பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

மே 20, 2010

அவள் தேவதை..?


காதலியை எல்லாரும் தேவதை என சொல்லுவார்கள் ஆனால் என்வரையில் அது நிஜமாகிப்போனது. என்வரையில் நடந்ததைச் சொன்னால் உங்களுக்கும் அவள் தேவதையாகத்தான் தெரிவாள். அவரவருக்கென்று ஒரு கனவு காதலி இருப்பாள். சிலருக்கு நடிகையாக இருப்பாள், சிலருக்கு வீராங்கனையாக இருப்பாள். எனக்கும் அப்படி ஒரு கனவு காதலி இருந்தாள். தனியே அவளுகென்று புகைப்படமோ விபரமோ என்னிடம் இல்லை. என் மனதில் திடிரெனத் தோன்றி, தாÉ¡கவே உருவம் பெற்றவள்தான் என் கனவு காதலி. தானாகவே உருவம் பெற்றவள் சில நாள்களில் என் கனவில் வரத்தொடங்கினாள்.


சொல்லும்போது கனவுதான், ஆனால் அந்த நேரம் அது கனவா என யூகிப்பது அவ்வளவு சுலபமல்ல. கனவு கலைந்தது எனக்கே குழப்பம் வரும் இது என்ன கனவா இல்லை நனவா..? அன்னிக்கு ஒரு நாள் நான் தனியா நடந்துக் கொண்டிருந்த சமயம். வானில் என்னமோ மாதிரி ஒளி வந்தது. நானும் இதை பெரிசா எடுத்துக்கலை. ஆனால் பாருங்க நான் நின்னு அதையே கவனிச்சேன். அந்த ஒளி என் தலைக்கு நேரே வந்தது . அதனுள் நான் இழுக்கப்பட்ட மாதிரி ஒரு உணர்வு. அங்கு¸தான் என்னோட கனவு காதலியை சந்தித்தேன்.


அந்த ‘மின்சார பார்வையாள்’ என் ‘சம்சாரமானதெல்லாம்’ என்னால் யூகிக்க முடியாமல் நடந்தது . அங்கு பாருங்களேன், கட்டிலில் என் தேவதை எப்படி, எந்த ஒரு சலனமும் இல்லாமல் தூங்குகின்றாள். என்ன..., தூங்கும் நேரம் எந்த இடைஞ்சலும் இல்லாமல் இருக்க காதையும் கண்ணையும் அதோ அங்க தெரியுதே அந்த பெட்டிகுள்ள வச்சிடுவாள். என்ன யோசிக்கிறிங்க..?

இதுக்கே இப்படின்னா நேத்து தலையைக் கழட்டி அந்த பெட்டிகுள்ள வச்சா தெரியுமா.. இப்போ சொல்லுங்கள் அவள் தேவதைதானே..?


............தயாஜி............

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்