- உலகின் ஓயாத ஒப்பாரி -
இவ்வளவு
சின்னச்சின்ன குழிகளைத்
தோண்டுவதற்கு
ஏன்
இத்தனை இத்தனை
துயரை
நாம் சுமக்க வேண்டியுள்ளது
வெடித்து சிதறியது
அவர்களின் சின்னஞ்சிறு
உடல்கள்தானே
என
கடந்துவிடுகிறார்கள்
அதிகாரங்களை ஆள்கிறவர்கள்
இந்த உலகை
தன் தூய
அன்பின் குதூகலத்தில்
பார்த்தக் குழந்தைகளின்
கனவுகள்
எவ்வளவு பெரியது
எதுவரை பறந்தது
ஒருபோதும்
ஓயாத இந்த ஒப்பாரிகள்
ஏன்
நம் காதுகளுக்கு மட்டுமே
கேட்கிறது
#தயாஜி
0 comments:
கருத்துரையிடுக