பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

ஏப்ரல் 09, 2011

பேனாக்காரன் 4


தங்கமீன் என்ற இணையப்பக்கத்தில் எனக்கு எழுத வாய்ப்பு தந்து அதன் வழி பத்தியை பதிய என்னாலும் முடியும் என கோடிட்டுக் காட்டிய அதன் ஆசிரியர்க்கு நன்றியை சொல்லிக் கொள்கின்றேன். மூன்று மாதம் எழுதிய அந்த பேனாக்காரன் என்ற தொடர் நான்காம் பாகத்தை தொடரவில்லை. அதற்காகச் சொல்லப்பட்ட காரணங்கள் இதுதான். 1. ஓர் இணையப் பத்திரிக்கையில் எழுதுகின்றவர்கள் மற்ற இணையப் பத்திரிக்கையில் எழுத கூடாது. 2. பேனாக்காரன் எழுதத் தொடங்கிய சமயம் மலேசிய இணைய இதழான வல்லினத்தில் அதன் ஆசிரியர் மா.நவின் என்னை வல்லினத்தும் வாய்ப்பினை கொடுத்தார். இந்த இரண்டு மட்டும் போதுமானது. வல்லினத்தில் என் பயணிப்பவனின் பக்கம் பாகம் ஒன்று வெளிவந்ததும்; தங்கமீன் ஆசிரியர் என்னுடன் மின்னஞ்சல் வழி தொடர்பு கொண்டு இதுவரையில் நான் அறிந்திராத முகத்தினைக் காட்டி; வல்லினம் போதும் என்னை வளர்த்திட, தங்கமீன் தேவையில்லை என சொல்லிவிட்டார். அதோடு அடுத்த வார்த்தையாய் வந்தது ‘தங்கமீன் உங்களை அடையாளப்படுத்தியது என குப்பையாய் இனி பேச வேண்டாம். உங்களால் நிச்சயம் நல்ல எழுதினைக் கொடுக்க முடியும் வாழ்த்துகள்’ . இருந்து அவர் மீது கோவம் கொண்டு என்னால் எதனையும் செய்ய முடியவில்லை. செய்யும் அவசியமும் எனக்கில்லை. பின்னர் எங்களை அறிமுகப்படுத்திய முகநூலில் இருந்து என்னை விலக்கிவிட்டார். ஒன்று மட்டும் எனக்கு புரியவில்லை. நான் மட்டும் ஓர் இணைய இதழில் எழுதினால் மற்ற இணைய இதழில் எழுதக் கூடாதாம் ஆனால் மற்றவர்கள் இங்கும் எழுதுவார்கள்;அங்கும் எழுதுவார்கள்;எங்கும் எழுதுவார்கள், அது மட்டும் சாத்தியமாம்..! இவர் தங்கமீனுக்கு விதிவிலக்கோ..? சரி விடுவோம்... எழுத வேண்டியது எவ்வளவோ உள்ளது. பேனாக்காரனை எந்த ஒரு காரணம் சொல்லியும் நிறுத்த மனமில்லை. இனி தொடர்ந்து என் வலைப்பூவிலும் முகநூலிலும் வெளிவரும். இதனை திருத்துவதற்கோ செதுக்குவதற்கோ குறிப்பிட்ட யாரும் இல்லை. இதனைப் படிக்கும் நீங்கள் (யாராக இருந்தாலும்) உங்கள் வெளிப்படையானக் கருத்தினைப் பதிந்தால், இதன் குறை நிறைகளை என்னால் கவனிக்க முடியும். பேனாக்காரனாக எதனை எழுதப்போகின்றேன்.? எதையெல்லாம் எழுத எண்ணுகின்றேனோ அதையெல்லாம்தான்.

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்