- 2025-ல் நான்கில் மூன்று -
- 2025-இன் நான்கில் மூன்று -
2025-ஆம் ஆண்டின் நான்கின் இரண்டாம் பகுதியைக் கடந்துவிட்டோம். இந்த ஆண்டில் நமக்கு கொடுக்கப்பட்ட நாட்களில் நான்கில் மூன்று பகுதிகள் செப்டம்பரில் முடிந்தன. வந்ததும் தெரியாமல் போனதும் சொல்லாமல் என்று நம்மை புலம்ப வைத்து; இயற்கை அதனதன் வேலைகளை எந்தத் தடையும் இன்றி யாருக்கான காத்திருப்புக்கும் நில்லாமல் செய்துக்கொண்டே இருக்கின்றன.
இவ்வாண்டின் வாசிப்பிற்கான திட்டமிடலாக, 12 மாதங்களையும் முறையே மூன்று மூன்று மாதங்களாக பிரித்தேன் நான்கு பகுதிகளாக பிரித்தேன்.. ஜனவரி முதல் மார்ச் வரை, ஏப்ரல் முதல் ஜூன் வரை, ஜூலை முதல் செப்டம்பர் வரை. முதல் இரண்டு பிரிவுகளில் வாசித்ததை எழுதிவிட்டேன். அவை மொத்தம் 27 புத்தகங்களாய் அமைந்தன.
இந்தப் பட்டியலில் மாதம் ஒரு நாவல் வாசிக்கலாம் என இன்னொரு திட்டத்தையும் இணைத்திருந்தேன். ஒன்பது நாவல்கள் வரவேண்டிய இடத்தில் ஏழு நாவல்களே சாத்தியமாகின. கடந்த இரண்டு மாதங்களாக உடல் நலமில்லை. நினைவில் வைத்துக்கொண்டு நாவலைத் தொடர்ந்து வாசிக்கும் சூழல் அமையவில்லை. அதனை கவிதை புத்தகங்கள் நிரப்பின.
இனி ஜூலை முதல் ஆகஸ்ட் வரை வாசித்த புத்தகங்களைப் பார்க்கலாம்;
நாவல்
28. சோளகர் தொட்டி
- ச.பாலமுருகன் நாவல்
- நாவல் பல இடங்களில் மனதை கலங்கடித்ததும், ஜீரணிக்க சிரமத்தைக் கொடுக்கும் மனிதர்களின் வாழ்க்கை.
கவிதைகள்
29. இறகிசைப் பிரவாகம்
- கவிதைத் தொகுப்பு
- 130 கவிஞர்களின் பறவைகள் குறித்த கவிதைகள் அடங்கியவை.
- மீண்டும் மீண்டும் வாசிக்க வேண்டிய புத்தகமாய் இதனை சேர்த்துக்கொண்டேன்
30. கவிதைக் கென்ன வேலி
- இந்தியப் பிறமொழி கவிதைகள்
- கவிஞர் புவிரசுவின் தமிழாக்கம்
- குறிப்பாக கன்னடம் மற்றும் தெலுங்கு கவிதைகளின் மொழியாக்கம் இரசிக்கும்படியும் ஆச்சர்யத்தைக் கொடுக்கும்படியும் அமைந்தன.
31. அவிழும் சொற்கள்.
- கவிஞர் ரவிக்குமார் கவிதைகள்
- அங்கொன்றும் இங்கொன்றுமாக வாசித்தவரின் கவிதைகளை புத்தகத்தில் வாசித்து மகிழ்ந்தேன்.
- இருவரிகளில் கூட ஆழமான கவிதைகளைக் கொடுத்திருக்கின்றார்.
32. நீரின்றி அமையாது உலகு.
- கவிஞர் மாலதி மைத்ரி கவிதைகள்
- 2013-ஆம் ஆண்டு, கவிஞர் பூங்குழலி இந்தத் தொகுப்பை எனக்கு பிறந்தநாள் பரிசாக கொடுத்தார்.
- இந்தத் தொகுப்பு கவிஞரின் கவிதைகள் மீது ஆர்வத்தைக் கொடுத்தது.
- கவிஞரின் பிற கவிதைப் புத்தகங்களையும் வாங்கிவிட்டேன்.
33. உடலாடும் நதி
- கவிஞர் லதா அருணாச்சலம் கவிதைகள்
- எந்தவித எதிர்ப்பார்ப்பும் இல்லாமல் வாசித்தேன்.
- அலட்டிக்கொள்ளாத கவிதைகள்; தனித்து இரசிக்கும்படியும் பல நினைவுகளை நினைக்கவும் வைக்கும் கவிதைகள்
34. நாளை பிறந்து இன்று வளர்ந்தவள்
- கவிஞர் மாதங்கி கவிதைகள் (சிங்கப்பூர்)
- சிங்கப்பூர் கவிஞரின் கவிதைகள் என்பதால் சில கவிதைகளோடு நேரடி தொடர்பை உணர முடிந்தது.
35. கருநீல முக்காடிட்ட புகைப்படம்
- கவிஞர் மனுஷி கவிதைகள்
- மாயாவை வட்டமிடும் கவிதைகளில் நம்மை உடன் அழைத்துச் செல்கிறார் கவிஞர்.
36. தூவிகளின் நிகண்டு
- இனிதி கவிதைகள்
- அன்றாடங்களை எளிமையாக கவிதைகளில் புகுத்த முயல்கிறார் கவிஞர்.
- சில இடங்களில் இரசிக்கும்படியும் சில இடங்களில் வெறுமனே கடந்து போகும்படி ஆகின்றன.
37. என்றுதானே சொன்னார்கள்
- கவிஞர் சாம்ராஜ் கவிதைகள்
- ரொம்ப நாளாய்த் தேடிய தொகுப்பு இது.
- கவிஞரின் பல முக்கியமான கவிதைகள் இத்தொகுப்பில் உள்ளன.
- அவை வாசித்து கடக்க முடியாத அவஸ்தைகள் கொடுக்கின்றன.
கதைகள்/சிறுகதைகள்/குறுங்கதைகள்
38. அசைவற்று மிதக்கும் நிழல்
- உதயசங்கர் குறுங்கதைகள்
- குறுங்கதைகள் எழுதவும் சரி வாசிக்கவும் சரி; பெரிய உழைப்பு தேவைப்படும் என சொல்லும் தொகுப்பு.
- குறுங்கதைகள் சோம்பேறிகளின் வேலை எனச் சொல்லி சும்மா இருப்பவர்கள் கட்டாயம் இந்தத் தொகுப்பை வாசித்துவிடுங்கள்
- உங்கள் முடிவை மாற்ற சிறந்து புத்தகம் இது.
39. சூஃபி ஆகும் கலை
- நஸீமா ரஸாக் எழுதியது.
- 50 கதைகள் கொண்ட தொகுப்பு
- வாசிக்க மட்டுமல்லாது மாணவர்களுக்கு நாம் பகிர்ந்து கொள்ளக்கூடிய கதைகள்
40. மக்தூப்
- பாலோ கொயலோவின் எழுத்து
- ரசவாதி என்னும் நாவலுக்கான துணை நூலாகச் சொல்லப்படுகிறது.
- 200 கதைகள் கொண்ட தொகுப்பு
- முன்னமே நாம் வாசித்த் கேள்விபட்ட கதைகளை பாலோ கொயலோ அவரது பாணியில் சொல்லியிருக்கிறார்.
41. நான் யார் ? – தேடலும் வீடுபேறு அடைதலும்
- who Am I ? என்ற புத்தகத்தின் தமிழாக்கம்.
- 173 ஜென் கதைகள் கொண்ட புத்தகம்.
42. ரூமியின் வாழ்வில் ஞானக் கதைகள் நூறு
- எழுத்து இத்ரீஸ் ஷாஹ்
- ரமீஸ் பிலாலியின் தமிழாக்கம்.
- ஆன்மீக சிந்தனைக்கு ஏற்ற ரூமியின் கதைகள்
இதர வாசிப்பு
43. கவிஞனும் கவிதையும்
- எழுத்து எஸ்.ராமகிருஷ்ணன்
- கவிதைகள் பற்றிய கட்டுரைகள்
- கவிதைகளை வாசிக்கவும் எழுதவும் விரும்புகின்றவர்களுக்கு ஏற்ற புத்தகங்களில் ஒன்று.
44. ஜென் தத்துவமும் மகிழ்ச்சியான வாழ்க்கையும்
- ஜென் மீதான புரிதலுக்கு உதவும்.
45. ஜென் – எளிமையாக வாழும் கலை
- 100 நாட்களுக்கு தினமும் வாசிக்க ஏற்ற புத்தகம்.
- நேரம் கிடைக்கும் போதெல்லாம் திரும்பத்திரும்ப வாசிக்கலாம்.
46. வாபி சாபி – கச்சிதமின்மையிலுள்ள ஞானம்
- ஒவ்வொன்றும் அதற்கே உரிய தனித்தன்மையில்தான் இயங்குகிறது என்பதைச் சொல்லும் புத்தகம்.
47. நேரத்தை வெற்றி கொள்.
- 14 வியாபார ஆளுமைகளின் நேரம் குறித்தான பார்வையும் அவர்கள் நேரத்தைப் பயன்படுத்தும் வழிமுறைகளையும் பகிர்ந்து கொள்கிறார்கள்.
48. விமானத்தின் பயணத்திட்டம்
- பிரையன் டிரேசி
- விமானப்பயணத்திற்கு இணையாக தன்முனைப்பைச் சொல்லும் புத்தகம்.
49. ஆல்ஃபா அப்பா’ ஒமேகா அம்மா
- எழுத்து நியாண்டர் செல்வன்
- வாசிக்க ரொம்பவும் சுவாரஸ்யமான புத்தகம்
- எதார்த்த சூழலுக்கு ஏற்றபடி கட்டுரைகள் எழுதப்பட்டிருக்கும்
50. As a Man Thinketh
- Book by James Allen
- Help to understand our basic thought
அடுத்து நடுகல்.காம் இணைய இதழுக்கு எழுதிக்கொண்டிருக்கும் 'மாதம் ஒரு மலேசிய புத்தகம்' தொடருக்காக வாசித்தவை (மூன்றும் மீள்வாசிப்பு)
51. கையறு
- கோ.புண்ணியவானின் நாவல்
52. நிலங்களின் நெடுங்கணக்கு
- மதியழகனின் நாவல்
53. நிகழ்தலும் நிகழ்தல் நிமித்தமும்
- கவிஞர் பூங்குழலி வீரனின் கவிதைகள்
இந்த மூன்று புத்தகங்கள் குறித்தும் விரிவான அறிமுகத்தை நடுகல்.காமில் எழுதியுள்ளேன். நண்பர்கள் அங்கு சென்று வாசிக்கலாம்.
இந்த ஆண்டின் மூன்றாம் பகுதியை முடித்து நான்காம் பகுதிக்குள் நுழைகின்றோம். அடுத்ததாய் அக்டோபர் முதல் டிசம்பர் வரை வாசிப்பு என்னவாக அமைகிறது என பின்னர்தான் தெரியவரும். வாசிப்போம்.
அதற்கான முன்னெடுப்பாக; வீட்டு நூலகத்தை நேற்று இரவு முழுக்க ஆராய்ந்தும் சுத்தமும் செய்துக்கொண்டிருந்தேன். அடுத்த மூன்று மாதத்தில் வாசிக்கலாம் என தோன்றும் ஒவ்வொரு புத்தகத்தையும் எடுத்து பெட்டியில் அடுக்கினேன்.
காலை விடிந்ததும்; பேட்டி நிறைய புத்தகங்களாக இருந்ததைக் கண்டேன். நான் தூங்கி எழுந்த பின்னும் என்னுள் தூங்கும் புத்தகப்பிசாசு இன்னும் கண்விழிக்கவில்லை. அதனால் கொஞ்சம் அதிர்ச்சி கொஞ்சம் குழப்பம்.
இனி பெட்டியில் உள்ளவற்றை எடுத்து வாசிக்கலாம். அல்லது வழக்கம் போல பெட்டியில் சேராமல் நேராக கைக்கு கிட்டும் புத்தகங்களை வாசிக்கலாம். வாசிப்போம் நண்பர்களே…
உங்களுக்கு எப்போதும் என் அன்பு..
0 comments:
கருத்துரையிடுக