அம்மா என் அம்மா...

அம்மா என் அம்மா...
தெய்வம் நீயம்மா...
கருவறையில் சுமந்த..
கற்பக்கிரகம் நீ....
தேயாத நிலவும்
மறையாத சூரியனும்
குறையாத அன்பும்
கொண்டவளே அம்மா...
என் தெய்வம் நீயம்மா.....
கண்விழிப்பென் என்றும்
உந்தன் பெயர் சொல்லி.....
இரவுக்கும் பகலுக்கும்
வானம் வழிகாட்டி..
சரி தப்பை புரியவைப்பாய்
என் தோழி....
எனக்கான உடலைக் கருவாக்கித் தந்தவளே.....
உதிரத்தைப் பாலாக்கி
எனக்காகச் சுரந்தவளே.....
என் தெய்வம் நீயம்மா...
எனக்குள்ளே என்றும் தெய்வம் நீயம்மா...
பசி தூக்கம் துறந்து,
என்னை வளர்த்தெடுத்தாய்....
செய்திடுவேன் உனக்கு
என் உயிரை சமர்பணமாய்...
செய்திடுவேன் உனக்கு என் உயிரைசமர்ப்பணமாய்.....
இருந்தும் ஈடாகாது.....
என் தெய்வம் நீயம்மா....
0 comments:
கருத்துரையிடுக