பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

மார்ச் 31, 2011

ஆனாலும் நான் ஆண்


ஒருமுறைக்கு இருமுறை; பலமுறையாய்; ஒவ்வொருவரும் கேட்டார்கள்; உண்மையைச் சொன்னாலும்; உலகத்துக்காகச் சொன்னாலும்; உள்ளம் என்னமோ; ஒத்துக்கொண்டது; எனக்கான ஒருத்தியாய்; அவளை; ஒப்புக்கொண்டது; அவளும் பெண்தான்; அழகானப் பெண்ணல்ல; ஆசிர்வாதம் தவிர; அவள் தாய்தந்தையால்; வேறெதற்கும் வழியில்லை; ஆனாலும் மனம்; ஒத்துக்கொண்டது; எனக்கான ஒருத்தியாய்; அவளை; ஒப்புக்கொண்டது; இருந்தாலும் என் தோழி; தேவி; இதையெல்லாம் மறுத்திட்டாள்; அவளின் தேவை; அழகனுக்கு அழகி; அழகிக்கு அழகன்; அதில் நானும் ஒருவன்; அவள்வரையில் அழகன்; என் எண்ணம் சொன்னதும்; ஏற்காமல் அவள்; என்னை திட்ட வந்தாள்; இரண்டாடுக்கு பின்; என்னை பார்க்க வந்தாள்; நான் அனுப்பியக் குறுஞ்செய்தி; அவளுக்கு; கடுஞ்செய்தி; அதனால்தான் என்னவோ; நேற்றுவரைக்காதோடு பேசியவள்; இன்று; நேராக பார்க்க வருகின்றாள்; இந்த அழகனுக்கு; அந்த பெண்ணா; அம்மா அப்பாவின்; கேள்வி; அவளிடமும் இருந்தது..! ஆச்சர்யம்; நான் பார்த்தவள்; அழகில் மட்டுமல்ல; கண்; பார்வையிலும் குறைவுதான்; பார்ப்பதெல்லாம் அவளுக்கு; மங்கிய வெளிச்சம்தான்; எனக்குப் பொறுத்தமாய்; எத்தனையோபேர் இருப்பார்கள்தான்; அதோ; அவள் தேவி; என் தோழி; என்னைச் சந்திக்க வந்தவள்; என் எதிரிலேயே; தேடுகின்றாள்; என்; இரண்டாண்டு முந்தைய முகத்தை; தெரிந்திருக்க நியாமில்லைதான்; சமீபத்திய அம்மையால் முகம் உருமாறி; குழிகள் நிறைந்த தெருவாகியக் கதை; அவளுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லைதான்; ஒருவேளை; தெரிந்திருந்தாள்; ஒத்துக்கொண்டிருப்பாள்; ஆனால் அம்மாதான்; மங்கிய கண்ணை விட; இந்த அம்மை தழுப்புக்கு; ஆயிரம் அழகிகள் வருவார்கள்; எனப் புலப்புகின்றாள்; இதெற்கெல்லாம் காரணம்; ஆண்; அம்மைத்தழுப்பு ? ; ஆனாலும் நான்; ஆண்......!

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்