பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

நவம்பர் 25, 2011

கத்தி குத்தும் புத்தி திட்டும்


கத்திக்குத்தும் புத்தியெல்லாம்;

செத்துப்போகட்டும்.........

யுத்தம்கேட்கும் மொத்தபேரை;

பித்து சூழட்டும்..........



ஜித்தனாக எண்ணி;

ஜாலம் காட்டுவேன்........

கல்வி வேண்டாம் கலவி போதும்;

என்றே கூறுவேன்.............



கைகள் கட்டி வாய்கள் பொத்த;

லஞ்சம் நீட்டுவேன்............

நேர்மை என்றால் விலையைக் கேட்டு;

கேலி பேசுவேன்..........



கதரைக் தூக்கி;

கருத்தாய் பேசி..........

கோஷம் வாங்குவேன்;



எல்லாம் செய்வேன்;

உண்மை கொல்வேன்.........

இருக்கும் வரையிலே;

நரம்பு முறுக்கும்........

வரையிலே;



கண்கள் மங்கி;

கால்கள் வீங்க.............

படுப்பேன் பாயிலே;

பணம் இருக்காது.........

பையிலே;





கத்தி கம்பும் கைக்கு;

எட்டா தூரம் சிரித்திடும்..........

இதுவரை கொன்ற முகங்கள்;

என் மூச்சை முகர்ந்திடும்..........



கண்ணருகில் இருப்போரெல்லாம்;

கறுப்பாய் மாறுவர்.........

தலைவன் நாந்தான் என்ற எண்ணம்;

தரையை நோக்கிடும்........

தரணி மீது செய்த பாவம்;



வட்டி கேட்டிடும்;

வணக்கம் சொன்ன வாய்கள்;

இனி எச்சில் துப்பிடும்............

வன்முறையாளனின் கதை;

இப்படியே முடிந்திடும்............

தொடரும் கிழிதல்கள்

மேடை
பலமான ஆட்டம்
பரபரக்கும் கூட்டம்
தொடைக்கு மேல்வரை
பாவாடை
ஆட்டத்தால் கொஞ்சம்
கிழிந்தது
.
.
இரு வினாடி
மௌனம்
சட்டென
முழுதாய் அவிழ்த்து
ஆட்டத்தைத் தொடர்ந்தார்கள்
.
ஒரு வினாடி
மௌனம் மீண்டும்
தொடங்கினார்கள்
ஒவ்வொருவரின் பாவாடையும்
கிழியும்வரை..........

நவம்பர் 19, 2011

சுந்தர ராமசாமின் எழுத்துகள் 19.11.2011


சுந்தர ராமசாமியின் கட்டுரைகளையும், ந.பிச்சமூர்த்தி குறித்த அவர் எழுதிய விமர்சனத்தையும் படித்த பிறகு; தற்போது சு.ரா-வின் 'அழைப்பு' சிறுகதை தொகுப்பை படிக்கவுள்ளேன். அடுத்ததாக அவரது முழுசிறுகதை தொகுப்பையும் படிக்கவேண்டும்.

(ஜெயமோகன் தன் புத்தகத்தில் முன்மொழிந்திருக்கும் சு.ரா-வின் முக்கிய சிறுகதைகளை முதலில் படிக்க வேண்டும்)

இதன் பிறகு சு.ரா-வின் நாவலான 'ஒரு புளியமரத்தின் கதை'-யை படிக்கவுள்ளேன்.

இம்மாத இறுதிக்குள் கல்யாண வேலைகளின் ஊடே; மூன்று மாதங்களாகப் படித்த.......
1.இவை என் உரைகள்.
2.இறந்த காலம் பெற்ற உயிர்.
3. ந.பிச்சமூர்த்தியின் மரபும் மனித நேயமும்.
போன்ற புத்தகங்கள் குறித்து என் வலைத்தளத்தில் பதிகிறேன்.

நவம்பர் 18, 2011

'எஸ்.ரா' உடன் 'சாரு'


15.11.2011 ஏற்கனவே பார்த்து வைத்த புத்தகங்கள். இன்றுதான் வாங்கும்படி ஆனது.

எஸ்.ராமகிருஷ்ணன் புத்தகங்கள்.

1. வாசக பர்வம்.
- எஸ்.ரா எதிர்கொண்ட ஆளுமைகள் குறித்த பதிவு.

2. காற்றில் யாரோ நடக்கிறார்கள்.
- கட்டுரை தொகுப்பு.

3. அதே இரவு அதே வரிகள்.
- பலவகை கட்டுரைகள் மொழிபெயர்ப்புகள் - தொகுப்பு எஸ்.ரா


சாரு நிவேதிதா புத்தகங்கள்.

4. மதுமிதா சொன்ன பாம்பு கதைகள்.-
- சாருவின் 30 சிறுகதைகளின் தொகுப்பு.

5. ஒழுங்கின்மையின் வெறியாட்டம்.
- நேர்காணல்கள்

6. நரகத்தில் இருந்து ஒரு குரல்.
- சினிமா கட்டுரைகள்

கண்ணில் பட்ட புத்தகம்


சமீபத்தில் பினாங்கு சென்றிருந்தேன். அப்போது வாங்கிய புத்தகம், "கடவுளைத் தேடாதீர்கள்!". எழுதியவர் தென்கச்சி கோ.சுவாமிநாதன்.
- 64 குட்டிக்கதைகள் அடங்கிய புத்தகம்.

17.11.2011 - திருமண அழைப்பிதழ் கொடுக்க சென்றபோது ; கண்ணில் பட்ட புத்தகம்;

1. கிறுகிறு வானம் - எழுதியவர் எஸ்.ராமகிருஷ்ணன்.
-குழந்தைகள் நாவலான இதனை, குழந்தைகள் மொழியிலேயே, குழந்தை சொல்வதாக இந்த நாவலை எழுதியிருக்கிறார் எஸ்.ரா.

2. ஆழ்நதியைத் தேடி - எழுத்து ஜெயமோகன்.
- உயிர்மை இதழில் வெளிவந்த ஜெ.மோ-வின் 15 கட்டுரைகளின் தொகுப்பு இந்த புத்தகம்.

சுந்தர ராமசாமியின் 'காகங்கள்'


சில மாதங்களுக்கு முன்பு விலைகேட்டு, விட்டுவந்த புத்தகம். தற்போது சுந்தர ராமசாயின் எழுத்துகளைப் படித்துக் கொண்டிருப்பதால், இந்த புத்தகத்தில் விலை ஒரு பொருட்டாக இருக்கவில்லை.

இன்று வாங்கிவிட்டேன்.(19.11.2011)


1950 முதல் 2000 வரை சுந்தர ராமசாமி எழுதிய சிறுகதைகளின் முழுமையான தொகுப்பு இந்த புத்தகம்.


அவர் எழுதிய 61 சிறுகதைகளில் பலவீனமான 5 கதைகள் தவிர மற்ற 56 சிறுகதைகள் அடங்கிய புத்தகம்.

தயாஜி

நவம்பர் 13, 2011

ஏழாம் அறிவும் எட்டி நிற்கும் தமிழர்களும்


7-ம் அறிவு படத்தைப் பார்த்தப் பிறகு, “நான் தமிழன்னு சொல்லி பெருமையா காலரைத் தூக்கிவிட்டுக்கறேன்”என சொல்லுகின்றவர்களை நினைக்கையில் வியப்பாகத்தான் இருக்கிறது.

இவர்களுக்கும், வேலாயுதம் படத்தைப் பார்த்தப் பிறகு “எனக்குள்ள இருக்கிற வேலாயுதம் வெளியே வருவாண்டா” என சொல்லுகின்றவர்களுக்கும் என்ன பெரிய வித்தியாசம் இருக்க முடியும். யோசிக்கிறே. விளைவு இந்த பதிவு.

இது, சூர்யாவின் ‘7-ம் அறிவு குறித்தோ விஜய்யின் ‘வேலாயுதம்’ குறித்தோ அல்ல. தற்காலிகமாக தமிழண்டா என பெருமைபடுகின்றவர்கள் குறித்து.

பணி நிமித்தமாக வெளியூர் சென்றதால் நேற்றுதான் 7-ம் அறிவு படத்தைப் பார்த்தேன். அதற்கு முன் அப்படம் குறித்த விளம்பரங்களையும் எதிர்ப்பார்ப்பு வாசகங்களையும் கண்டு எதிர்ப்பார்த்து இருந்தவர்களில் நானும் ஒருவன்.

மீண்டும் சின்ன நினைவுருத்தல்; இது வேலாயுதம் குறித்தோ, 7-ம் அறிவு, படங்கள் குறித்த விமர்சனம் அல்ல. இதனை மீண்டும் சொல்ல காரணம் இருக்கிறது. உணர்ச்சிவசப்படுதல். தமிழர்களுக்கு மிகவும் நெருங்கிய ஒன்று.

இப்படி ஒரு பத்தியை எழுதப் போகிறேன் என, என் முகநூலில் பதிவு செய்தேன். அதனை முழுமையாகப் படிக்காமல் சற்று நேரத்தில் தோழியின் தொலைபேசி அழைப்பு வந்தது. அழைப்பு என்பதை விட எச்சரிக்கை என்பதே பொருந்தும். சமாதானம் செய்ய நேரமானது. அது குறித்து

பின்னர் பார்க்கலாம்.

அதற்கு முன்;

7-ம் அறிவு திரைப்படக் குழுவினர்க்கு முதலில் பாராட்டுகள். படம் எடுத்ததற்காக அல்ல எந்த அளவுக்கு நாம் வெறும் உணர்ச்சிகளுக்கு அடிமைப் பட்டிருக்கின்றோம் என்பதை காட்டியதற்காக.

இப்படத்தை பார்த்து தான் தமிழன் என மார்தட்டிக் கொண்டவர்களின் அடுத்த வேலை..?

சூர்யாவின் அடுத்த படம்...

ஏ.ஆர்.முருகதாஸின் அடுத்த படம்..

அல்லது சுருதிஹாசன். எதுதான் அந்த மார்தட்டிய தமிழனின் அடுத்த கட்டம்.

போதி தர்மர் பற்றி - கொஞ்சம் அதிகம்தான் விட்டுவிடுவோம். மஞ்சள் மருத்துவம், சானம் மகத்துவம் என்பதெல்லாம் நம் தமிழர்க்கு என்ன அப்படியொரு புது தகவல்களா..? படத்தில் சொன்னதாலா.. சூர்யா சொன்னதாலா..?

இத்தனை நாளாய் நாம் செய்து வந்தவைகளையெல்லாம் என்னவாக பார்த்தீர்கள்.

முடிந்த கதையை விடுங்கள். ஒரு திரைப்படம் இத்தனை காலமாய் வெறும் தமிழர்களாய் இருந்த உங்களை மார்தட்டும் தமிழர்களாக உருவாக்கியதில் சராசரி தமிழானாய் மகிழ்ச்சி. இனி நீங்கள்?.

போதி தர்மரும், மஞ்சள், உடன் சானமும் போதுமா..? வேறு வழி இல்லை. இருக்காது. நீங்கள்தான் அடுத்த படத்திற்கு முன்பதிவு செய்துவிட்டீர்களே.

திருக்குறளையும் இன்னும் கொஞ்ச காலத்தில் நாம் சொல்லபோகிறோம் “திருக்குறளை எழுதிய திருவள்ளுவர் ஒரு தமிழர். ”

இதுவரை நாம் மறந்தவற்றையும்; துறந்தவற்றையும் தேடுவது மட்டுமே நீங்கள் மார்த்தட்டிக் கொள்ளும் 7-ம் அறிவு படத்திற்கு வெற்றி. இல்லையேல்; இன்று இதைப் பார்த்து மார்தட்டுவது போல நாளை வேறு ஒன்றைப் பார்த்து மூக்கு நோண்டுவீர்கள். வியப்பில்லை.!

மீண்டும் ‘பாரதி’ திரைப்படத்தை எடுக்க வேண்டும். அதில் சூர்யாவோ விஜய்யோ நடிக்க வேண்டும் அப்போதுதான் பாரதி என்கிறவரைக் குறித்து உங்களுக்கு தெரியும் என்றால் ; நீங்கள் யார்.? எந்த வகை தமிழர்.?

இன்னும் எத்தனை காலம்தான் சினிமா மோகத்தாலும் உணர்ச்சிக் கொதிப்பாலும் கர்ஜிக்கப் போகிறோம்?.

மார்தட்டியத் தமிழர்களுக்கு மீண்டும் ஒரு கேள்வி; சீரியலைப் பார்த்துக் குமுறும் தாய்மார்களுக்கும், குடித்து போதையில் தள்ளாடும் தந்தைமார்களுக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம் இருப்பதாய் நினைக்கிறீர்கள்?.

தொடக்கத்தில் எச்சரித்த தோழி சொன்னாள் ; “எது எப்படியோ தமிழ் பேச வெட்கப்படும் தமிழர்கள் கூட இந்த 7-ம் அறிவை பற்றி பேசாறாங்க தெரியுமா. அதுக்காவது நன்றி சொல்லனும்”

அதற்கு என் பதில்

“ எப்படி, திருட்டுப்பசங்க இருக்கறதால காவல் துறையினர் இருக்காங்க. அதுக்குன்னு திருட்டுப் பசங்களுக்கு நன்றி சொல்லலாமா...?”

மீண்டும் இந்த பதிவு, 7-ம் அறிவு குறித்த விமர்சனம் அல்ல. மார்தட்டும் தற்காலிக தமிழர்களுக்கு கேள்வி அவ்வளவே....

இது யாரையும் புண்படுத்தினால், புண்படுத்தினால்தான் நல்லதுதான் அப்போதாவது நாம் பண்படுவோம். உணர்ச்சிகளை ஒதுக்கி வைத்து நம்மை நாமே தாழ்த்தி தலைகுனிவதை விடுத்து. புதைந்த புதயல்களை மீட்டெடுப்போம்.

அதற்குள் அடுத்த படத்திற்கு கிளம்பிவிடாதீர்கள்.

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்