2025-ஆம் ஆண்டில் வாசித்தவை; மொத்தம் 101 புத்தகங்கள்
நாவல்கள்
1. காதலின் நாற்பது விதிகள்.
- ரொம்பவும் பிடித்த நாவல்களில் இதுவும் அடங்கியது. நாவல் நகர்ந்த விதமும் நாவலுக்குள் நாவலாக விரிந்து சென்ற கதைகளும் கதாப்பத்திரங்களின் குரல்களும் வாசிப்பில் கவர்ந்தது. ரூமி என்னும் மகாகவி சமய போதகராக இருந்து கவிஞராக மாறும் மாற்றம் கவிதையாகச் சொல்லப்பட்டுள்ளது.
2. ஜின்களின் ஆசான்.
- வித்தியாசமான வாசிப்பு அனுபவத்தைக் கொடுக்கக்கூடிய கதை. சுவாரஸ்யமாக சொல்லப்பட்ட நாவல். துப்பறியும் பாணியில் ஒரு ஆன்மீக பயணம் என இதனைச் சொல்லலாம். ஜின் தேடி மனிதர்கள் போகிறார்கள். ஜின்களின் அரசனை சந்திக்கின்றார்கள். அதன் பின் நடந்தது என்ன என்பதை மீண்டும் நினைவுக்கூர்கிறது இந்நாவல்.
3. விசித்திரங்களின் புத்தகம்.
- காணாமல் போன நூலகரைத் தேடுவதில் தொடங்கிய கதை, மெல்ல மெல்ல அத்தேடல் அகத்தேடலாய் மாறி தனக்கான ஆன்மீக குருவைத் தேடும்படி பரிணமிக்கும் கதை. தன் ஆன்மீக பயணத்திற்கான சரியா குருவை நாயகன் கண்டடைந்தானா இல்லையா என்பது மீதிக்கதை.
4. அஹில்லா – நிலவின் 28 தோற்றங்கள்
- இது சூஃபி நாவல். முஅதஸ் மத்தர் எழுதி ரமீஸ் பிலாலி தமிழாக்கம் செய்திருந்தார். அருங்காட்சியகத்தில் வேலை செய்யும் வாய் பேச முடியாத மனிதனி எதிர்கொள்ளும் சிக்கலைச் சொல்லும் நாவல். ஒருபக்கம் அங்குள்ள ஒரு பொக்கிஷயத்தை திருடவேண்டிய நிர்பந்தம் இன்னொரு பக்கம் அங்கு அவனுக்கு ஏற்படும் காதல். அந்த பொக்கிஷயம் என்ன என்பது நாவலில் இன்னொரு பகுதியாக விரிந்து செல்லும். துப்பறியும் நாவலை வாசிக்க விருப்பம் உள்ளவர்கள் இந்நாவலை வாசிக்கலாம். அவர்களுக்கு ஒரு மாறுபட்ட வாசிப்பு அனுபவத்தைக் கொடுக்கும். ஆனால் இந்நாவலின் முடிவை என்னை ஈர்க்கவில்லை.
இந்நான்கு நாவல்களையும் ரமீஸ் பிலாலி மொழிபெயர்த்துள்ளார். சீர்மை பதிப்பம் வெளியிட்டுள்ளார்கள். நான்குமே சூஃபி நாவல்கள் என்பது இந்த நாவல் வாசிப்பிற்கான என் உந்துதல்.
5. சித்தார்த்தன்
- ஹெர்மன் ஹெஸ்ஸே எழுதிய திருலோக சீதாராம் தமிழாக்கம் செய்திருக்கும் நாவல். நீங்கள் ஒருமுறையேனும் இந்நாவலை வாசித்துவிடுங்கள். தாமதமாக இந்த நாவலை வாசித்துவிட்ட உணர்வை இந்நாவல் எனக்கு கொடுத்தது. வாழ்வின் அர்த்தம் எப்படி ஆளுக்கு ஆள் மாறுபடுகின்றது என்பதைத் தொடர்ந்து மனித மனம் எப்படியெல்லாம் நம்மை அலைக்கழிக்கும் என்பதை ரொம்பவும் ஆழகமாக இந்நாவலில் சொல்லப்பட்டிருக்கும்.
6. ஆலிஸின் அற்புத உலகம்
- லூயி கரோல் எழுதிய இந்நாவலை எஸ்.ராமகிருஷ்ணன் தமிழாக்கம் செய்திருக்கிறார். உலக புகழ்பெற்ற இந்நாவல் திரைப்படமாகவும் வந்திருக்கிறது. கற்பனையின் ஆழம் எதுவரை செல்லும் என நமக்கு காட்டும் நாவல்களில் இதுவும் ஒன்று.
கவிதைகள்
7. சோளகர் தொட்டி
- ச.பாலமுருகன் நாவல்
- நாவல் பல இடங்களில் மனதை கலங்கடித்ததும், ஜீரணிக்க சிரமத்தைக் கொடுக்கும் மனிதர்களின் வாழ்க்கை.
8. பிஞ்சுகள்
- கி.ராஜநாராயணன் எழுதிய நாவல். பெயருக்கு ஏற்றார் போலவே சிறுவர்கள் பற்றிய நாவல். வாசிக்கின்றவர்கள் அவர்களில் பால்ய வயதிற்கு சென்றுவிடுவார்கள். குறிப்பாக பறவைகள் பற்றி அதிகம் தெரிந்து கொள்ளலாம்.
9. என் தந்தையைக் கொன்றவர் யார்
- எதுவார் லூயி எழுதிய இந்நாவலை பிரஞ்சிலிருந்து தமிழாக்கம் செய்திருக்கிறார் எஸ்.ஆர்.கிருஷ்ணமூர்த்தி. தடாகம் வெளியிட்டுள்ளார்கள்.
10. மீராசாது
- கே.ஆர்.மீராவின் நாவல். கதை சொல்லும் யுக்தி பிடித்திருந்தது. ஆனால் கதையில் வரும் சில சம்பவங்களை எளிதாக ஜீரணிக்க முடியவில்லை.
11. பூனாச்சி அல்லது ஒரு வெள்ளாட்டின் கதை
- பெருமாள்முருகனின் நாவல். ரொம்பவும் இரசித்து வாசித்தேன் என்பதைவிடவும் அந்த பூனாச்சியோடு சில நாட்கள் நானுமே வாழ்ந்தேன் எனலாம். நாவலில் முடிவுதான் ….. சரி நீங்களே வாசித்து தெரிந்து கொள்ளுங்கள்.
சிறுகதைகள்/குறுங்கதைகள்/கதைகள்
12. தீர்மானம்
- எழுத்தாளர் ரிஸ்வான் ராஜாவின் சிறுகதைகள். 11 சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு இது. இதில் சில கதைகளைக் குறித்து விரிவாக பேச வேண்டும் என விரும்புகின்றேன். முழுமையான ஒரு கட்டுரையை வாசகசாலையில் எழுதியிருக்கிறன்
13. ஆப்பிள் துப்பாக்கி பெட்ரோல் நிலையம்
- த. அரவிந்தனின் குறுங்கதைகள். 64 குறுங்கதைகள் அடங்கிய தொகுப்பு. சில கதைகளை இருமுறைக்கும் அதிகமாக வாசித்த பின்னரே புலப்பட்டது. ஏமாற்றாத குறுங்கதைகள் இவை. பலவிதமான குறுங்கதைகளை வாசித்த அனுபவத்தைக் கொடுத்தது.
14. அசைவற்று மிதக்கும் நிழல்
- உதயசங்கர் குறுங்கதைகள்
- குறுங்கதைகள் எழுதவும் சரி வாசிக்கவும் சரி; பெரிய உழைப்பு தேவைப்படும் என சொல்லும் தொகுப்பு.
- குறுங்கதைகள் சோம்பேறிகளின் வேலை எனச் சொல்லி சும்மா இருப்பவர்கள் கட்டாயம் இந்தத் தொகுப்பை வாசித்துவிடுங்கள்
- உங்கள் முடிவை மாற்ற சிறந்து புத்தகம் இது.
15. சூஃபி ஆகும் கலை
- நஸீமா ரஸாக் எழுதியது.
- 50 கதைகள் கொண்ட தொகுப்பு
- வாசிக்க மட்டுமல்லாது மாணவர்களுக்கு நாம் பகிர்ந்து கொள்ளக்கூடிய கதைகள்
16. மக்தூப்
- பாலோ கொயலோவின் எழுத்து
- ரசவாதி என்னும் நாவலுக்கான துணை நூலாகச் சொல்லப்படுகிறது.
- 200 கதைகள் கொண்ட தொகுப்பு
- முன்னமே நாம் வாசித்த் கேள்விபட்ட கதைகளை பாலோ கொயலோ அவரது பாணியில் சொல்லியிருக்கிறார்.
17. நான் யார் ? – தேடலும் வீடுபேறு அடைதலும்
- who Am I ? என்ற புத்தகத்தின் தமிழாக்கம்.
- 173 ஜென் கதைகள் கொண்ட புத்தகம்.
18. ரூமியின் வாழ்வில் ஞானக் கதைகள் நூறு
- எழுத்து இத்ரீஸ் ஷாஹ்
- ரமீஸ் பிலாலியின் தமிழாக்கம்.
- ஆன்மீக சிந்தனைக்கு ஏற்ற ரூமியின் கதைகள்
19. என்றார் ஸூஃபி
- எழுத்து ரமீஸ் பிலாலி
- ஸூஃபிச கதைகள்.
20. K3 (கே 3)
- கணேஷ்ராம் மொழிபெயர்த்த குறுங்கதைகள்
- கார்ம்ஸ், காஃபகா, கவாபட்டா ஆகிய மூவரின் குறுங்கதைகள் இவை. இதில் கார்ம்ஸ் இந்தப் புத்தகத்தின் மூலமே அறிமுகம். நூல்வனம் வெளியிட்ட புத்தகம். இதன் கையடக்க வடிவம் ரொம்பவே கவர்ந்தது.
21. காஃப்காவின் நுண்மொழிகள்
- கணேஷ்ராமின் தமிழாக்கம்
- குறைந்த சொற்களை பெரிய செய்திகளைச் சொல்லும் இந்த நுண்மொழிகள் , சில இடங்களில் குழப்பமாகவும் மீண்டும் மீண்டும் வாசிக்க ஓரளவு பிடிப்டவும் செய்தது.
- நூல்வனம் வெளியிட்ட புத்தகம். இதன் கையடக்க வடிவம் ரொம்பவே கவர்ந்தது.
22. ஒற்றைக் குரல்
- இளங்கோ கிருஷ்ணனின் நுண்கதைகள்
- இந்தக் கதைகளின் சிறப்பு; இந்தக் கதை நமக்கு புரியவேண்டும் என்றால் இதற்கு முந்தைய சில கதைகள், வரலாறு, தொன்மக்கதைகள் போன்றவரை தெரிந்திருக்க வேண்டும். அதில்லாது வாசித்தால் இக்கதைகளின் சுவாரஸ்யமும் இக்கதையின் விசயமும் நமக்கு பெரிதாக தெரியாது.
23. சேத்துமான் கதைகள்
- பெருமாள்முருகன் சிறுகதைகள்.
- வறுகறி, மாப்புக் கொடுகோணுஞ் சாமீ என்ற இரு சிறுகதைகள் அடங்கிய கையடக்க புத்தகம்.
- இரண்டு கதைகளுமே சொல்லும் செய்தி ஒன்றுதான், எல்லோருக்குமே நாம் அடிக்கவும் வதைக்கும் தூக்கி போட்டு மிதிக்கவும் யாரோ ஒரு தேவையாக இருக்கிறார்கள்.
24. சிறுவர் நாடோடிக் கதைகள்
- கி.ராஜநாராயணன் தொகுத்திருக்கிறார்.
- கி.ராவின் நண்பரான வீரவேலுசாமியின் கதைகள் இவை. இந்தக் கதைகள் உருவான கதையை முன்னுரையில் கி.ரா அழகாக எழுதியிருப்பார்.
25. மாயம்
- பெருமாள்முருகன் சிறுகதை
- இந்தச் சிறுகதைத் தொகுப்பில் மொத்தம் 20 சிறுகதைகள் உள்ளன. ஒவ்வொரு சிறுகதைக்கும் ஒவ்வொரு பதிவாக்க எனது வலைப்பூவில் எழுதியுள்ளேன்.
26. புதிய நீதிக் கதைகள்
- சுஜாதா எழுதியது
- வாசிப்பில் லேசாக சோர்வு தட்டியபோது எடுத்த வாசித்த புத்தகம். நீதிக்கதைகளின் மீளுருவாக்கம் ரசிக்கும்படியும் கேள்விகளைக் கொடுத்தபடியும் இருந்தன.
கவிதைகள்
27. யாருமற்ற நிழல் – தேவதச்சன் கவிதைகள்
28. என் ஓவியம் உங்கள் கண்காட்சி – கல்யாண்ஜி கவிதைகள்
29. வாழ்க்கைக்கு வெளியில் பேசுதல் – இசை கவிதைகள்
30. கடல் காற்று கங்குல் – மின்ஹா கவிதைகள்
31. நாங்கூழ் – மின்ஹா கவிதைகள்
32. தாகங்கொண்ட மீனொன்று - ரூமி (என்.சத்தியமூர்த்தியின் தமிழாக்கம்)
33. ரூமியின் வைரங்கள் – ரூமியின் கவிதைகள். ரமீஸ் பிலாலியின் தமிழாக்கம்
- இந்தத் தொகுப்பு கவிதைகள் குறித்து காணொலிகள் செய்திருக்கிறேன்.
34. காட்டோவியம்
- ஜீ.முருகனின் கவிதைத்தொகுப்பு. எனக்கு அவரது சிறுகதைகளைப் பிடிக்கும் பல கதைகளை வாசித்து நண்பர்களுடன் உரையாடியுள்ளேன். முதன் முறையாக அவரது கவிதைகளை வாசிக்கின்றேன். பெரும்பாலான கவிதைகள் வாசகனோடு உரையாடுவதாக அமைந்திருந்தன. நம்மிடமும் அதற்கான பதில்கள் இருக்கத்தான் செய்கின்றன.
35. இறகிசைப் பிரவாகம்
- கவிதைத் தொகுப்பு
- 130 கவிஞர்களின் பறவைகள் குறித்த கவிதைகள் அடங்கியவை.
- மீண்டும் மீண்டும் வாசிக்க வேண்டிய புத்தகமாய் இதனை சேர்த்துக்கொண்டேன்
36. கவிதைக் கென்ன வேலி
- இந்தியப் பிறமொழி கவிதைகள்
- கவிஞர் புவிரசுவின் தமிழாக்கம்
- குறிப்பாக கன்னடம் மற்றும் தெலுங்கு கவிதைகளின் மொழியாக்கம் இரசிக்கும்படியும் ஆச்சர்யத்தைக் கொடுக்கும்படியும் அமைந்தன.
37. அவிழும் சொற்கள்.
- கவிஞர் ரவிக்குமார் கவிதைகள்
- அங்கொன்றும் இங்கொன்றுமாக வாசித்தவரின் கவிதைகளை புத்தகத்தில் வாசித்து மகிழ்ந்தேன்.
- இருவரிகளில் கூட ஆழமான கவிதைகளைக் கொடுத்திருக்கின்றார்.
38. நீரின்றி அமையாது உலகு.
- கவிஞர் மாலதி மைத்ரி கவிதைகள்
- 2013-ஆம் ஆண்டு, கவிஞர் பூங்குழலி இந்தத் தொகுப்பை எனக்கு பிறந்தநாள் பரிசாக கொடுத்தார்.
- இந்தத் தொகுப்பு கவிஞரின் கவிதைகள் மீது ஆர்வத்தைக் கொடுத்தது.
- கவிஞரின் பிற கவிதைப் புத்தகங்களையும் வாங்கிவிட்டேன்.
39. உடலாடும் நதி
- கவிஞர் லதா அருணாச்சலம் கவிதைகள்
- எந்தவித எதிர்ப்பார்ப்பும் இல்லாமல் வாசித்தேன்.
- அலட்டிக்கொள்ளாத கவிதைகள்; தனித்து இரசிக்கும்படியும் பல நினைவுகளை நினைக்கவும் வைக்கும் கவிதைகள்
40. நாளை பிறந்து இன்று வளர்ந்தவள்
- கவிஞர் மாதங்கி கவிதைகள் (சிங்கப்பூர்)
- சிங்கப்பூர் கவிஞரின் கவிதைகள் என்பதால் சில கவிதைகளோடு நேரடி தொடர்பை உணர முடிந்தது.
41. கருநீல முக்காடிட்ட புகைப்படம்
- கவிஞர் மனுஷி கவிதைகள்
- மாயாவை வட்டமிடும் கவிதைகளில் நம்மை உடன் அழைத்துச் செல்கிறார் கவிஞர்.
42. தூவிகளின் நிகண்டு
- இனிதி கவிதைகள்
- அன்றாடங்களை எளிமையாக கவிதைகளில் புகுத்த முயல்கிறார் கவிஞர்.
- சில இடங்களில் இரசிக்கும்படியும் சில இடங்களில் வெறுமனே கடந்து போகும்படி ஆகின்றன.
43. என்றுதானே சொன்னார்கள்
- கவிஞர் சாம்ராஜ் கவிதைகள்
- ரொம்ப நாளாய்த் தேடிய தொகுப்பு இது.
- கவிஞரின் பல முக்கியமான கவிதைகள் இத்தொகுப்பில் உள்ளன.
- அவை வாசித்து கடக்க முடியாத அவஸ்தைகள் கொடுக்கின்றன.
44. சூரியனைச் சுமந்து செல்லும் பாட்டி
- கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு – ஹைக்கூ போட்டியில் 2023-ஆம் ஆண்டு பரிசு பொற்ற கவிதைகள்
45. தேவதை புராணம்
- சி.சரவணகார்த்திகேயன்
- அவரின் முன்னுரை இக்கவிதைகளை மேலும் இரசிக்க உதவின. முழுக்கவும் ஒரு பெண்ணின் அந்தந்தப்ப பருவத்து குரலாக ஒலிக்கின்றன இக்கவிதைகள்.
46. பறவைகள் அலைகிற உயரம்
- குகை மா.புகழேந்தியின் கவிதைகள்
- முதன் முறையாக அவரது கவிதைத்தொகுப்பை வாசிக்கிறேன்
- கவிதைகள் எனக்கு பிடித்திருந்தன. அடுத்த புத்தகத்தை கட்டாயம் வாங்குவேன்.
47. வலி
- அறிவுமதி கவிதைகள்
- அகதிகளை மையப்படுத்திய கவிதைகள்
- அந்த மனிதர்களின் வலியே இக்கவிதைகளுக்கு ஆதாரம்.
48. என்னைச் சந்திக்க கனவின் வராதே
- ஜப்பான் தேசத்து கவிஞர்களில் காதல் கவிதைகள்
- நா.முத்துக்குமார் தமிழாக்கம் செய்திருக்கிறார்.
49. பித்தன்
- கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள்
- வாசிக்க வாசிக்க ஆச்சர்யத்தில் ஆழ்த்திய கவிதைகள்.
- இதனையடுத்து கவிக்கோவின் இதுவரை வாங்காத புத்தகங்களை வாங்கிவிட்டேன். அடுத்த ஆண்டு வாசிப்பு பட்டியலில் சேர்த்தும் விட்டேன்.
50. வழி தப்பிய பறவைகள்
- ரவீந்திரநாத தாகூர் கவிதைகள்
- பட்டு எம்.பூபதி தமிழாக்கம் செய்துள்ளார்.
- இன்று எழுதப்படும் கவிதைகள் கொடுத்த சோர்வை தட்டி தூக்கிப்போட வைத்த கவிதைகள் இவை.
51. ஆயுளின் அந்திவரை
- அறிவுமதி கவிதைகள்
- இருபது ஆண்டுகளுக்கு முன் வாங்கிய புத்தகம். அவரிடமே கையெழுத்தைப் பெற்ற புத்தகம்.
- மீண்டும் எடுத்து முழுமையாக வாசிக்கும்படி அமைந்துவிட்டது.
52. பாயக் காத்திருக்கும் ஓநாய்
- அப்பாஸ் கியரோஸ்தமி கவிதைகள்
- க.மோகனரங்கள் கவிதைகள்
- எனக்கு புதிய அறிமுகம். சில கவிதைகள் புரியவில்லை. சில கவிதைகளா என கேட்கவும் வைத்தன. ஆனால் சுகுமாரன் இந்தத் தொகுப்பிற்கு கொடுத்திருக்கும் முன்னுரை இக்கவிதைகளைப் புரிந்து கொள்ளவும் கவிதைகளின் பின்னணியை அறிந்து கொள்ளவும் உதவின.
53. அவன் கன்னத்தில் ஹைப்ரிட் செவ்வரளி பூக்கிறது
- பெருந்தேவி கவிதைகள்
- அவரின் கவிதைகளில் இது எனக்கு வித்தியாசமாக தெரிந்தது.
54. ஒரு மாலையும் இன்னொரு மாலையும்
- சல்மா கவிதைகள்
55. நிழற்படத்தில் மறைந்திருக்கும் முதுகு
- பா.ராஜா கவிதைகள்
- நான் வாசிக்கும் அவரின் முதல் கவிதைத் தொகுப்பு.
- வாசிப்பில் நெருக்கமான உணரக்கூடிய கவிதைகள்.
- இவரின் அடுத்த கவிதைத்தொகுப்புகளை நம்பிக்கையோடு வாங்குவேன்.
கட்டுரைகள்/இதர புத்தகங்கள்
56. கவிதை: இன்று முதல் அன்று வரை
- வண்ணநிலவன்
- 20 தமிழ்க் கவிஞர்களின் கவிதை உலகைக் குறித்த அறிமுகமும் விமர்சனமும் அடங்கிய தொகுப்பு. சிலரை அறிமுகம் செய்தததோடு பல கவிஞர்களைப் புரிந்து கொள்ளவும் உதவியது.
57. பண வாசம் - குரு மித்ரேஷிவா
- எது செல்வம், எப்படி அடைவது, அதனை அடைவதற்கான மனநிலை என்னவாக இருக்க வேண்டும் என்பதற்கான அடிப்படை கருத்துகளைச் சொல்லும் புத்தகம்.
- இந்தப் புத்தகம் குறித்து ஒவ்வொரு அத்தியாயத்தையும் மையப்படுத்தி காணொலிகள் செய்திருப்பேன்.
58. புனைநிலை உரைத்தல்
- மலேசிய எழுத்தாளர்கள் 4 பேரின் படைப்புலகம் பற்றிய விமர்சனக்கட்டுரை தொகுப்பு.
- இன்று நான் எழுதும் விமர்சன கட்டுரைகளுக்கு உதவி புரிந்த புத்தகம்.
59. கவிஞனும் கவிதையும்
- எழுத்து எஸ்.ராமகிருஷ்ணன்
- கவிதைகள் பற்றிய கட்டுரைகள்
- கவிதைகளை வாசிக்கவும் எழுதவும் விரும்புகின்றவர்களுக்கு ஏற்ற புத்தகங்களில் ஒன்று.
60. ஜென் தத்துவமும் மகிழ்ச்சியான வாழ்க்கையும்
- ஜென் மீதான புரிதலுக்கு உதவும்.
61. ஜென் – எளிமையாக வாழும் கலை
- 100 நாட்களுக்கு தினமும் வாசிக்க ஏற்ற புத்தகம்.
- நேரம் கிடைக்கும் போதெல்லாம் திரும்பத்திரும்ப வாசிக்கலாம்.
62. வாபி சாபி – கச்சிதமின்மையிலுள்ள ஞானம்
- ஒவ்வொன்றும் அதற்கே உரிய தனித்தன்மையில்தான் இயங்குகிறது என்பதைச் சொல்லும் புத்தகம்.
63. நேரத்தை வெற்றி கொள்.
- 14 வியாபார ஆளுமைகளின் நேரம் குறித்தான பார்வையும் அவர்கள் நேரத்தைப் பயன்படுத்தும் வழிமுறைகளையும் பகிர்ந்து கொள்கிறார்கள்.
64. விமானத்தின் பயணத்திட்டம்
- பிரையன் டிரேசி
- விமானப்பயணத்திற்கு இணையாக தன்முனைப்பைச் சொல்லும் புத்தகம்.
65. ஆல்ஃபா அப்பா’ ஒமேகா அம்மா
- எழுத்து நியாண்டர் செல்வன்
- வாசிக்க ரொம்பவும் சுவாரஸ்யமான புத்தகம்
- எதார்த்த சூழலுக்கு ஏற்றபடி கட்டுரைகள் எழுதப்பட்டிருக்கும்
66. As a Man Thinketh
- Book by James Allen
- Help to understand our basic our basiour basic thought
67. குஷ்வந்த் சிங் ஜோக்ஸ்
68. மரித்தோர் பாடல்கள்
- காஸாவின் கொல்லப்பட்டவர்களின் இறுதி வார்த்தைகள்
- மீண்டும் வாசிக்க விரும்ப புத்தகம்.
- முதல் முறை மனதை கலங்கடித்துவிட்டது.
- மனிதத்தின் மீது விழுந்திருக்கும் மிகப்பெரிய சாபம்தான் இந்தப் புத்தகத்தில் இருக்கும் ஒவ்வொரு வார்த்தைகளும்
- தேர்வும் தொகுப்பும் அ.சி.விஜிதரன்
- வெளியீடு சிந்தன் புக்ஸ்
69. உங்கள் ஆற்றலை சரியாக பிரயோகிப்பது எப்படி
- பிரம்மானந்தம் கட்டுரைகள்
70. புனைவு (முகநூல் பதிவுகள்)
- எழுத்து சீனிவாசன் நடராஜன்
- முகநூல் பதிவுகள் எவ்வளவு முக்கியமாக மாறக்கூடும் என சொல்லும் புத்தகம்.
- எழுதுவதில் ஆர்வம் உள்ளவர்கள் எதை எழுதலாம் என்பதற்கான உதாரணமாக இப்புத்தகத்தை வாசித்துப் பார்க்கலாம்.
71. தனிநபர் வெற்றி
- பிரையன் டிரேசி புத்தகம்
- நாகலட்சுமி சண்முகமத்தின் தமிழாக்கம்
72. இச்சிகோ இச்சியே
- இக்கியாய் புத்தகம் எழுதியவர்களின் இன்னொரு புத்தகம்
- வாழும் கணம் எவ்வளவு முக்கியம் என பாடம் நடத்துகிறது.
73. கணப்பிறை
- ந.பெரியசாமி கட்டுரைகள்
- கவிதைகள் நாவல்கள் பற்றி கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு.
- இந்தப் புத்தகம் குறித்து விரிவாகவே வாசகசாலை அகப்பக்கத்தில் எழுதியிருப்பேன்.
- எனது கவிதை சார்ந்த கட்டுரைகளுக்கு நல்லதொரு திறப்பை கொடுத்த புத்தகம்.
- ந.பெரியசாமி தொடர்ந்து வாசிக்கப்படவேண்டியர் என்ற நம்பிக்கையைக் கொடுத்தது.
74. பத்து லட்சம் பட்டங்கள்
- காசா குழந்தைகளின் வாக்குமூலங்களும் கவிதைகளும் 2023-2024
- என்னை ரொம்பவும் துன்பத்தில் ஆழ்த்திய புத்தகம்.
- வாசிக்க வாசிக்க சிறுவர்களின் குரலை நாமும் கேட்க முடிந்தது.
- இந்தப் புத்தகம் குறித்த சிறு அறிமுகத்தை என் வலைப்பூவில் எழுதியிருக்கிறேன்.
75. பெயரிடப்படாத புத்தகம்
- ஈரோடு கதிர் எழுதியது
- சுவாரஸ்யமான கட்டுரைகள் கொண்ட தொகுப்பு.
76. எம்.ஜி.சுரேஷுடன் ஓர் உரையாடல்
- சிபிச்செல்வன் தொகுத்திருக்கும் எம்.ஜி.சுரேஷின் நேர்காணல் தொகுப்பு.
77. அங்கிகரிக்கப்படாத கனவின் வலி
- சி.மோகன் நேர்காணல்கள்
78. கி.ராவின். கடைசி நேர்காணல்
- கி.ராவின் நேர்காணல் புத்தகம்
79. பொய்களுக்குத்தான் முழக்கங்கள் தேவை உண்மை முனங்கினாலே போதும்
- தேர்ந்தெடுக்கப்பட்ட உரையாடல்கள்
- தொகுப்பு சித்ராசிவன்
80. வளரொளி
- நேர்காணல்கள் – மதிப்புரைகள்
- தொகுப்பாசிரியர் சுனில் கிருஷ்ணன்
81. படைப்புகளின் உரையாடல்
- ஜோ டி குருஸ் கட்டுரைகள்
82. சொற்களைத் தேடும் இடையறாத பயணம்
- ச.சுப்பாராவ் கட்டுரைகள்
- கட்டுரையை எப்படி சுவாரஸ்யமாக எழுதலாம் என்பதற்கு உதாரணமா சொல்லக்கூடிய கட்டுரை.
- இந்தப் புத்தகம் குறித்து விரைவில் விரிவாகவே எழுத விரும்புகிறேன்.
83. ஆட்ட்டத்தின் ஐந்து விதிகள்
- ஜா.ராஜகோபாலன் எழுதியது
- வியாபாரிகளுக்கு ஏற்ற புத்தகங்களில் ஒன்று.
- ஆழ்ந்து வாசித்தால் அவை வெறும் வியாபார உக்திகள் மட்டுமல்ல என்பது புலப்படும்.
84. தனித்த சொற்கள்
- எஸ்.ராமகிருஷ்ணனின் எழுத்து
- உலக இலக்கியக் கட்டுரைகள்
- இப்புத்தகம் குறித்து எனது வலைப்பூவில் எழுதியுள்ளேன்.
85. கற்பனை அலைகள்
- எஸ்.ராமகிருஷ்ணன் எழுத்து
- இதுவும் உலக இலக்கியக் கட்டுரைகள்தான்.
86. ஆத்ம தாகம்
- மார்க்ஸ் அரேலியஸ்
- மீண்டும் மீண்டும் வாசிக்க வேண்டிய புத்தகம்
- தத்துவங்கள் மீதான ஆவலைக் கொடுக்கும் புத்தகம்.
87. பின்தொடரும் பிரம்மம்
- ஜெயமோகன் கட்டுரைகள்
அடுத்ததாக, நடுகல்.காம் மின்னிதழுக்கு எழுதும் மாதாந்திர தொடரான ‘மாதம் ஒரு மலேசிய புத்தகம்’ என்னும் தொடருக்காக வாசித்தவையும் மீள்வாசிப்பு செய்தவையும்.
இதோடு ஜனவரி 2026-ம் ஆண்டிற்கான கட்டுரைக்காக வாசித்த புத்தகங்களையும் இணைத்துள்ளேன். ஜனவரி முதல் வெளிவர இருக்கும் ‘மாதம் ஒரு சிங்கப்பூர் புத்தகம்’ எனும் இன்னுமொரு புதிய தொடருக்கு வாசித்த சிங்கப்பூர் புத்தகமும் இதில் உள்ளது.
88. ஆதி.இராஜகுமாரன் சிறுகதைகள்
89.ஜ ஜீவானந்தன் சிறுகதைகள்
90. மா.சண்முகசிவா சிறுகதைகள்
91. நாகம்மாளின் மனக்குறிப்புகள் – மனோகரன்
கிருஷ்ணன் சிறுகதைகள்
92. அகப்பறவை - பூங்குழலிவீரன் கவிதைகள்
93. மங்கிய நீலப் புள்ளி – ஓவியர் சந்துரு கவிதைகள்
94. பின்னர் அப்பறவை மீண்டும் திரும்புகிறது –
பா.ஆ.சிவம் மொழிபெயர்த்த மலாய் கவிதைகள்
95. நிகழ்தலும் நிகழ்தல் நிமித்தமும் – பூங்குழலிவீரன் கவிதைகள்
96. மண்புழுக்கள் – சீ.முத்துசாமி நாவல்
97. அந்திம காலம் – ரெ.கார்த்திகேசு நாவல்
98. கையறு – கோ.புண்ணியவான் நாவல்
99. நிலங்களின் நெடுங்கணக்கு – மதியழகன் நாவல்
இந்த 12 மலேசிய புத்தகங்கள் குறித்தும் 2025-ம் ஆண்டு ஜனவரி தொடங்கி டிசம்பர் வரை நடுகல்.காம் மின்னிதழுக்கு விரிவாகவே எழுதியிருக்கிறேன். வாய்ப்புள்ள நண்பர்கள் வாசிக்கலாம்.
ஜனவரிக்கான மாதம் ஒரு மலேசிய புத்தகம் மாதம் ஒரு சிங்கப்பூர் புத்தகம் என்ற இரு தொடர்களுக்காக வாசித்த புத்தகங்கள் இவை. இந்தக் கட்டுரையை ஜனவரி நடுகல்.காமில் நண்பர்கள் வாசிக்கலாம்.
100. மலேசிய நாவல்கள் – ம.நவீனின் இரசனை விமர்சன கட்டுரைகள் (மலேசியா)
101. மாறிலிகள் – சித்துராஜ் பொன்ராஜ் சிறுகதைகள் (சிங்கப்பூர்)
இவை கடந்த ஆண்டு வாசித்த புத்தகங்கள் என்பதனை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கிறேன். இன்னும் சில ரொம்பவும் அந்தரங்கமான வாசிப்பு புத்தகங்கள் உள்ளன. அதனை சேர்க்கவில்லை.
வாசிப்போம்... நேசிப்போம்... வளர்வோம்....
#தயாஜி
#புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை