ஜூலை 08, 2021
மே 24, 2021
#கதைவாசிப்பு_2021 ‘தேவகியின் தேர்’
#கதைவாசிப்பு_2021 ‘தேவகியின் தேர்’
தலைப்பு
– தேவகியின் தேர்
எழுத்து- எஸ்.ராமகிருஷ்ணன்
வகை
– சிறுகதை
பிரசுரம் – மே 22 (எஸ்.ராமகிருஷ்ணன் வலைத்தளம்)
சிறுகதையில்
ஒன்றை சொல்லியும் சொல்லாமலும் வாசகர்களிடம் அதன் முடிவை கொடுப்பது ஒரு கலை. எஸ்.ரா
அவர்களுக்கு அது கை வந்த கலை. அதற்கு சான்றாக இக்கதையைச் சொல்லலாம்.
‘தேவகியின்
தேர்’ என்பது தலைப்பாக இருந்தாலும், இறுதியில் தேவகியும் தேரும் ஒரே பொருளாக மாறிவிடுவதில்
சிறுகதை தனித்து நிற்கிறது. ஆணாதிக்க குடும்பம் என்பதை நாயகியின் அப்பாவின் அறிமுக
காட்சியிலேயே நம்மால் புரிந்துக் கொள்ள முடிகிறது.
அவ்வூரில் இருக்கும்
நூறு வருடங்களுக்கும் பழமையான தேரை பார்க்க வெளியூரில் இருந்து லியோன் என்கிற இளைஞன்
வருகிறார். அப்பாவின் கட்டளையின் படி லியோனை ஹரி அழைத்துச் செல்கிறார்.
தொடர்ந்து அந்த
தேர் பற்றியும் ஆண்டுதோறும் நடக்கும் பங்குனிப் பெருவிழாவை பற்றி ஆசிரியர் சொல்லிச்
செல்வது நாமும் அவ்விழாவில் கலந்து கொண்ட உனர்வை தருகிறது. எங்கிருந்தோ வந்த வெள்ளைக்கார
லியோனுக்கு அவ்வூர் தேரை பற்றி பல விபரங்கள் தெரிகின்றது. அதன் சிற்பங்கள். அதன் நேர்த்தி.
அதன் பின்னனி காரணங்கள் என ஹரிக்கு தெரியாததையெல்லாம் பேசி ஆச்சர்யப்படுத்துகிறார்.
இதுவரை யாரும் கண்டிராதபடி தேரின் அழகை படம் பிடிக்கின்றார்.
அடுத்ததாக ஆசிரியர்,
ஹரியின் அக்கா தேவகியை அறிமுகம் செய்கின்றார்.
தேவகியின் அறிமுகம்
கிடைத்த பிறகு, தேர் குறித்த விபரங்கள் வரும் பொழுது தேவகியையும் அதனுடன் இணைத்துப்
பார்க்க தோன்றியது. இந்த இணைப்பில் ஏதோ இருப்பதாக உணர்ந்தேன்.
அதன் பிறகு
கதை அதன் விளையாட்டை தொடங்கியது.
அதிக நாட்கள்
லியோன் அவ்வூரில் தங்கும்படி ஆகிறது. பலருடன் நெருக்கம் கிடைக்கிறது. இதற்கிடையில்
ஒரு நாள் தேவகி தானும் லியோனும் காதலிப்பதாக அம்மாவிடன் சொல்கிறார். அதற்கு சான்றாக
தேருக்கு அருகில் தேவகியை அழகாய் படம் எடுத்திருந்ததைக் காட்டுகிறாள். அடிக்கடி சந்தித்து
பேசியுள்ளதையும் சொல்கிறாள். அம்மா அப்பாவை நினைத்து பயப்படுகின்றார். அதற்கு ஏற்றார்
போலவே அப்பாவும் தேவகியை அடித்து அம்மாவை திட்ட தொடங்குகின்றார்.
அதன் பிறகு
ஹரி லியோனை பார்க்க செல்கிறார். லியோன் அங்கில்லை. புறப்பட்டுவிட்டார். தேவகிதான் அந்த
மனிதன் மீது காதல் கொண்டிருக்கிறாள். லியோனுக்கும் இதற்கும் சம்பத்தம் இல்லையென அப்பா
திட்டுகிறார். ஆறு மாதங்களில் தேவகிக்கு திருமணத்தை நடத்துகின்றார் அப்பா. வெளியூர்
மாப்பிள்ளை.
‘அக்கா எப்போது லியோனை சந்தித்தாள். எப்படி அவள் காதலித்தாள். எதுவும்
ஹரிக்குப் புரியவில்லை. லியோன் ஏன் இதை வெளிப்படுத்தவேயில்லை. எப்படி ரகசியத்தை மறைத்துக்
கொள்ள முடிந்தது. அவ்வளவு பிரம்மாண்டமாக இருந்த தேரையும் தனக்குத் தெரியவில்லை. வீட்டிலிருந்த
அக்காவையும் தெரியவில்லை. நிழல் போல இருந்த பெண் இப்படி நடந்து கொண்டுவிட்டாளே என்று
வியப்பாகவே இருந்தது.’
என ஹரி யோசிகின்றார்.
உண்மையில் இங்குதான் தேருக்கும் தேவகிக்கும் பெரிய வித்தியாசம் இல்லை என சொல்லாமல்
சொல்கிறார் ஆசிரியர்.
தேர் இருப்பது
பிரம்மாண்டம். திருவிழாக்களுக்கு பயன்படும். ஆனால் அதிலிருக்கும் ஒரு சிற்பத்தைக் கூட
அங்குள்ளவர்கள் முழுமையாக கண்டிருக்க மாட்டார்கள் என்பதை கதையின் ஊடே ஆசிரியர் காட்டுகின்றார்.
நம் வீட்டிலும் இப்படித்தான் பெண்களை அவர்களுக்கு உரிய இடத்தை கொடுப்பதாகச் சொல்லி,
மரியாதை கொடுப்பதாகச் சொல்லி அவர்களின் ஆசைகளைப் புறக்கணிக்கின்றோம். திருவிழாக்களுக்கு
தேர் அழகை கொடுத்து மற்ற நேரங்களில் ஏதோ ஓர் மூலையில் தனித்து கவனம் பெறாது இருப்பது
போலவே பல பெண்களின் நிலை இன்றும் இருப்பதை இச்சிறுகதை காட்டுகிறது.
திருமணத்திற்கு பின் தேவகி ஒரு நாளும் பிறந்தகத்திற்கு திரும்பவில்லை. யார் அழைத்தும் வாருவதற்கு தயாராய் இல்லை.
“நான் செத்தாலும் ஊருக்கு வரமாட்டேன். அந்தத் தேரை பார்க்கமாட்டேன்
பாத்துக்கோ“
“தேர் என்னடி பண்ணுச்சி“
என்றாள் அம்மா
“என்ன பண்ணலே“
என்று கேட்டு அழுதாள் தேவகிஅக்கா
அம்மாவிற்கு அப்படித்
தேவகி அழுவதைக் கேட்கும் போது கண்கள் கலங்கவே செய்தன.
என சிறுகதையை முடிக்கையில் நம் மனமும் கலங்கத்தான் செய்கிறது. தேவகியின்
தேர் சிறுகதை முழுமையாக வாசிப்பதன் மூலம் நாம் அதனை உணரலாம்.
(இங்கு சுட்டி சிறுகதையை வாசிக்கலாம்)
https://www.sramakrishnan.com/%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5%e0%ae%95%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b0%e0%af%8d/
#தயாஜி
மே 10, 2021
#கதைவாசிப்பு_2021 ‘கைதட்டுகள் போதும்’
#கதைவாசிப்பு_2021 ‘கைதட்டுகள் போதும்’
தலைப்பு – கைதட்டுகள்
போதும்
எழுத்து- எஸ்.ராமகிருஷ்ணன்
வகை – சிறுகதை
பிரசுரம் –
மே 4 (எஸ்.ராமகிருஷ்ணன் வலைத்தளம்)
கதை
தொடங்கிய இடத்திலேயே முடிகிறது. அதற்குள் ஒரு கலைஞனின் இழப்புகளை பதிவு செய்துள்ளார்
எஸ்.ரா. ‘கைதட்டுகள் போதும்’ என்று தலைப்பை வாசித்து கதைக்குள் நுழைந்தேன். ஆனால்,
‘கைதட்டல் போதுமா?’ என்கிற கேள்வியோடு சிறுகதையை வாசித்து முடித்தேன்.
கலை
மீதான ஆர்வம் ஏதோ ஒரு வயதில் எவருக்கும் ஏற்படக்கூடியதுதான். சிலர் அதற்காகவே பிறந்தவர்கள்
போலவும் பிரகாசிப்பார்கள். சிலர் துரதிஷ்டவசமாக காணாமல் போய்விடுவார்கள். இப்படி பிரகாசிப்பவர்களும் காணாமல் போகிறவர்களும் சரி, தத்தம் குடும்ப வாழ்வில் எத்தனையோ இழப்புகளை
சந்திக்கும்படி ஆகிறது. கலையின் வெற்றி பலரையும்
அனாதையாக்கியிருக்கிறது. நாம் நேசிக்கும்,
நாம் நம்பும் கலை உலகில் ஏதோ ஒரு மூலையில் இருந்து யாரோ ஒருவரை நமக்கருகில் அழைத்து
வருகிறது. ஆனால் நம் பக்கத்தில் இருக்கும் பலரையும் தொலைத்து விடுகிறது.
இக்கதை
அப்படியான கலையில் ஈடுபாடு காட்டி கைதட்டலில் கிரங்கிய மனிதனை பேசுகிறது. அவனை கிரங்கடித்த
கைதட்டல்களால் அவன் இழந்தது அவனது வாழ்க்கையை.
ரங்கசாமி
வீட்டில் கதவுகள் இல்லை என்றும் அதற்கான அவசியம் இல்லை என்றும் கதை தொடங்குகின்றது.
யார் இந்த ரங்கசாமி என்கிற கேள்விக்கு அடுத்தடுத்து பதில்களைக் கொடுத்து கதையை நகர்த்துகின்றார்.
சர்க்கஸில்
வேலை செய்த ரங்கசாமியிடம் இப்போது ஒற்றைச் சக்கரம் கொண்ட சைக்கிள் மட்டுமே இருக்கிறது.
இந்த ஒற்றை சக்கர சைக்கிள் ரங்கசாமியின் வாழ்க்கையை பிரதிபலிப்பும் குறியீடாகவே பார்க்கிறேன்.
சர்க்கஸில் இருக்கும் வரைதான் அந்த சைக்கிளுக்கு பாராட்டுகள், பார்ப்பவருக்கு பரவசங்கள்
எல்லாம். ஆனால் அதுவே வீட்டு வாசலில் சாய்ந்துக் கிடந்தால் யாருக்குத்தான் பரவசத்தைக்
கொடுக்கும், யார்தான் வந்து பாராட்டிவிட்டுப் போவார்கள். யோசிக்கையில் சர்க்கஸில் கூட
இதைவிட சாகசம் காட்டும் வேறொரு சைக்கிள் வந்துவிட்டால் இந்த ஒற்றை சக்கர சைக்கிளுக்கு மதிப்பேது. அதன் எல்லை அதை
விட அதிகம் பரவசமூட்டும் வேறொரு சைக்கிள் வருவரைதானே.
ஊரில்
வேலை இல்லாமல் வெளியேறிய ரங்கசாமி சர்க்கஸில் சேர்கிறார். அங்கு ரங்கா என்ற பெயரில்
பல சாகசங்களைச் செய்கிறார். தனித்து அறியப்படுகின்றார். அவரை மையப்படுத்தியே விளம்பரங்களும்
செய்யப்படுகின்றன. பதினெட்டு வயதிலேயே திருமணம் ஆகியிருந்தது. குழந்தையும் பிறந்தது.
தன் அம்மாவின் பெயரையே குழந்தைக்கும் வைத்து மகிழ்கிறார். இருந்தும் வேலை ஏதுமில்லாமல்
அங்கு இருக்கு முடியாமல்தான் யாருக்கும்
தெரியாமல் வெளியேறினார். சர்க்கஸில் அவருக்கான முக்கியத்துவமும் அவருக்கு கிடைத்த கைதட்டல்களும் அவரை அதில் முழுமையாக ஈடுபட வைக்கிறது.
ஆண்டுகள் கடக்கின்றன.
அதற்கிடையில்
ரங்காவை ஒரு மருத்துவர் சந்தித்து விருந்துக்கு அழைக்கின்றார். அங்கு மருத்துவரின்
மகள் ரங்காவைப் பார்த்து உற்சாகமாகிறார். அவருடன் புகைப்படமும் எடுத்துக் கொள்கிறார்.
அங்கு நடந்தது ரங்காவிற்கு அவரின் மனைவி பிள்ளையை நினைவுப்படுத்துகிறது.
இருந்தும்
சந்தர்ப்ப சூழலால் ஒரு மாதம் கழித்தே சொந்த ஊர் செல்கிறார். அங்கே மனைவியும் மகளும்
இல்லை. அவர்கள் ஊருக்கு சென்று மூன்றாண்டுகளுக்கு மேலாகிறது என தெரிந்துக் கொள்கிறார்.
அவர்கள் சென்றிருக்கும் ஊருக்கு ரங்காவும் செல்கிறார். இவரைப் பார்த்ததும் யாரும் மகிழ்ச்சியடையவில்லை.
வெறுப்பையே காட்டுகிறார்கள். மனைவி மட்டுமல்ல மகளும்தான். அவருக்கு அவர்களுடன் வாழ்வதற்கு வாய்ப்பு இருக்கவில்லை. மன
கவலையுடன் மீண்டும் சர்க்கஸ்க்கு செல்கிறார். அவரால் பழையபடி எந்த சாகசத்திலும் ஈடுபாடு
காட்ட முடியவில்லை. மனைவியும் மகளும் தன்னை வெறுத்து ஒதுக்கியதையே மீண்டும் மீண்டும்
நினைக்கிறார். அவரை இதுநாள் வரை அங்கு நிறுத்தி வைத்த கைதட்டல்களும் பாராட்டுகளும்
அவருக்கு வெறுமையைக் கொடுக்கின்றன. சர்க்கஸ்க்கு விடைகொடுத்து அந்த ஒற்றை
சக்கர சைக்களுடன் ஊர் திரும்புகிறார்.
தினமும்
மனைவி மகள் கண்ணில் படும்படி ஏதேதோ செய்கிறார்.
ஆனால் எதுவும் பலனளிக்கவில்லை. இனியும் அவர்களை தொல்லை செய்ய கூடாது என முடிவெடுக்கின்றார்.
எதனால்
தன் மனைவியும் மகளும் தன்னை வெறுக்கிறார்கள் என முழுமையாக உணர்ந்து வருந்துகின்றார்.
என்றாவது அவர்கள் மனம் மாறும் எனவும் ஒரு நாள் அவர்கள் தன்னைத் தேடி வருவார்கள் எனவும்
நம்புகிறார். அவர்கள் வரும் போது கதவு மூடியிருக்கக்கூடாது என்றே கதவை பிடுங்கியும்
வைக்கிறார்.
காத்திருப்பு
மட்டுமே காயங்களை மறக்கச்செய்யும் , உறவுகளை சேர்த்து வைக்கும் என்கிற நம்பி நாட்களை
கடக்கிறார்.
நாம்
எதை நம்புகிறோம். எதில் மயங்குகிறோம். எதையெல்லாம் இழக்கிறோம் என்கிற கேள்விகளை வாசகர்களுக்கு
ஏற்படுத்துகிறது. அதையொட்டிய ஒரு எச்சரிக்கையையும் இக்கதை கொடுக்கின்றது.
நண்பர்கள்
இச்சிறுகதையை, இங்கு சுட்டி வாசிக்கலாம்.
https://www.sramakrishnan.com/%e0%ae%95%e0%af%88%e0%ae%a4%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%a4%e0%af%81%e0%ae%ae%e0%af%8d/
#தயாஜி
#புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை
மே 08, 2021
#கதைவாசிப்பு_2021 வாழ்வின் தேவை
#கதைவாசிப்பு_2021
வாழ்வின் தேவை
தலைப்பு – வாழ்வின்
தேவை
எழுத்து- எஸ்.ராமகிருஷ்ணன்
வகை – சிறுகதை
பிரசுரம் – மே 6 (எஸ்.ராமகிருஷ்ணன் வலைத்தளம்)
அம்மாவிற்கு
குடும்பத்தில் என்ன மாதிரியான இடத்தை கொடுக்கின்றோம் என்கிற அடிப்படை கேள்வியை முன்
வைக்கும் கதை. யோசிக்கையில் இதுவெல்லாம் ஒரு கேள்வியா என்றும் தோன்றலாம். ஆனால், அந்த
யோசனையை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் செல்கிறது ‘வாழ்வி தேவை’.
அப்பா
இறந்துவிட்டார். அவர் இருக்கும் வரையில் அம்மாவை அவர்தான் கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றார்.
வெளியூரில் வசிக்கும் மகளுக்கு இரண்டாம் பிரசவத்திற்கு பின் அம்மா அங்கு செல்ல வேண்டி
வருகிறது. கொஞ்ச நாட்களாக அம்மா அங்கு இருக்கும்படியும் ஆகின்றது. வழக்கம் போல பேரன்களுக்கு
பாட்டியாக, மகளுக்கு தாயாக, மருமகனுக்கு மாமியாராக இருந்துக் கொண்டிருக்கின்றார். அவர்களின்
ஒரு கார் இருக்கிறது. எப்போதாவது அதனை பயன்படுத்தவும் செய்கிறார்கள். அவ்வபோது அம்மா
காரை துடைத்து வைக்கிறார். ஒரு நாள் அம்மா, மகளிடம் கார் ஓட்ட கற்றுக்கொள்ளவா என கேட்கிறார்.
மகள் யோசிக்கின்றார். அதற்கு தடை போடவில்லை. ஏற்பாடு செய்கின்றார். மருமகனுக்கும் பெரிய
விருப்பம் இல்லை. அம்மா டிரைவிங் ஸ்கூலில் சேர்கிறார். காரோட்ட கற்றுக்கொள்கிறார்.
அம்மாவிடம் மாற்றம் தெரிகிறது. உற்சாகமாக பொழுதுகளை ஆரம்பிக்கின்றார். மகள் மருமகள் பேரன்களை காரில் ஏற்றிக்கொண்டும் செல்கிறார்.
மீண்டும் சொந்த ஊர்க்கு செல்லும் போது பேருந்து நிறுத்துமிடத்தில் அடுத்த முறை அம்மா காரிலேயே ஊருக்கு செல்லலாம், அதற்கு ஏற்பாடு
செய்யவுள்ளதாக மருமகன் வாக்களிக்கின்றார். அம்மா உற்சாகமாக சம்மதிக்கின்றார்.
“நீ கார் ஒட்டுறதை
பார்க்க அப்பா இருந்திருக்கணும். “
“அவர் இருந்திருந்தா
என்னாலே கார் ஒட்ட கத்துகிட்டு இருந்திருக்க முடியாதுடீ“ என்றாள்
என்ற
உரையாடலில் முழு கதையில் சொல்லப்படாத கதையை எஸ்.ரா சொல்லிவிடுகின்றார். குடும்பத்தில்
அப்பாவிற்கு கொடுக்கும் மரியாதையை அப்பாவிற்கு கொடுக்கும் கவனத்தை பலரும் அம்மாவிற்கு கொடுப்பதில்லை. அதிகாரமே குடும்பத்தை
தன் வசம் வைத்திருக்கிறது. மகனால் மகளால் அந்த அதிகாரத்திலிருந்து ஒரு குறிப்பிட்ட
வயதில் வெளியேறிவிட முடிகிறது. ஆனால் அம்மாக்கு அந்த வாய்ப்பு வருவதே இல்லை.
கதையில்
அம்மாவிற்கு கார் ஓட்டுவதில்
ஏற்படும் ஆசையை எளிதில் கடந்துவிட முடியாது. தன் வாழ்க்கை தன் கட்டுப்பாட்டில் வருவதாக அம்மா நினைக்கின்றார். ஒருவருக்கு அப்படியான
வாய்ப்பு கிடைப்பது எவ்வளவு அரிதாகிக் கொண்டே போகிறது. தன் கையில் தான் ஓட்டும் காரின்
ஸ்டேரிங் கிடைத்துவிடுவது அம்மா இனிதான் தனக்கான
வாழ்வை வாழப்போகின்றார் என்கிற உற்சாகத்தை கொடுக்கிறது.
நம்முடன்
இருக்கின்றவர்களின், நமக்காக வாழ்கின்றவர்களின் கனவுகளை ஆசைகளை சின்ன சின்ன விரும்பங்களை
நாம் தெரிந்து வைத்திருக்கின்றோமா? அவற்றை ஏன் தவற விடுகின்றோம் என்கிற ஆதார கேள்வியை
கதையை வாசித்ததும், கேட்டுக் கொள்ள செய்கிறோம்.
கதையை இந்த லிங்கில் முழுமையாக வாசிக்கலாம்.
- #தயாஜி
ஏப்ரல் 13, 2020
#கதைவாசிப்பு_2020_16 'கிருமி'
மார்ச் 30, 2020
#கதைவாசிப்பு_2020_15 'ஓணான்கள்'
(சிறுகதை தொகுப்பு)
மார்ச் 27, 2020
கதைவாசிப்பு_2020_14 'தொடுகறி'
பிப்ரவரி 23, 2020
#கதைவாசிப்பு_2020_13 'இறகுகள்'
இம்முறை ரேமண்ட் கார்வரின் சிறுகதையை ஜி.குப்புசாமி 'இறகுகள்' என மொழிப்பெயர்த்துள்ளார். முதலில் ஜி.குப்புசாமி அவர்களுக்கு நன்றி. அவர் மூலம் பல மொழிப்பெயர்ப்பு படைப்புகள் அறிமுகமாகியுள்ளது. அவரின் மூலமே எழுத்தாளர் 'சிம்மண்டா என்கோசி அடிச்சி' அவர்கள் எனக்கு அறிமுகம். சிமமண்டோ எனது விருப்ப எழுத்தாளர் பட்டியலில் சேர்ந்துவிட்டார்.









