பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

Latest Posts

ஜூன் 03, 2026

மாதம் ஒரு சிங்கப்பூர் புத்தகம் - 6



இம்மாத நடுகல்.காமில் நான் எழுதிய 'மாதம் ஒரு சிங்கப்பூர் புத்தகம் - தொடர் 6-ல்', 
கவிஞர் 
மதிக்குமார் தாயுமானவனின் 'யாமக்கோடங்கி' கவிதைத் தொகுப்பு குறித்து எழுதியுள்ளேன்.
இது கவிஞரின் முதல் கவிதைத் தொகுப்பு.

வாசிப்பதையும் எழுதுவதுவதையும் நாம் மனதார  செய்யும் போது, அது பல எல்லைகளைக் கடந்து செல்லும் என்பதை நான் எப்போதும் நம்புகிறேன்....

இந்தத் தொடரை எழுத வாய்ப்பு கொடுத்த நடுகல்.காம் இணைய இதழின் ஆசிரியர் வா.மு.கோமுவிற்கும் ஆசிரியர் குழுவிற்கும் என் அன்பும் நன்றியும்...


என் எழுத்துகளை வாசித்தும் அதுபற்றிய உரையாடலையும் தொடங்கும் அனைவருக்கும் எப்போதுக்குமான என் அன்பு.
கட்டுரைகளின் இணைப்பு முதன் மறுமொழியில் உள்ளது. நீங்களும் வாசித்து சொல்லுங்களேன்....

அன்புடன்
#தயாஜி #புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை

ஜுன் மாத நாவல் வாசிப்பில்..


ஜூன் மாத நாவல் வாசிப்பு திட்டத்தில் அசோகமித்திரனின் 'தண்ணீர்'....

கடந்த ஐந்து மாதங்களில் வாசித்த புத்தகங்களை அதற்குரிய இடத்தில் அடுக்கிவிட்டேன். ஜூன் மாதம் முடிந்ததும் அதுவரை வாசித்தவற்றை பகிர்வேன்.

ஜூன் மாதத்திற்கான புத்தகங்களை வழக்கம் போல எனது வாசிப்பு மேஜையில் அடுக்கி கொண்டிருக்கிறேன். எப்போதும் போல  நாவல், சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள் என ஒவ்வொரு வகையிலும்  ஒரு புத்தகம் என எடுத்து வைத்தாகிவிட்டது.

வாசிப்பதற்கான நேரத்தையும் அதற்கான மனநிலையும் எந்தக் குறையுமின்றி கிடைக்க வேண்டும்.

வாசிப்பை திட்டமிடுவது வாழ்க்கையை நடத்த உதவுகிறது.

#தயாஜி #புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை

ஜூன் 02, 2026

மாதம் ஒரு மலேசிய புத்தகம் - 18

இம்மாத நடுகல்.காமில் நான் எழுதிய 'மாதம் ஒரு மலேசிய புத்தகம் - தொடர் 18-ல்' கவிஞர் மகேந்திரன் நவமணியின் 'மழை நின்ற வீதி' ஹைக்கூ தொகுப்பு குறித்து எழுதியுள்ளேன்.

வாசிப்பதையும் எழுதுவதுவதையும் நாம் மனதார செய்யும் போது, அது பல எல்லைகளைக் கடந்து செல்லும் என்பதை நான் எப்போதும் நம்புகிறேன்....


இந்தத் தொடரை எழுத வாய்ப்பு கொடுத்த நடுகல்.காம் இணைய இதழின் ஆசிரியர் வா.மு.கோமுவிற்கும் ஆசிரியர் குழுவிற்கும் என் அன்பும் நன்றியும்...


என் எழுத்துகளை வாசித்தும் அதுபற்றிய உரையாடலையும் தொடங்கும் அனைவருக்கும் எப்போதுக்குமான என் அன்பு.
கட்டுரைகளின் இணைப்பு முதன் மறுமொழியில் உள்ளது. நீங்களும் வாசித்து சொல்லுங்களேன்....

அன்புடன்
#தயாஜி #புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை

மாதம் ஒரு மலேசிய புத்தகம் – தொடர் 18 - Nadukal https://share.google/4h6FdJxoHFJeZlSy6

மே 31, 2026

- புத்தகச்சிறகுகள் - தொடர் 13


நண்பர்களுக்கு வணக்கம்.
இன்றைய மலேசிய நண்பன் ஞாயிறு பதிப்பில், எனது 'புத்தகச்சிறகுகள் - தொடர் 13' வெளிவந்துள்ளது.

புத்தக அறிமுகத்தையும் நான் வாசித்த புத்தகங்கள் குறித்த எனது வாசிப்பனுபவ கட்டுரைகளையும் கொண்ட தொடர் இது.

இந்தத் தொடரில்  ரெ.கார்த்திகேசுவின் 'அந்திம காலம்' நாவல் குறித்து எழுதியுள்ளேன்.

எனது இந்த வாராந்திர தொடரை வாசித்து உங்கள் கருத்துகளையும் என்னோடு பகிர்ந்து கொள்ளுங்கள். எழுதும் எனக்கும் வாசிக்கும் உங்களுக்கும் எழுத்துகளே பாலமாக அமையட்டும்.

வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்த,
ஞாயிறு நண்பன் ஆசிரியர் மற்றும் அவர் குழுவினர்க்கு நன்றி.
வாசிப்போம்.. நேசிப்போம்..வளர்வோம்..

அன்புடன்
#தயாஜி #புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை

மே 27, 2026

- கவிதையைச் சுமப்பவர்கள் -


மூடாத
ஜன்னல் ஓரத்தில்
அமர்ந்தபடி
கவிதை எழுதுகிறவன் நான்

என் வீட்டில்
எழுதுவதற்கென
கொடுக்கப்பட்ட மாளிகைவாசல்
அதுதான்

சாலையோர மனிதர்களில்
ஒருசிலரையாவது
எனக்கு
கொஞ்சம் தெரியும்

கவிதை வராத நாட்களில்
போவோர் வருவோர்
முகங்களில்
ஏதாவது தட்டுப்படுகிறதா என
பார்ப்பதுதான்
என்
பொழுது போக்கு

எழுதி முடித்த கவிதைகளின்
கடைசி வரிகளை
அழித்துவிடுகிறேன்
அவற்றை
காற்றில் பறக்கவிடுகிறேன்

ஜன்னலின் வழி
அவை
பறந்திறங்கும் போது
பறவைகளில் நிழலைப்
போலிருக்கும்

விலாசமற்ற வாசலைத் தேடி
கண்டடையும்
தபால்காரன் போல

கடைசி வரிக்கு
ஏற்ற யாரோ ஒருவரை
அந்தக் கவிதைகள்
தேடி தவழ்கின்றன

என் கவிதைக்கான
கடைசி வரியை
நீண்ட காலமாக
சுமந்தபடி வாழும்
யாரோ ஒருவர்
இந்த வழியே
எப்போதாவது
வராமலா போய்விடுவார்...

#தயாஜி #புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை

மே 26, 2026

வாசிப்பில்


- பாவ மன்னிப்பு -
கோவிலுக்குள்
அனுமதி மறுக்கப்பட்டவனின்
காலில் வந்து விழுகிறது
கோபுர நிழல்
- மதிக்குமார் தாயுமானவன்.

வாசிப்பில் மதிக்குமார் தாயுமானவனின் 'யாமக்கோடங்கி'.
இந்தக் கவிதைகள் கொடுக்கும் அனுபவத்தை விரிவாகவே எழுதுகிறேன்.

#தயாஜி #புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை

மே 25, 2026

- வலி வேதனை தெரியா வயது -


- வலி வேதனை தெரியா வயது -

அண்ணன், கவிஞர் சிவா சுங்கைப்பட்டாணியையும் அவரது வாரிசையும் சந்தித்தேன். நமது புத்தகச்சிறகுகள் புத்தகக்கடையில் அவருக்கான புத்தகங்களை
வாங்குவதற்காக வந்திருந்தார். 

நண்பர்களை வழக்கமாகச் சந்திக்கும் உணவகத்தில் சந்தித்தோம். காலை உணவின் ஊடே வழக்கம் போல இலக்கியம் குறித்தும் அடுத்த என்ன என்பது குறித்தும் எங்கள் உரையாடல் இருந்தது.

விரைவிலேயே கவிஞர் நா.முத்துக்குமார் குறித்த நிகழ்ச்சியொன்று நடக்கவுள்ளதையும் அதில் அவர் பேசவுள்ளதையும் கொஞ்சம் பகிர்ந்து கொண்டார்.

அந்தக் கொஞ்சமே இரசிக்கும்படி இருந்தது. வாய்ப்பிருந்தால் அந்த நிகழ்ச்சிக்கு செல்ல வேண்டும்.

கூடவே நா.முத்துக்குமாரின் கவிதைகள் குறித்தும் பேசினோம். அந்த இடத்தில் என்னால் கவிஞர் கார்த்திக் நேத்தாவை வைக்க முடிகிறது என்றேன். அவரும் தலையசைத்தார். 

கோலாலும்பூருக்கு நான் வருவதற்கு முந்தைய காலக்கட்டத்தில்   அந்தப் பதின்ம வயதில் நான் பிரமித்து பார்த்தவர்களின் சிவா அண்ணனும் ஒருவர்.

எங்கள் வாழ்விடத்தில் இருந்து ஒரு இளைஞன் கோலாலும்பூர் பட்டணத்தில் கவனிக்கத்தக்க இடத்தில் இருப்பது அவ்வளவு எளிதல்ல என்பது எங்களுக்கு தெரியும்.

அந்த வயதில் அவரின் தம்பி எழுத்தாளர் மணிராமுவை அடிக்கடி சந்தித்து பேசும் வாய்ப்பும் அவரது நட்பும் கிடைத்தது. சொல்லப்போனால் இலக்கிய சர்ச்சைகள் என்னென்ன நடக்கிறது என அவருக்கு நன்றாக தெரிந்திருந்தது. எதையும் சுவாரஸ்யமாகவே சொல்லுவார். அவரின் நட்பும் ஒருவகையில் எனக்கு பல அனுபவங்களுக்கு வழிகாட்டியது. வெளியில் இருந்து வரும் பூசல்களால் பெரிதாக பாதிக்கப்படாத நட்புகளில் இவரது நட்பும் ஒன்று.

இன்றைய சந்திப்பில் அண்ணன் சிவாவுடன் பேசுவது உற்சாகத்தைக் கொடுத்தது. சமீபத்தில் வாசித்த சிறுகதைகள் குறித்தும் பேசினார். நல்ல வேளையாக நானும் அந்தச் சிறுகதைகளை வாசித்திருந்தேன். எங்களின் உரையாடல் அப்படியே சிறுகதைப் பக்கமும் நுழைந்தது.

அவர் பேச்சில் இருக்கும் உற்சாகம் என் காலைப் பொழுதை மேலும் உற்சாகமாக்கியது. இன்றும் கூட நான் அவரை பிரமிப்பாகத்தான் பார்த்து கொண்டிருக்கிறேன். அவரைப் பார்க்கும் போதெல்லாம் மீண்டும் நான் என் பதின்ப வயதிற்கு சென்றுவிடுகிறேன்.

வலியும் வேதனையும் என்னவென்று முழுதாய்த் தெரியாத/ புரியாத வயதாயிற்றே அது....

#தயாஜி #புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்