பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

பிப்ரவரி 16, 2012

இப்பொழுது வாசிப்பில்

(13.2.2012)
தற்போது படிக்கத் தொடங்கியிருப்பது
'புதிய காலம் - சில சமகால எழுத்தாளர்கள்'. எழுத்து ஜெயமோகன். நண்பர் நவின் முன்மொழிந்திருந்த மிக முக்கிய புத்தகம் இது.

சமகாலத்தில் கவனிக்கவேண்டிய ஆக்கங்களும் அதனை எழுதியவர்கள் குறித்தும் ஜெயமோகன் இதில் சொல்லியிருக்கின்றார்.
இப்போதுவரை எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய 'உறுபசி', 'யாமம்' ஆகிய நாவல்கள் குறித்து ஜெயமோகன் சொல்லியிருப்பதை படித்து முடித்தேன். இப்போது எஸ்.ரா-வின் 'நெடுங்குருதி' பற்றி ஜெ.மோ சொல்லியுள்ளதைப் படித்துக் கொண்டிருக்கிறேன்.


இந்த வரிசையில் ;
யுவன் சந்திரசேகர், மனுஷ்ய புத்திரன் , எம்.கோபலகிருஷ்ணன், ஜோ டி குரூஸ், சு.வெங்கடேசன், சு.வேணுகோபால், கண்மணி குணசேகரன், சாரு நிவேதிதா - ஆகியோர் குறித்தும் அவர்கள் ஆக்கங்கள் குறித்தும் சொல்லியுள்ளார் ஜே.மோ.
நிச்சயம் பயனுள்ள புத்தகம்தான்.

இப்படிக்கு ;
-தயாஜி-

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்