- கரையறியா கண்ணீர் -
யாரோ ஒருவரின்
முன்னால் அமர்ந்து
உங்களால்
இப்படி அழமுடிகிறதே
அது போதாதா
இங்கு
அழவும் முடியாதவர்களே
அதிகம்
குறைந்தபட்சம்
அவர்களால்
சேர்ந்தும் சேர்த்தும்
வாழ முடிந்தது
அந்தக் கண்ணீரைத்தான்
ஒருபோதும் அது
கண்களை விட்டு
தவறியும்
வழிந்தது இல்லை
அதற்கான
வழி
அறிந்ததும் இல்லை
#தயாஜி #புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை
0 comments:
கருத்துரையிடுக