பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

நவம்பர் 23, 2010

சுஜாதா என் மானசிக ஆசான்..


(மலேசிய நண்பன் நாளிதழில் 23.11.2010-ல் வெளிவந்த செய்திப்படம் இது)
"அப்படி இப்படின்னு விளம்பரம் செய்தாச்சி; இதுதான் படம்னும் புகழ்ந்தாச்சி; இதுவும் படமா..? (கெ)கேட்டாச்சி.... இப்போ ஏன் இந்தப் பதிவு.... அதன் பதிலுக்கு தொடர்ந்து சில நிமிடங்களில் படித்துத்துத்தெரிந்துக் கொள்ளுங்கள்; உங்கள் கருத்தினையும் பதியுங்கள்"


1.எந்திரன் படத்தில் எழுத்துகள் வரும்போது; கதை,திரைக்கதை, கடைசி சண்டைக் காட்சி ஷங்கர் என இருந்தது.


2.வசனம் எழுதியவர்கள் சுஜாதா, கார்க்கி, ஷங்கர் என இருந்தது.3. இது ஷங்கரின் பத்து ஆண்டுகால கனவுன்னு ஷங்கரே சொன்னாரு எப்போ சுஜாதா இறந்தப் பிறகு.


சுஜாதாவின் படைப்புகளை வாசித்தவர்களுக்கு அப்பட்டமாகத் தெரியும் இது சுஜாதாவின் கதை என்று; ஷங்கருக்கும் தெரியாமலில்லை. ஆனால் சுஜாதா உயிரோடு இல்லாதா ஒரே காரணத்துக்காக நடந்த "உழைப்புத் திருட்டு" என்ன தெரியுமா இது தனது 10 ஆண்டுகால கனவு என ஷங்கர் சொன்னதுதான்.


சுஜாதாவின்; சொர்க்கத்தீவு, பேசும் பொம்மைகள், மீண்டும் ஜீனோ, என் இனிய இயந்திரா, போன்ற நாவல்களையும் ,விஞ்ஞானக்கதைகள் (50 சிறுகதைகள் தொகுப்பு) ஆகிய புத்தகங்களைப் படித்தவர்களுக்கு தெரியும் எந்திரன் கதை யாருடைய உழைப்பு என்று.....

ஷங்கர் படம் எடுக்கும் முன்னரே விஞ்ஞானக் கதைகள் சொல்லி வாசகர்களை ஈர்த்தவர்தான் சுஜாதா.

படம் வெளிவந்த நாளிலிருந்து இது என் கதை....! இது என் கதை ... என் கனவு... என மார்தட்டி சுஜாதாவை வெறும் வசனகர்த்தாவாகவே சித்தரித்த பிரம்மாண்ட இயக்குனர் சங்கருக்கு வந்த நெருக்கடி என்ன தெரியுமே...?அமேரிக்க எழுத்தாளர் ஒருவர் இது தன் கதை என்றார். தமிழகத்தில் இரண்டு எழுத்தாளர்கள் இது தங்களின் கதை, என்று எந்திரன் படத்தின் தயாரிப்பாளர்க்கும் இயக்குனருக்கும் சம்மன் அனுப்பியுள்ளனர். அந்த எழுத்தாளர்களில் ஒருவர் 'அர்னிகா நாசர்' அவரின் படைப்புக்கும் வாசகன் நான். சுஜாதாவால் விஞ்ஞானக்க் கதை எழுத்தாளர் என அர்னிகா நாசர் ஒரு முறை குறிப்பிடப்பட்டிருக்கின்றார்.


நேற்று வரை தன் கதை என்றவர் சம்மன் வந்தப்பின் இது சுஜாதாவின் 'என் இனிய இயந்திரா' நாவலின் மையமாக வைத்து எழுதப்பட்டக் கதை என பல்டி அடித்திருப்பது சிரிப்பு வருகின்றது. மூலக்கதை சுஜாதாவின் புத்தகம் என தெரிந்தது எப்போது தனக்கு சம்மன் (ஆப்பு அல்லது ஆபத்து) வரும்போதுதானே...


சுஜாதாவின் கடைசி எழுத்து இந்த எந்திரன் படத்தின் திரைக்கதை என்பது எல்லோர்க்கும் தெரிந்ததே. ஷங்கரே சுஜாதாவின் மறைவில் சொன்னது என்னத் தெரியுமா...


"சுஜாதா இந்த திரைக்கதையை முடித்து கொடுத்துச் சொன்னார் இதுதானனென் கடைசி படமாக இருந்தாலும் நிம்மதி"


இப்படியெல்லாம் சுஜாதாவின் மறைவில் சொல்லி; எந்திரன் படத்தில் சுஜாதாவை பத்தோடு பதினொன்றாக காட்டியுள்ளது நியாயமா...?ஒருவெளை சம்மான் வராமல் இருந்திருந்தால் சங்கர் தன் திருவாய் திறந்து இப்படி சொல்லியிருப்பாரா என்பது கேள்விக்குறியே....பிரம்மாண்ட இயக்குனர் மீது எனக்கு ஒன்றும் கோவம் கிடையாது.


தன் சுயநத்திற்கு சுஜாதாவை மறந்ததுதான் என்னால்

(எல்லா சுஜாதாவின் வாசகர்களால்)

ஏற்றுக்கொள்ள முடியவில்லை... இதை நான் பதியவில்லையென்றால் சுஜாதாவை என் மானசீக ஆசான் எனச் சொல்லிக் கொள்வதில் அர்த்தமில்லை....

நவம்பர் 20, 2010

தீபாவளிப் பதிவுகள் 2010

புகைப்படம் என்பது கணங்களின் நிறுத்தம்;
நாள்களை நீலமாக்கும் மாயை.....
அதிலும் சந்திப்பு கணங்களைக் கற்சிலையாக்கினால்;
காலத்தால் அது பொக்கிஷம்.......
இந்த தீபாவளி;
என் பல கணங்களை நிறுத்திய ஒரு
பரவசத் தீபாவளி...
சந்தர்ப்பங்கள் எப்போதும் சரியாக அமையாததால்
சதியாக நானும் காமிராவோடு கைகுலுக்கினேன்....

( புகைப்படம் )


ஓவியக் கண்காட்சியில் ஓய்வெடுப்பதுபோல்,
தலைகவிழ்த்த, உயிரின் மூலமாம் விநாயகனோடு
முதல் கணநிறுத்தம்....
எனக்குள் இருக்கும் பல்வேறு குணங்கள்,
இவருள்,
பதிந்திருப்பது எனக்கே ஆச்சர்யம்......

(புகைப்படம் 2)

பிரம்மான்ந்த சரஸ்வதி சுவாமிகள்,
பாலமுருகன் கேசவன்...
நான்....
கடாரமண்ணின் தனித்தனியே ஒருவரையொருவார்,
அறிந்திருந்தாலும் முதன் முதலாக,
எங்கள் மூவரையும் இணைத்த பெறுமை
தலைநகரையே சேரும்...

(புகைப்படம் 3)

மின்னல் வானொலியில்,
‘கண்ணாடித் துண்டுகள்’ நிகழ்ச்சிக்காக....
யார் யாரையோச் சந்தபோது ஏற்படாத ஒன்று;
புலம் பெயர்ந்த நம் தம்பி தங்கைகளைச்;
சந்தித்ததும் கிடைத்து...
தோழி பொன்கோகிலத்தால் இது கிட்டியது......
இந்த கணத்தை நிறுத்தினேன்; இவர்கள்
மனநிம்மதிக்கு பிரார்த்திக்க.....

(புகைப்படம் 4)

என் அப்பாவின் நாடகத்தில்;
எப்போதும் நாயகன் இவர்...
நாடக நடிகர் கே.குணசேகரன்
அரிதாய் கிடைத்த வாய்ப்பொன்றின்
அவருக்கு மகனாய் நான்.....
இந்த கணத்தின் பதிவு...
அப்பாவிற்கு பரிசாக....

(புகைப்படம் 5)

53வது சுதந்திரப் பதிவு இது;
வானொலித் தலைவர் பார்த்தசாரதியின்;
கைவண்ணம்....
இவ்வகை மிக அரிது.....
(புகைப்படம் 6)

வானொலித் தலைவரோடு;
இந்த கணத்தை பதித்தேன்,
வானளவு வளர்ச்சியின் ஒத்திகைக்காக.....
இரு ராஜாக்கள் நெஞ்சிலும் ரோஜாக்கள்....

(புகைப்படம் 7)

உன்னோடு நானும்
என்னோடு நீயும்;
பயணிப்பது நாவல் அல்ல....
உங்களோடு நாங்களும்
எங்களோடு நீங்களும்
பயணிப்பது நாவல் அல்லாமலல்ல....
ஆறு அடி வாக்கியத்தை அரைமணி தாண்டி
விளக்கிய எழுத்தாளர் ஜெயமோகனின் சந்திப்பில்...
மீண்டும் நாம் சந்திப்போம்;
என்பதை நினைவுக்கூறும் பதிவு.....

(புகைப்படம் 8)

எப்போதும் என்னைக் கவரும்
பேச்சாளர்...
பர்வின் சுல்தானா....
பெண்கள் சளைத்தவர்களில்லை என்ற
மூச்சாளர்...
இவரின் இந்த கணப்பதிவு;
‘பேச்சு என்பது வெறும் பேச்சல்ல’
என்பதை அவ்வபோது எனக்கு நினைவுப்படுத்த....

(புகைப்படம் 9)

இது கணப்பதிவு இல்லை,
என் காத்திருப்பின் கனாப்பதிவு....
கற்பது நீச்சலென்றாலும்,
கடல்பயணம் எனக்கு மிக விருப்பம்..
இதுபோன்ற கவிப்பயணமும்
என் பழக்கம்...

(புகைப்படம் 10)

அத்தனைக்கும் முத்தாய்ப்பாய்,
இத்தனையோசனைக்கும் ராஜன்...
என் ஆசான்;
சுஜாதா என்கிற ரங்கராஜன்...
இவ்வாண்டு தீபாவளியின்
மிகச் சிறந்த பரிசு...
வாழும்போது வணங்கியிருக்க வேண்டியவரை
வாழ்வைத் தாண்டியப் பின் சந்திக்கின்றேன்....
கணங்களை நிறுத்தும் காமிரா...
காலத்தால் பேசப்படும்......
காலத்தையே பேசவைக்கும்;
பிரசுரிக்கப்படும் படைப்புகள்....
என்னது;
காலத்தாலும் பேசப்படும்;
காலத்தையும் பேசவைக்கும்;
நம்பிக்கையான தீபாவளி எனக்கு......

அக்டோபர் 20, 2010

நானும் மகான் அல்ல.....


எங்கள் திருமணம் ‘காதலாகி கல்யாணத்தில் முடிந்தது’. இந்த வாக்கியம் எல்லோர் வாழ்விலும் வந்து போகிற சாதாரண ஒன்றாக இருக்கலாம். ஆனால் எங்களை பொருத்தவரை இந்த வாக்கியத்தின் மூலத்தைக் கேட்டால்..... சொல்லச்சொல்ல இனிக்கக் கூடியது. பள்ளிப்பருவம்தான் அவளை எனக்கு அறிமுகம் செய்தது. காலையில் நிற்கும் வரிசையிலோ, உணவு உண்ணும் போதோ, திடலில் விளையாடும் போதோ ஒரு சராசரி சந்திப்பாக அல்லாமல் நான் கோவிலாக கருதும் பள்ளி நூல்நிலையத்தில்தான் எங்களின் சந்திப்பு அமைந்தது.

வழக்கம்போல் காலணியை கழட்டி அதை ஒரு மறைவிடம் தேடி வைத்து, காலுறை ஓட்டையை எப்படியோ மறைத்து நூல்நிலையம் புகுந்தேன். வழக்கம் போல் முதல் அடுக்கு புத்தகங்களை கடந்து மூன்றாவது அடுக்குக்குச் சென்றேன்.

அட்டைகள் கிழிந்த நிலையில் சில புத்தகங்களும் ,அட்டைகளே இல்லாத நிலையில் சில புத்தகங்களும் இருந்தன. அதில் கடந்தமுறை நான் படித்து மறைத்து வைத்த புத்தகம் ஒன்று பத்திரமாக இருந்தது, யார் கையும் படாமல். புத்தகத்தை எடுத்ததும் நான் மடித்த இடத்தை ஒரு முறை சரி பார்த்தேன். அப்பாடா நிம்மதி....

நாற்காலியில் அமர்ந்து படிக்கத்தொடங்கினேன். என் அருகில் அமர்ந்தாள் வகுப்புத் தோழி சித்தி பாத்திமா, அவளின் கைபேசியை என்னிடம் கொடுத்து வீட்டிற்கு பொகும் போது கொடுக்கச் சொன்னாள். அன்று வகுப்பில் திடிர் சோதனை நடக்கும் என அவளது தோழி கொடுத்த உடனடித் தகவலால் இந்த ஏற்பாடு. நானும் வாங்கி வைத்து கொண்டேன்.

இதை யாராவது கவனித்தார்களா என கண்களால் தேடினேன். மீண்டும் படிக்கத்தொடங்கிய போது என்னை அறியாமலேயே என் எதிரில் பார்த்தேன். தன் இடது கையால் காதோரத்தில் முடியைச் சொருகி, கண் சிமிட்டியபடி என்னை மின்னல் பார்வையில் பார்த்தாள். அதுதான் எங்கள் முதல் சந்திப்பு. ஆனால் அவளை இதற்கு முன் நான் பார்த்திருக்கின்றேன்.

எங்கே....?

இருங்கள் யோசிக்கிறேன்....

ம்.....ஆம் நினைவுக்கு வந்துவிட்டது. சில தினங்களுக்கு முன் இவளை எங்கள் தோட்டபுற கோவிலில் சந்தித்திருக்கிறேன், நிச்சயம் இவள்தான்.

முதலில் ‘புனிதக்கல்’ இருக்குமிடத்தில் சந்திப்பு அடுத்து ‘புத்தகச்சொல்’ இருக்கும் இடத்தில் மறு சந்திப்பு. அந்த மின்னல் பார்வை, காதோரம் சுருண்ட முடி, கூரான மூக்கு, ஊடுருவும் பார்வை.... இன்னும் எவ்வளவோ சொல்லலாம். இனி அதற்கெல்லாம் அவசியமில்லை. எங்கள் காதலுக்கு தூதாக இருந்தவர்கள் என் சக தோழிகள் ஆனந்தியும்
சிவனேஸ்வரியும்.

இவர்கள்தான் என்னை பற்றிய உயர்ரக கருத்துகள் சொல்லி அவளை என்பால் ஈர்க்கவைத்தார்கள். அதாவது வகுப்பில் என்னைப்பார்த்துதான் இவர்கள் பரிட்ச்சை எழுதுவார்களாம், ஆசிரியர் கேட்கும் கேள்விகளுக்கு நான்தான் முதலில் பதில் சொல்வேனாம்....அடக் கடவுளே என் கதை எனக்குத்தானே தெரியும்...!

அதைவிடுங்க எப்படியோ காதலுக்கு பிள்ளையார்சுழி போட்டாகிவிட்டது. எங்கள் காதலை வீட்டில் சொல்லவும் பெருதாக ஒன்றும் கஷ்டமில்லை. பள்ளிப்படிப்பை முடித்த பிறகு நாங்கள் பல இடங்களுக்குச் செல்ல, அதைப் பார்த்தவர் எங்கள் இரு வீட்டாருக்கும் சொல்ல, கல்யாணப் பேச்சு தொடங்கியது மெல்ல.. எங்களின் ,அந்த ஆர்ப்பாட்டம் இல்லாத ஆரம்பத்தின் முடிவை நாங்கள் யாரும் எதிர்ப்பார்க்கவில்லை. ஏன் நீங்கள் கூட எதிர்ப்பர்த்திருக்கமாட்டீர்கள்.

‘செம்மொழியான தமிழ் மொழியாம்....’

கொஞ்சம் பொருங்கள் என் கைபேசியை கவனித்து, என் கதையைத் தொடர்கின்றேன்.

“வணக்கம், சொல்லு தேவி”

“வணக்கம், மணி எங்கடா இருக்கே...?”

“கே.எல்-லதான் இருக்கேன்”

“ஓ...ஏதும் வேலையா இருக்கியா...? இல்லைனா... கொஞ்சம் பேசனும்..”

“ம்.... எங்க அம்மா ஏதும் சொன்னாங்கலா...?”

“இல்ல.... நான் தான் பேசினேன்.. அவங்க சொல்றதும் நியாயமாதான் படுது..”

“அப்படியா.. உங்க வீட்டுக்காரர் கணேஷ் என்ன சொன்னாரு...”

“அவருக்கும் விருப்பம்தான், இங்க எல்லாம் தயார்தான்...நீதான்; அம்மாகிட்ட முடியாதுன்னு சொல்லிட்டியாம்...அம்மா ரொம்ப வருத்தப்பட்டாங்க...உன் வாழ்க்கை நல்லா இருக்கனும்னுதானே அம்மாவும் சரி நாங்களும் சரி....கேட்கறோம் இப்படி நீ மறுத்தா எப்படிடா...”

“அதுக்காக...... ‘சுஜாதா’ இருந்து இடத்துக்கு இன்னொருத்தியை நான் கொண்டுவருனும்னு சொல்றியா....அம்மாதான் அப்படின்னா...நீயுமா என்கிட்ட இதைக் கேக்கற.... உனக்கு தெரியும்தானே சுஜாதாவும் நானும் வாழ்ந்த வாழ்க்கை...அந்த...அந்த...இடத்தை யராலயும் ஈடு செய்யமுடியாது தேவி..”

“தெரிஞ்சிதாண்டா நாங்க கேக்கறோம்.... சுஜாதா-க்கு ஈடு யாரும் இல்லைதான். ஆனால் உனக்கு என்னடா வயசு இப்பதானே 28. இன்னும் எவ்வளவு காலம்டா நீ தனியா வாழ்வ...சொல்லு”

“தேவி, நாளைக்கே சாவுன்னாகூட எனக்கு சந்தோசம்தான்”

“வாயை மூடுடா...அப்படியெல்லாம் நீ நெனைச்சோ இல்ல நான் நெனைச்சோ சாவு யாருக்கும் வந்திடாது. வாழ்க்கை வாழ்றதுக்குதான்... கணேஷ் தங்கச்சிகிட்ட உன்னை பத்தி எல்லாம் சொல்லிட்டோம். அந்த பொண்ணுக்கு சம்மதம். எங்களுக்கும் உங்க அம்மாக்கும் சம்மதம் உன் வருங்காலத்தை நெனைச்சிப்பாருடா..”

“அது சின்ன பொண்ணுடா....அதுக்கு இதெல்லாம் புரியாது. அந்த பொண்ணை முதல்ல மேற்படிப்பு படிக்கச்சொல்லு.....”

“சரிடா அதைவிடு..ஒன்னு சொன்னா கோவிச்சிக்கமாட்டியே..”

“என்ன கேட்ப...காயத்ரி பத்திதானே..”

“ம்..அதையாச்சும் கல்யாணம் செய்துக்கடா.... நீயும் ஆசைபட்ட பொண்ணுதானே அது..”

“தேவி...சுஜாதா இருக்கும் போது; நான் காயத்ரி மேல ஆசைபட்டது என்னமோ உண்மைதான். அது என்னையே அறியாம நான் செய்த தப்பு. அதுக்காக ரொம்ப அவமானப்பட்டாச்சி, அசிங்கப்பட்டாசி அதுக்கப்பறம் சுஜாதாதான் எனக்கு எல்லாம்னு முடிவெடுத்து வாழ ஆரம்ப்பிச்சபிறகு மறுபடியும் காயத்ரியைப் பத்தி பேசறது நல்லாவா இருக்கு....? ”

“சரிதான் மணி. ஆனால் இதெல்லாம் சுஜாதா இருக்கும் போதுதான் சாத்தியம். இப்போ நிலைமை வேறடா.. சுஜாதா இப்போ இல்லை அதை நீ முதலின் புரிஞ்சிக்கோடா மணி....”

“சரி தேவி எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு......”(முடிப்பதற்குள்)

“தெரியும். இப்படி சொல்லுவன்னு. எங்கடா இன்னும் சொல்லலையேன்னு பார்த்தேன் பெரிய வேலையாம் வேலை...சுஜாதா எழுதன எதாவது புத்தகத்தை எடுத்து படிச்சிகிட்டு உன்னோட சுஜாதா போட்டோகிட்ட பேசற வேலைதானே. ”

“(சிரிக்கிறேன்)”

“இந்த நிலையிலும் சிரிக்கிறது உன்னால மட்டும்தான் முடியும். அடுத்த வாரம் நானும் உங்க அம்மாவும் உன்னை பாக்க வரோம். Bye.”

“சரி, அதுவரைக்கும் நான் இருக்கனான்னுப் பார்க்கலாம்.”

“அறை வாங்க போற.....போனை வை.”


அவள் தேவி, என் பால்ய வயது தொல்லைகளில் இரண்டாவது, முதல் தொல்லை புத்தகம் படிப்பது (இந்த தொல்லை மற்றவர் பார்வைக்கு).இரண்டையும் என்னால் விட்டுக்கொடுக்க முடியாது. சரி நான் தொடக்கத்தில் விட்ட கதையிருந்து சொல்றேன்....

சுஜாதா. நான் ரசித்து ரசித்து படிக்கும் எழுத்தாளரின் பெயர் மட்டுமல்ல; நான் துரத்தி துரத்தி காதலித்து கைபிடித்தவளின் பெயரும்தான். தொடக்கத்திலிருந்து என் தனிமையை புத்தகங்களோடு கழித்த நான்; இவளின் வருகையால் தனியை இருவருமாய் கொண்டாடினோம். அந்த கொண்டாட்டம் நீடிக்கவில்லை. நானும் அதற்கு ஒருவையில் காரணம் என்பதை ஒப்புக்கொள்கின்றேன்.

அவளின் ‘கடவுள் நம்பிக்கையும்’ என் ‘ஆங்கில அறிவும்’ பலமுறை எங்களின் படுக்கையைப் பிரித்தது. இன்று ஒட்டுமொத்தமாய் சுஜாதா என்னைவிட்டு போய்விட்டாள். அவள் இருக்கும்போது வேண்டுமானால் நான் அவளுக்கு துரோகம் செய்திருக்கலாம். இன்று அதற்கு என் மனம் இடம் தரவில்லை....

என் மனம் முழுவது அவள்தான் சஞ்ஜாரம் செய்கிறாள்.


ஆனால்....


ஆனால்......


நேற்றுதான் மீண்டும் சில ஆணுறைகளை வாங்கியுள்ளேன். என்னை பொறுத்த வரையில் எனது மனமும் எனது உடலும் வேறுவேறுதான்.

செப்டம்பர் 01, 2010

படித்ததைப் பகிர்கின்றேன் 2


புத்தகம் என்பது என்ன..?

வெறும் அச்சுக்கோர்வை,

வெள்ளைத்தாள்களின் கூட்டணி,

அறிவுப்பெட்டகம்,

மறைமுக விளம்பர யுக்தி,

...............

.............

.........

.....



இப்படி அடிக்கிக்கொண்டு போவதில் விருப்பமில்லாமல் சொல்லிவிடுகின்றேன். புத்தகம் என்பது ஒரு கடத்தல்காரன்/கடத்தல்காரி. புத்தகத்தில் நீங்கள் மூழ்கும் நேரம் உங்களையறியாமல் உங்கள் மனம்; அச்சடிக்கப்படிருக்கும் வார்த்தைகள் மீது பயணித்துக் கொண்டிருக்கும். அந்த பயணம் கடத்தலாக மாறி உங்கள் இருக்கும் இடம் விட்டு, வேறு இடம், வேறு உலகம், ஏன் வேறு யுகம் வரை உங்களை கடத்திச் செல்லும்.



அந்த கடத்தலால் அடிக்கடி வேவ்வேறு வகையில் ,பல்வேறு முறையிலும் நான் பயணிக்கின்றேன். இந்த முறை அண்ணன் நா.முத்துக்குமாரின் பட்டாம்பூச்சி விற்பவன்.

(குறிப்பு , நா.மு-வின் பால காண்டம் கட்டுரை தொகுப்பை படித்ததும் நான் செய்த முதல் வேலை அவருக்கு தம்பியாக என்னை தத்துக் கொடுத்தது)


"பட்டாம்பூச்சி விற்பவன்" புகழ்பெற்ற ஒரு பாடலாசியரின் புத்தகத்தைப் பற்றி இவன் என்ன சொல்லப் போகின்றான்..?? இப்படி உங்களில் எந்த ஒரு தேர்ந்த அறிவாளியும் கொடி பிடிக்கத் தொடங்கினால் ஒரு வேண்டுகோல் எனக்கும் உங்கள் முன்வரிசையில் இடம் கொடுங்கள். நான் யார் கவிதை தொகுப்பைப் பற்றி கட்டுரை எழுத.....!!


கவனிக்க இது ஒன்றும் கவிதை பற்றியக் கட்டுரை அல்ல. இதன் வாசிப்பால் கடத்தப்பட்டு, அந்த கடத்தலால் பயணிக்கப்பட்டு அதன் தாக்கங்களை மனதால் சுமக்கும் சராசரி வாசகன் என்ற முறையில் என்னை பாதித்ததை பதிவு போட எனக்கு உரிமை இருக்கின்றது.


இனி சொந்த கதை வேண்டாம்.


பாலுமகேந்திரா, பாரதிராஜா, அறிவுமதி வாழ்த்துகளுடனும் 'புத்தகம் வெளியிட முடியாமல் தவிக்கும் சக கவிஞர்களுக்கு சமர்ப்பணம்' என்ற தொடக்கத்திலும் ஆரம்பமாகின்றது இந்த பயணம்.


‘ தூர்’ என்ற தலைப்பில் தன் வீட்டுக்கிணற்றில் தூரெடுத்து தூய்மைப்படுத்திய அப்பா, அம்மாவின் மனதில் இருப்பதை அறியாமலிருப்பதை சொனல்லி கடத்தல் முயற்சியை ஆரம்பிக்கின்றர். பூக்களை ரசிப்பது ஒரு கலை;அதை செடியில் இருந்து ரசிப்பது பெரும்கலை. இந்த கருத்தினை முன்னிருத்தி ‘பூ நுகரும் காலம்’’ -தில் பூக்களை நேசிப்பவனை பூக்களுக்கு பிடித்திருக்கின்றது இப்படியாகத் தொடங்கும் வாக்கியம் இப்படி முடிகின்றது; ‘பூக்களுக்கும் அவனை ரொம்ப பிடிக்கும், விரல்களால் உயிர் பறித்து அவன் நுகர்வதற்கு முந்தைய காலம் வரை’
‘சுண்டுவிரல் தாத்தாக்கள்’ –லில் இப்படி ஒரு வாக்கியம் வருகின்றது. “வாத்துகள் விட்டுச்சென்ற நட்சத்திரக் கால் பதிவை அழிக்காமல் தொடர்வோம்….” நீங்கள் வாத்துகள் பின்னால் நடந்த அனுபவம் உள்ளவரென்றால் நிச்சயம் நீங்கள் யோசிப்பீர்கள் இத்தனை நாளாய் வாத்துகளை பின் தொடர்ந்தோமே தவிர, அவை விட்டுச்சென்ற நட்சத்திர பதிவை கவனிக்க மறந்தோமே..

“டென்த் ஏ காயத்ரிக்கு” . இவரின் பால்ய சினேகதி !. இந்த பெயர் இவரின் “அ’னா ஆ’வன்னா” கவிதை தொகுப்பிலும் இடம்பெறும். பள்ளிப்பருவத்தில் தன்னை ஈர்த்த ஒருத்தி வளர்ந்து, மாற்றான் வீட்டில் வாடுகிறாள். இதை சொன்னவர் இப்படி முடிக்கின்றார், ‘காயத்ரி எங்கே இருக்கா மாப்ள..?’ என் பதில் “பத்து வருடத்துக்கு முந்தைய டென்த் ஏ கிளாஸ் ரூம்ல”. இவர் வரையில் இவரை ஈர்ந்த அந்த பெண் அப்படியேத்தான் இருக்கின்றாள். எனக்கும் ஒருத்தி இருக்கின்றாள். என் 8 வயது குட்டி தேவதை அவள். இப்போது வளர்ந்து விரைவில் திருமணம் செய்விருக்கின்றாள். 8 வயதில் அவள் சொன்ன தேவதைகள் கதைதான் , கதைகேட்கும் ஆர்வத்தை எனக்கு ஏற்படுத்தியது. இன்னும் கூட அவள் வளந்துவிட்டால் என்பதை என்னால் நம்ம முடியவில்லை. மன்னித்து விடு குட்டி தேவதையே.. நாளை உனக்கே ஒரு தேவதை பிறந்தாலும்.. சத்தியமாய் நீ, அப்போதும் இவனுக்கு குட்டி தேவதைதான். நன்றி நா.மு-வின் காயத்ரிக்கும் எனது கோமதிக்கும்.

‘அப்பாவின் உலகம்’ என் அப்பாவில் DNA இங்கிருந்து வந்திருக்கலாம் என சந்தேகிக்க வைத்தை கவிதை. தன் தந்தையின் புத்தக ஆர்வத்தை சொல்லிக்காட்டியவர் நிறைவு வரிகளில் தனக்கான பயத்தை பதிகின்றார் இப்படி, “ஒரு மூட்டை புத்தகம் கிடைத்தால் என்னையும் விற்றுவிடுவார்” இப்படி சொல்லக்கூடிய தகுதி என் தந்தைக்கும் இருக்கின்றது. நாளை என்னை தந்தையாக்கும் பிள்ளைக்கும் இருக்கும். நீங்கள் எப்படி….?

இன்னமும் பல கவிதைகள் நமக்கு கேள்வியாகவும் நமது மனதின் பதிலாகவும் இவர் பேனா படைத்திருக்கின்றது. புத்தகத்தின் நிறைவாக இவர் சொல்லியிருக்கும் ஹைக்கூ பற்றி சொல்லவேண்டுமெனில் பக்கங்கள் போதாது. இருந்தும் சிலவற்றை பகிர்கின்றேன்.

'பொருட்படுத்தா மனிதர்களை
நாற்றத்தால் அரைந்தது
குடல் சரிந்த நாய்’‘

இறந்த நாயைக் கண்டும் கண்டுக்கொள்ளாமல் செல்லும் பொருப்பற்றவர்களை இந்த வரிகள் அரையும், நாயின் நாற்றத்தைப் போல.

’பன்றிகளின்
காய்ந்த கழிவுகளில்
தக்காளிச் செடிகள்’’


தொடக்கத்தில் இதை எழுத எனக்கு தகுதி உண்டா…? யார் இவன்..? போன்ற கேள்விகள் இன்னமும் உங்கள் மனதில் இருக்குமென்றால் அண்ணன் நா.மு-வின் இந்த சவுக்கடி உங்களுக்குத்தான் சொந்தம்.

இறுதியாக அண்ணன் சொல்லும் “ஒப்புதல் வாக்குமூலம்”

நான் ஏன் நல்லவனில்லை
என்பதற்கான
மூன்று குறிப்புகள்.
ஒன்று
நான் கவிதை எழுதுகின்றேன்;
இரண்டு
அதை கிழிக்காமல் இருக்கின்றேன்:
மூன்று
உங்களிடம் படிக்கச் சொல்கின்றேன்…’’

இவர் சொல்வதை பார்த்தால் நானும் நல்லவனில்லை என்பதற்கு நான்காவது காரணம். படித்த கவிதையை உங்களோடு பகின்ர்கின்றேன் நீங்களும் வாங்கிப் படித்து கருத்தை பகிரும் நோக்கத்தில்.

இதனுடன் விடைபெறுகின்றேன்

அடுத்த புத்தகத்தில் சந்திப்போம்
நன்றி,
தயாஜி






ஆகஸ்ட் 30, 2010

படித்ததைப் பகிர்கின்றேன்


என்னை கவர்ந்த படைப்பாளர்களில் ஒருவரான பாடலாசிரியர் நா.முத்துக்குமார் எழுதிய புத்தகங்களை சமீபத்தில் வாங்கினேன். பட்டாம்பூச்சி விறபவன், கண் பேசும் வார்த்தைகள், பாலகாண்டம் என்று முறையே கவிதைகள், பாடல் பிறந்த கதை, கட்டுரைகள் தொகுப்பு . தற்போது படித்து முடித்தது 'பால காண்டம்' எனும் கட்டுரை நூல். குங்குமம் வார இதழில் இவர் எழுதிய இவரின் பால்ய வயது அனுபவம்தான் இந்தக் கட்டுரையின் சாரம்.

பால்யம் என்பது தனக்கு ஏற்படுத்திய பாதிப்புகளையும் தனக்கு விடை கிடைக்காத கேள்விகளையும் நம்மோடு பகிர்கின்றார் நா..முத்துக்குமார் சினிமா பாடல்கள் மூலமும், கவிதை தொகுப்புகளின் மூலமும் என்னைக் கவர்ந்தவர் இந்த கட்டுரைத் தொகுப்பிலும் வழக்கம் போல் கவர்கின்றார்.

இவரின் சொல்விளையாட்டு (சொல் நயம்) இவரின் கட்டுரை தலைப்புகளில் தெரிகின்றது. இளமை நினைவுகளி மாய சிலேட்டுப்பலகை என்றும் சாலைக் குழிகளை, நிலா மிதக்கும் பள்ளம் என்றும் வர்ணிக்கின்றார்.

அதிலும் அக்காவை இரண்டாம் தொப்புள் கொடி என்று தனக்கு இல்லாத அக்காவால் தனக்கு அக்காக்களான தோழர்களில் அக்காக்களைப் பற்றிக் கூறுகின்றார். இவரின் பால்ய நண்பன் கேசவனைச் சொல்லும் போது, எனது பால்ய நண்பன் கேசவனை நினைக்கமுடிகின்றது.

காலம் எழுதும் கடிதம் என்ற தலைப்பில் இவர் கடிதத்தூது சென்ற காதல் கடிதம் பற்றி சொல்லி இப்போது அந்த காதலர்களை சொல்லும் போழுதினில் நம் முன்னும் சிலரைக் காணமுடிகின்றது.

கடவுளைக் கண்ட இடங்களில் என்ற தலைப்பில் இவரின் எழுத்து நடை இப்படி வருகின்றது........

"சில சமயம் விளையாட நண்பர்கள் இல்லாத நேரங்களில் என் பொழுதுபோக்கு எறும்புகளைக் கொல்வதாய் இருந்தது, ஒரு பேரரசன் போல என்னை உருவக்கித்துக் கொண்டு சுவற்றில் ஊறும் எறும்புகளை என் கோட்டைக்கு வருகிறாயா..? என்ன செய்கிறேன் பார் உன்னை...? என்று கர்ஜித்தப்படி ஒவ்வொன்றாக பிடித்து தரையோடு தேய்த்து கொன்றுவிடுவேன் " இதை படிக்கும் போது என் கண்முன் ஒரு காட்சி ஒலி/ளி-யேறியது. அதில் நான் எங்கள் வீட்டின் பின் புறத்தில் அமர்ந்து எறும்பு புத்தை கலைத்து அதிலிருந்து பெரிய உருவம் கொண்ட எறும்புகளைத் தேடிப்பிடித்து கொல்கின்றேன். அம்மா; இது பற்றி அப்பாவிடம் புகார் சொல்லும் போது , அப்பா வெகு சாதாரணமாய் நானும் அப்படித்தான் என்கிறார்..........

நாய் வளர்த்ததையும் நா.மு. இப்படி சொல்கின்றார். புலி வளர்க்க காடும்,காசும் இல்லாததால் நாங்கள் நாய் வளர்த்தோம். அதற்கு டைகர் என்றே பெயரிட்டோம். இந்த வரியில் நான் கொஞ்சம் சத்தமாகத்தான் சிரித்தேன்.

மொத்தம் பதினைந்து தலைப்புகளில் தனது பால்ய காலத்திற்கு நம்மை அழைத்து சென்ற நா.மு. அதன் கடைசி அத்தியாயத்தில் இப்படி சொல்கின்றார், ஒரு சம்பவத்தை மேற்கோள்காட்டி;

"ஒரே சம்பவம் பால்யத்தில் இரண்டு வெவ்வேறு விதமாக பதிவாகின்றது. பாலகாண்டம் ஒரு நதியைப் போன்றது. தண்ணீர் வற்றிவிட்டாலும் மணலுக்கடியில் நதி ஓடிக்கொண்டிருக்கின்றது"


இந்த புத்தகம் என் பாலகாண்ட பயணத்திற்கு பாதை கொடுத்துள்ளது. நீங்களும் படித்துப்பாருங்கள் என்று சொல்லமாட்டேன். நீங்களும்படித்து உங்கள் பாலகாண்ட பாய சிலேட்டில் குறிப்பிடப்பட்டிருக்கும் பதிவுகளை நினைவுக்கூறுங்கள்.

நன்றி

வணக்கம்.

அடுத்த புத்தகத்தில் சந்திப்போம்,


இப்படிக்கு தயாஜி

ஆகஸ்ட் 14, 2010

புத்தகக்காதலிகள்....


கொஞ்ச இடைவேளைக்கு பிறகு "காத்திருந்து" வாங்கிய புத்தகங்கள் இவை.

# சிவமயம் பாகம் இரண்டு

- என் அபிமான எழுத்தாளர் இந்திராசௌந்திரராஜன் எழுதிய புத்தகம் இது. சில ஆண்டுகளுக்கு முன் இந்த முதல் பாகம் படித்து மிகவும் அதிசயித்தேன்.அதன் பின் இதன் இரண்டாம் பாகம் இருப்பத்தை சமீபத்தில்தான் இணையம்வழி தெரிந்துக் கொண்டேன்.இப்போது வாங்கியும்விட்டேன்.சிவமும் சித்தர்களும் செய்யும் விளையாட்டில் மனிதர்களின் பங்களிப்பு குறித்து தனக்கே உரிய எழுத்தாளுமையில் சொல்லியிருப்பார் இந்திரா சௌந்திரராஜன்.


# ப்ளீஸ் இந்த புத்தகத்தை வாங்காதிங்க


- இந்த தலைப்பால் ஈர்க்கப்பட்டு கையில் எடுத்தேன் ஆச்சர்யம் கலந்த மகிழ்ச்சி . இதன் எழுத்தாளர் கோபிநாத். விஜய் தொலைக்காட்டி தொகுப்பாளர். இவரின் 'நீயும் நானும்' எனும் ஆனந்த விகடன் இதழ் தொடரின் தீவிர வாசகன் நான்.


#அம்பலம்


-நம்ப தலைவர் சுஜாதா வழிநடத்திய இணைய இதழின் தொகுப்பு இந்த நூல். இணையத்தில் தவறவிட்ட நான் இப்போது வாங்கிவிட்டேன். கடைக்காரர் ஒவ்வொரு சுஜாதாவின் புத்தகத்தை காட்டும்பொழுதும் "வாங்கிட்டேன்".."வாங்கிட்டேன்" எனும் என் பதிலுக்கு அவர் "அப்போ இந்தா நீங்களேத் தேடிக்கோங்க.." என்று தந்த ஆசிவாதத்தால் கிடைத்த புத்தகம் இது.


# பட்டாம்பூச்சி (பரிசு பெற்ற கவிதைகள்)

# பாலகாண்டம் (கட்டுரைகள்)

# கண்பேசும் வார்த்தைகள் (பாடல் பிறந்த கதை)


இவை மூன்றும் பாடலாசிரியர் நா.முத்துக்குமார் எழுதியுள்ளார். பாடல்களின் வரிகள் மூலம் என்னைக் கவர்ந்த இவர் இதிலும் கவர்வார் என்பதில் ஐயமில்லை.


# பூமிப்பந்தின் புதிர்கள்


- எழுத்து க.பொன்முடி. நமது பூமியில்..! ஆங்காங்கே நடக்கும், இருக்கும் அதிசயம் , ஆச்சர்யம் குறித்து சொல்லும் புத்த்கம் இது. நான் எழுதும் கதைகளில் வரும் அமானுஷ்யங்களுக்கும், ஆச்சர்யங்களுக்கும் இவ்வகை புத்தகங்கள் உதவும். என கதையில். கதையையும் தாண்டி ஏதோ தகவல்கள் இருப்பதாக படித்தவர்கள் சொல்கின்றார்கள்.


# உனக்குள் இருக்கும் வைரத்தை கண்டுபிடி


-இதன் படைப்பாளர் அரிந்தம் சவுத்ரி. வாழ்வில் போராடவும் தொடர் வெற்றிக்கும் தேவையான ஒன்பது குணங்களைச் சொல்லும் நூல். இது ஒரு மொழிபெயர்ப்பு நூல் என்பது குறிப்பிடத்தக்கது.


இந்த புத்தகங்களை ஒரே கோட்டில் வைக்க முடியாது. அதே போல்தான் என் வாசிப்பையும் என்னால் வகைப்படுத்த இயலவில்லை.சில புத்தகங்கள் என் கொள்கைக்கு முரணானவை சில புத்தகங்கள் என்னையே எனக்கு வேறாகக்காட்டுது.. எது எப்படியோ நான் தேடி வாங்கிய புத்தகங்களைவிட என்னை தேடிய புத்தகங்கள்தான் அதிகம். எதற்கும் ஒரு காரணம் உண்டு என்ற என் சிந்தாந்தத்தை நோக்கியே என் தேடலை வைக்கின்றேன் இப்போதும்.

விரைவில் இந்த புத்தகங்களை வாசித்து நேசித்து... வழக்கம்போல் உங்களோடு பகிர்கின்றேன். நன்றி


தயாஜி

ஆகஸ்ட் 13, 2010

தமிழன்.....

தமிழன் என்ற சொல்லுக்கே தரணி வணங்கும் அன்புக்கே....
தாய்க்கு மகனாய் பிறந்தவன் தமிழ்........
தாய்க்கு தன் உயிர் கொடுப்பவன்....
மொழியே இல்லா பொழுதினின் இலக்கணம் வளர்த்தவன்,
தொல்காப்பியன்...
எழுத்தாய் இருந்த இலக்கணத்தை ஈரடியாக்கி.....
நேரடிச் சொன்னான் திருவள்ளுவன்...
உலகப் பொதுமுறை..
திருக்குறள் உண்மையின் விதை....
ஈரடி விதைதான் காவியமானது இளங்கோவடிதான்,
மீண்டும் புதுமைப் படைத்தது...
ராஜராஜாக்கள் ஆண்ட காவிய உலகை....
குடியானவன் ஆண்டான்...
அவன் கோவலன் ஆவான்....
தமிழன் என்ற சொல்லுக்கே தரணி வணங்கும் அன்புக்கே....
சிலம்பும் செய்தான்..
பெண்ணின் உரிமை சொன்னான்...
விஞ்ஞானம் பிறக்காத போதே...
மெஞ்ஞானம் பெற்றான்...
அண்டம் என்றான்..
பிண்டம் என்றான்...
ஆணும் பெண்னும் ஆதிசிவன் என்றான்...
ஆணுக்கு பெண்ணும்..
பெண்ணுக்கு ஆணும்..
சரிசமம் செய்தான்.. ஏறாத போதே....
இளனியின் தண்ணி கண்டான்...
கிரகம் ஒன்பது என்றான்....
தமிழன் என்ற சொல்லுக்கே தரணி வணங்கும் அன்புக்கே....
தேய்பிறை குறித்தான்...
பேய் மழைத் தடுத்தான்...
காடுகள் காத்தான்..
மரங்களை மதித்தான்....
உண்மையை சொன்னான் அதை.....
உறுதியால் வென்றான்....
எமனையும் எதிர்த்தான்..
பரம் பொருளையும் துதித்தான்....
தமிழன் என்ற சொல்லுக்கே தரணி வணங்கும் அன்புக்கே....
இப்படி,
இப்படியாய் ..
இமயம் தொட்டவன்....
இருக்கும் நிலையைச் சொல்லவோ...
நம் இதயம் அதனைத் தாங்குமோ......
பொக்கிஷம் பல பார்த்தவன் இன்று..
பொருளுக்கு வழியின்றி தவிக்கிறான்...
பொருமையும் இன்றி திரிகிறான்...
பிறர் பார்த்தால் கூட,
ரத்தம் கொதிக்கிறான்...
அடுத்தவன் ரத்தம் வர ரசிக்கிறான்...
தமிழன் என்ற சொல்லுக்கே தரணி வணங்கும் அன்புக்கே....
இப்படி,
இப்படியாய் ..
இமயம் தொட்டவன்....
இருக்கும் நிலையைச் சொல்லவோ...
நம் இதயம் அதனைத் தாங்குமோ......
இயலாமையிக்கு அடிமைதான்...
காரணம்,....
முயலாமை என்பதை மறந்திட்டான்....
எங்கே செல்கின்றோம் மறந்திட்டான்...
உயிரை மதியாது மறிக்கிறார்....
இன்னும் இருக்குது...
இருந்தும் என் கண்ணீர் தடுக்குது...
தமிழன் என்ற சொல்லுக்கே தரணி வணங்கும் அன்புக்கே....
இப்படி,
இப்படியாய் ..
இமயம் தொட்டவன்....
இருக்கும் நிலையைச் சொல்லவோ...
நம் இதயம் அதனைத் தாங்குமோ......
இந்த நிலமை மாறனும்..
இனிதே விரைவில் நடக்கனும்...
அசைக்க முடியாதிருக்கனும்....
ஆண்டவெனும் தமிழனை மதிக்கனும்....
மீண்டும் இமயம் தொட்டிட......
தமிழனின் பயணம் தொடரனும்....
தமிழன் என்ற சொல்லுக்கே தரணி வணங்கும் அன்புக்கே....
...........தயாஜி..........

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்