பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

மே 20, 2010

அவள் தேவதை..?


காதலியை எல்லாரும் தேவதை என சொல்லுவார்கள் ஆனால் என்வரையில் அது நிஜமாகிப்போனது. என்வரையில் நடந்ததைச் சொன்னால் உங்களுக்கும் அவள் தேவதையாகத்தான் தெரிவாள். அவரவருக்கென்று ஒரு கனவு காதலி இருப்பாள். சிலருக்கு நடிகையாக இருப்பாள், சிலருக்கு வீராங்கனையாக இருப்பாள். எனக்கும் அப்படி ஒரு கனவு காதலி இருந்தாள். தனியே அவளுகென்று புகைப்படமோ விபரமோ என்னிடம் இல்லை. என் மனதில் திடிரெனத் தோன்றி, தாÉ¡கவே உருவம் பெற்றவள்தான் என் கனவு காதலி. தானாகவே உருவம் பெற்றவள் சில நாள்களில் என் கனவில் வரத்தொடங்கினாள்.


சொல்லும்போது கனவுதான், ஆனால் அந்த நேரம் அது கனவா என யூகிப்பது அவ்வளவு சுலபமல்ல. கனவு கலைந்தது எனக்கே குழப்பம் வரும் இது என்ன கனவா இல்லை நனவா..? அன்னிக்கு ஒரு நாள் நான் தனியா நடந்துக் கொண்டிருந்த சமயம். வானில் என்னமோ மாதிரி ஒளி வந்தது. நானும் இதை பெரிசா எடுத்துக்கலை. ஆனால் பாருங்க நான் நின்னு அதையே கவனிச்சேன். அந்த ஒளி என் தலைக்கு நேரே வந்தது . அதனுள் நான் இழுக்கப்பட்ட மாதிரி ஒரு உணர்வு. அங்கு¸தான் என்னோட கனவு காதலியை சந்தித்தேன்.


அந்த ‘மின்சார பார்வையாள்’ என் ‘சம்சாரமானதெல்லாம்’ என்னால் யூகிக்க முடியாமல் நடந்தது . அங்கு பாருங்களேன், கட்டிலில் என் தேவதை எப்படி, எந்த ஒரு சலனமும் இல்லாமல் தூங்குகின்றாள். என்ன..., தூங்கும் நேரம் எந்த இடைஞ்சலும் இல்லாமல் இருக்க காதையும் கண்ணையும் அதோ அங்க தெரியுதே அந்த பெட்டிகுள்ள வச்சிடுவாள். என்ன யோசிக்கிறிங்க..?

இதுக்கே இப்படின்னா நேத்து தலையைக் கழட்டி அந்த பெட்டிகுள்ள வச்சா தெரியுமா.. இப்போ சொல்லுங்கள் அவள் தேவதைதானே..?


............தயாஜி............

மே 18, 2010

மீண்டும் நள்ளிரவு மணி 12.00..


நள்ளிரவு மணி 12.00 ஆழ்நிலை தூக்கத்தில் மிதந்துக் கொண்டிருந்தேன். ‘செல்லம்...ஐ..லவ்....யூ’ என பிரகாஷ்ராஜ் குரல் என்னை எழுப்பியது. கைபேசியின் சத்தம்தான் அது. தூக்கம் கலிந்தும் கண்களை மூடியவாறுப் பேசத் தொடங்கினேன்.
“வணக்கம் யார் பேசறிங்க..?”
“வணக்கம் மணி, நான் தான் தேவி பேசறேன்.”

பெயரும் குரலும் பரிட்சயமில்லாததால், தொலைபேசி எண்ணை கவனித்தேன், ‘ப்ரைவட் நம்பர்’ என இருந்தது.
“ம்.. நீங்க...”

“பார்த்திங்களா மறந்துட்டிங்க...என்னங்க நீங்க..”
“...................”
அந்த குரல் மீண்டும்,

“நீங்களும் மறந்துட்டிங்களா..?” அவள் அழுதாள். அது அழுகையா சிணுங்களா எனத் தெரியவில்லை.
நான்,
“அப்படியில்லைங்க.. எனக்கு ஞாபக சக்தி குறைவு அதான் நீங்களேச் சொல்லுங்களேன்.”

சலிப்புடன்,

“ம்.. நானே சொல்றேன். நான் தேவி. ஒரு தடவை புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியில் சந்திதிருக்கோம். நீங்கதான் அறிவிப்பு செய்தீங்க... அப்பறம் கவிதைகூட சொன்னீங்க. நான், கடைசியா உங்ககிட்ட வந்து பேசி உங்கள் கையொப்பம் கேட்டேன். நீங்களும், ‘நல்லதே நடக்கும் நம்பிக்கையுடன் மணி’ அப்படின்னு எழுதி கொடுந்தீங்க..”
அந்தப் பெண்ணின் முகம் எனக்கு லேசாக நினைவுக்கு வந்தது. சிரித்தேன். கண் திறக்காமல்.

“ஓ, நீங்களா..? உங்களுக்கு மட்டுமில்லை நான் எல்லார்க்கும் அப்படித்தான் கையொப்பம் இடுவேன். சரி என்னங்க இந்த நேரத்தில்..?”
“உங்ககிட்ட கொஞ்சம் பேசனும் பேசலாமா..?”
தூக்கம் ஒரு புறம் இழுத்தாலும் அந்த நேரத்தில் தேவியின் குரல் என்னைக் கவர்ந்தது.

“ம்.. என்ன பேசப் போறிங்க..?”
“தற்கொலை செய்துக்கிறது கோழைத்தனமா..?”
“ஏங்க திடிர்னு இந்த கேள்வி..?”
“பதில் சொல்லுங்களேன்..”
“தற்கொலை செய்றது தைரியமான செயல்..”
“அப்படியா..?!”
“ஆமாங்க, வாழ்க்கையை முழுமையா வாழ பயந்து சிலர் எடுக்கிற சில நிமிட தைரியமான முடிவுதான் தற்கொலை”
“வாவ்.. பதிலை கூட கவிதையாய் சொல்ல உங்களால் மட்டும்தாங்க முடியும்...”
(கவிதையா..?எனக்கு அப்படியேதும் தெரியவில்லை.உங்களுக்கு..?)
நான் தொடர்ந்தேன்,
“அப்படியா..! சரிங்கா ஏன் இப்படி ஒரு கேள்வி..?”
“நான் அப்படி செய்ய நினைச்சேன்”
எனக்குத் தூக்கிவாரிப்போட்டது.
“என்னங்க சொல்றிங்க..?”
“அவசரப்படாதீங்க..இன்னும் சொல்லி முடிக்கல..தற்கொலை செய்யலாம்னுதான் போனேன். அப்போ ஒரு ஆசிரமத்தின் தொலைபேசி எண் கிடைச்சது..சரி கடைசியா என் பிரச்சனைக்கு இங்க தீர்வு வரும்னு நினைச்சி போன் செய்தேன். அவங்க பேசினது எனக்கு ஆறுதலா இருந்தது. இப்போ அந்த ஆசிரமத்துலதான் இருக்கேன்.”
சட்டென்று ஒரு குரல்,
“மாமா இன்னும் தூங்கலையா மணி என்ன மாமா...?”
“போன் பேசறன்.. மணி ஒன்னாவப்போது. நீ தூங்கு நான் அப்பறம் தூங்கறேன்..”
“ச..ரிமாமா..” வார்த்தைகள் உளறி தூக்கம் தொடர்ந்தது.
அது என் அத்தை மகன். அத்தை வீட்டில் வேலை நிமித்தமாக தங்கியிருப்பதால் அவனோடு படுக்கையைப் பகிர்ந்துக் கொண்டிருந்தேன்.(பின்குறிப்பு; படுக்கையை மட்டும்..!)

“சோரிங்க...பக்கத்துல அத்தை மகன் தான். உங்களுக்கு அப்படியென்னங்க பிரச்சனை.?”

“அதை தெரிஞ்சி நீங்க ஒன்னும் செய்ய முடியாதே.. ஏன் கேட்கறிங்க..?..ம்..”

“என்னைப் பொறுத்தவரைக்கும், நம்மை சுற்றி நடக்கும் எல்லாவற்றுக்குமே.. ஒரு காரணம் இருக்கும்னு நம்பறேன்.. இப்போ நீங்க இந்த நேரத்தில் என்கிட்ட பேசறதுகூட ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட ஒன்னாதான் இருக்கும்னு நம்பறேன்..”
சிரித்தவாறே

“பரவாயில்லையே கவிஞருக்கு நிறைய விசியம் தெரிஞ்சிருக்கே.. சரி..சரி என் கதையைக் கண்டிப்பா சொல்லனுமா..?”
“தேவி. அது உங்கள் விருப்பம்.. நாளைக்கு காலையில நான் அலுவலகத்தில் இருக்கனும்.அதுக்கு சீக்கிரம் படுக்கனும். நாம நாளைக்குப் பேசலாமா..?”

அவள் சிணுங்கியவாறே,
“ம்..சரி நாளைக்குப் பேசலாமா..?”
“நானும் அதைதானே சொன்னேன்..”
“சரிங்க மணி நாளைக்கு நானே ‘கோல்’ செய்றேன். குட் நைட்..”

பேசி முடித்த பின்னரும் அன்று சந்தித்த வள் முகம் எனக்கு அவ்வளவாகத் தெரியவில்லை. மீண்டும் ஒரு முறை பார்த்தால் போதும் ஞாபகத்தில் வந்துவிடும். கொஞ்சம் குழப்பம். அப்படி என்ன தற்கொலை செய்யும் அளவுக்கு தேவிக்கு பிரச்சனை..? ஒரு நாள் தானே பார்த்தோம், அதை ஏன் என்கிட்ட சொல்லனும்..? இப்படி பலக் கேள்விகளுக்கு நாளை பதில் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தலையணையைக் கட்டியணைத்தேன்.

.................................................................................................................


மறுநாள் காலை நாளிதழ் படித்ததும் அதிர்ச்சி. இளம் பெண் தற்கொலை என்றிருந்தது. உடனே கைபேசியை எடுத்து நேற்று இரவு பேசிய எண்ணை தேடினேன். கிடைக்கவில்லை. குழப்பம் என்னை சூழ, நேற்று தேவியிடம் அவளது பிரச்சனையை கேட்டிருக்கலாமே என தோன்றியது. ஒரு வேலை அவளது தற்கொலைக்கு நானும் மறைமுக காரணமாக இரிப்பேனோ..? அவள் தற்கொலைக்கு முன்தான் என்னிடம் பேசினாளோ..? ஒருவேலை போலீஸார் அந்த கைபேசியை பரிசோதித்தால், என் மீது சந்தேகம் திரும்புமோ..?

தற்போதுதான் வெலையில் சேர்ந்து குடும்பப் பாரத்தை குறைக்கத் தொடங்கியுள்ளேன். இந்த நேரத்தில் இப்படியோர் இடியை என குடும்பம் தாங்காது. இன்றைய தினம் சீக்கிரமே வீடு திரும்பிவிட்டேன். சீக்கிரம் என்பது எங்களைப் பொருத்தவரை இரவு மணி 10.00.

இரவும் எனக்கு பகல் போலதான் தோன்றியது. ஏனெனில் காலையில் ஏற்பட்ட குழப்பம் என்னை யோசிக்கவிடாமல் தடுத்தது. நள்ளிரவு மணி 12.00.
“செல்லம்..ஐ..லவ்..” கைபேசியைத் தொடர்ந்து கத்தவிடாமல் உடனே எடுத்தேன். மறுமுனையில் அவள்தான்..

“என்ன மணி பயத்தில் இருக்கிங்கலா...?”
“என்ன...எ...ன்...ன... செல்றிங்க..?”
“இல்ல.. எப்போதும் வணக்கம் சொல்லுவிங்க.. இன்னிக்கு அமைதியா இருக்கிங்க அதான் கேட்டேன்”
பெருமூச்சுடன் ஆரம்பித்தேன்,
“இப்போதாவது உங்கள் பிரச்சனை என்னன்னு சொல்லுங்களேன் ப்லீஸ்”
அவள் சிரித்தாள். எப்படியும் இன்று அவளது பிரச்சனைக்கு ஒரு தீர்வு கொடுத்தேயாகவேண்டும் என தற்சமயம்தான் முடிவெடுத்தேன். அவள் இன்னும் உயிரோடு இருப்பது எனக்கே என் உயிர் திரும்ப வந்தது போல் இருந்தது.
“எல்லாத்தையும் ‘போன்ல’ சொல்ல முடியாது மணி. வேணும்னா நான் தங்கியிருக்கும் ஆசிரமத்துக்கு வாங்களேன்....”
“அதுக்குள்ள நீங்க ஏதும் செய்துக்க மாட்டிங்களே.?”
“ச்சே..ச்சே.. முகவரி கொடுக்கறேன் எடுத்துக்கோங்க...”

தேவி சொன்ன முகவரியைக் குறித்துக் கொண்டேன்.
“நாளைக்கு வரட்டுமா..?” என கேட்டதற்கு, சற்றே தயங்கி
“ம்.. நாளைகேவா.. வேற நாள் முடியுமா..?”
என கேட்டு கடைசியில் நாளைய சந்திப்பிற்கு பச்சைக் கொடி காட்டினான்.
“மணி நீங்க வந்தது நான் நெறைய பேசனும். ஏன்னு தெரியலை உங்ககிட்ட சொன்னா மனசுக்கு நிம்மதி கிடைக்கும்னு தோணுது அதான்.. தப்பா எடுத்துக்காதிங்க.. நான் தப்பான பொண்ணு கிடையாது..!”

அவள் அழத் தொடங்கினாள். இப்படி இரவில் பெண்களோடு பேசுவது எனக்கு ஒன்றும் புதிதல்ல.. என் காதலிக்குத் தெரியாத வரை இது எனக்கு பிரச்சனையுமில்லை.
“தேவி. நான் அப்படி நிணைக்கலை, கவலைப்படாதிங்க. உங்கள் பிரச்சனைக்கு என்னால தீர்வு கிடைக்கும்னு நீங்க நம்பறீங்க. உங்கள் நம்பிக்கை உங்களுக்கு நல்லதையே செய்யும். நிம்மதியா இருங்க நாளைக்குச் சந்திப்போம்.”
இவ்வாறு பேசி முடிக்கவும், என் அத்தை மகன் படம் பார்த்துவிட்டு படுக்க என் அறைக்கு வரவும் சரியாக இருந்தது.
“என்ன மாமா.. இப்போல்லாம் ராத்திரி அடிக்கடி ஏதோ பொண்ணுகிட்ட பேசறிங்க.. இதெல்லாம் நல்லாயில்லை..”
“ஏன் ரவி..?”
“இல்ல..! எனக்கும் ஒரு நம்பரைக் கொடுத்தா நாங்களும் பேசுவோல..”
“அடப்பாவி .. அதான் மாமான்னு கூப்டியா..?”
“அப்புறம் என்ன மாமா.... நீங்க. பொண்ணுங்களைப் பார்த்தோமா.. பேசினோமா... அப்பறம்... மு....”
“போதும்.போதும். அடுத்து நீ என்ன சொல்லப் போறன்னுத் தெரியும் படுத்துத் தூங்குடா...”

................................................................................................................

அதிக சிரம்மில்லாமல் தேவியின் வீட்டை அடைந்தேன், இல்லை... இல்லை... ஆசிரமம்தான் ஆனால் பார்ப்பதற்கு வீடு போல் இருந்தது. இப்பொ பல இடங்களில் வீட்டை வாங்கி சில பிள்ளைகளை வைத்து இது ஆசிரமம்னு சொல்லி வசூலிக்கும் கூட்டம் பெருகி வருவதுதான் என நினைவுக்கு வந்தது.


ஆசிரமத்தின் வெளியே நின்றேன்.
“தேவி” என அழைத்தேன்.

“பரவாயில்லையே , சொன்ன மாதிரி வந்துட்டிங்களே..?”
தேவியின் குரல்தான் அது. என் பின்னால் இருந்து கேட்டது.

“வாங்க வாங்க என்னங்க உள்ளே இருந்து வருவிங்கன்னு பார்த்தா என் பின்னால இருந்து வரிங்க...! ”
அவள் சிரித்தாள். அன்று நான் பார்த்ததைக் காட்டிலும் இன்று அவள் முகம் இருளடைந்துக் காணப்பட்டது.


அவள்,
“கொஞ்சம் வெளியே போயிருந்தேன். நல்லவேளை சீக்கிரமா வந்துட்டேன்... வாங்களேன்... நடந்துகிட்டே பேசலாம்... ”
நடக்கத் தொடங்கினோம், பல நாட்கள் பழகியவள் போல் அவளது அந்தரங்க விசியங்களைப் பகிர்ந்துக் கொள்ளத் தொடங்கினாள்.
“ஏன்னுத் தெரியலை மணி..! உங்ககிட்ட என் சோகத்தை சொன்னாக்கா... எனக்கு ஆறுதல் கிடைக்கும்னு தோணுது, அதான் சொல்றேன்.. நான் உயிருக்கு உயிரா காதலிச்சவன் என்னை ஆபாசமா படமெடுத்து எனையே பயமுறுத்தினான். எனக்கு வேற வழி தெரியலை..அதான் தற்கொலைக்குத் தயாரானேன்..ம்... ஆனா அது முடியலை.... இப்போ இந்த ஆசிரமத்தில் இருக்கேன் .அதும் எவ்வளவு நாள்னு தெரியலை..”
பேசிக்கொண்டே வந்தவள் திடிரென அமைதியானாள். நடந்துக் கொண்டே அவளுக்கு ஆறுதலாகப் பேச ஆரம்பித்தேன்.

“தேவி, இப்போ இந்த மாதிரி ரொம்ப நடக்குது. காதலிக்கறதா சொல்லி பொண்ணுங்களை இப்படி படமெடுத்து அந்த பொண்ணுங்க வாழ்கையையே நாசமாக்கிடறாங்க.. அவங்களை..” நான் முடிப்பதற்குள்,
ஆவேசமாக,
“கொல்லனும்... கொல்லனும்... நிச்சயம் கொல்லனும்..”
தேவியின் குரல் மட்டும் கேட்கின்றது. இதுவரை என்னுடன் நடந்து வந்தவளைக் காணவில்லை. ஆம் சுற்றிலும் தேடிவிட்டேன். அவளைக் காணவில்லை.
இது எப்படி சாத்தியம்...!
என் கழுத்தில் இருக்கும் முருகனின் படத்தைப் பிடித்தவாறே மீண்டும் ஆசிரமத்தின் வாசலில் நிற்கின்றேன்..ஒருவர் உள்ளிருந்து வந்து,
“அப்படி யாரும் இங்க இல்லைங்க தம்பி. இங்க சின்ன பிள்ளைங்கதான் இருக்காங்க..” என் பயத்திற்கு அணைவெட்டினார். பயம் என் உடலில் பரவி வியர்க்க ஆரம்பித்தது.
ஆமாம்...ஆமாம்... ஒரு முறை அத்தை மகன் ரவியின் கைபேசியில் ஏதோ ஒரு பெண்ணின் நிர்வாணப்படம் இருந்தது. அது..அது.. தேவியின் முகம்தான். அன்று இளம் பெண்ணின் தற்கொலை என வந்த படமும் இவளுடையதுதான். அப்படியென்றால் ரவிதான்.....!
குழப்பத்துடன் வீடு திரும்பினேன். இரவு மணி பனிரெண்டை நெருங்கிக் கொண்டிருக்க, அத்தை புலம்பினார்,
“என்ன புள்ளியோ எப்பப் பார்த்தாலும்... விடிஞ்ச பிறகுதான் வீட்டுக்கே வரான்..என்னதான் செய்யறதோ தெரியலை..”
ரவி இன்னும் வீடு திரும்பவில்லை. தொலைபேசியில் தொடர்பு கொண்டும் கிடைக்கவில்லை. காலையில் நடந்த எல்லாம் என் சிந்தனையைக் கட்டிப்போட்டது.
நள்ளிரவு மணி 12.00. தூக்கிவாரிப்போட்டது எனக்கு... என் கட்டிலுக்குப் பக்கத்தில் ரவியின் கைபேசி அலறியது. முன்பு நான் பல முறை முயற்சித்தும் தொடர்பு ஏற்படாத அதே கைபேசி.
அலறிக் கொண்டிருக்கும் கைபேசியில், அழைப்பவரின் பெயர, ‘ பிரைவட் நம்பர் ’ என இருந்தது..!


.........தயாஜி.........

மே 06, 2010

அம்மா என் அம்மா...


அம்மா என் அம்மா...

தெய்வம் நீயம்மா...


ருவறையில் சுமந்த..

கற்பக்கிரகம் நீ....


தேயாத நிலவும்

மறையாத சூரியனும்


குறையாத அன்பும்

கொண்டவளே அம்மா...


என் தெய்வம் நீயம்மா.....

கண்விழிப்பென் என்றும்


உந்தன் பெயர் சொல்லி.....

இரவுக்கும் பகலுக்கும்

வானம் வழிகாட்டி..


சரி தப்பை புரியவைப்பாய்

என் தோழி....


எனக்கான உடலைக் கருவாக்கித் தந்தவளே.....

உதிரத்தைப் பாலாக்கி

எனக்காகச் சுரந்தவளே.....


என் தெய்வம் நீயம்மா...


எனக்குள்ளே என்றும் தெய்வம் நீயம்மா...

பசி தூக்கம் துறந்து,

என்னை வளர்த்தெடுத்தாய்....


செய்திடுவேன் உனக்கு

என் உயிரை சமர்பணமாய்...


செய்திடுவேன் உனக்கு என் உயிரைசமர்ப்பணமாய்.....

இருந்தும் ஈடாகாது.....

என் தெய்வம் நீயம்மா....

ஏப்ரல் 12, 2010

உலக நாயகனுடன் இன்னொரு நாயகன்...




















நடிகனா..?










பாடகனா..?

நடன இயக்குனனா..?










கவிஞனா..?










கதாசிரியனா..?










தயாரிப்பாளனா...?










எழுத்தாளனா..?










ஆத்திகவாதியா..?










நாத்திகவாதியா..?





விமர்சகனா..?

வில்லனா..?










நகைச்சுவையாளனா..?

துணைக் கதாநாயகனா..?










இலக்கியவாதியா...?










பேச்சசளனா...?










இவ்வளவு ஏன்..........!










”நல்லவரா கெட்டவரா” என்ற கேள்விகள் உடபட எல்லா,





அடைப்புகுறிகளையும்....
அடக்கி ஆள்பவன்......















கலையில் ஆலமரம் ஆகியவன்...
உலக நாயகன்.....










கமலஹாசன்,





இவன் கலைத்தாயின் உன்னத நேசன்....

இப்படிக்கு,

“உன்னைப் போல் ஒருவன்”

“இவனும் வருவான்”




















தயாஜி வெள்ளைரோஜா

ஏப்ரல் 05, 2010

தெரிஞ்சா.. சொல்லுங்களேன்..!!



தெரிஞ்சா சொல்லுங்க...


இதை நான் சொல்லக் கூடாது. என்ன செய்வது எனக்கு வேற வழி தெரியலை. ஒரு வேளை உங்களில் யாருக்கும் இப்படி ஓர் அனுபவம் ஏற்பட்டிருக்கும் அல்லது இப்படி ஒரு அனுபவம் உங்களுக்காகக் காத்திருக்கும். அப்படி காத்திருக்கும் யாருக்காவது இது முன்னெச்சரிக்கையாக இருக்கட்டுமே என்றி இதனை எழுதுகின்றேன்.
பேய் இல்லாவிட்டால் ஆத்மாக்கள் என்பதனைப் பற்றி உங்களின் கருத்து என்ன..?

ச்சே...அப்படியெல்லாம் ஒன்னுமில்லை எல்லாம் ‘காதுல பூ’ சுத்தும் வேலைன்னு சொல்றிங்களா..? பரவாயில்லை. ஒன்னு சொல்லட்டுமா ஆரம்பத்தில் நானும் உங்கள் கட்சிதான்? இப்போ என் நிலையைப் ‘பாருங்க...’ மன்னிக்கவும் படிங்க. அப்போதுதான் தெரியும். உங்கள் யாரையும் பயமுறுத்துவது என் நோக்கம் அல்ல. அதற்கு நான் ஒரு கட்சி ஆரம்பிக்கலாம்..! ஆனால் ஏன் எழுதுகிறேன்..? எனக்கே தெரியலை..



சரி, ரொம்ப குழம்பாடாதிங்க, நானே சொல்றேன். ஆரம்பத்தில் நான் கேட்ட கேள்விகளுக்கான உங்களின் பதிலை மனதில் வைத்து தொடர்ந்து படிக்கனும் என்ன...


எனக்கு ஒரு நண்பன் இருந்தான்.(அது என்ன ஒரு நண்பனு கேள்வியெல்லாம் கேட்டா நான் எழுதமாட்டேன்.. அதனால சும்மா கேள்வி கேட்காம படிங்க... சரியா..)

அந்த நண்பனோட பெயர் காளிதாசு. அவனை எனக்கு நாலு வருசமா தெரியும். இது இப்போ அவசியமான்னு கேட்கறிங்கலா..? நான் சொல்லப் போறதுக்கும் இதுக்கும் சம்பந்தம் இருக்கு. சம்பந்தம் இல்லாம பேச நான் என்ன அர...(எதுக்கு வம்பு விடுங்க..!!)

தொடர்ந்து எழுதுவதற்கு முன்னாடி, ஒரு சின்ன தகவல். அது என்னான்னா.. ராத்திரி பன்னிரெண்டு மணிக்கு மேல் யார் எனக்கு ‘போன்’ எடுக்கமாட்டேன்.அதும் அன்னிக்கு பிரைவட் நம்பர்-னு இருந்தா, தூக்கம் போச்சி. ஏன்னு கேட்கறிங்கலா..? அப்படின்னா, என்னோட ‘நள்ளிரவு மணி’- என்ற கதையை (நயனம் 26/7/2010) படிங்கத் தெரியும். அதும் பெரிய கதைதான்.

இப்போ சொல்ல வந்ததை சொல்றேன். ஆம் அந்த காளிதாசு எப்போதும் எனக்கு ‘போன்’ செய்து பேசுவான். அப்பப்போ வந்தும் பார்ப்பான்.இப்போ என்னான்னா.. மூனு மாசமா, ஆளையே காணோம்.போன மாசம்தான் இன்னொரு நண்பன் மூலம் தெரிஞ்சது, காளிதாசு இறந்துட்டான்னு. உங்களுக்கு இது அதிர்ச்சியா இருக்காது. ஆனால் அடுத்து நடந்ததை சொன்னா நீங்க என்ன நினைப்பீங்கன்னு எனக்கு சொல்லத் தெரியலை.

கடந்த ஒரு வாரமா என்னால அவனைப் பார்க்கமுடியுது. அட ஆமாங்க, அந்த காளிதாசைதான். அவன்தான் இறந்துட்டானே அவனை எப்படி பார்க்க முடியும்னு உங்களுக்கு வர சந்தேகம் எனக்கும் வந்தது. கொஞ்சம் பயமாகவும் இருந்தது. ஒரு நாள் என்ன நடந்தது தெரியுமா..? ஓ.. நான் சொன்னாதானே தெரியும்னு சொல்றிங்கலா..? சொல்றேன் அதுக்குதானே எழுதவே ஆரம்பிச்சென்.

எப்போதும் போல பேருந்துக்குக் காத்திருந்தேன். என் அருகில் நால்வர் நின்றுக் கொண்டிருந்தனர்.கவனித்தேன். தூரத்தில் ஒரு உருவம் என்னையே பார்ப்பதாக உணர்ந்தேன். ஏற்பட்ட உணர்வு உண்மையாகிப் போனது.என்னையேப் பார்த்து கொண்டிருந்த உருவம் கொஞ்சம் கொஞ்சமாக அருகில் வரத்தொடங்கியது. அது்..அது.. காளிதாசு.என்னால் உறுதியாய் சொல்ல முடியும். அப்பறம் நாலு வருச பழக்கமாச்சே.. சும்மாவா..!
அவன் செத்துட்டான்னு சொன்னாங்கலே..... இங்க எப்படி..... ?


எனக்குள் பல கேள்விகள். உங்களுக்கும் ஆரம்பிச்சிருக்கும்னு நினைக்கிறேன். காளிதாசு, இருக்க இருக்க நெருக்கத்தை அதிகரிச்சான். எனக்கோ லேசான நடுக்கும் ஆரம்பிச்சிருக்கும். நானும் பயத்தில் புதுப்புது சாமி பெயர்களையேல்லம் சொல்லிக்கிட்டேன்.



கொஞ்சம் அருகில் வந்தான் .@ கொஞ்சம் அருகில் வந்தது.

“நீங்க மணிதானே..?” என்றான். @ என்றது.

நானும் நடுங்கியவாறு,

“ஆமாம் .. நீ.. நீங்க..க்க்காளிதாசு”

“இல்லைங்க நான் காளிதாசோட அண்ணன். ஒரு தடவை வீட்டுக்கு வந்திகலே , மறந்துட்டிங்கலா..?”

“ம்..ம்,.. காளிதாசு”

“ம்.. என்ன செய்யறதுங்க கஷ்டன்மாதான் இருக்கு. அம்மாதான் இன்னும் அவன் நினைப்பாவே இருக்காங்க.. நானும் அங்கயே இருக்க முடியாம. கோலாலும்பூருக்கு வந்துட்டேன். இங்க கூட்டாளி வேலை இருக்குன்னு சொல்லியிருக்கான். எல்லாம் சரியா வந்தா.. அம்மாவையும் கூட்டி வந்திடுவேன். அங்கயே இருந்தா தம்பி ஞாபகமாவே இருக்கும் பாருங்க..!”

இவ்வாறு பேசி பக்கத்தில், இருக்கும் கடையில் சாப்பிட்டோம். காளிதாசும், அவனோட அண்ணனும் ஒரே மாதிரிதான் இருப்பாங்கன்னு எனக்கு தெரியாம போயிருச்சி. நல்ல பையன் காளிதாசு. இப்படி அற்ப ஆயுசில போவான்னு யாருக்குத் தெரியும்.

அதற்கு பிறகு பேருந்துக்காக போகும்போதும், காத்திருக்கும் போதும் காளிதாசின் அண்ணனைப் பார்த்தா மரியாதைக்காக கை காட்டுவேன்.அப்படி கையை காட்டும் போது பக்கத்தில் இருக்கிறவங்க என்னை ஒரு மாதிரியாப் பார்ப்பாங்க. ஏன்னு எனக்குத் தெரியலை.உங்களுக்கு ஏதும் யூகம் இருக்கா..? அந்த யூகத்தை அப்படியே வச்சிக்கோங்க. நான் சொல்ல வந்ததை சொல்றேன்.மன்னிக்கவும் எழுதறேன்.

“தேவி எங்க இந்த பக்கம் .. சொல்லவேயில்லை..?”

“ஹாய், மணி எப்படி இருக்கே.. ஒரு வாரம் லீவு அதான் அத்தை வீட்டுக்கு வந்தேன். உன்னையும் பார்க்கனும்ன்னு இருந்தேன் நீயே வந்துட்டே..”

“அத்தை வீடா இங்கயா..?”

“ம்.. செர்டாங் செரி கெம்பாங்கந்ல இருக்கு . எல்லாம் வேலைக்கு போயிருக்காங்க அதான் அப்படியே பஸ் ஏறி வந்தேன். கொஞ்சம் சுத்திட்டு இப்பதான் கிளம்பப் போறேன்..ஆமா நீ என்ன பஸ்ல போறயா..?”

சிரித்தேன்.

“என்னோட கார் கொஞ்சம் பிரச்சனை அதான் இன்னிக்கு பஸ். இரு தேவி காளிதாசோட அண்ணன் வர நேரம் அபப்டியே அவரையும் பார்த்த மாதிரி இருக்கும்.”

தேவி அதிர்சியில்,

“என்ன மணி சொல்ற. நீ பார்த்தியா..?”

“ஆமாம் தேவி . இவரும் பார்க்க காளிதாசு மாதிரியெ இருந்தாரா. நானும் செத்துப் போன காளிதாசுன்னு நெனைச்சி பயந்துட்டேன்.”

“காளிதாசு இறந்துட்டான்னு யார் சொன்னா உனக்கு..?”

“கேசவன்தான் சொன்னான், காளிதாசு இறந்துட்டான்னு.. ஏன் தேவி என்ன ஆச்சி..?”

“அடக்கடவுளே, மணி செத்துப் போனது காளிதாசு இல்லை. அவனோட அண்ணனும் உன்கிட்ட சொன்னதா சொன்னியே அந்த கேசவனும்தான். மோட்டர் விபத்துலதான் ரெண்டு பேரும் இறந்தாங்க. ”

“என்னது..!!!!”

இதை தேவி மூலம் கேட்ட நான் என்ன செய்யனும்னு தெரியாம / புரியாம முழிச்சேன்.இப்பகூட பாருங்க பஸ்லதான் போய்கிட்டு இருக்கேன்.இன்னும் குழப்பம் தீரலை. அப்போ எனக்கு தகவல் சொன்ன கேசவன் , காளிதாசோட அண்ணன் ..இது எப்படி சாத்தியம்.

அங்க பாருங்க கேசவனும் காளிதாசின் அண்ணனும் கை காட்டறாங்க. உங்கள் யாருக்கும் தெரிஞ்சா சொல்லுங்களேன்..... நான் கை காட்டட்டுமா வேண்டாமா..?






தயாஜி வெள்ளைரோஜா

மார்ச் 31, 2010

சிறுகதை (அடுத்தது நீ 2)

(வானொலி நாடகத்துக்காக எழுதியதை.. மீண்டும் பத்திரிகைக்காக எழுதிய போது இப்படிதான் இருந்தது என்ன... செய்ய...?)
அடுத்தது நீ...

முதல் நாள், யாரும் எதிர்ப்பார்க்கவில்லை இப்படி நடக்கும் என. இது அப்படி ஒன்றும் புதிதும் இல்லை வழக்கமானதுதான். அவளும் இதை அளவுக்கு அதிகமாய் பழகியிருந்தாள். ஆரம்பத்திலிருந்தே அவளால் எல்லாவற்றையும் சரியா…மிகச் சரியா யூகிப்பாள். ஆனால் அதை யாரிடமும் சொல்ல விரும்பமாட்டாள். அவளில் விருப்ப மறுப்புக்கு காரணம் உண்டு. அதற்கு முன் அவளுக்கு தேவை, அதிகம் பழக்கத்தில் உள்ள ஒருத்தியின் பெயர்.அதிக தேடாமல் என் தோழியின் பெயரையே வைக்கின்றேன். பிற்பகுதியில் உங்களை குழப்பப்போகும் நான் குழம்பாமல் இருக்க இப்படி ஒரு வசதி எனக்கு அவசியம்..!

தேவி.
அவளுக்கான பெயரை தெர்வுக்குழு (?) முடிவெடுத்துவிட்டது. இனி அவளின் ‘‘விருப்பமறுப்புக்கு’’ காரணம் சொல்லாமல் இரண்டு சம்பவங்களைச் சொல்கின்றேன்,இது அவளுக்கு தெரிய வேண்டாம். இருபது வயதை தாண்டிக்குதிக்கும்போது..! அவளின் வலது கை தளும்பு அவளின் பதினைந்து வயது அம்மாவை நினைவு கூர்ந்தது. இவளின் அப்பாவின் தோழி என வீட்டுக்கு வரத்தொடங்கிய ஒருத்தியால் அம்மாவுக்கு மரணம் ஏற்படப்போவதாகவும் அப்பாவும் இதற்கு உதவப்போகின்றார் என்று சொன்னதின் விளைவு. அப்பாவை ஆண்டவன் போல நம்பிய அப்பாவி அம்மா இவளிடம், அதைக் கேட்டதும் காளியாக மாறி ஆறா காயத்தை ஏற்படுத்தினால்.

இப்போது அவளுக்கு கிடைத்திருக்கும் மூன்று தோழிகளான கஸ்தூரி, சரஸ், சித்ரா இவர்களால் இவளின் யூகிக்கும் ஆற்றல் அடிக்கடி பரிசோதிக்கப்பட்டது. தேவி சொன்னார் போலவே விபத்துகள் நடந்தன....., சினிமா படங்கள் வெற்றியும் தோல்வியும் அடைந்தன...... வகுப்பிலும் பரிட்சைக்கு வரப்போகும் கேள்விகளையும் முன்குட்டியே யூகித்து அதைமட்டும் படித்து இவளும் இவளின் தோழிகளும் நல்ல புள்ளிகள் பெற்றனர்.

இவர்களில் “அலாவுதின்” தேவிக்கு வந்தது ஆபத்து.அது யூகிக்கும் சக்தி இல்லை. அபூர்வ சக்தி..! என அவள் தெரிந்துக் கொண்ட அந்த நள்ளிரவு நேரத்தில்.

வழக்கமான நிகழ்வில் வழக்கத்திற்கு மாறாக நடக்கப்போகும் சம்பவம் தேவிக்கு தெரிந்ததோ என்னமோ..? அவள்.....

“என்னடி உங்களுக்கு தெரியாதா.. இன்னுமா நம்பிக்கை வரல..?”
“நம்பிக்கை இல்லாமலில்லை.. சும்மாதான் பார்ப்போமே, நீதானே சொன்ன இது யூகிக்கும் சக்தி இல்லை ஏதோ.......”
என சரஸ் முடிக்கும் முன்பு , சித்ராவும் கஸ்தூரியும்
“அபூர்வ சக்தி...!”
என ஒருசேர கோஷம் போட்டனர்.
“உங்களுக்கு இது ஒரு விளையாட்டா இருக்கா...? இந்த அபூர்வ சக்தியால நான் படும் கஷ்டம் எனக்குதானே தெரியும் அந்த வயசில அம்மா வைச்ச தழும்பு முதல் இப்பவரைக்கும்”
இவ்வாரு பேசிய தேவி சமையல் அறையிலிருந்து வரவேற்பறைக்கு நடக்க, தோழிகள் மூவறும் அவளைப் பின் தொடர்ந்தார்கள்.
தேவியை அவ்வப்போது இயக்கிய அந்த அபூர்வ சக்தி இன்று தன்னை முழுமையாக வெளிப்படுத்தபோவது தெரிந்திருந்தால், மூவறும் தேவியை பின் தொடர்ந்திருக்கமாட்டார்கள் போலும்.


................................................................................................................

வரவேற்பறையில், அபூர்வ சக்தியால் தேவிக்கு அப்படி என்னதான் கஷ்டம் என கேட்க ஆரம்பித்தவர்கள் இந்த சக்தியால் தாங்கள் பெற்ற நன்மைகள் பற்றியும் பேசப்பேச வினோதமாக இருட்ட ஆரம்பித்தது. வீட்டில் ‘மின்சாரத்தடை’ ஏற்பட விளக்குகள் ஒத்திகைப் பார்க்கத்தொடங்கியது மூவறுக்கும் உடல் ரோமக்கள் உணர்ச்சியைக் காட்டத்தொடங்கின. அந்நேரம்தான் அபூர்வ சக்தி தேவியை முழுமையாக ஆட்கொள்ள ஆரம்பித்தது.

இருக்கும் களேபரம் போததென்று, தேவியின் உடல் மின்சாரம் தாக்கப்பட்டது போல அதிர்ந்தது. கருவிழிகள் இருக்க வேண்டிய இடத்தை வெள்ளையாக ஏதோ ஒன்று நிறப்பிக்கிகொண்டிருப்பதை மூவறும் பார்க்காதவரை இதயத்துடிப்புக்கு வேலை இன்னும் அதிகரிக்காது.
நால்வரும் ஒரு மையப்புள்ளிக்கு வரத்தொடங்கினர். தேவி மட்டும் ஏனோ கஸ்தூரியில் அருகிள் வந்ததும் அவள் மிது மயங்கி விழுந்தால். விழுந்தது அவளா..?

அபூர்வசக்தியால் அவள் இன்னமும், மின்சாரத்தால் தாக்கப்பட்டவள் போல அதிர்ந்துக்கொண்டிடுந்தால்.
கஸ்தூரி தேவியை மடியில் படுக்கவைக்கவும் ,இதுவரை கண்ணாமூச்சி காட்டிய விளக்குகள் ஓய்வு பெற்றன. இருக்கும் அறைகுறை இருட்டு போதாதென்று இன்னும் இருட்டு, உரிமை எடுத்துக்கொண்டது.
சரஸ்,
“ பயப்படாதிங்க.. பயப்படாதிங்க.. ஒன்னுமில்லை கஸ்தூரி தலையை ஆட்டாமா புடிச்சிக்கோ. சித்ரா நான் போய் தண்ணி கொண்டுவறேன் நீயும் தேவி காலை கெட்டியா புடிச்சிக்கோ..”
என அவசர அவசரமாக சமையலறைக்கு சென்றாள்.

(சென்றாள் என்பது ‘இறந்த காலத்தைதானே’ குறிக்கும்..?)

கஸ்தூரி, தேவியின் தலையை ஆடாமல் பிடித்தாலும் அவளால் அதன் ஆட்டத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை, சித்ராவுக்கும் இதே நிலைதான். தண்ணீர் கொண்டுவர சென்ற சரஸ் இன்னும் வருவதாயில்லை.
“சரஸ்..சரஸ்”
இருவரும் ஒருசேர சத்தமாக அழைக்கவும், இதுவரை சுவரில் நல்ல பிள்ளையாக ‘இருத்தல்’ செய்த சுவர் கடிகாரம் கீழே விழுந்து உடைந்தது. தேவியின் உடல் எடை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிப்பதை உணரத்தொடங்கினாள் கஸ்தூரி.
மீண்டும் பயந்த மொழியால்;
“சரஸ்..சரஸ்”
என கத்த, உள்ளிருந்தா இல்லை வெளியிருந்தா என யூகிக்க முடியாத இனம் கண்டுகொள்ளா ஒரு குரல் கேட்டது,
“அவ வரமாட்டா..! அவ வரமாட்டா...!”
சித்ரா,
“தேவி தேவி.. என்ன பேசற.. உனக்கு என்ன ஆச்சி.. ஐயோ கடவுளே..”
கஸ்தூரி,
“தேவி தேவி.. ”
என அவளை குலுக்கிய குலுக்கலில் அதிர்ஸ்டம் இல்லைதான். அவள் தெளியவில்லை.
சரஸின் குரல் கேட்பதாக சொல்லி, சித்ரா சமையலறைக்கு ஓடவும் சட்டென மின்னல் போல் தோன்றிய வெளிச்சத்தில் தேவியின் கண்ணை கவனித்தாள் கஸ்தூரி.
!!!!!!!
ஏது செய்வதென்று தெரியாத அவள் , மடியில் வைத்திருந்த தெவியை தன்னால் இயன்ற பலத்தைப் பயன்படுத்தி தள்ளிவிட்டு எழுந்தாள். இவளுக்காகவே திறக்கப்பட்டது போல் , வாசற்கதவு திறந்து, அழைத்தது. எங்கே.?


..........................................................................................................


நிலைமை இன்னும் மோசமாகப் போவதாக உணர்ந்து விட்டதால், கஸ்தூரி திறந்த கதவின் அழைப்பை ஏற்று வேளியில் ஓட தொடங்கினாள். அவளின் நினைவில் ஏனோ சரஸ்,சித்ரா அழிக்கப்பட்டிருந்தார்கள். ஓட்டம் எடுத்தவளுக்கு வழிகாட்ட அந்த கும்மிருட்டில் மின்னல் வெட்டத் தொடங்கியது மறுபடியும்.

வாசலை நெருங்க இன்னும் சில அடிகளே இருக்க கணிக்கமுடியாதா ஒரு தடுப்பு அவளில் காலை தடுக்கியது. விழுந்தவள் திரும்பிப் பார்க்கவும் மின்னலில் ஒத்துழைப்பிலும் அவளுக்கு தெரிந்தது ஒரு உருவம். அதும் ரத்தவெள்ளத்தில். கஸ்தூரியால் எதிர்ப்பார்க்கமுடியவில்லை..!
அவளா..அதுவா..?

.................................................................................................................

அலுவலக மதிய உணவு நேரம்.

“எங்க அது யாரு சொல்லு ..? ம்.. பவானி என்னமோ ரொம்ப பேசனையே கதையோட முடிவை சொல்லேன் பார்க்கறேன்..?”
மணியின் அலுவலக இடைவேளை கலாட்டா இது. புதிது புதிதாக கதை சொல்லும் இவன் முடிவை மட்டும் சொல்லாமல் குழப்புவான் இருந்தும் இவனது தோழி கோமதி முதல், தோழர்கள் பல பேர்வரை இதைத்தான் விரும்புவார்கள்.

“என்ன மணி நீ, எப்பவும் சொல்றமாதிரி இல்லாம ஏதோ அபூர்வ சக்தின்னு ஆரம்பிச்சி அங்கங்க கொஞ்சம் எங்களை குழப்பிவிட்டு இப்படி எங்களை கேக்கறது உனக்கே ஞாயமா இருக்கா சொல்லு..?”
என்று அதிகமாகவே அலுத்துக் கொண்டாள்.இவளே இபப்டியென்றால் மற்ற நண்பர்கள் கேட்கவா வேண்டும். எப்படியும் கதையின் முடிவை மணி சொல்லிவிடுவது இவர்களுக்கு தெரியும், இருந்தும் தாங்களும் தங்கள் திறமையைக் காட்டி கதையைத் தொடர்வார்கள். ஆனால் இந்த கதையின் முடிவை அவர்களால் சொல்ல முடியவில்லை. சொல்ல முடியவில்லையா..? சொல்ல விடவில்லையா.?

உணவு நேரம் முடிந்தது.

மதியம், வீட்டுக்குத் திரும்பும் சமையம், மணியின் மோட்டாரை வழிமறைத்து கோமதி,

“என்னடா நீ கதையை சொல்லமாலே போகப்போறயா..? எனக்கு தலையே வலிக்குது சொல்லுடா..? ”
“எதை சொல்லட்டும்”
“அந்த கதையின் முடிவையும் அப்பறம்...” முடிக்காமல் இழுத்தாள்.
“அப்பறம் ?”
“ம் அந்த மாதிரி அபூர்வ சக்தி ஏதும் உண்மையிலேயே இருக்கா. நீ சொல்றதைப் பார்த்தா உண்மை மாதிரி இருக்கு..!”
ஏதோ யோசித்தவாய் மணி,
“சொன்னா பயப் படமாட்டியே”
“சொல்லேன்”
“அந்த அபூர்வ சக்தி இருக்கு. அது எங்க இருக்கு தெரியுமா..?”
“எங்க மணி இருக்கு..”
“அதுகிட்டதான் பேசறே கோமதி”
“...!...”

மேற்கொண்டு பதில் எதும் சொல்லாமல் மோட்டாரில் புறப்பட்டான். இப்போதே இரவு மணி ஏழு, வீட்டிற்கு போவதற்குள் எட்டாகிவிடும்.
மோட்டாரில் பயணித்துக் கொண்டே எண்ணங்களின் பின்னால் பயணிக்கலானான்.
என்ன கதை இது. யார் அந்த தேவி. அது என்ன அபூர்வ சக்தி. இந்த மாதிரி கதையை நான் சொன்னதே இல்லையே. நினைச்சது கூட இல்லையே.அப்பறம் எனக்கு எப்படி இந்த கதையை சொல்லமுடிந்தது. அபூர்வ சக்தி..! .அபூர்வ சக்தி..! அப்படின்னா..?

குழப்பத்தில், தலையே வலித்தது மணிக்கு. இன்னமும் வீட்டுக்கு போக நேரமாகும், அருகில் இருக்கும் பேருந்து நிலையத்தில் தன்னையறியாமலே நிறுத்தி, யாருக்கோ காத்திருக்கத் தொடங்கினான்.
அபூர்வ சக்தி...அபூர்வ சக்தி... என மனதில் சொன்னதையே திரும்ப திரும்ப சொல்லி சரிபார்த்தான். அவனது இருக்கையின் அருகில் பாட்டுச் சத்தம் கேட்க, கவனித்ததும் தெரிந்தது ஒலியும் ஒளியும் கூடிய கைபேசி. சுற்றிலும் பார்வையிட்டான் யாரும் தெரிவதாக இல்லை. கைபேசியை எடுத்து பேசத்தொடங்கினான்.
“ஹலோ..”
மறுமுனையில் பதட்டமாக,
“ஹ..ஹா..லோ யாரு பேசறா..? ”
“நான் மணி பேசறேன் நீங்க..?”
“இது..இது என்னோட போன் தான் . நான்தான் தொலைச்சிட்டேன். இப்போ எங்க இருக்கிங்க. சொல்லுங்க pls நானே வரேன்..”

மணிக்கு வேறு வழி தெரியவில்லை. இரவு மேலும் இருட்டத் தொடங்கியது.
“ம்..சரி சீக்கிரம் வாங்க செர்டாங் பேருந்து நிக்குமே அங்கதான் இருக்கேன்”
“ஓ அங்கயா.. அங்கதான் பஸ் ஏறினேன். சரிங்க என்னை வர சொல்லிட்டு நீங்க காணாபோயிட மாட்டிங்களே..?”
“இங்க பாருங்க, இது ஒன்னும் விலை அதிகமுல்ல போன் இல்லை. நான் எடுத்து வெளியே விக்கறதுக்கு...என்னுடைய போன் இதிவிட விலை அதிகம். வாங்க காட்டறேன்.”
“மன்னிச்சிடுங்க...மன்னிச்சிடுங்க.. இதோ இப்பவே வரேன்”
“வாங்க, ஆமா உங்கள் பேரு ”
“ம்.. என் பேரு தேவி”
தேவி......!!!
“தேவியா,...?”
மணியின் ஆச்சர்யத்திற்கு அர்த்தம் உள்ளது. தேவி, இவன் கதையில் வந்தவள்தானே.! அந்த கதையே எப்படி எழுதினேன் என குழம்பும் மணிக்கு இவளின் வருகை எதனைக் குறிக்கும்.அந்த அபூர்வ சக்தி இவளுக்குதானே இருந்ததாக மணி சொன்னால்.

மணி, தன் கைகடிகாரத்தைப் பார்த்தான் இரவு மணி ஏழு முப்பது என காட்டியது. இப்படியே அவன் பார்த்த மூன்று முறையும் மணி ஏழு முப்பதையே காட்டியதை அவன் இன்னமும் அறியவில்லை. நேரம் ஆக,ஆக இருட்டும் தன் பணியை விட்டு விலகி பனிக்கு இடம்விட்டது. அதிகாலை வெள்ளைப்பனி மணியின் உடலை குளிரவைத்ததும்தாம் உணர்ந்தான் விடியப்போவதாய்.

தான் ஏன் இங்கே.? யாருக்காக காத்திருக்கின்றேன்..? என அநாவசியமான எண்ணங்கள் அவனுக்கு தலைசுத்ததலை கொடுக்க எழுந்து அருகில் இருக்கும் மோட்டார் வாகனத்தை எடுக்க நடந்தான்.

மணி எடுத்து வைத்த இரண்டாவது அடியில் ஸ்தம்பித்து நின்றான்.
“பெரிய”.. விபத்து. ஒரு தொழிற்சாலை வாகனமும் இரண்டு கார்களும். அந்த வாகனங்களுக்கு அடியில் மணியின் மோட்டர் வாகனமும் அதில் இரத்தவெள்ளத்தில் அடையாளம் சொல்ல முடியாத உருவமும்.

மணிக்கு கண்கள் இருண்டன. தன்னை சுற்றி இதுவரை இருந்த பனிமூட்டம் புகையாக மாறி அவனை சுவாசிக்க கஷ்டப்பட்டுத்தின.
ஆட்கள் கூட ஆரம்பித்தனர் மருத்துவ வண்டிக்கும் சொல்லியாகிவிட்டது.
மணியை யாரும் கவனித்ததாக தெரியவில்லை. தன் மோட்டார் வாகனத்தின் அடியில் இரத்தவெள்ளத்தில் கிடப்பவர் யார் என எட்டிப்பார்க்க முயன்ற மணியின் முதுகை ஒரு மெல்லிய கை பட்டது.
“பதட்டப்படாதே , நான்தான் தேவி வந்திருக்கேன்”
“இல்லை இல்....லை யார் நீ”
அதிர்îசியில் நாக்கு மொழிபேச தடுமாறியது.
“பயப்படாதே. நான் தேவி. எங்க என்னோட ‘போன்’ கொடு. இனி உனக்கும் இங்க வேலை இல்லை வா போகலாம்.....”

இருவரின் கால்களும் பூமியில் படாமல் அரையடி மேல் மிதந்தது..! மன்னிக்கவும் மிதந்ததன.
...........தயாஜி வெள்ளைரோஜா...........

மார்ச் 27, 2010

சிறுகதை



உன்னை அறிந்தால் நீ..........

வணக்கம்ங்க.. என் பேரு... உங்களுக்கு அநாவசியமான ஒன்னுதான். இருந்தும் என்னோட பெயரா இல்லாத ஒரு பெயரை என் பெயரா சொன்றேங்க.. நான் தோட்டப் புறத்தில் பிறந்து வாழ்ந்தாலும்ங்க கல்யாணம் ஆன பின்னால தோட்டத்தை விட்டு வந்துட்டோம்ங்க. என்னதான் தோட்டத்தைவிட்டு வந்தாலும்ங்க அங்க நாங்க பேசிவந்த ‘வாங்க’ ‘போங்க’-வை மட்டும் ரொம்ப நாளா விட முடியலைங்க. எனக்குள்ள தன்னம்பிக்கை குறைவா இருப்பதுதான் இதுக்கு காரணம்னு என் மனைவி சொன்ன பின்னாலதான்ங்க அதைப் பத்தி நானும் யோசிச்சேங்க .அதும், ஒரு வகையில உண்மைதான்ங்க. என்னால எல்லார்கிட்டயும் தைரியமா பேச முடியாதுங்க. கடைக்கு போனாலும் என்ன சாப்டுன்னு ரொம்ப நேரம் யோசிச்சி என்ன சொல்றதுன்னு தெரியாம முழிப்பேன்ங்க.


இப்படியே இருந்தா நல்லதில்லைன்னு யாரோ சொல்ல.. என்னோட மனைவியும் எனக்கு தன்னம்பிக்கை வரனும்னு அப்படி இப்படின்னு யோசிச்சாங்க.அப்பறம் ஒரு நாள் ஏதோ தன்முனைப்பு பயிற்சி இருக்கு வாங்கன்னு கூப்டுப் போனாங்க. நானும் பின்னாலேயேதாங்க போனேன்.


பணம்கூட என்னோட மனைவிதாங்க கட்டினா.. ஏன்னா அதிகாரமே அவங்ககிட்டதானே இருக்கு. இருக்கட்டும்ங்க...! எப்படியும் இந்த தன்முனைப்பு நிகழ்ச்சியில கலந்து தன்னம்பிக்கையை வளர்த்து அப்பறமா இவங்களை கவனிக்கலாம்னு எண்ணம் இல்லாமல் இல்லை. என் பக்கதிலதாங்க என் மனைவியும் இருந்தாங்க. ரெண்டு மூணு பேரு எல்லார்கிட்டயும் வந்து என்னமோ கேட்டு கையில இருந்த புத்தகத்துல குறிச்சி வைச்சிக்கிட்டாங்க.


என்கிட்ட வந்தவுடன் எனக்கு கையும் ஓடலை காலும் ஓடலங்க.. என் மனைவிதான் அவங்ககிட்ட பேசினாங்க. அவங்களும் என்னைப் பார்த்து சிரிச்சிட்டு எல்லாம் சரியாகிடும்ன்னு சொன்னாங்க.. என் பின்னால பார்த்தா எண்ண முடிஞ்ச அளவுக்கு சில தலைங்க இருக்குங்க.. எங்க எல்லார்க்கும் கையில் ஒரு சின்ன புத்தகமும் ஒரு பேனாவும் கொடுத்தாங்க.. இன்னும் கொஞ்ச நேரத்தில பேசக்கூடியவர் வருவாராம். அதுக்குள்ள ஒருத்தரு எங்க முன்னால நின்னு அவரு வந்த பிறகு நாங்க என்ன செய்யனும் ஏது செய்யனும்ன்னு சொன்னாருங்க. அவரு பேச ஆரம்பிச்ச பிறகு யாரும் பேசக்கூடாதாம். நாம அவரைப்பத்தி மனசுல என்ன நெனைச்சாலும் அவருக்கு தெரிஞ்சிடுமாம். பத்திங்கலா கேக்கற உங்களுக்கே இப்படி இருக்கே எதிருலே இருக்குற என்னோட நிலைமையைப் பத்தி கொஞ்சம் நெனைச்சிப் பாருங்க..


கறுப்பாவும் இல்லாம வெளுப்பாவும் இல்லாம ஒருத்தரு மேடைக்கு வந்து நின்னு “அனைவருக்கும் வணக்கம்” அப்படின்னு எம்.ஜி.ஆர் படத்துல வில்லன்ங்க பேசுவாங்களே அதே மாதிரி பேசனாருங்க.. ஆனா ஒன்னுங்க, அவரு பேசப்பேச எனக்குள்ள ஏதோ வந்த மாதிரிதான் இருந்ததுங்க. நம்மை சுத்தி எப்பவும் என்னமோ வட்டமா ஒன்னு இருக்குமாமே அந்த பேர்கூட சொன்னாருங்க ஞாபகம் வரமாட்டுதுங்க. அவரு பேசினதுல இருந்து அவரு சாதாரண ஆள் இல்லைனு தெரிஞ்சதுங்க. பேச்சிக்கு இடையில அவரு என்னை கவனிச்சது என்னமோ உண்மைதாங்க.சுமார் ரெண்டு மணிநேரம் அவரு பேசினாருங்க. அப்பறம் அடுத்தவாரம் வரச் சொன்னாருங்க. கிளம்பும் போது கவனிச்சா வந்த எல்லார் முகத்திலும் என்னமோ “நமிதா” வீட்டு அட்ரஸ் கிடைச்ச ஒரு சந்தோஷம்ங்க..


என் மனைவி சொன்னப் பின்னாலதான் தெரியும் அடுத்த வாரமும் வரனுமாம். அப்பதான் இந்த ஒரு வாரம் கிடைச்ச மாற்றங்களைப் பத்தி எல்லாரும் மேடையில் ஏறி பேசனுமாம்.


அவர் அந்த ரெண்டு மணிநேரத்தில் என்ன பேசினாருன்னு, நான் முழுசா உங்ககிட்ட சொல்லகூடாதாம்.அவர்தான் சொன்னாருங்க. அதான் அதைப் பத்தி நான் ஒன்னும் பெரிசா சொல்லலைங்க. ஆனா பாருங்க, அவர் பேச்சில ரொம்ப நம்மலோட சிலை வழிபாடு அப்பறம் கிரகம், நட்சத்திரம் பத்தி ரொம்ப வந்தது. என்னமோ வெள்ளைக்காறனுக்கு பொறந்த மாதிரி அவரு பேசினது இருக்கே என்னன்னு சொல்லங்க..அட பாருங்களேன் எனக்கு தைரியம் வந்த மாதிரி இருக்குங்க. அட ஆமாங்க, இல்லைன்னா இப்படி அவரு சொல்லக் கூடாதுன்னு சொன்னதை உங்ககிட்ட சொல்லுவனா..?


ஒரே நாள்ல இந்த அளவு மாற்றம்னா இன்னும் ஆறு நாள் என்னென்ன நடக்கும்னு நெனைச்சா அதே எனக்கு புது தெம்பு வந்த மாதிரி இருக்குங்க. இன்னும் எதுக்குங்க “வாங்க” “போங்க” எல்லாம். நீங்களும் நானும் சரிசமம்தானே. என்ன சொல்றிங்க.


மூனாவது நாள் சாப்பாட்டுக் காடையில், கடைக்காரரு என்னை ஒரு மாதிரியா பாத்தாரு. அப்பறம் எப்பவும் அமைதியா சாப்ட்டு வர ஆளு நான். இன்னிக்கு சாப்பாடு, விலை அதிகம், ருசியும் இல்லைன்னு முகத்துக்கு நேரா புகார் கொடுத்தா அப்படிதானே பார்ப்பாரு. ஐந்தாவது நாள், வேலை செய்யும் இடத்திலும் அப்படித்தான் என் வேலையை முன்னர் செய்ததைக் காட்டிலும் இப்போது வேகமாகவும் சிறப்பாகவும் செய்கின்றேன் என மேலதிகாரிகள் சொல்கின்றார்கள்.

ஒரு வாரம் கழித்து நினைத்துப்பார்க்க முடியாத ஏதோ ஒரு நாள். இன்று காலை அலாரம் வைக்காமல் எழுந்து குளித்து தன்முனைப்பு பயற்சியாளர் சொல்லிக்கொடுத்தது போலவே கண்ணாடி முன் நின்று பிரார்த்தனை செய்தேன்.


முன்பை விட மனம் லேசாகியது. தொடர்ந்து ஒரு வாரம் இப்படி பிரார்த்தித்து வந்ததால் விரைவில் மனம் லேசாகத் தொடங்கிவிட்டது. ஆரம்பத்தில் கால் வலி முதல் முதுகு வலி வரை வந்து நான் பட்ட கஷ்டம் எனக்கு ‘மட்டும்தான்’ தெரியும். எல்லாவற்றையும் கடந்து வர அந்த தன்முனைப்பு பேச்சாளர்தான் காரணம்.அவருக்கு என் நன்றி எப்போதும் உண்டு. இந்த ஒரு வாரத்தில் எனக்கு ஏற்பட்ட மாற்றங்களை நினைக்கும் போது தன்முனைப்பு நிகழ்ச்சிகளுக்கு செல்வதால் இவ்வளவு நன்மைகளா..? என என்னை நானே கேட்டுக்கொள்கின்றேன். போன வாரம் வரை எதற்கெடுத்தாலும் பயந்து அடுத்தவர்களை சார்ந்து வாழ்ந்து வந்த நான் இந்த ஒரு வாராம் ஏற்பட்ட மாற்றங்களை எப்படிதான் ஏற்றுக்கொள்வது.


தெரியுமா..! எனக்கு தேவையான உணவுகளை நானே சமைக்கின்றேன்.என் துணிமணிகளை நானே துவைத்துக் காய வைக்கின்றேன். எல்லா நாளும் கண்ணாடி முன் பிரார்த்திகின்றேன். இரவில் உறங்கும் போதும் தனிமையின் சுகம் உணர்கின்றேன். இன்றுதான் அந்த தன்முனைப்புப் பயிற்சிக்கு நான் செல்ல வேண்டும். உங்களிடம் சொன்னது போல், எனக்கு ஏற்பட்ட மாற்றங்களை எல்லார் முன்னும் சொல்லி அவர்களுக்கு ஏற்பட்ட மாற்றங்களையும் பகிர்ந்துக் கொள்ள வேண்டும்.


புறப்படத் தொடங்கிவிட்டேன். தன்னம்பிக்கையோடு தனியேதான் செல்கின்றேன். அடடே.. என் மனைவியைப் பற்றி சொல்லவேயில்லையே. ம்..ம்...என்ன சொல்வது அவள்தான் அந்த தன்முனைப்பு பேச்சாளருடன் இருக்கின்றாளே..!

.....தயாஜி வெள்ளைரோஜா....

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்