பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

ஆகஸ்ட் 13, 2010

தமிழன்.....

தமிழன் என்ற சொல்லுக்கே தரணி வணங்கும் அன்புக்கே....
தாய்க்கு மகனாய் பிறந்தவன் தமிழ்........
தாய்க்கு தன் உயிர் கொடுப்பவன்....
மொழியே இல்லா பொழுதினின் இலக்கணம் வளர்த்தவன்,
தொல்காப்பியன்...
எழுத்தாய் இருந்த இலக்கணத்தை ஈரடியாக்கி.....
நேரடிச் சொன்னான் திருவள்ளுவன்...
உலகப் பொதுமுறை..
திருக்குறள் உண்மையின் விதை....
ஈரடி விதைதான் காவியமானது இளங்கோவடிதான்,
மீண்டும் புதுமைப் படைத்தது...
ராஜராஜாக்கள் ஆண்ட காவிய உலகை....
குடியானவன் ஆண்டான்...
அவன் கோவலன் ஆவான்....
தமிழன் என்ற சொல்லுக்கே தரணி வணங்கும் அன்புக்கே....
சிலம்பும் செய்தான்..
பெண்ணின் உரிமை சொன்னான்...
விஞ்ஞானம் பிறக்காத போதே...
மெஞ்ஞானம் பெற்றான்...
அண்டம் என்றான்..
பிண்டம் என்றான்...
ஆணும் பெண்னும் ஆதிசிவன் என்றான்...
ஆணுக்கு பெண்ணும்..
பெண்ணுக்கு ஆணும்..
சரிசமம் செய்தான்.. ஏறாத போதே....
இளனியின் தண்ணி கண்டான்...
கிரகம் ஒன்பது என்றான்....
தமிழன் என்ற சொல்லுக்கே தரணி வணங்கும் அன்புக்கே....
தேய்பிறை குறித்தான்...
பேய் மழைத் தடுத்தான்...
காடுகள் காத்தான்..
மரங்களை மதித்தான்....
உண்மையை சொன்னான் அதை.....
உறுதியால் வென்றான்....
எமனையும் எதிர்த்தான்..
பரம் பொருளையும் துதித்தான்....
தமிழன் என்ற சொல்லுக்கே தரணி வணங்கும் அன்புக்கே....
இப்படி,
இப்படியாய் ..
இமயம் தொட்டவன்....
இருக்கும் நிலையைச் சொல்லவோ...
நம் இதயம் அதனைத் தாங்குமோ......
பொக்கிஷம் பல பார்த்தவன் இன்று..
பொருளுக்கு வழியின்றி தவிக்கிறான்...
பொருமையும் இன்றி திரிகிறான்...
பிறர் பார்த்தால் கூட,
ரத்தம் கொதிக்கிறான்...
அடுத்தவன் ரத்தம் வர ரசிக்கிறான்...
தமிழன் என்ற சொல்லுக்கே தரணி வணங்கும் அன்புக்கே....
இப்படி,
இப்படியாய் ..
இமயம் தொட்டவன்....
இருக்கும் நிலையைச் சொல்லவோ...
நம் இதயம் அதனைத் தாங்குமோ......
இயலாமையிக்கு அடிமைதான்...
காரணம்,....
முயலாமை என்பதை மறந்திட்டான்....
எங்கே செல்கின்றோம் மறந்திட்டான்...
உயிரை மதியாது மறிக்கிறார்....
இன்னும் இருக்குது...
இருந்தும் என் கண்ணீர் தடுக்குது...
தமிழன் என்ற சொல்லுக்கே தரணி வணங்கும் அன்புக்கே....
இப்படி,
இப்படியாய் ..
இமயம் தொட்டவன்....
இருக்கும் நிலையைச் சொல்லவோ...
நம் இதயம் அதனைத் தாங்குமோ......
இந்த நிலமை மாறனும்..
இனிதே விரைவில் நடக்கனும்...
அசைக்க முடியாதிருக்கனும்....
ஆண்டவெனும் தமிழனை மதிக்கனும்....
மீண்டும் இமயம் தொட்டிட......
தமிழனின் பயணம் தொடரனும்....
தமிழன் என்ற சொல்லுக்கே தரணி வணங்கும் அன்புக்கே....
...........தயாஜி..........

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்