பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

செப்டம்பர் 28, 2019

மர்லின் 5




மர்லின்

நீதான் எத்தனை விதமானவள்
எத்தனை இதமானவள்...

எட்டி எடுக்க முடியாவிட்டாலும்
எக்கி எடுக்க முடிந்ததால்

புத்தகங்கள் கூட
இறகின்றி
உயரத்தில் உட்கார்ந்துக் கொள்கின்றன
உன்னை எதிர்ப்பார்த்து விழிக்கின்றன

மனிதன்
நான் என்ன செய்ய

மர்லின்...

கொஞ்சம்
இதழ் கொடேன்
இறுக்கிக்கொள்கிறேன்

இருக்கும் புத்தகங்கள்
பொறாமையில் பொசுங்கட்டும்

இனிமேல் புத்தகங்கள்
நம்மால் பிறக்கட்டும்

வரிகள் ஒவ்வொன்றிலும்
வாசனை தெளித்திடலாம்

படிப்பதில் போதை
கொடுத்திடலாம்

இன்னும் இன்னும்
உயரத்தில் அடுக்கிடலாம்
காதலை உதிரத்தில் கலந்திடலாம்...

வார்த்தைகளிலாவது
நாம்
வாழ்க்கை கொள்வோம்

வாசிக்கின்றவர்களின் வயதினை
கொல்வோம்


-தயாஜி-

Break me! Smash me!



Here i am...


Standing in front of this mirror....

Deep inside me I feel so weak and shattered....

The mirror reflects 'me'...


The 'me' with full of weaknesses...

The mirror said

"You are defeated"

The mirror said

"You are illiterate"

The mirror said

"You are a loser"

The mirror said

"You are lethargic"

The mirror said

"You are fearful"

The mirror said

"You are impecunious"

The mirror said

"You have no value"

The mirror said

"You are in pain"

The mirror said

"You are unattractive"

The mirror said

"You are empty"

The mirror said

"You are dispirited"

I hate what I'm seeing!!!

I closed my eyes & open it again...

Here I am...

Standing in front this mirror and looking at it sedulously...

Finally,

The mirror said

"Go ahead man... Break me! Smash me!"


By taya.G

மர்லின் 4




என்ன மர்லின்
என் கதையில்
எதனைத் தேடுகிறாய்

எப்போதோ தொலைந்த உன்னையா
எப்போதும் தொலையும் என்னையா

கவனமாக பார் மர்லின்
வார்த்தைகளின் இடுக்கில் கூட
நீ இருக்கக்கூடும்

எந்த பக்கம்
திறந்ததும்
உன் வாசனை கொடுக்கிறதோ
அதுதான் உனக்கான
துருப்புச் சீட்டு

வார்த்தைகளை நோக்கி
வாசனையோடு பின் தொடர்

உன்னை முன் தொடர்ந்த
என் கதையில்
எந்த பக்கத்தில் நீ
இருக்கிறாய் என்று
என்னாலும் நினைக்க முடியவில்லை

என்
எந்த பக்கமும் நீ
இருப்பதால் இந்த
குழப்பம்

முயற்சியை கைவிடாதே

இன்னும் கூட உன் தொடுதலுக்கு
ஏங்கி
வீங்கி
வரும் வார்த்தைகளைப் பாரேன்

பாவமில்லையா

#தயாஜி

ஊதா கண் தேவதை 2





நீ தந்துவிட்டவற்றில்
முத்தாய்ப்பானது
உன் முத்தத்தின் முதல் ஸ்பரிசம்
என்
உதடுகளை கடந்து
எச்சிலை தாண்டி
பல்லிடுக்கில் நுழைந்து
நாக்கினை நகர்த்தி
தொண்டைக்குழியில் குதித்து
நுரையீரல் காற்றை ஊதாவாக்கி
என் இதயத்தை உரசியதுதான்

உரசிவிட்டதில்
உள்ளிரிந்து ஒழிந்திருந்த நான்
ஒளிவிட்டது அப்போதுதான்

அப்போதிருந்த நொடியின்
நகர்முதல் நானாயிருந்த
எவனோ ஒருவனில் இருந்து அந்நியமானேன்
உன் கைப்பிடியில் அன்னியோன்யமானேன்.....

#தயாஜி
#ஊதா_கண்_தேவதை

ஊதா கண் தேவதை 1



எந்த ஒரு மாய எதார்த்தத்தாலும்
காட்டிவிட முடியாத தேவதை நீ
ஒற்றைவிழி பார்வையில் ஓராயிரம் வாசல்களை திறந்துவிடுகிறாய்
ஒவ்வொன்றும் ஒவ்வொரு யுகங்களில் வாழ்வை காட்டி நிற்கிறது
சிங்கங்களிடம் சிரித்து
விளையாடுகிறாய்
முதலைகள் முதுகில்
படுத்துறங்குகிறாய்
மரங்களின் நுனியில்
நாட்டியம் செய்கிறாய்
பூச்சி புழுக்களுடன்
விருந்துண்ணுகிறாய்
காளான் செடி குடைகளில்
மழை தடுக்கிறாய்
புகைப்படங்களுள் புகுந்து
பேசுகிறாய்
இத்தனைக்குன் மேலாய்
மனிதன் என்மீது மனதார காதல் கொள்கிறாய்....

#தயாஜி
#ஊதா_கண்_தேவதை

தயாராய் இரு



வாழ்க்கை ஒன்றும் அவ்வளவு மோசமானதல்ல. 
ஒவ்வொருவருக்கும் ஒரு வாய்ப்பை 
அது கொடுத்தே வைத்திருக்கின்றது.
எத்தனை வயதாகியிருந்தாலும்,
எத்தனை இழந்திருந்தாலும்,
எத்தனை நொடித்திருந்தாலும்,
எத்தனை ஏமாந்திருந்தாலும்,
எத்தனை சிதைந்திருந்தாலும்,
எத்தனை அழுதிருந்தாலும்,
எத்தனை அவமானப்பட்டிருந்தாலும்,
எத்தனை துரோகம் கடந்திருந்தாலும்,
எத்தனை ஏமாளியாயிருந்தாலும்,
இப்படி பலப்பல எத்தனைகளுக்கு பின்னரும்
வாழ்க்கை நமக்கான இன்னொரு வாய்ப்பை கொடுக்கவும் தயாராய் இருக்கிறது....

கண்டுகொள்வோம். கரம் பற்றுவோம். அடித்து பட்டையை கிளப்புவோம்.

#second_chance
#தயாஜி

மர்லின் 3



தியானிக்க முயல்கிறேன்
தீயென பற்றிக்கொள்கிறாள்

மர்லின் 

அழைப்பேதுன்றி
அத்துமீறி
பிரவேசிக்கிறாள்

மர்லின் 

தேகமெல்லாம் வியர்க்க
விரல் வழி வழிகிறாள்

மர்லின் 

போதாதென காதில்
காற்றூதி கரைக்கிறாள்

மர்லின் 

இனியென்ன தியானம்
நீயே போதுமென
எழுந்தேன் தீயென
எதிரே
கண்மூடி
கால் மடக்கி
புத்தகம் ஒன்றில்
மூழ்கி
தியானிக்கிறாள்
சஞ்சலமின்றி

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்