பொம்மிக்கு

இதானே சொர்க்க வாசல்
வழிவிடுங்கள்
பாதை மறந்துவிட்ட
மகளை தேடி வந்துள்ளேன்
இங்குதான் எங்காயினும் இருப்பாள்
அப்பா வந்திருப்பதாக சொல்லுங்கள்
ஓடி வருவாள்
பாதையை சுத்தம் செய்திடுங்கள்
என்னை கண்ட பின்
வேறெதையும் பார்க்காது
ஆட்டுக்குட்டியாய் துள்ளிவருவாள்
ஊதா வண்ண பூக்களின் இலைகளை காதுகளில் சொருகியிருப்பாள்
பூக்களை...