பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

டிசம்பர் 18, 2009

சுஜாதாவின் வழி, தனிவழி புது வழி...





சுஜாதாவின் "சிறு சிறுகதைகள்" என்ற புத்தகத்தில், என்னைக் கவர்ந்தவற்றை இங்கே இடுகின்றேன்..... இது கொஞ்சம் சுவாரஸ்யமான ஒன்று நீங்களும் முயற்சிக்கலாம்.....(நான் இன்னும் ஆரம்பிக்கலை.. வேலை அதிகம்) கதையின் தலைப்பு நீளமாக இருக்கலாம்..


ஆனால் கதை இரண்டே இரண்டு வரிகளில்தான் இருத்தல் வேண்டும்.. கவனியுங்களேன்.. இரண்டு வரிகளின் தான் கதை எழுதப்பட வேண்டும்........ இரண்டு வார்த்தை கதைகள்:



1. தலைப்பு : கரடி வேஷம் போட்டவனின் கடைசி வார்த்தைகள்

கதை : "ஐயோ சுட்டுடாதே!"


2.தலைப்பு : சுவரில் ஆணியடிப்பவன் கேட்ட கடைசி வார்த்தைகள்.

கதை : "கன்சீல்ட் வயரிங்ப்பா"


3.தலைப்பு : ஆராய்ச்சி சாலையிலஇருந்து ரோபோ வெளியே வந்தது

கதை : "டாக்டர் க்ளோஸ்"


4.தலைப்பு : வசந்தாவின் கணவன்

கதை : "சுசீலாவோடு எப்படி?"


5.தலைப்பு :விடுமுறைக்கு வந்த கார்கில் வீரனும் கிராமத்து

நண்பர்களும்

கதை : "ரம் கொண்டாந்திருக்கியா?"


6.தலைப்பு : மகன் தந்தைகாற்றும்

கதை : "இ.மெயில்"


7.தலைப்பு : என்னை யாரோ பார்க்கிறார்கள்

கதை : கண்ணாடி



8.தலைப்பு : ஆபிஸில் எத்தனை ஆம்பளைங்க?

கதை : முதலிரவில் கேள்வி.

டிசம்பர் 17, 2009


21 வயதில் "கெடா மாநில எழுதாளர் சங்கம்" நடத்திய சிறுகதை போட்டியில் "ஆறுதல் பரிசு" கிடைத்தது, ஆறுதல் அடையாத "கை" இன்னமும் எழுதுகோளை இயக்குகின்றது.....

அம்மா காட்டிய அடையாளம்....


அன்று வாங்கிய முத்தம்...இன்னமும் ஈரம் காயாமல் ...இதயத்தை இயக்கிக்கொண்டு இருக்கின்றது...அம்மா

நம்பிக்கை என்பது நம்புவது மட்டுமல்ல.... நம்பிக்கையோடு இருத்தல்...

டிசம்பர் 11, 2009


டான் ஸ்ரீ ஆதிநாகப்பன் இலக்கிய விருது, இளம் கவிதை துறைக்காக எனக்குக் கொடுத்த மலேசிய எழுத்தாளர் சங்கத்திற்கு நன்றி...
௨௦௦௯ (23வயதில்//)

எழுத படிக்க தெரியாதா அம்மா...
நான் பிறக்கும் முன்னே எழுத ஆரம்பிச்சா அப்பா.....
என் எழுத்து இவர்களுக்கு சமர்ப்பணம்...

இப்படிக்கு ,
தயாஜி வெள்ளைரோஜா

நவம்பர் 21, 2009

ஹலோ சொல்லேன்...



ஒரு நொடியில்,
இறந்து பிறந்த......
அனுபவம் உண்டா.....?

எனக்கு இன்றுதான்
வாய்த்தது.....
முதல் பாதி நொடியில்
இறந்தேன் ...
மறு மீதி நொடியில்
பிறந்தேன்.......

எப்போதும் இல்லாத
‘அந்த’
எண்ணத்தின் , திடிர் உபயத்தால்........

கைபேசியில் அழைக்கத்
தொடங்கினேன்..,;
ஒரு பதிலும் வருவதா இல்லை..,
கலவரம் மேலோங்க.....

சம்பந்த.. சம்பந்தா..
எண்களை அழுத்தி.. என்னமோ
பேசினேன்,

இனம் புரியாத பதட்டம்....
அடிவயிற்றில்..... தாக்கம்..
விளங்காத நோக்கம்...

மீண்டும் அவளுக்கு
அழைப்பை அனுப்பினேன்..

“வணக்கம் சொல்லு..டா..”

“அப்பாடா....!!!”

தயவு செய்து இனி அழைத்ததும் ,
எடுத்திடேன்.....
தோழியே...
இன்னொரு முறை தாங்காது......

.........தயாஜி வெள்ளைரோஜா.......

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்