பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

ஜூலை 10, 2012

வாங்கிய புத்தகங்கள்






7,8.7.2012-ல் வல்லினம் ஏற்பாடு செய்திருந்த இருநாள் மொழியியல் வகுப்பில், கே.பாலமுருகன் எழுதி மிகவும் கவனம் பெற்ற நாவலான ‘நகர்ந்து கொண்டிருக்கும் வாசல்கள்’ நாவலை வாங்கினேன். பாலமுருகனின், ‘தம்பி தயாஜிக்கு’ எனும் கையெழுத்திட்டார்.

1. நகர்ந்து கொண்டிருக்கும் வாசல்கள்
- எழுத்து பாலமுருகன் கேசவன்.

9.7.2012-ல் ஜெயபக்தி சென்றிருந்தேன்.

2. வெளியேற்றம் - நாவல்

எழுத்து - யுவன் சந்திரசேகர்.
 

ஜெயமொகனின் புத்தகம் மூலம் அறிமுகமான யுவன் சந்திரசேகரின் சிறுகதைகளை சமீபத்தில் வாங்கியிருந்தேன். இன்னும் படிக்கவில்லை. தற்சமயம் தொடர்ந்து நாவல்களைப் படித்துவருவதால், யுவன் சந்திரசேகர் எழுதிய நாவல்களைத் தேடினேன், ‘வெளியேற்றம்’ நாவல் கிடைத்ததில் மகிழ்ச்சி.

3. பெயரற்ற யாத்ரீகன் - ஜென் கவிதைகள்

தமிழில் மொழிபெயர்ப்பு - யுவன் சந்திரசேகர்.
 

இயற்கையாகவே ஜென் என்றால் ஒருவகை ஈர்ப்பு எனக்கு இருக்கிறது, அதிலும் இது கவிதை. தமிழில் மொழிபெயர்த்திருப்பதின் கீழ் ஆங்கிலத்தில் அந்த கவிதை எழுதப்பட்டுள்ளது, உடன் எழுதிவரின் பெயரும் இருக்கிறது.

5. நான் பின் நவீனத்துவ நாடோடி இல்லை (கட்டுரை தொகுப்பு)

எழுதியவர் யமுனா ராஜேந்திரன்.

-பின்நவீனத்துவம், அதன் மீதான விமர்சனம், மார்க்கிசியம், பின்மார்க்கிசியம், சோஷலிசம், கிராம்ஸின் முக்கியத்துவம், போலி அறிவியலின் தோற்றுவாய்கள் போன்ற தலைப்புகளில் கட்டுரைகளும், உரையாடலும் அடங்கிய புத்தகம்.







இப்படிக்கு தயாஜி....

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்