்கும் பிணம் நான்

நடைப்பயணம் வழி நெடுக்க பிணங்கள் நடமாடியும் நடனமாடியும் அறிமுகமற்ற ஆடையற்ற ஆட்கள் மன்னிக்கவும் பிணங்கள் அக்குல்களில் வாடையுடன் வரவேற்புக் கைகளுக்கு இடையில் நான் ஆற்றைக் கடக்காமலே முதலையின் முதுகில் கால் வழுக்கினேன் காப்பாற்றி கரைசேர்க்கிறது பிணம் ஒன்று ஏறக்குறைய என் சாயல் கொண்ட பிணமது நானாகவும்...

ரெண்டுகால் பூச்சியும் எட்டுகால் மனிதனும்

ரெண்டுகால் பூச்சியும் எட்டுகால் மனிதனும்     அந்த எட்டுகால் பூச்சியை அப்போதே நசுக்கியிருக்க வேண்டும். செய்யவில்லை. தவறுதான். இனிமேலும் ஏதும் செய்ய இயலாது. கை வலிக்கிறது.     படித்தும் வேலை இல்லாதவன் எங்கும் வேலை செய்வான் தானே. நானும் அப்படித்தான். ஒருவேளை நான் படித்தவன் என்பதால் கூட வேலையில்லாதவனாக இருக்கலாம்.  ஆனால் வேலை அவசியம். என் நிலை அப்படி. முன்பெல்லாம்...

கழிவறையும் பழிவாங்கும் வழிமுறையும்: சிறுகதை விமர்சனம்

(கழிவறையும் பழிவாங்கும் வழிமுறையும் சிறுகதை குறித்து மஹாத்மன் எழுதியிருக்கும் கட்டுரை) பத்திரிகைகளில் இக்கதைக்கான விமர்சனங்களைப் பார்த்தேன்.மிகக் கடுமையான கண்டனத்திற்கும் உட்ச பட்ச தாக்குதலுக்கும் இழிவிற்கும் ஏளனத்திற்கும் உள்ளாகி இருந்தது. இதற்குப் பின்னால் பழிவாங்கும் நுண்ணிய அரசியல் இருந்தாலும் அதனை ஒரு பக்கம் ஒதுக்கி வைத்து இக்கதைக்கான விமர்சனத்தை உண்மையான வார்த்தைகளோடு பதிவு செய்கிறேன். இதுவொரு...

எளிய கேள்விகளும் எளிய பதில்களும்

(கழிவறையும் பழிவாங்கும் வழிமுறையும் சிறுகதை குறித்து கே.பாலமுருகன்)     புனைவுகள் குறித்த அபத்தமான கருத்துகள் பல்வேறு தரப்பிடம் இருந்து வருகின்ற சூழலில் வல்லினத்தின் சிறுகதை பொறுப்பாசிரியர் கே.பாலமுருகன் பொதுவாக எழும் கேள்விகளுக்கு பதில் கூறுகிறார்.   ஒரு இலக்கிய படைப்பில் கூறப்படும் கருத்தை ஒட்டியே அதை படைத்த படைப்பாளின் குணமும் இருக்கும் என்று கூறப்படுகிறதே, இது சரியா? உதாரணமாக...

கண்றாவிகளைச் சுமக்கும் கலாச்சாரம்

(கழிவறையும் பழிவாங்கும் வழிமுறையும் என்ற சிறுகதையினை ஒட்டி ,இரா . சரவணதீர்த்தா எழுதிய கட்டுரை ) நேற்று முன்தினம் முக நூலில் என் அன்புக்கினிய தோழி மாலா ஒரு கேள்வியை முன்வைத்தாள். ” மலேசிய நாட்டில் இதுபோன்ற கலாச்சாரங்களை வரவேற்கலாமா?” என்பது அக்கேள்வியின் சாரமாக இருந்தது. தாயாஜியின் சிறுகதையே இவரின் கேள்விக்குப் பின்னணியாக இருந்தது.   இந்த கேள்விக்கு பதில் கொடுப்பதற்குப் பதிலாக...

படைப்பாளி தண்டிக்கப்படலாகாது

(கழிவறையும் பழிவாங்கும் வழிமுறையும் சிறுகதை குறித்து ஸ்ரீவிஜயா எழுதியிருக்கும் கட்டுரை) கடந்த சில வாரங்களாக, தமிழ் பத்திரிகைகளை அலங்கரித்த வல்லினத்தின் சிறுகதை ஒன்றின் கண்டன எழுத்துகளை அனைவரும் அறிந்ததுதான். கதையில் என்ன உள்ளது என்கிற விலாவரியான விளக்கங்களையெல்லாம் பலர் சொல்லியாகிவிட்டது. புதிதாக விமர்சனம் என்கிற பெயரில் அதை மீண்டும் நான் கிழித்துத்தொங்கப் போடுவதால் சீர்கெட்ட சமூதாயம் திருந்தி...

வாயில் விழைச்சு - பெருமாள் முருகன்

(கழிவறையும் பழிவாங்கும் வழிமுறையும் என்ற சிறுகதை, சிலரால் சர்ச்சைக்குள்ளாக்கப்பட்டபோது படித்த கட்டுரை. இக்கதை குறித்த கேள்விகளுக்கும் இது போன்ற புனைவுகளுக்கும் ஏற்றதாய் அமையும் என்று இக்கட்டுரையை இங்கே மீண்டும் பதிகிறேன்.) ஒவ்வோர் ஆண்டும் பெரும் நிறுவனங்களில் ஜனவரி தொடங்கி மார்ச் வரை நிதிக் கணக்குகள் முடிக்கப்படும் காலம் என்பதால் முசுவாக இருப்பார்கள். அதுபோலக் கல்வி நிறுவனங்களில் இது கருத்தரங்கக்...

கழிவறையும் பழிவாங்கும் வழிமுறையும் – எனது பார்வை

(கழிவறையும் பழிவாங்கும் வழிமுறையும் என்ற சிறுகதை குறித்து கங்காதுரை எழுதிய கட்டுரை) முதலில் இந்தச் சிறுகதையை எழுதிய நண்பர் தயாஜியை மனதார பாராட்டுகிறேன். மலேசியத் தமிழ் இலக்கியத்தில் ஒரு சிறுகதை அதிகம் வாசிக்கப்பட்டு விமர்சிக்கப்பட்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருப்பது இதுவே முதன் முறை. இம்மாதிரியான கருவை கையில் எடுத்துக்கொண்டு எழுதுவது என்பது சவால் நிறைந்தது. அதை எதிர்கொள்ள ஒரு ‘தில்’ வேண்டும்....

கலைக்கு மரியாதை செய்யத் தெரிந்தவர்கள்

(கழிவறையும் பழிவாங்கும் வழிமுறையும் என்ற சிறுகதையினை குறித்து ஷோபா சக்தி எழுதிய கட்டுரை) கழிவறையும் பழிவாங்கும் வழிமுறையும்’  என்ற கதையை எழுதியதற்காக தயாஜி மீது கலாசார போலிஸ்களால் தொடுக்கப்படும் தாக்குதலும் தயாஜியை அவர் பணியாற்றிய அரசு நிறுவனத்திலிருந்து பணிநீக்கம் செய்ததும் கடுமையான கண்டனத்திற்குரியது.  கடவுள் மீதும், பெற்றவர்கள் மீதும், பெற்ற பிள்ளைகள் மீதும் காமுறுவது...

‘கழிவறையும் பழிவாங்கும் வழிமுறையும்’ : தீர்ப்பு உங்கள் கையில்

(கழிவறையும் பழிவாங்கும் வழிமுறையும் சிறுகதை குறித்து அ.பாணியன் எழுதிய கட்டுரை) கடந்த சில வாரங்களை மிகவும் முக்கியமான நாட்களாக உணர்கிறேன். எனக்கு மட்டும் அல்ல. மலேசிய இலக்கிய வாசகர்கள் பலருக்கும் இவை முக்கியமான நாட்கள்தான். காரணம் வல்லினத்தில் வெளிவந்த தாயாஜியின் சிறுகதை தான். ஒரு மலேசிய படைப்பாளி எழுதிய இலக்கிய படைப்பை முன்வைத்து பரவரலான கருத்தாடல்கள் இடம்பெருவது என்பது இந்நாட்டு இலக்கிய பரப்பில்...

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்