பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

ஆகஸ்ட் 12, 2012

யுவன் சந்திரசேகரின் ‘வெளியேற்றம்’ - உட்புகும் தேடல்


12.8.2102
      தொடர்ந்து படித்துக் கொண்டிருக்கும் நாவல்கள் வரிசையில் படித்து முடித்த நாவல், யுவன் சந்திரசேகர் எழுதிய ‘வெளியேற்றம்’.

      படித்து முடித்திருந்த நாவல்களில் இந்த நாவலை நான் வேறு வகையாக உணர்கிறேன். வழக்கமாக இந்திரா சௌந்திரராஜன் கதைகளை தொடக்கத்தில் படித்து வளர்ந்தவன் நான். அதில் வரும் அமானுஷயம், சித்தர், மூலிகைகள், மர்மங்கள் எல்லாம் எனக்கு ஒருவகையில் உற்சாகத்தையும் ஆர்வத்தையும் கொடுத்தது. அவரது எழுத்துகளைத் தொடர்த்து வாசிக்க வாசிக்க அதன் கட்டமைப்பை புரிந்துக் கொண்டதாய் ஓர் நிறைவு. கடவுள் நம்பிக்கையை அடைப்படையாக கொண்ட எழுத்து வகை அது. அதனுடன் மூலிகைகள் தொடர்புடைய அற்புதங்கள் நிகழ்த்தும் சித்தர்களும் சேர்ந்துக் கொள்வார்கள்.
    பிறகு இந்திரா சௌந்திர்ராஜன் நாவல்களை படிப்பதை தொடரவில்லை. வருடம் முழுக்க ஒரே வழியில் செல்வதை என் மனம் விரும்புவதில்லை. இதன் வழி அவரை நான் குறைத்து மதிப்பிட்டதாய் எண்ணிட வேண்டாம். என் அடிப்படை வாசிப்பிற்கு அடித்தளம் அமைத்தவர்களில் அவரும் ஒருவர். ஆனால் அதே பாடசாலையில் அதே வகுப்பில் என்னை வைத்துக்கொள்ளவில்லை.
   
வெளியேற்றம் நாவல் முழுக்க ஒவ்வொரு காலக்கட்டங்களில் ஒவ்வொருவர் வெளியேறிக் கொண்டே இருக்கிறார்கள். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு காரணம், ஒவ்வொரு கேள்விகள், ஒவ்வொரு குழப்பம். கதைகள் தனக்குள் கதைகளையே வைத்து ஊர்ந்துக் கொண்டிருக்கின்றன. ‘ஓடிப்போனவன்’ என்று சொல்லப்படுகின்றவர்கள் வெறுமனே ஓடி ஒளிந்துவிடுவதில்லை. இந்த வெளியேற்றத்தில் ஓடிப்போனவர்கள் மிளீர்கிறார்கள்.
    நான் படித்த நாவல்களில் இந்த நாவ்லதான் அதிக பக்கங்கள் என நினைக்கிறேன்.495 பக்கங்கள்.
      படிக்கப்படிக்க நாவலில் நடுப்பகுதியில் , தொடர்ந்து படிக்க வேண்டிமா என்ற வெறுமை தோன்றுகிறது. அதற்கு அடுத்த அத்தியாயத்தை படித்துவிட்டால், நாவலில் போக்கு நம்மை மீண்டும் நாவலுள் இழுத்துவிடுகிறது.
     
      நதியின் போக்கினை போல , ஆளுக்கு ஒரு திசையில் இருந்து அடித்து செல்லப்படுகிறார்கள். அவர்கள் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்திய ‘பெரியவர்’ இந்த நாவலில் மிக முக்கிய கதாப்பாத்திரம். இதனையே மற்றவர் எழுதியிருந்தார் அவருக்கு சித்தர் என்ற பெயரை வைத்து காவி துணி கொடுத்திருப்பார்கள். ஆனால் யுவன் சந்திரசேகர் அந்த வழக்கத்தை தொடரவில்லை. தன் மரணத்தை நான் நினைத்தபடி சமாதியடையவிருக்கும் பெரியவருக்கு எந்த ஓரு ஆன்மீக சாயத்தை பூசாதது எனக்கு ஆச்சர்யத்தையே கொடுத்தது.
      மனித மனம் இத்தனை கதைகளை ஒன்றினைக்க முடியுமா என படிக்க படிக்க வியப்பு ஏற்பட்ட வண்ணம் இருந்தது. தேடல் என்பதின் உண்மை அர்த்தம் இந்த நாவலின் வழி அறியப்படும். வெறுமனே வாசக சுவாரஸ்யத்தையும் தாண்டிய ஒன்று இந்நாவலில் காணக்கிடைக்கிறது.
     இன்னும் கூட எழுதலாம் இந்த நாவல் குறித்து பக்கம் பக்கமாக ஆனால்; இந்நாவல் எனக்குள் முடக்கிவிட்டிருக்கும் கேள்விகளை எழுதுவது எனக்கு சாத்தியப்படவில்லை. இந்த நாவலும் தனக்குள் பல கதைகளை சுமந்துக் கொண்டே செல்கிறது, சொன்னதில் கொஞ்சம் சொல்லாததில் மிச்சம்.

- தயாஜி -

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்