பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

ஜூன் 09, 2025

- மூதாதையின் முத்தம் -

- மூதாதையின் முத்தம் -


ஏதோ ஒன்று

எல்லாவற்றையும் தாண்டி

நம் கண்கள் கலங்காதபடிக்கு

நம் குரல்கள் நடுங்காதபடிக்கு

நம் கால்கள் இடறாதபடிக்கு

நம் வாழ்வு சிதறாதபடிக்கு


நம்மை ரொம்பவும்

ஆழமாக

தாங்கி பிடித்துக்கொண்டிருக்கலாம்


அது

நாம் எழுதிக்கொண்டிருக்கும்

வாழ்வின் பொன்சாய் மரமாகவும்

இருக்கலாம்


அது

ஆதாம் ஏவாள் காலத்து

நம் மூதாதையின் முத்தமாகவும்

இருக்கலாம்



அதுவே

நம் உள்ளங்கையைக் கூட

முழுதாய் மூடமுடியாதபடிக்கு

தவித்துக்கொண்டிருக்கும்

அந்தக் கடவுளின் கரங்களாகவும் இருக்கலாம்




Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்