பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

ஆகஸ்ட் 08, 2020

கடவுளே...!

எத்தனை கொடுமையான வாழ்க்கை இது!. அழுவதா சாவதா என்று தெரியவில்லை. கூடாது.. சாகக்கூடாது.. சாகடிக்க வேண்டும்...

என்பதுதான் அவனை இப்போது வழி நடத்திக் கொண்டிருக்கிறது. நிச்சயம் இன்று ஒரு கொலை உறுதி. சொல்ல முடியாது. இரண்டு கொலைகளாகவும் இருக்கலாம். ஆனால் அந்த குழந்தையைக் கொல்வதற்கு மனது வருமா என தெரியவில்லை. வரலாம். அவளில் துரோகத்திற்கான சம்பளம் அதுவாகத்தான் இருக்கும்.

கொஞ்ச நேரத்திற்கு முன்புதான் மருத்துவமனையில் இருந்து அழைத்திருந்தார்கள். சமீபத்திய உடல் பரிசோதனைக்கான விபரங்களை கேட்டிருந்தான். சில காரணங்களால் எல்லாவற்றையும் பரிசோதித்திருந்தார்கள். பலரை அழைக்கவேண்டியுள்ளதால் அவசரமாக விசயத்தை சொல்ல முயன்றுக் கொண்டிருந்தார். 

நர்ஸ் சொல்வதை முழுமையாகக்கூட அவனால் கேட்க முடியவில்லை. அதற்குள் கண்கள் இருட்டிவிட்டன. காதுகள் அடைத்துக் கொண்டன.  தொலைபேசியை பாதியிலேயே துண்டித்தான். 

மனைவியின் முகமும் தன் குழந்தையின் முகமும் கண் முன் வந்துப்போனது. இல்லை இனி அது அவனது குழந்தை இல்லை. அதைத்தான் நர்ஸ் சொல்லிக் கொண்டிருந்தார். அவனுக்கு குழந்தை பிறக்க வாய்ப்பில்லை என்பதை விடவும் தனக்கு ஒரு குழந்தை இருப்பதுதான் அவனை மெல்ல மெல்ல மிருகமாக்கிக் கொண்டிருக்கிறது.

மனிதனாக வெளியேறியவன் மிருகமாக வீட்டிற்குள் நுழைந்தான். நேராக சமையல் அறைக்குச் சென்றான். அங்குள்ள கத்தியை எடுத்தான். அந்த கத்தி அவனது கைக்கு நேர்த்தியாகப் பொருந்தியது.  அது கத்தியல்ல அவனது வலது கையாக மாறிவிட்டது.

படுக்கையறைக்குச் சென்றான். குழந்தை தூங்கிக்கொண்டிருந்தது. அருகில் சென்றான். கட்டிக்கொண்டு ஏமாற்றியவளையா ? அல்லது பிறந்து இருக்கும் இந்த ஏமாற்றத்தையா ? யாரை முதலில் கொல்வது என முடிவெடுக்கத் தயாரானான்.

அறைக்குள் அப்போது நுழைந்த மனைவி, "ஏங்க நர்ஸ் கூப்டிருந்தாங்க.. உங்க போன் பாதியிலேயே கட் ஆச்சாம்.. கூப்டும்  கிடைக்கலையாம்... ஏதோ ரிப்போட் மாறிப்போச்சாம்... சோரி சொன்னாங்க.. நாளை ஆஸ்பிட்டல் வந்து ரிப்போர்ட் எடுத்துக்கச் சொன்னாங்க...."

அவனது கண்களில் இருந்த இருள் மறைந்தது. எச்சிலை விழுங்கிக் கொண்டான். கத்தியை மெல்ல மறைத்தான். அப்படியே கண்களை மூடி கடவுளே...! என்றான்.

அப்போது அவளும் கண்களை மூடி, கடவுளே..! என்கிறாள்.

#தயாஜி


Related Posts:

  • - அவளை நீங்கள் பார்க்க வேண்டும் - அவளுக்கு பெயர் அவசியமில்லை. தேவதை என்கிற பெயருக்கு நூறு சதவிதம் பொருத்தமான முகத்தைப் பெற்றிருந்தாள். அவளை நீங்கள் பார்க்க வேண்டும்.சில முக… Read More
  • புத்தகவாசிப்பு_2022_7_நிலவழி தலைப்பு – நிலவழிஎழுத்து – எஸ்.ராமகிருஷ்ணன்வகை – கட்டுரைவெளியீடு – தேசாந்திரி பதிப்பகம்நூல் வாங்க - புத்தகச்சிறகுகள் புத்தகக்கடை 016 – 473 … Read More
  • - போர்க்கால பொம்மைகள் - சாலை காலியாக இருக்கிறது. வண்ணங்கள் நிறந்த சாலையில் இப்போது சிவப்பும் சிதறிய உடல் பாகங்களுமே காய்ந்து கிடக்கின்றன.ஒரே வாரத்தில் இவ்வளவு மாற… Read More
  • - ஒற்றைச்சாபம் - யாரோ இடும் கையெழுத்துஎங்கோ செல்கிறதுயாரோ சாகிறார்கள்யாரோ வீசும் குண்டுஎங்கோ வெடிக்கிறதுயாரோ சாகிறார்கள்யாரோ சுடும் துப்பாக்கிஎங்கோ சுடுகிற… Read More
  • - இயந்திரப்பறவை - முதன் முறையாகப் பார்க்கிறார்கள். உற்சாகம் பொங்க ஆராவாரத்துடன் சிறுவர்கள் அதனைப் பின் தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கிறார்கள். அதன் சத்தத்திற்கு… Read More

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்