பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

ஜூலை 25, 2009

என் தமிழ் காதலிக்கு.......!


என் “தமிழ்”க் காதலிக்கு.......


வெயிலில் வேர்க்கின்றது.....
மழை நனைக்கின்றது....
காற்று தீண்டுகின்றது....

மகிழ்வில் சிரிப்பும்.....
கவலையில் கண்ணீரும்....
அளவாகவே வருகின்றது.......

விலாசம் மறக்கவில்லை...
விதியில் நம்பிக்கையில்லை....

சமிஞ்சை விளக்கு
கவனிக்கப்படுகின்றது......

கால் சட்டையும்,
மேல் சட்டையும்...,
வசதியாய் அமர்கின்றது......

புகைப்படங்கள் பேசுவதில்லை.....

பெயர் சொல்லி அழைத்தால்,
உணரமுடிகின்றது.........

மூணு வேலையும்,
பசிக்கின்றது.......

கடிகார நேரத்தைக்,
கணக்கெடுத்ததில்லை.....

இரவில் தூக்கமும்,
பகலில் தெளிவும்,
தொடர்கின்றது.........

கடிதங்கள் கடவுளாகவில்லை,
கவிதைகளை ரசித்ததில்லை........

பேனா மை முடிவதில்லை,
குப்பைகள் நிறைவதில்லை........

வாசனைப்பொருள் வாங்குவதில்லை,
வசதிக்காக ஏங்குவதில்லை........

கையெழுத்தில் குழப்பமில்லை,
காலுறைகளும் புதிது அல்ல........!

காதல் படங்கள் பார்ப்பது குறைவு,
காதல் கதைகளில் ஆர்வமில்லை.......

‘இப்படியே’ பயணமாகிக் கொண்டிருந்தேன்.....?
‘அவளை’ப் பார்க்கும்வரை.....!!!




..........தயாஜி வெள்ளைரோஜா..............

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்