பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

மார்ச் 31, 2010

சிறுகதை (அடுத்தது நீ 2)

(வானொலி நாடகத்துக்காக எழுதியதை.. மீண்டும் பத்திரிகைக்காக எழுதிய போது இப்படிதான் இருந்தது என்ன... செய்ய...?)
அடுத்தது நீ...

முதல் நாள், யாரும் எதிர்ப்பார்க்கவில்லை இப்படி நடக்கும் என. இது அப்படி ஒன்றும் புதிதும் இல்லை வழக்கமானதுதான். அவளும் இதை அளவுக்கு அதிகமாய் பழகியிருந்தாள். ஆரம்பத்திலிருந்தே அவளால் எல்லாவற்றையும் சரியா…மிகச் சரியா யூகிப்பாள். ஆனால் அதை யாரிடமும் சொல்ல விரும்பமாட்டாள். அவளில் விருப்ப மறுப்புக்கு காரணம் உண்டு. அதற்கு முன் அவளுக்கு தேவை, அதிகம் பழக்கத்தில் உள்ள ஒருத்தியின் பெயர்.அதிக தேடாமல் என் தோழியின் பெயரையே வைக்கின்றேன். பிற்பகுதியில் உங்களை குழப்பப்போகும் நான் குழம்பாமல் இருக்க இப்படி ஒரு வசதி எனக்கு அவசியம்..!

தேவி.
அவளுக்கான பெயரை தெர்வுக்குழு (?) முடிவெடுத்துவிட்டது. இனி அவளின் ‘‘விருப்பமறுப்புக்கு’’ காரணம் சொல்லாமல் இரண்டு சம்பவங்களைச் சொல்கின்றேன்,இது அவளுக்கு தெரிய வேண்டாம். இருபது வயதை தாண்டிக்குதிக்கும்போது..! அவளின் வலது கை தளும்பு அவளின் பதினைந்து வயது அம்மாவை நினைவு கூர்ந்தது. இவளின் அப்பாவின் தோழி என வீட்டுக்கு வரத்தொடங்கிய ஒருத்தியால் அம்மாவுக்கு மரணம் ஏற்படப்போவதாகவும் அப்பாவும் இதற்கு உதவப்போகின்றார் என்று சொன்னதின் விளைவு. அப்பாவை ஆண்டவன் போல நம்பிய அப்பாவி அம்மா இவளிடம், அதைக் கேட்டதும் காளியாக மாறி ஆறா காயத்தை ஏற்படுத்தினால்.

இப்போது அவளுக்கு கிடைத்திருக்கும் மூன்று தோழிகளான கஸ்தூரி, சரஸ், சித்ரா இவர்களால் இவளின் யூகிக்கும் ஆற்றல் அடிக்கடி பரிசோதிக்கப்பட்டது. தேவி சொன்னார் போலவே விபத்துகள் நடந்தன....., சினிமா படங்கள் வெற்றியும் தோல்வியும் அடைந்தன...... வகுப்பிலும் பரிட்சைக்கு வரப்போகும் கேள்விகளையும் முன்குட்டியே யூகித்து அதைமட்டும் படித்து இவளும் இவளின் தோழிகளும் நல்ல புள்ளிகள் பெற்றனர்.

இவர்களில் “அலாவுதின்” தேவிக்கு வந்தது ஆபத்து.அது யூகிக்கும் சக்தி இல்லை. அபூர்வ சக்தி..! என அவள் தெரிந்துக் கொண்ட அந்த நள்ளிரவு நேரத்தில்.

வழக்கமான நிகழ்வில் வழக்கத்திற்கு மாறாக நடக்கப்போகும் சம்பவம் தேவிக்கு தெரிந்ததோ என்னமோ..? அவள்.....

“என்னடி உங்களுக்கு தெரியாதா.. இன்னுமா நம்பிக்கை வரல..?”
“நம்பிக்கை இல்லாமலில்லை.. சும்மாதான் பார்ப்போமே, நீதானே சொன்ன இது யூகிக்கும் சக்தி இல்லை ஏதோ.......”
என சரஸ் முடிக்கும் முன்பு , சித்ராவும் கஸ்தூரியும்
“அபூர்வ சக்தி...!”
என ஒருசேர கோஷம் போட்டனர்.
“உங்களுக்கு இது ஒரு விளையாட்டா இருக்கா...? இந்த அபூர்வ சக்தியால நான் படும் கஷ்டம் எனக்குதானே தெரியும் அந்த வயசில அம்மா வைச்ச தழும்பு முதல் இப்பவரைக்கும்”
இவ்வாரு பேசிய தேவி சமையல் அறையிலிருந்து வரவேற்பறைக்கு நடக்க, தோழிகள் மூவறும் அவளைப் பின் தொடர்ந்தார்கள்.
தேவியை அவ்வப்போது இயக்கிய அந்த அபூர்வ சக்தி இன்று தன்னை முழுமையாக வெளிப்படுத்தபோவது தெரிந்திருந்தால், மூவறும் தேவியை பின் தொடர்ந்திருக்கமாட்டார்கள் போலும்.


................................................................................................................

வரவேற்பறையில், அபூர்வ சக்தியால் தேவிக்கு அப்படி என்னதான் கஷ்டம் என கேட்க ஆரம்பித்தவர்கள் இந்த சக்தியால் தாங்கள் பெற்ற நன்மைகள் பற்றியும் பேசப்பேச வினோதமாக இருட்ட ஆரம்பித்தது. வீட்டில் ‘மின்சாரத்தடை’ ஏற்பட விளக்குகள் ஒத்திகைப் பார்க்கத்தொடங்கியது மூவறுக்கும் உடல் ரோமக்கள் உணர்ச்சியைக் காட்டத்தொடங்கின. அந்நேரம்தான் அபூர்வ சக்தி தேவியை முழுமையாக ஆட்கொள்ள ஆரம்பித்தது.

இருக்கும் களேபரம் போததென்று, தேவியின் உடல் மின்சாரம் தாக்கப்பட்டது போல அதிர்ந்தது. கருவிழிகள் இருக்க வேண்டிய இடத்தை வெள்ளையாக ஏதோ ஒன்று நிறப்பிக்கிகொண்டிருப்பதை மூவறும் பார்க்காதவரை இதயத்துடிப்புக்கு வேலை இன்னும் அதிகரிக்காது.
நால்வரும் ஒரு மையப்புள்ளிக்கு வரத்தொடங்கினர். தேவி மட்டும் ஏனோ கஸ்தூரியில் அருகிள் வந்ததும் அவள் மிது மயங்கி விழுந்தால். விழுந்தது அவளா..?

அபூர்வசக்தியால் அவள் இன்னமும், மின்சாரத்தால் தாக்கப்பட்டவள் போல அதிர்ந்துக்கொண்டிடுந்தால்.
கஸ்தூரி தேவியை மடியில் படுக்கவைக்கவும் ,இதுவரை கண்ணாமூச்சி காட்டிய விளக்குகள் ஓய்வு பெற்றன. இருக்கும் அறைகுறை இருட்டு போதாதென்று இன்னும் இருட்டு, உரிமை எடுத்துக்கொண்டது.
சரஸ்,
“ பயப்படாதிங்க.. பயப்படாதிங்க.. ஒன்னுமில்லை கஸ்தூரி தலையை ஆட்டாமா புடிச்சிக்கோ. சித்ரா நான் போய் தண்ணி கொண்டுவறேன் நீயும் தேவி காலை கெட்டியா புடிச்சிக்கோ..”
என அவசர அவசரமாக சமையலறைக்கு சென்றாள்.

(சென்றாள் என்பது ‘இறந்த காலத்தைதானே’ குறிக்கும்..?)

கஸ்தூரி, தேவியின் தலையை ஆடாமல் பிடித்தாலும் அவளால் அதன் ஆட்டத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை, சித்ராவுக்கும் இதே நிலைதான். தண்ணீர் கொண்டுவர சென்ற சரஸ் இன்னும் வருவதாயில்லை.
“சரஸ்..சரஸ்”
இருவரும் ஒருசேர சத்தமாக அழைக்கவும், இதுவரை சுவரில் நல்ல பிள்ளையாக ‘இருத்தல்’ செய்த சுவர் கடிகாரம் கீழே விழுந்து உடைந்தது. தேவியின் உடல் எடை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிப்பதை உணரத்தொடங்கினாள் கஸ்தூரி.
மீண்டும் பயந்த மொழியால்;
“சரஸ்..சரஸ்”
என கத்த, உள்ளிருந்தா இல்லை வெளியிருந்தா என யூகிக்க முடியாத இனம் கண்டுகொள்ளா ஒரு குரல் கேட்டது,
“அவ வரமாட்டா..! அவ வரமாட்டா...!”
சித்ரா,
“தேவி தேவி.. என்ன பேசற.. உனக்கு என்ன ஆச்சி.. ஐயோ கடவுளே..”
கஸ்தூரி,
“தேவி தேவி.. ”
என அவளை குலுக்கிய குலுக்கலில் அதிர்ஸ்டம் இல்லைதான். அவள் தெளியவில்லை.
சரஸின் குரல் கேட்பதாக சொல்லி, சித்ரா சமையலறைக்கு ஓடவும் சட்டென மின்னல் போல் தோன்றிய வெளிச்சத்தில் தேவியின் கண்ணை கவனித்தாள் கஸ்தூரி.
!!!!!!!
ஏது செய்வதென்று தெரியாத அவள் , மடியில் வைத்திருந்த தெவியை தன்னால் இயன்ற பலத்தைப் பயன்படுத்தி தள்ளிவிட்டு எழுந்தாள். இவளுக்காகவே திறக்கப்பட்டது போல் , வாசற்கதவு திறந்து, அழைத்தது. எங்கே.?


..........................................................................................................


நிலைமை இன்னும் மோசமாகப் போவதாக உணர்ந்து விட்டதால், கஸ்தூரி திறந்த கதவின் அழைப்பை ஏற்று வேளியில் ஓட தொடங்கினாள். அவளின் நினைவில் ஏனோ சரஸ்,சித்ரா அழிக்கப்பட்டிருந்தார்கள். ஓட்டம் எடுத்தவளுக்கு வழிகாட்ட அந்த கும்மிருட்டில் மின்னல் வெட்டத் தொடங்கியது மறுபடியும்.

வாசலை நெருங்க இன்னும் சில அடிகளே இருக்க கணிக்கமுடியாதா ஒரு தடுப்பு அவளில் காலை தடுக்கியது. விழுந்தவள் திரும்பிப் பார்க்கவும் மின்னலில் ஒத்துழைப்பிலும் அவளுக்கு தெரிந்தது ஒரு உருவம். அதும் ரத்தவெள்ளத்தில். கஸ்தூரியால் எதிர்ப்பார்க்கமுடியவில்லை..!
அவளா..அதுவா..?

.................................................................................................................

அலுவலக மதிய உணவு நேரம்.

“எங்க அது யாரு சொல்லு ..? ம்.. பவானி என்னமோ ரொம்ப பேசனையே கதையோட முடிவை சொல்லேன் பார்க்கறேன்..?”
மணியின் அலுவலக இடைவேளை கலாட்டா இது. புதிது புதிதாக கதை சொல்லும் இவன் முடிவை மட்டும் சொல்லாமல் குழப்புவான் இருந்தும் இவனது தோழி கோமதி முதல், தோழர்கள் பல பேர்வரை இதைத்தான் விரும்புவார்கள்.

“என்ன மணி நீ, எப்பவும் சொல்றமாதிரி இல்லாம ஏதோ அபூர்வ சக்தின்னு ஆரம்பிச்சி அங்கங்க கொஞ்சம் எங்களை குழப்பிவிட்டு இப்படி எங்களை கேக்கறது உனக்கே ஞாயமா இருக்கா சொல்லு..?”
என்று அதிகமாகவே அலுத்துக் கொண்டாள்.இவளே இபப்டியென்றால் மற்ற நண்பர்கள் கேட்கவா வேண்டும். எப்படியும் கதையின் முடிவை மணி சொல்லிவிடுவது இவர்களுக்கு தெரியும், இருந்தும் தாங்களும் தங்கள் திறமையைக் காட்டி கதையைத் தொடர்வார்கள். ஆனால் இந்த கதையின் முடிவை அவர்களால் சொல்ல முடியவில்லை. சொல்ல முடியவில்லையா..? சொல்ல விடவில்லையா.?

உணவு நேரம் முடிந்தது.

மதியம், வீட்டுக்குத் திரும்பும் சமையம், மணியின் மோட்டாரை வழிமறைத்து கோமதி,

“என்னடா நீ கதையை சொல்லமாலே போகப்போறயா..? எனக்கு தலையே வலிக்குது சொல்லுடா..? ”
“எதை சொல்லட்டும்”
“அந்த கதையின் முடிவையும் அப்பறம்...” முடிக்காமல் இழுத்தாள்.
“அப்பறம் ?”
“ம் அந்த மாதிரி அபூர்வ சக்தி ஏதும் உண்மையிலேயே இருக்கா. நீ சொல்றதைப் பார்த்தா உண்மை மாதிரி இருக்கு..!”
ஏதோ யோசித்தவாய் மணி,
“சொன்னா பயப் படமாட்டியே”
“சொல்லேன்”
“அந்த அபூர்வ சக்தி இருக்கு. அது எங்க இருக்கு தெரியுமா..?”
“எங்க மணி இருக்கு..”
“அதுகிட்டதான் பேசறே கோமதி”
“...!...”

மேற்கொண்டு பதில் எதும் சொல்லாமல் மோட்டாரில் புறப்பட்டான். இப்போதே இரவு மணி ஏழு, வீட்டிற்கு போவதற்குள் எட்டாகிவிடும்.
மோட்டாரில் பயணித்துக் கொண்டே எண்ணங்களின் பின்னால் பயணிக்கலானான்.
என்ன கதை இது. யார் அந்த தேவி. அது என்ன அபூர்வ சக்தி. இந்த மாதிரி கதையை நான் சொன்னதே இல்லையே. நினைச்சது கூட இல்லையே.அப்பறம் எனக்கு எப்படி இந்த கதையை சொல்லமுடிந்தது. அபூர்வ சக்தி..! .அபூர்வ சக்தி..! அப்படின்னா..?

குழப்பத்தில், தலையே வலித்தது மணிக்கு. இன்னமும் வீட்டுக்கு போக நேரமாகும், அருகில் இருக்கும் பேருந்து நிலையத்தில் தன்னையறியாமலே நிறுத்தி, யாருக்கோ காத்திருக்கத் தொடங்கினான்.
அபூர்வ சக்தி...அபூர்வ சக்தி... என மனதில் சொன்னதையே திரும்ப திரும்ப சொல்லி சரிபார்த்தான். அவனது இருக்கையின் அருகில் பாட்டுச் சத்தம் கேட்க, கவனித்ததும் தெரிந்தது ஒலியும் ஒளியும் கூடிய கைபேசி. சுற்றிலும் பார்வையிட்டான் யாரும் தெரிவதாக இல்லை. கைபேசியை எடுத்து பேசத்தொடங்கினான்.
“ஹலோ..”
மறுமுனையில் பதட்டமாக,
“ஹ..ஹா..லோ யாரு பேசறா..? ”
“நான் மணி பேசறேன் நீங்க..?”
“இது..இது என்னோட போன் தான் . நான்தான் தொலைச்சிட்டேன். இப்போ எங்க இருக்கிங்க. சொல்லுங்க pls நானே வரேன்..”

மணிக்கு வேறு வழி தெரியவில்லை. இரவு மேலும் இருட்டத் தொடங்கியது.
“ம்..சரி சீக்கிரம் வாங்க செர்டாங் பேருந்து நிக்குமே அங்கதான் இருக்கேன்”
“ஓ அங்கயா.. அங்கதான் பஸ் ஏறினேன். சரிங்க என்னை வர சொல்லிட்டு நீங்க காணாபோயிட மாட்டிங்களே..?”
“இங்க பாருங்க, இது ஒன்னும் விலை அதிகமுல்ல போன் இல்லை. நான் எடுத்து வெளியே விக்கறதுக்கு...என்னுடைய போன் இதிவிட விலை அதிகம். வாங்க காட்டறேன்.”
“மன்னிச்சிடுங்க...மன்னிச்சிடுங்க.. இதோ இப்பவே வரேன்”
“வாங்க, ஆமா உங்கள் பேரு ”
“ம்.. என் பேரு தேவி”
தேவி......!!!
“தேவியா,...?”
மணியின் ஆச்சர்யத்திற்கு அர்த்தம் உள்ளது. தேவி, இவன் கதையில் வந்தவள்தானே.! அந்த கதையே எப்படி எழுதினேன் என குழம்பும் மணிக்கு இவளின் வருகை எதனைக் குறிக்கும்.அந்த அபூர்வ சக்தி இவளுக்குதானே இருந்ததாக மணி சொன்னால்.

மணி, தன் கைகடிகாரத்தைப் பார்த்தான் இரவு மணி ஏழு முப்பது என காட்டியது. இப்படியே அவன் பார்த்த மூன்று முறையும் மணி ஏழு முப்பதையே காட்டியதை அவன் இன்னமும் அறியவில்லை. நேரம் ஆக,ஆக இருட்டும் தன் பணியை விட்டு விலகி பனிக்கு இடம்விட்டது. அதிகாலை வெள்ளைப்பனி மணியின் உடலை குளிரவைத்ததும்தாம் உணர்ந்தான் விடியப்போவதாய்.

தான் ஏன் இங்கே.? யாருக்காக காத்திருக்கின்றேன்..? என அநாவசியமான எண்ணங்கள் அவனுக்கு தலைசுத்ததலை கொடுக்க எழுந்து அருகில் இருக்கும் மோட்டார் வாகனத்தை எடுக்க நடந்தான்.

மணி எடுத்து வைத்த இரண்டாவது அடியில் ஸ்தம்பித்து நின்றான்.
“பெரிய”.. விபத்து. ஒரு தொழிற்சாலை வாகனமும் இரண்டு கார்களும். அந்த வாகனங்களுக்கு அடியில் மணியின் மோட்டர் வாகனமும் அதில் இரத்தவெள்ளத்தில் அடையாளம் சொல்ல முடியாத உருவமும்.

மணிக்கு கண்கள் இருண்டன. தன்னை சுற்றி இதுவரை இருந்த பனிமூட்டம் புகையாக மாறி அவனை சுவாசிக்க கஷ்டப்பட்டுத்தின.
ஆட்கள் கூட ஆரம்பித்தனர் மருத்துவ வண்டிக்கும் சொல்லியாகிவிட்டது.
மணியை யாரும் கவனித்ததாக தெரியவில்லை. தன் மோட்டார் வாகனத்தின் அடியில் இரத்தவெள்ளத்தில் கிடப்பவர் யார் என எட்டிப்பார்க்க முயன்ற மணியின் முதுகை ஒரு மெல்லிய கை பட்டது.
“பதட்டப்படாதே , நான்தான் தேவி வந்திருக்கேன்”
“இல்லை இல்....லை யார் நீ”
அதிர்îசியில் நாக்கு மொழிபேச தடுமாறியது.
“பயப்படாதே. நான் தேவி. எங்க என்னோட ‘போன்’ கொடு. இனி உனக்கும் இங்க வேலை இல்லை வா போகலாம்.....”

இருவரின் கால்களும் பூமியில் படாமல் அரையடி மேல் மிதந்தது..! மன்னிக்கவும் மிதந்ததன.
...........தயாஜி வெள்ளைரோஜா...........

மார்ச் 27, 2010

சிறுகதை



உன்னை அறிந்தால் நீ..........

வணக்கம்ங்க.. என் பேரு... உங்களுக்கு அநாவசியமான ஒன்னுதான். இருந்தும் என்னோட பெயரா இல்லாத ஒரு பெயரை என் பெயரா சொன்றேங்க.. நான் தோட்டப் புறத்தில் பிறந்து வாழ்ந்தாலும்ங்க கல்யாணம் ஆன பின்னால தோட்டத்தை விட்டு வந்துட்டோம்ங்க. என்னதான் தோட்டத்தைவிட்டு வந்தாலும்ங்க அங்க நாங்க பேசிவந்த ‘வாங்க’ ‘போங்க’-வை மட்டும் ரொம்ப நாளா விட முடியலைங்க. எனக்குள்ள தன்னம்பிக்கை குறைவா இருப்பதுதான் இதுக்கு காரணம்னு என் மனைவி சொன்ன பின்னாலதான்ங்க அதைப் பத்தி நானும் யோசிச்சேங்க .அதும், ஒரு வகையில உண்மைதான்ங்க. என்னால எல்லார்கிட்டயும் தைரியமா பேச முடியாதுங்க. கடைக்கு போனாலும் என்ன சாப்டுன்னு ரொம்ப நேரம் யோசிச்சி என்ன சொல்றதுன்னு தெரியாம முழிப்பேன்ங்க.


இப்படியே இருந்தா நல்லதில்லைன்னு யாரோ சொல்ல.. என்னோட மனைவியும் எனக்கு தன்னம்பிக்கை வரனும்னு அப்படி இப்படின்னு யோசிச்சாங்க.அப்பறம் ஒரு நாள் ஏதோ தன்முனைப்பு பயிற்சி இருக்கு வாங்கன்னு கூப்டுப் போனாங்க. நானும் பின்னாலேயேதாங்க போனேன்.


பணம்கூட என்னோட மனைவிதாங்க கட்டினா.. ஏன்னா அதிகாரமே அவங்ககிட்டதானே இருக்கு. இருக்கட்டும்ங்க...! எப்படியும் இந்த தன்முனைப்பு நிகழ்ச்சியில கலந்து தன்னம்பிக்கையை வளர்த்து அப்பறமா இவங்களை கவனிக்கலாம்னு எண்ணம் இல்லாமல் இல்லை. என் பக்கதிலதாங்க என் மனைவியும் இருந்தாங்க. ரெண்டு மூணு பேரு எல்லார்கிட்டயும் வந்து என்னமோ கேட்டு கையில இருந்த புத்தகத்துல குறிச்சி வைச்சிக்கிட்டாங்க.


என்கிட்ட வந்தவுடன் எனக்கு கையும் ஓடலை காலும் ஓடலங்க.. என் மனைவிதான் அவங்ககிட்ட பேசினாங்க. அவங்களும் என்னைப் பார்த்து சிரிச்சிட்டு எல்லாம் சரியாகிடும்ன்னு சொன்னாங்க.. என் பின்னால பார்த்தா எண்ண முடிஞ்ச அளவுக்கு சில தலைங்க இருக்குங்க.. எங்க எல்லார்க்கும் கையில் ஒரு சின்ன புத்தகமும் ஒரு பேனாவும் கொடுத்தாங்க.. இன்னும் கொஞ்ச நேரத்தில பேசக்கூடியவர் வருவாராம். அதுக்குள்ள ஒருத்தரு எங்க முன்னால நின்னு அவரு வந்த பிறகு நாங்க என்ன செய்யனும் ஏது செய்யனும்ன்னு சொன்னாருங்க. அவரு பேச ஆரம்பிச்ச பிறகு யாரும் பேசக்கூடாதாம். நாம அவரைப்பத்தி மனசுல என்ன நெனைச்சாலும் அவருக்கு தெரிஞ்சிடுமாம். பத்திங்கலா கேக்கற உங்களுக்கே இப்படி இருக்கே எதிருலே இருக்குற என்னோட நிலைமையைப் பத்தி கொஞ்சம் நெனைச்சிப் பாருங்க..


கறுப்பாவும் இல்லாம வெளுப்பாவும் இல்லாம ஒருத்தரு மேடைக்கு வந்து நின்னு “அனைவருக்கும் வணக்கம்” அப்படின்னு எம்.ஜி.ஆர் படத்துல வில்லன்ங்க பேசுவாங்களே அதே மாதிரி பேசனாருங்க.. ஆனா ஒன்னுங்க, அவரு பேசப்பேச எனக்குள்ள ஏதோ வந்த மாதிரிதான் இருந்ததுங்க. நம்மை சுத்தி எப்பவும் என்னமோ வட்டமா ஒன்னு இருக்குமாமே அந்த பேர்கூட சொன்னாருங்க ஞாபகம் வரமாட்டுதுங்க. அவரு பேசினதுல இருந்து அவரு சாதாரண ஆள் இல்லைனு தெரிஞ்சதுங்க. பேச்சிக்கு இடையில அவரு என்னை கவனிச்சது என்னமோ உண்மைதாங்க.சுமார் ரெண்டு மணிநேரம் அவரு பேசினாருங்க. அப்பறம் அடுத்தவாரம் வரச் சொன்னாருங்க. கிளம்பும் போது கவனிச்சா வந்த எல்லார் முகத்திலும் என்னமோ “நமிதா” வீட்டு அட்ரஸ் கிடைச்ச ஒரு சந்தோஷம்ங்க..


என் மனைவி சொன்னப் பின்னாலதான் தெரியும் அடுத்த வாரமும் வரனுமாம். அப்பதான் இந்த ஒரு வாரம் கிடைச்ச மாற்றங்களைப் பத்தி எல்லாரும் மேடையில் ஏறி பேசனுமாம்.


அவர் அந்த ரெண்டு மணிநேரத்தில் என்ன பேசினாருன்னு, நான் முழுசா உங்ககிட்ட சொல்லகூடாதாம்.அவர்தான் சொன்னாருங்க. அதான் அதைப் பத்தி நான் ஒன்னும் பெரிசா சொல்லலைங்க. ஆனா பாருங்க, அவர் பேச்சில ரொம்ப நம்மலோட சிலை வழிபாடு அப்பறம் கிரகம், நட்சத்திரம் பத்தி ரொம்ப வந்தது. என்னமோ வெள்ளைக்காறனுக்கு பொறந்த மாதிரி அவரு பேசினது இருக்கே என்னன்னு சொல்லங்க..அட பாருங்களேன் எனக்கு தைரியம் வந்த மாதிரி இருக்குங்க. அட ஆமாங்க, இல்லைன்னா இப்படி அவரு சொல்லக் கூடாதுன்னு சொன்னதை உங்ககிட்ட சொல்லுவனா..?


ஒரே நாள்ல இந்த அளவு மாற்றம்னா இன்னும் ஆறு நாள் என்னென்ன நடக்கும்னு நெனைச்சா அதே எனக்கு புது தெம்பு வந்த மாதிரி இருக்குங்க. இன்னும் எதுக்குங்க “வாங்க” “போங்க” எல்லாம். நீங்களும் நானும் சரிசமம்தானே. என்ன சொல்றிங்க.


மூனாவது நாள் சாப்பாட்டுக் காடையில், கடைக்காரரு என்னை ஒரு மாதிரியா பாத்தாரு. அப்பறம் எப்பவும் அமைதியா சாப்ட்டு வர ஆளு நான். இன்னிக்கு சாப்பாடு, விலை அதிகம், ருசியும் இல்லைன்னு முகத்துக்கு நேரா புகார் கொடுத்தா அப்படிதானே பார்ப்பாரு. ஐந்தாவது நாள், வேலை செய்யும் இடத்திலும் அப்படித்தான் என் வேலையை முன்னர் செய்ததைக் காட்டிலும் இப்போது வேகமாகவும் சிறப்பாகவும் செய்கின்றேன் என மேலதிகாரிகள் சொல்கின்றார்கள்.

ஒரு வாரம் கழித்து நினைத்துப்பார்க்க முடியாத ஏதோ ஒரு நாள். இன்று காலை அலாரம் வைக்காமல் எழுந்து குளித்து தன்முனைப்பு பயற்சியாளர் சொல்லிக்கொடுத்தது போலவே கண்ணாடி முன் நின்று பிரார்த்தனை செய்தேன்.


முன்பை விட மனம் லேசாகியது. தொடர்ந்து ஒரு வாரம் இப்படி பிரார்த்தித்து வந்ததால் விரைவில் மனம் லேசாகத் தொடங்கிவிட்டது. ஆரம்பத்தில் கால் வலி முதல் முதுகு வலி வரை வந்து நான் பட்ட கஷ்டம் எனக்கு ‘மட்டும்தான்’ தெரியும். எல்லாவற்றையும் கடந்து வர அந்த தன்முனைப்பு பேச்சாளர்தான் காரணம்.அவருக்கு என் நன்றி எப்போதும் உண்டு. இந்த ஒரு வாரத்தில் எனக்கு ஏற்பட்ட மாற்றங்களை நினைக்கும் போது தன்முனைப்பு நிகழ்ச்சிகளுக்கு செல்வதால் இவ்வளவு நன்மைகளா..? என என்னை நானே கேட்டுக்கொள்கின்றேன். போன வாரம் வரை எதற்கெடுத்தாலும் பயந்து அடுத்தவர்களை சார்ந்து வாழ்ந்து வந்த நான் இந்த ஒரு வாராம் ஏற்பட்ட மாற்றங்களை எப்படிதான் ஏற்றுக்கொள்வது.


தெரியுமா..! எனக்கு தேவையான உணவுகளை நானே சமைக்கின்றேன்.என் துணிமணிகளை நானே துவைத்துக் காய வைக்கின்றேன். எல்லா நாளும் கண்ணாடி முன் பிரார்த்திகின்றேன். இரவில் உறங்கும் போதும் தனிமையின் சுகம் உணர்கின்றேன். இன்றுதான் அந்த தன்முனைப்புப் பயிற்சிக்கு நான் செல்ல வேண்டும். உங்களிடம் சொன்னது போல், எனக்கு ஏற்பட்ட மாற்றங்களை எல்லார் முன்னும் சொல்லி அவர்களுக்கு ஏற்பட்ட மாற்றங்களையும் பகிர்ந்துக் கொள்ள வேண்டும்.


புறப்படத் தொடங்கிவிட்டேன். தன்னம்பிக்கையோடு தனியேதான் செல்கின்றேன். அடடே.. என் மனைவியைப் பற்றி சொல்லவேயில்லையே. ம்..ம்...என்ன சொல்வது அவள்தான் அந்த தன்முனைப்பு பேச்சாளருடன் இருக்கின்றாளே..!

.....தயாஜி வெள்ளைரோஜா....

மார்ச் 10, 2010

நாங்களும்தான்.....

வாலு பசங்க........

மணி... எங்க... நம்ம சொன்ன நேரத்துக்கு வந்துட்டோம் மத்த ரெண்டு பேரும் இன்னும் வரக்காணோம்...?”
என ஆந்தன் கடிகாரத்தைப் பார்க்க,
“அங்க பாரு வராங்க... இதுக்குத்தான் ஓடாத கடிகாரத்தை கட்டாதேன்னு சொல்றோம். கேட்கமாட்ற...”
என்றவாரே கேலியாய் சிரித்தான் மணி. இருவரின் பார்வைக்கும் அந்த மூன்று பேரும் தெரிந்தார்கள். அவர்கள் வருவதற்குள், அவர்கள் அனைவரையும் பற்றிக் கொஞ்சம் தெரிந்துக் கொள்ளலாம்.

மணி. இவர் எழுத்தாளர் சுஜாதாவின் தீவிர ரசிகன். எங்கு சென்றாலும் கையில் ஒரு புத்தகம் நிச்சயம் இடம் பெறும். படிகப்பதற்கா என்பது அவரைத்தான் கேட்கவேண்டும்.
“பள்ளிப் பாட புத்தகங்களை, ஒருவேளை சுஜாதா எழுதியிருந்தால் இவனது படிப்பிற்கு நிகர் கண்ணாடிதான்.”
என இவனை விட்டுக்கொடுக்காமல் பேசுபவள் ஒருத்திதான். அவள் தேவி. அவளுக்கு, நமது கதையில் இடமில்லாததால், அவளைப் பற்றி வேறு கதையில் சொல்கின்றேனே..

அடுத்தவரை அறிமுகம் செய்ய, அவரது குடும்பத்தில் நடக்கும் ஒரு சம்பவத்தை சொல்கின்றேன்.
“ஆனந்து என்னடா செய்யற..? உன்னால குளிக்கும் போதாவது பாடாம குளிக்க முடியாதா...”
என்பதுதான் ஆனந்தன் அன்றாடம் வாங்கும் அர்ச்சனை. இப்போது இவரைப் பற்றி தெரிந்திருக்கும். பாடுவதாகச் சொல்லி அனைவரையும் கொஞ்சம் படுத்துவது இந்த வளரும் பாடகனின் தலையாயக் கடமை.
மணி, ஆனந்தன் பற்றி தெரிந்துக் கொண்டோம். மேலும் இருக்கும் இருவரை சொல்லத்தான் ஆசை அதற்குள் அவர்கள் கூட்டணி அமைத்துவிட்டார்கள். ஆதாலால் கதையோடு வாருங்கள் தானாகவே தெரிந்துக்கொள்ளலாம்.

மணியும் ஆனந்தனும் ஒருசேர,
“வாங்க...சூர்யா” என அழைக்கவும்,
“எது சூர்யாவா..??? இவரா..என்ன கொடுமை சார் இது”
இப்படி சொன்னவர் சூர்யா என தன்னை அழைக்க விரும்பிய தேவாவுடன் வந்துக்கொண்டிருக்கும் குமார்.
“உனக்கு ஏண்டா பொறாமை.. நான் என்ன, உன்னை போல தத்துவமா சொல்றேன்.. ஏதோ என் முகம் அப்படி இருக்குன்னு எல்லாம் கூப்டறங்க... ”

ஆனந்தன்,
“உன் முகமா..? போனமாசம் தனுஷ்னு சோன்னியே,,”
“அதுவா..எப்போ எந்த படம் வருதோ அப்போ இவர்தான் கதாநாயகன்..”
என மணி தொடர்ந்தான்.
“சரி, சரி, விடுங்க.. எதுக்கு நாம இங்க வந்திருக்கோம்னு சொல்றிங்கலா..?”
“என்ன சூர்யா, அடுத்த படத்துக்கு போகனுமா...ஜோடி யாரு நமிதாவா”
“இல்லைடா.. பரவை முணியம்மா..!!”
எல்லாரும் சிரிக்க,
“தோ.. பாரு மணி, ஆனந்தா.. என்னா சிரிப்பு உங்களுக்கு, பாக்கத்தானேப் போறிங்க நானும் நடிகனாகி தமன்னாக் கூட நடிக்கலை...”
உடனே குமார்,
“விடு சூர்யா...உன் அருமை தெரியலை நம்ம பசங்களுக்கு, ஆமா தமன்னான்னு சொன்னியே, யாரு உங்க பக்கத்துவீடா..?”
“டெய் நீயுமா...”
மீண்டும் சிரிக்கத் தொடங்கினர்.
விட்டால் இவர்கள் இப்படித்தான் தங்களுக்குள் கிண்டலும் கேளியும் செய்வார்கள். ஆனால் இதில் ஒவ்வொரு முறையும் பாதிபக்கப்படுவது என்னவோ தேவாதான். இருக்காதா, எத்தனை நடிகர்கள் நம்மை படுத்துகின்றார்கள். விடுங்கள் அனுபவிக்கட்டும்.
அப்புறம் நடிகனாகியப் பின் நம்ம என்ன இயக்குநர்கள் சொல்வதையே கேட்கப்போறதில்லை.அது வேற கதை..!.
இவர்களின் இன்றையக் கூட்டணிக்கு ஒரு காரணம் உண்டு. அதில் அபாயமும் உண்டு. இவர்களைப் பொருத்தவரை. ஊருக்கு அடங்காதவர்கள்,வீட்டிற்கும்தான். ஏதாவது செய்து தங்களுக்கு தாங்களே புகழ் சேர்க்க வேண்டியக் கட்டாயத்தில் இருக்கின்றார்கள்.
(இவர்களுக்கு இவர்களே புகழ் தேடினால்தான் உண்டு..!)
“கண்ணா புகழ் பொருள் பொண்ணு இதெல்லாம் நம்மைத் தேடிவரனும் நாம தேடிப்போகக் கூடாது..”
என வழக்கமாக தத்துவம் சொல்லிய குமாருக்கு மற்றவர்கள் பதிலாகக் கொடுத்த முறைப்பு மேலும் பேச விடாமல் தடுத்தது. எதையெதையோ பேசிக் கொண்டிருந்தவர்கள் கடைசியில் முடிவுக்கு வந்தார்கள். பெரிதாக ஒன்றும் முடிவு எடுக்கவில்லை. இங்கிருந்து அந்த காட்டுப் பகுதியில் இருக்கும் ஒரு வீட்டிற்கு சென்று வருவதுதான்.இதுதான் முடிவா என நினைக்கின்றவர்கள், அந்த வீட்டைப்பற்றி கண்டிப்பாகத் தெரிந்துக் கொள்ளவேண்டும்.
சில ஆண்டுகளுக்கு முன்பு, இங்கு ஒருவர் தூக்கில் தொங்கினாராம்.
(ஆளுக்காள் இப்படித்தான் சொல்றங்க, விசாரிச்சா யாருக்கும் முழுசா சொல்லத் தெரியலை.இது நமக்கு தெரிஞ்ச கதைதானே....!!!)
அன்று முதல் இன்று வரை இந்த காட்டு வழியாக யாரும் வருவதில்லை.
எப்படியாவது அந்த வீட்டிற்குச் சென்று தாங்கள் வீரர்கள் என எல்லாரும் புகழவேண்டும் என திட்டம் தீட்டப்பட்டு, நாள் குறிப்பிடப்பட்டது.மணி, ஆனந்தன், குமார் இவர்கள் மூவறும் குறிப்பிட்ட நாளில் தயாராகினார்கள்.
என்ன அந்த வருங்கால நடிகனைக் காணவில்லைனு பாக்கறிங்கலா..? அவருக்கு ஏதோ வேலையாம்.பயம்னு தப்பா எடுத்துக்காதிங்க என்ன..!

மூவறும் சொன்னார் போலவே ஒன்றுகூடினார்கள்.
அவரவர் கொண்டுவந்திருந்த பொருட்களை சரி பார்த்தனர்.

“என்ன மணி இங்கயுமா நீ சுஜாதா புத்தகத்தோடு வரனும். உன்னோட படிப்பு ஆர்வத்துக்கு அளவே இல்லையா..?”
“குமார்.இது ஒன்னும் தலைவர் புத்தகம் இல்லையாம். அங்க நடக்கிறதை குறிப்பு எடுத்து வைச்சிக்க கொண்டுவந்திருக்கும் புத்தகம் அவ்வளவுதான்.எல்லாம் தெரிஞ்ச மாதிரி பேசறதுக்கு குமாரு.. உன்னாலதான் முடியும், சரி நீ என்ன கொண்டுவந்தே..?”

“”ஒரு போத்தக் பெட்ரோலும் , தீப்பட்டியும் அப்பறம் கொஞ்சம் பழைய பேப்பரும்..”
“அதை வச்சி என்ன அந்த வீட்டில் இருக்கும் பேயை இங்லிஸ் படத்துல வர பேய் மாதிரி எறிக்கப் போறியா..? பார்த்துடா இது தமிழ் பேய் வேப்பிலைக்குதான் பயப்படும்..”
மணி சிரிக்கத் தொடங்கினான்.குமார் கோவமாக பேச ஆரம்பிக்கும் முன்பு, ஆனந்தன் தன் ஆயுதத்தை எடுத்தான்.

“இப்படி ஆளுக்கு ஆள் சண்டை போட்டிங்கனா , அப்பறம் நான் பாட ஆரம்பிச்சிடுவேன்..”
மணி, ஆனந்தன் ,
“அயயோ வேண்டாம் ராசா நாங்க சண்டைப் போடலை போதுமா. கிளம்பு போகலாம்.”


...........................................................................................

இன்னும் இரவாகவில்லை, அதற்குள் ஆள் நடமாற்றம் அற்ற அந்த வீட்டுக்கு கொஞ்ச தூரத்தில் மூவறும் வந்து சேர்ந்தனர். இந்த மூவறைத் தவிர இன்னொரு உருவம் இவர்களை கவினிப்பது இவர்களுக்குத் தெரியும்வரை ,யாரும் பயம் கொள்ளப்போவதில்லை.

“மணி என்னத்தைடா இப்படி அவசர அவசரமா எழுதற..”
பயப்படமால்தான் கேட்டான் ஆனந்தன்.
“அதுவா அங்க பாரு நமக்கு முன்னமே குமார் தைரியமா போறானே
அதைதான் குறிச்சி வைக்கிறேன்..”
“என்னடா சொல்ற”
“எப்படியும் முன்னுக்கு போய் அந்த பயந்தாங்கோழி பயந்து அழப்போகுது அதான்”
“மணி முன்னுக்கு போனது குமார்னா உன் பின்னாடி இருக்கிறது யாரு..?”
“யாரு..?”
“யாரா..? நீ சொன்ன பயந்தாங்கோழி”
“என்னது..!!!”

மூவறுக்கும் மிக அருகிள் ஏதோ சலசலப்பு. மூவறும் ஒருவர்போல ஒட்டிக்கொண்டு சலசலப்பு வந்த திசையை நோக்கினர். ஒரு கருத்த உருவம். இவர்கள் இருப்பதைக் கவனிக்காது நடந்து சென்றது. அந்த உருவத்திற்கு கால் இருக்கின்றதா இல்லையா என்பதை இவர்களுக்கு கவைக்க தோனவில்லை ஏனென்றால் தலையே இல்லையே!!!!!

.....................................................................................................

அந்த உருவம் நேரே அந்த வீட்டிற்குச் சென்றது. என்ன ஆச்சர்யம் கதவை ஊடுரிவி செல்ல வேண்டிய உருவம் தன் தலைமேல் போத்தியிருந்த கோணிப் பையிலிருந்து சாவி ஒன்றை எடுத்து கதவைத் திறந்தது. நமது வாலு பசங்களும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டு அந்த வீட்டில் நடப்பதை சற்று அருகில் சென்று கவனித்தனர்.
ஒற்றை உருவம் என இதுவரை தெரிந்தது இப்போது நான்கு உருவங்களாகத் தெரிந்தது. அதில் ஒரு உருவம் இலையில்லை அழகிய பெண் ஒருத்தி கட்டப்பட்டிருந்தாள்.
மற்ற மூவரில் ஒருவன் யாருடனோ மிரட்டல் கலந்தத் தோரணையில் பேசிக் கொண்டிருத்தார்கள். மற்றவர்கள் அவனுக்கு ஏதேதோ ஜாடை காட்டினர். சட்டென்று ஒருவனைக்காணவில்லை. எப்படி தெரிவான், அவன் தான் வெளியே இவர்ளுக்குப் பின்னால் வந்து நிற்கின்றானே..

...............................................................................................


நாற்காலிக்கு அருகில் இப்போது மணி, ஆனந்தன். குமார் என வாலு பசங்களும் கை கட்டப்பட்ட நிலையில் இருந்தனர்.
இவர்களையே முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்த ஒருவன் தன் சக நண்பனிடம்.
“இத பாரு ஆவி, பேய்னு எல்லாரையும் பயப்படுத்தினோம். இப்போ இந்த பசங்க வந்திருக்காங்கன்னா என்னா அர்த்தம்..?”
“பயம் கொஞ்சம் கொஞ்சமா குறையுதுன்னு அர்த்தம். இப்பவும் ஒன்னும் கெட்டுப்போகலை.. இவனுங்க மூனுபேரையும் கழுத்துல கயிறு கட்டி மரத்துல தொங்கவிட்டுடுவோம்..
“தொங்க விட்டுட்டா..?”
“என்ன புரியாத மாதிரி பேசறிங்க.. அப்படி இவனுங்களை தொங்கவிட்டுட்டா.. எலாரும் என்ன தெரியுமா சொல்லுவாங்க... ஆவி வீட்டுக்கு வந்தாங்க அதான் ஆவி பலிவாங்கிடுச்சின்னு சொல்லி இனி இந்த பக்கமே யாரும் வரமாட்டாங்க..”
“சரியா சொன்ன..”
நடக்கப்போகும் விபரீதத்தை, யூகிக்கமுடியாமல் மணி
“அண்ணே அப்படி செய்யாதிங்கண்ணா.. இன்னும் சுஜாதா புத்தகம் படிக்காம நெறைய இருக்கு..”
“நான் மட்டும் என்னவாம் . அண்ணா பெரியா பாடகனை இழந்துடாதிங்கண்ணே...”
“அண்ணே எப்படியும் சாகப்போறோம். அதுக்குள்ள இந்த நாற்காலியில இருக்கற பொண்ணு யாருன்னு சொன்னா நிம்மதியா சாவோம்..”

சட்டென்று மூவரின் முகமும் மாறியது.அதில் ஒருவன்,
“என்னடா விளையாடறிங்கலா.. உங்களைத் தவிர இங்க யாரு இருக்கா..?”
‘டுமீல்’
துப்பாக்கி சூடு.
வெளியில் இருந்து ஒரு குரல்.
“நாங்க உங்களைச் சுத்தி வளச்சிருக்கோம்.அந்த பசங்களுக்கு எதும் ஆககுடாது.”

..............................................................................................

அந்த வீட்டில் இருந்து போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.அந்த மூன்று நபர்களும் கைது செய்யப்பட்டனர். மணி, குமார், ஆனந்த ,
“சூர்யா எப்படிடா நீ அந்த இடத்துக்கு போலிசோட வந்தே..”
“ம்............ எத்தனைத் தமிழ் படம் பார்த்திருக்கோம்.இதை கூடவா கத்திருக்க மாட்டோம்”

குமார் தான் கொண்டு சென்ற பழைய நாளிதழ்களை எடுத்து மறுபடியும் மடித்துக் கொண்டிருக்கும்போது ஒரு புகைப்படத்தை கவனித்தான்.உடனே அந்த பக்கத்தை ஆனந்தனிடம் காட்டி ,
“ஆனந்தா இந்த பொண்ணைதானே நாம அங்க நாற்காலியில் பார்த்தோம். இந்த பொண்ணுக்கு கருமகிரியைன்னு வந்திருக்கு..”
ஆனந்தன், குமார் இவர்கள் இருவரைக் காட்டிலும் அதிகம் அதிர்ச்சிக்குள்ளானவன் சூர்யாதான்,

“என்னடா சொல்றிங்க.. இந்த பொண்ணுதாண்டா என்கிட்ட வந்து நீங்க அனுப்பினதா சொல்லி நீங்க ஆபத்துல இருக்கிங்கன்னு என்னையும் போலிசையும் அந்த வீட்டுக்குக் கூட்டிவந்திச்சி ......இந்த பொண்ணு இது..இது .. செத்துப்பொனப்பொண்ணா..எப்படிடா..?”

இவ்வாரு இவர்கள் தங்களுக்குள்ளாகவே கேள்விகளைக் கேட்டுக்கொண்டிருக்க மணி மட்டும் வேறு எங்கோ பார்த்துச் சிரித்துக் கொண்டிருந்தான்.
மணி பார்த்த இடத்தில் அந்த பெண் நின்று சிரித்துக் கொண்டிருந்தாள்.....





தயாஜி வெள்ளைரோஜா

பிப்ரவரி 02, 2010

பிம்பங்கள்....




அவளை அவ்வளவு சீக்கிரத்தில் நான் மறக்கவில்லை. எப்படி மறப்பது..? அவளால் ஏற்பட்ட வலிதான் இன்னமும் இருக்கிறதே. அதற்கான காரணக் காரியங்களைப் பற்றி இப்போ பேச வேண்டாம். அதற்கான நேரம் இதுவல்ல.

ஏன் , இந்த பேருந்து நிலையத்தில் அவள். அதும் குடைகூட இல்லாமல். இவ்வளவு சோர்வா..? என்னை அறியாமலே அவள் அருகில் சென்றேன். நான் பார்த்து பரவசமடைந்த அவளின் முகம் கலையிழந்து காணப்படுகின்றது.
ஏதோ விரக்தியால் தாக்கப்பட்டவள் போல காட்சியளித்தாள்.

தயங்கியப்படி நான்,

“ம்,.. நீங்க அனு..?” முடிப்பதற்குள்

“அட... மணி தானே, (புன்னகை) எப்படி இருக்கிங்க எங்க இப்படி..? என்ன செய்றிங்க..?”

இப்படி படபடவென வெடிப்பது, அவளின் இயல்பாக இருந்தாலும் இன்று அதனுள் இருக்கும் போலியை என்னால் உணரமுடிந்தது.

“என்னங்க பட்டாசு மாதிரி வெடிக்கறிங்க. இன்னும் என்னை ஞாபகம் வச்சிருக்கிங்கலே சந்தோஷம்... இங்க என்ன செய்யறிங்க கல்யாணம் ஆச்சின்னு கேள்விப்பட்டேன்”

“கல்யாணம் ஆச்சி ஆனா அகாத மாதிரி..!”

அவளது புதிர் பேச்சி எனக்கு புரியாம பொச்சி. அவளிடமே விளக்கம் கேட்டேன்.

“என்னங்க புதிர் போடறிங்க..?”

“இந்த வாங்க போங்க எல்லாம் எதுக்கு..? ஒரே வயசுதானே ஆகுது.அதும் இப்படி பெசறது ரொம்ப அன்னியமா கேக்குது.. மணி”

மணி. அவளின் உதடுகள் உச்சரித்த வார்த்தை. இதற்காக தவம் கிடந்தவனாயிற்றே நான். எனக்கு இவ்வளவு இனிமையான பெயர் வைத்த பெற்றோர்க்கு கோவில்தான் கட்டனும். என்ன இடிச்சுடுவாங்க..?

“சரி அனு. வா போன்னே பேசுவோம். நீ சொன்னது புரியலையே..!”

பதில் சொல்வதற்கு முன் அந்த மான் விழி சுற்றும் முற்றும் நோட்டமிட்டது.

“மணி வரியா நாம அங்க உட்காந்து பேசலாம். எதும் வேலை இருக்கா..?”

அடக்கடவுளே இன்னிக்குன்னு பார்த்து ரிப்போட் எடுக்க என்னை போகச் சொன்னாரு ஆசிரியர். சரி மத்த நிருபர் யார்கிட்டயாச்சும் தகவலையும் போட்டோவையும் வாங்கி கொடுத்துடலாம்.

“இல்லையே.. இன்னிக்கு அவசர வெலை ஏதும் இல்லை. வா...”

இருவரும், ஒன்றாக அவள் காட்டிய இடம் நோக்கி நகர்ந்தோம். பக்கத்தில் இரண்டு பெண்கள் குடைபிடித்தவண்ணம் எங்களை கைகாட்டு பேசுவதை கவனிக்கவில்லை. நான் ஏன் கவனித்தேன்..?
அமர்ந்தோம் கொஞ்சம் இ..டை..வே..ளி விட்டு.

“அப்பறம் மாறன் கல்யாணம் ஆகிடுச்சா..? என்ன வேலை செய்ற..?”

“இன்னும் இல்லை. பத்திரிக்கை நிருபரா இருக்கேன். சரி ஏதோ புதிர் போட்டு விடை சொல்லாமலிருக்கே.. என்ன சொல்லு. அதுக்குதானே இங்க வந்திருக்கோம்”


“அட ஆமா மணி, சொல்றேன். தெரியும்தானே நான் பாதியிலேயே நிறுத்தினது”

“ஆமாம்”

எனக்கு, படிவம் ஒன்றில் அறிமுகமானவள் அனு. ஆறாண்டுகள் தமிழ் பள்ளியில் படித்து திடிரென்று மலாய் பள்ளியில் புதிய முகங்களுக்கு மத்தியில் பிதுங்கிய கண்களுடன் அமர்ந்திருந்த சமயம். எனது வகுப்பில், எனக்கு ஆறுதலாய் இருந்த ஒரே தமிழ் பெண் அனுதான். அதையும் தாண்டி அவளிடம் ஏதோ ஒன்று இருந்தது உண்மை.
இல்லாவிட்டால் நான் கவிதையை எழுதியிருக்கவே மாட்டேன். அதும் மூன்றாவது நாளில்.....

வகுப்பு நேரம் முடியும் தருணம் எல்லோரும் எழுந்து நின்று ஆசிரியர்க்கு விடைகொடுத்து புத்தகப்பையை கையில் எடுத்தனர்.
அவசர அவசரமாக ஒரு தாளை கிழித்துக்
( கிழித்தது லிம் சிங் ஹோகின் புத்தகத்திலிருந்து அவனுக்கு தெரியாமல் ) கவிதை எழுதினேன்,
கவிதையான்னு தெரியலை அவளோட பெயரை மூணு தடவை எழுதினேன்.

அப்பறம்,சரியா ஞாபகம் இல்லை. காதலி என்னைக் காதலி என முடித்திருந்தேன்.
நண்பன் ஹில்மி உதவுவதாக சொல்லியும் அநாவசியம் எனக் கருதி நானே அவளிடம் சென்று கொடுத்து, படித்து நாளை பதில் சொல் என்றேன்.

மறுநாள் காலை பள்ளி தொடங்கும் நேரம். அறிமுகமான நண்பர்களுடன் என்னை அறிமுகப்படுத்திக் கொண்டிருந்தேன். மின்னலென அருகிள் வந்தாள் அனு. முதல் நாள் இரவு நான் தூங்காததை கண்டுக்கொள்ளாத வண்ணம் கடிதத்தை கொடுத்தாள். படித்துவிட்டாய் பதில் என்ன என்றேன்.

எனக்கு தமிழ் தெரியாது நான் மலாய் ஸ்கூல் என்றாள். சிரித்துக் கொண்டே கடித்தை வாங்கி. ஏதும் பேசாமல் வந்துவிட்டேன். என்னையே கவனித்த நண்பர்கள்.
அவள் கொடுத்த கடிதத்தைப் பற்றிக் கேட்டனர். கோவமான முகத்தை அவர்களிடம் காட்டி கையில் இருந்த கடிதத்தை; ‘கிழிகிழி’ன்னு கிழிச்சி குப்பைத் தொட்டியில் போட்டுட்டு,
சொன்னேன், பாருங்கடா ஸ்கூலுக்கு படிக்க வந்தா அந்த அனு லவ் லெட்டர் கொடுக்குது. சிரிக்கும் போதே தெரிந்துவிட்டது யாரும் நம்பவில்லை என.


“சரி மணி அப்படின்னா அதுக்கப்பறம் நடந்ததை சொல்லட்டா..?”

“சரி ”

“நான் படிக்கும்போது ஒருத்தனை காதலிச்சேன். என்னோட உயிரே அவந்தான்னு நெனச்சேன். அப்பா இல்லாத குறையை அவன் இல்லாம பார்த்துகிட்டான். என்னைப் பார்க்காம அவன இருக்க முடியாது. பள்ளி முடியும் சமயம் சரியா வந்து என்னைப் பார்ப்பான். அவன்கிட்ட பேசினா நேரம் போறதே தெரியாது மணி. நீ கூட பார்த்திருப்பே பள்ளி பின்னால் கேட் இருக்குமே அங்கதான் பேசுவோம்.”

“தெரியும். ஆனால் சரியா ஞாபகம் இல்லை. தேவியும் அதைப்பத்தி என் கிட்டா ஒரு முறை கேட்டப்போ தெரியாதுன்னு சொல்லிட்டேன். தேவிக்கு அவரை பார்த்தாலே பிடிக்கலைன்னு சொன்னா..”

“அம்மாவும் அப்படித்தான். அவரை பிடிக்கவேயில்லை. அப்பா இல்லாததால் சீக்கிரம் சம்மதம் வாங்கலாம்னு நெனைச்சோம். எதுவுமே நடக்கலை.அம்மா ஒத்த கால்ல நின்னாங்க..”

“அம்மான்னா அப்படிதானே அனு... முதலில் சம்பதிக்க மாட்டாங்க , அப்பறம் சரியாகிடும்”

“நானும் அப்படித்தான் நெனைச்சேன்..! ஆனா எல்லா நேரத்திலும் எல்லாமும் சரியா நடக்குன்னு என்ன எழுதியா இருக்கு..?”

அனுவின் இந்த வார்த்தை, அவள் விரக்தியின் விளிம்பில் இருப்பதை உணர்த்தியது. மேற்கொண்டு எதும் கேட்க வாய் வரவில்லை எனக்கு. அவளே தொடர்ந்தாள்.

“அப்படி நெனைச்சுதான் நாங்க கல்யாணம் செய்யலாம்னு கிளம்பிட்டோம்”

சொல்லி முடிக்கவும் , கண்ணில் நீர் கசியவும் சரியாக இருந்தது. அதை துடைக்க கைப்பையிலிருந்து கைக்குட்டையை எடுக்க ஏதோ பொட்டம் வெளிவந்து விழுந்தது. அதை எடுத்து கைப்பையில் வைத்தவள் என்னைப் பார்த்து கண்ணீருடன் அசட்டு சிரிப்பு சிரித்தாள். அந்த பொட்டலம் எனக்கு பழக்கமான பொட்டமாக இருந்தது. இருந்தும் ‘வெளிச்சத்தில்’ தெரியவில்லை..!!

“அனு, நீ எந்த நம்பிக்கையில இப்படி கிளம்புன..”

“என்ன செய்யறது ஒரு வருட பழக்கம். நாங்க பல இடங்களில் திருட்டுத்தனமா சந்திச்சாலும் அவன் அத்துமீறி நடந்ததில்லை. இப்படி இருக்க அவனை எப்படி நம்பாம இருக்கிறது..? ”

அனு தொடர்ந்தால்.

“நானும் அவனும், அவனோட நண்பர்கள் ரெண்டு பேரு முன்னுக்கு கல்யாணம் செய்துகிட்டோம். அவர் எனக்கு தாலி கட்டிணதை வீடியோகூட எடுத்தாங்க தெரியுமா..?”

“வீடியோவா..?”

“ஆமா, அவங்க கல்யாணத்துக்கு வீடியோ படம் எடுக்கறவங்கன்னு அவருதான் சொன்னாரு. ஒரு ரூம் முழுக்க வீடியோ, சீடிங்க, ரெண்டு கம்பியூட்டர் எல்லாம் இருக்கும். அது அவங்க வேலை செய்யற இடம். தூசி ரொம்ப இருக்கும்னு என்னை உள்ளே அனுமதிக்கலை. பெரும்பாலும் அந்த கதவு பூட்டியே இருக்கும்”

கொஞ்சம் பெரு மூச்சி விட்டவள், மீண்டும்.....

“நாம இப்படியே இருந்தா உங்க அம்மா நம்மை ஏத்துக்க மாட்டாங்க... நாம நம்ம குழந்தையோட அவங்க முன் போஉ நின்னா அவங்களோட கல் மனசு கறையும் அப்படி இப்படின்னு என்னை சம்மதிக்கவச்சாரு...”

“..................................”


அமையானவள் தொடர்ந்தாள்.



“மணி அன்னிக்கு ராத்திரி அவர் நடந்துகிட்ட முறை அவை ‘இதில்’ கைத்தேர்ந்தவர் போல இருந்தது, விளக்கை அடைக்காம என்னை பயன் படுத்தினார். கொஞ்ச நாள் கழிச்சி என் கிட்ட ‘விட்டமின்’ மருந்தை கொடுத்து உடம்புக்கு நல்லதுன்னு சொன்னாரு. நானும் சாப்டு படுத்தேன்”

எனக்கு அதன் காரணம் புரியவில்லை.

“என்ன அனு..... எதுக்கு அந்த மாத்திரை.?”

“ம்.... என் உடம்பு வீக்கா இருக்கு சொல்லி கொடுத்தாரு. சாப்டதும் தூக்கம் வந்திடும். தூங்கிட்டேன். மறுநாள் குளிக்குபோது என்னாலயே நம்ப முடியலை என் உடம்பு ஒரே வலி. அங்கங்க நகக்கீரல் வேற... ”
“ஐயோ! என்ன அச்சி,..?”

“தெரியலை . ஒரே குழப்பம். அப்பறம் மறுநாள், அந்த மருந்தை சாப்பிடாம தூக்கம் வந்தமாதிரி படுத்திருந்தேன். கதவு திறக்கும் சத்தம் கேட்டு அவருதான்னு நெனைச்சி எழுந்தேன்..ஆனா... ஆனா.. அது வேற யாரோ”

கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள்.

“நான் கத்தினேன். நான் நம்பி வந்தவனும் அவனோட கூட்டாளிங்களும் உள்ளே வந்தாங்க.... எனக்கு என்ன செய்யறதுன்னு தெரியலை என்னை தொடவந்த அந்த ஆளை தள்ளிவிட்டு ஓட பார்த்தேன். மத்தவங்க என்னை புடிச்சி ஆளாளுக்கு அறைஞ்சாங்க..... நான் மயங்கிட்டேன்”

என்னால் அடுத்து அனு சொல்லப்போகும் விசியத்தை யூகிக்க முடியாமல், முழித்தேன்.அதை புரிந்துக் கொண்டவள்,

“நீ மட்டுமில்லை மணி யாருமே யோசிச்சிப் பார்க்காத ஒன்னு நடந்தது. மயக்கம் தெளிஞ்சதும் என்னை கைகால் , வாய் பொத்தி டி.வி முன்னுக்கு உட்கார வச்சிருந்தாங்க. அதில் நான் பர்த்தது என்ன தெரியுமா..? கல்யாணம் செய்துகிட்டவன் கூட நான் இருந்த அந்த ராத்திரி முழுக்க படமாகியிருந்தது. அதுமட்டுமா..! அவனோட கூட்டாளிங்களும் என்னை அனுபவிச்சதை பார்த்தேன். அவங்க கொடுத்தது போதை மாத்திரை. திருட்டு வீசீடி விக்கிற கூட்டம் அதுன்னு அப்பதான் தெரிஞ்சது. அதும் அவங்ககிட்ட இப்படி ஏமாந்த பொண்ணுங்க ரொம்ப பேராம். அவங்க கூட்டி வரவங்ககூட நான் , .. நான் சம்பதிக்கலைனா இந்த படத்தை எல்லோருக்கும் அனுப்பிடுவாங்க. எங்க வீட்டில தெரிஞ்ச என்ன ஆகும்னு தெரியுமான்னு மிரட்டினாங்க...”

“அய்யோ அப்பறம்..”

“இதுதான் வாழ்க்கைன்னு ஆகிடுச்சி. கொஞ்ச நாள் அங்கயே இருந்து வரங்களுக்கெல்லாம் ஒரு நாள் மனைவியா இருந்து. இப்போ தனியாவே... தொழில்; செய்ய ஆரம்பிச்சாச்சி.”

“என்ன அனு இப்படி சொல்ற..?”

“வேற என்ன செய்ய சொல்ற மணி..?”

“உன் பழைய வாழ்க்கையை மறந்து புதுசா வாழலாமே..”

“எதை நான் மறந்தாலும் , இந்த சமூதாயம் மறக்குமா.. சொல்லு. இப்படிப்பட்ட பொண்ணுங்களை சமுதாயம் எப்படி பார்க்கும் தெரியுமா..”

“ஏன்”

“நீயும் நானும் பேசும்போது அங்க ரெண்டு பொண்ணுங்க நம்மை கைகாட்டி ஏன் கிசிகிசுத்தாங்க தெரியுமா..? அதைவிடு,
முன்ன பின்ன தெரியாத ஒருத்தன் வரான். வந்து ஒரு ராத்திரிக்கு என்ன விலை கேக்கறான்.. இவங்களுக்கெல்லாம் எப்படி தெரியும். சொல்லு..?”

பதில் தெரியாததால் அவளெ சொன்னாள்.

“ஆபாசப்படங்கிறது எல்லா இடத்துலும் சாதாரணமா கிடைக்குது. ஸ்கூல் பிள்ளைங்க கைபேசி முதல் பொம்பளைங்க எல்லோரும் பார்க்கறாங்க... என் படத்தையும் பார்த்திருப்பாங்க.. ம் (யோசித்து) நீ மட்டும் என்ன யோக்கியமா.. சொல்லு மணி..?”

அவளின் இந்த கேள்வி என்னை அறைந்தார்போல இருந்தது.
கலங்கிய கண்ணைத் துடைத்துக்கொண்டே,

“அப்படியே யாரும் என்னைப் பத்தி தெரிஞ்சி கல்யாணம் செஞ்சா.. என்ன ஆகும் தெரியுமா..?”

இதற்கும் அவளே பதில் தந்தாள்.

“ஒருத்தனுக்கு தாலி கட்டி எல்லோருக்கும் மனைவியா இடுக்கனும். என்னை கட்டிக்கிட்டவறோட அண்ணனோ , தம்பியோ, பக்கத்துவீடோ, சொந்தக்காரங்களோ அந்த படத்தைப் பார்த்தா என்னை சும்மாவா விடுவாங்க.. என்னா என்னை கட்டிக்கிட்டவருக்குதான் அவமானம்..அப்படி இல்லாட்டியும் பத்து வருடம் கழிச்சி என் மகளோ, மகனோ இதை பார்த்தா என்ன ஆகும்..”

அனு சொல்வதை என்னால் மறுக்க இயலவில்லை. அதனால்தான் என்னவோ இன்றளவும் பல தவறுகள் திருத்தம் காணாமல் இருக்கின்றன. இருந்தும் இதற்கு விதிவிலக்காக சில பிரமுகர்கள்..! இருக்கத்தான் செய்கின்றார்கள். அதைப்பற்றி நான் சொல்லப் போவதில்லை. அவளை விட்டு பிரியும் அந்த நொடி ஏன் சந்தித்தோம் என முள்ளாய் குத்தியது.

விடைபெறும் நேரம் மனம் சொன்னார் போல, ஐம்பது வெள்ளியைக் கொடுத்து,

“ஏதும் நெனைச்சிக்காத அனு , வச்சிக்கோ..!!”

“சீ..சீ.. உனக்கு காசு வாங்க மாட்டேன் வா.. எங்க போலாம்..”

“இல்லை… அனு அதுக்கில்லை. உனக்கு சாப்பாடு வாங்கிக்கொடுக்கனும்னு நெனைச்சேன். கொஞ்சம் வேலை இருக்கிறது இப்பதான் ஞாபகம் வந்தது. கிளம்பனும் அதான். கொடுத்தேன். சாப்டு. என்ன..”

“நீ கேட்டதே போதும். தப்பா இருந்தாலும் உழைக்காம வரக் காசு வேணாம்..”

பேருந்தும் வந்தது. ஏறினேன். பேருந்து புறப்பட்டது. பேருந்திலிருந்து அவளை எட்டிப் பார்த்தேன். யாரோ அவளுடன் பேசிக்கொண்டிதான். அவளும் தன் கைப்பையில் இருந்து எதையோக் காட்டி சிரித்தாள். பின்னர் இருவரும் என் கண்ணை விட்டு மறைந்தனர்.

நான் இறங்கவேண்டிய இடம் வந்ததும் இறங்கினேன். பழுதுப் பார்க்கக் கொடுத்த மோட்டாரை வாங்கிய போது என் கைபேசி அலறியது. நண்பன் கேசவன். அவசியமில்லாமல் அழைக்க மாட்டான்.

“சொல்லுடா”

“மணி என்ன வேலையா..?”

“இனிமேல்தான் போகனும் . ஏன்.?”


“சரி ராத்திரி ஒரு இடத்துக்குப் போறோம்.எங்கன்னு கேட்காதா... போன தடவை மாதிரி பிரச்சனை வராது.. அப்பறம் ஒரு வீடியோ க்கிலிப் அனுப்பறேன் பாரேன்.. சரி . ராத்திரி வந்திரு”

அவன் அனுப்பிய வீடியோ கைபேசியில் வந்தது. அதில் ஒருத்தி அவளைச்சுற்றி மூன்று முகம் தெரியாத ‘நிச்சயம்’ ஆண்கள். அவள்.. அவள்.. அனு என் அனு..

மயக்க நிலையில் அவள் முழுவதுமாய் ஆடை இழந்திருந்தாள். ஒருவர் பின் ஒருவர் அவளை நெருங்க..... நேற்றுவரை ஆபாசப்படத்தை, காமத்தோடு பார்த்தவன், இன்று கருணையோடு பார்க்கின்றேன்.

இப்படி வெளிவர இயலாத ‘அனு’க்கள் எத்தனைப் பேர் இருக்கின்றார்களோ...?



ஆக்கம்------- தயாஜி வெள்ளைரோஜா

ஜனவரி 30, 2010

மின்னல் fm-ல் 2010


எங்கள் (நமது)
மின்னல் குடும்பம்........


e



நம்ம குடும்பம் பெரிசுதான் போங்க....!!!





நேற்று நான் படித்த புத்தகங்கள் என்னை இங்கே சேர்த்தது..
இன்று நான் படிக்கும் புத்தகங்கள் என்ன எங்கே
சேர்க்கப் போகின்றது....

ஜனவரி 17, 2010

இரு சூப்பர் ஸ்டார்கள்

(இருவரும் என் பாதையை மாற்றியவர்கள் )
ப்ளாஷ்பேக்: ரஜினி – சுஜாதா சந்திப்பு
பாட்ஷா படம் வெளிவரவிருந்த சமயம்… எல்லா பத்திரிகைகளும் போட்டி போட்டுக் கொண்டு ரஜினியின் பேட்டிகளை வெளியிட விரும்பினார்கள்.
அவரே தேர்ந்தெடுத்து, குமுதம் ஆசிரியராக இருந்த அமரர் சுஜாதாவுக்கு மட்டும் பேட்டியளித்திருந்தார். 1995-ல் வெளிவந்தது.
கேள்விகள் ஒவ்வொன்றுக்கும் ரஜினி அன்று தந்த பதில்கள் அத்தனை ஷார்ப்…


இரண்டு வாரங்கள் வெளியான பெரிய பேட்டி அது. அதன் சில முக்கிய பகுதிகளை மட்டும் ஃப்ளாஷ்பேக் பகுதியின் முதல் கட்டுரையாகத் தருகிறோம்.
சுஜாதா: எங்கோ பஸ் கண்டக்டராக இருந்தவரை, தமிழ்நாட்டின் ஃபோக் ஹீரோவாக உயர்த்தியது விதியா, தெய்வச் செயலா?
ரஜினி: தெய்வச் செயல்தாங்க. அதோட என் முயற்சியும் தன்னம்பிக்கையும் இருந்தது. கடவுளே எல்லாம் பாத்துப்பார்னு விட்டிருந்தா, நான் இன்னும் கண்டக்டராவே இருந்திருப்பேன். அந்த சூழ்நிலையில ஒரு பத்திரமான உத்தியோகத்தை விட்டுட்டு தைரியமா சென்னைக்கு வந்து ஒரு வாசல்ல காத்திருந்தது என் முயற்சிதான்…
(சுஜாதா: ‘அதுபோல இன்னொரு முயற்சி செய்தால் என்ன ஆகும் என்று வியக்கத் தோன்றுகிறது!’)
சுஜாதா: அரசியல் ஈடுபாடு எப்படியிருக்கு?
ரஜினி: கொஞ்சம்கூட இல்லை. எதுக்காக அரசியல்? பணம் – புகழ், ஜனங்களுக்கு நல்லது செய்யணும்… இதுக்காகத்தானே? ஆண்டவன் புண்ணியத்துல எனக்கு பணம் புகழ் ரெண்டுமே இருக்கு. ஜனங்களுக்கு நல்லது செய்யணும்னா, இப்ப இருக்கிற அரசியல் நிலைமைல யாராலயுமே ஜனங்களுக்கு நல்லது செய்ய முடியாது. இது நல்லா தெரியும்போது எதுக்காக அரசியலுக்கு வரணும்…?
சுஜாதா: அரசியலுக்கு வந்தா உங்க கைக்கு சக்தி வாய்ந்த பதவி வருமில்லையா?
ரஜினி: தனி மனிதனால ஒண்ணுமே சாதிக்க முடியாது. எல்லாமே மாறணும். ஒட்டுமொத்தமா மாறணும். புதுவெள்ளம்னு சொல்றாங்க இல்லையா… அதுமாதிரி… எல்லாமே மாறணும். இப்ப இருக்கிற சிஸ்டம்ல யாராலயும் ஒண்ணுமே பண்ண முடியாது. மொத்தமா மாறினாத்தான் உண்டு.
சுஜாதா: ஏதாவது பண்ணனும்னு நினைச்சு வர்றவங்ககூட கொஞ்ச நாளில் மாறிடறாங்க இல்லையா? சீக்கிரத்தில் அந்த க்ளீன் இமேஜ் மறைஞ்சு போயிடுது…

ரஜினி: ஆமாம்… எம்ஜிஆரையே எடுத்துக்கங்க… வந்த முதல் ரெண்டு வருஷத்துல எப்படி இருந்தார்? அதுக்கப்புறம் அவராலயே ஒண்ணும் செய்ய முடியலயே…
சுஜாதா: சுத்தி இருக்கிறவங்க விடாம சாப்பிட்டுர்றாங்க இல்லையா?
ரஜினி: யெஸ்… என்னன்னா… கொஞ்சம் நல்ல பேர் எடுக்கலாம். ‘அவரை விட இவர் பெட்டர்’னு (சிரிக்கிறார்)… ஆனா அது பிரயோஜனம் இல்லையே…ஸிஸ்டம் மாறணும்.
சுஜாதா: நீங்க ஒரு சக்தி. உங்க படம் ரிலீஸ் ஆகலேன்னு ஒரு ரசிகர் தற்கொலை செஞ்சிகிட்டதாக் கூட படிச்சேன். ஆனா அந்த இல்யூஷன் உங்ககிட்ட இல்லேங்கிறது தெரியும். ‘உலகமே நம்மை விரும்புது’ங்கற இல்யூஷன் இல்லை. ஆனா ரசிகர்கள் உங்களை நெருக்கமா உணர்றாங்க. Larger than life image… ரசிகனோட சப்ஸ்டிட்யூட்டா இருக்கிற ஒரு பெரிய Motivatibe Force உங்களோடது இல்லையா…? ‘அவங்கள்ல ஒருத்தர் நீங்க’ன்ற இமேஜ் இருக்கே, அதை பாஸிடிவ்வா மாத்தலாமில்லையா? உங்க ரசிகர் மன்றங்கள்ல என்ன பண்றாங்க?
ரஜினி: நிறைய பண்றாங்க… நற்பணி பண்றாங்க. சமூக சேவை பண்றாங்க. கண்தானம், முதியோர் உதவி, ரத்த தானம், வெள்ள நிவாரணம் மாதிர பலதும் பண்றாங்க.
சுஜாதா: நீங்க சொல்றதை அப்படியே கேக்குறாங்களா?
ரஜினி: நிச்சயமா… அவங்க எல்லாருக்குமே, நான் ஏன் அரசியலுக்கு வரமாட்டேங்குறேன்னு ஒரு ஆசை இருக்கு. ஏன் தெளிவாச் சொல்ல மாட்டேங்குறேன்னு நினைக்கிறாங்க. ஆனா ஆரம்பத்துலேர்ந்து நான் சொல்லிக்கிட்டே வந்திருக்கேன், எனக்கு அரசியல்ல ஈடுபாடு கிடையாதுன்னு. அதுமட்டுமில்ல… நான் எதிர்காலத்தைப் பத்தி யோசிக்க மாட்டேன். இன்றைய தேதிதான் எனக்கு முக்கியம். ஏன்னா நாளைக்கு இதுதான் நடக்கும்னு யாராலயும் சொல்ல முடியாது. நாளைய சூப்பர் ஸ்டார் யாரு, வில்லன் யாருன்னு இப்ப யாருமே சொல்ல முடியாது (சிரிக்கிறார்). It is Unpredictable..
சுஜாதா: ரசிகர் மன்றங்களுக்குன்னு ஏதாவது கைட்லைன் கொடுத்திருக்கீங்களா?
ரஜினி: ஆமாம்… முதல்ல வீடு, அப்பா, அம்மா, பொண்டாட்டி, குழந்தைகள்… இவற்றைத்தான் கவனிக்கணும். அதுக்கு அப்புறம் ரசிகர் மன்றத்துக்கு வாங்கன்னு சொல்லியிருக்கேன்.
சுஜாதா: ஸ்டாருக்கும் நடிகருக்கும் வித்தியாசம் இருக்கிறது. ஸ்டார் நடிகரால சில வித்தியாசமான ரோல்களைப் பண்ண முடியாது. ஷாரூக்கான் மாதிரி நெகடிவ் ரோல்களைப் பண்ண முடியாது. கமல்கிட்ட அந்தத் திறமை இருக்கு. பாதி நடிகர், பாதி ஸ்டார் மாதிரி. அல்பசே்சினோ, ராபர்ட் டி நீரோ, டஸ்டின் ஹாஃப்மேன் மாதிரி ஸ்டார்களெல்லாம் ரொம்ப வித்தியாசமா கட்டுப்பாடுகள் இல்லாம நடிக்கிறாங்க. பெண் வேஷம் கூடப் பண்றாங்க. உங்களால அப்படி வித்தியாசமா பண்ண முடியாதா… அல்லது தயாரிப்பாளர்கள் விடமாட்டேங்கறாங்களா?
ரஜினி: இல்லை… நானே அந்த மாதிரி செய்ய விரும்பறதில்ல. ஏன்னா, இதுல பெரிய அளவுல பணம் இன்வால்வ் ஆகியிருக்கு. அதில நான் ரிஸ்க் எடுக்க விரும்பல. என் படம் பெயிலியரானா அதோட பாதிப்பு ரொம்பப் பேருக்கு இருக்கும். என் இமேஜுக்குத் தகுந்த படம் பண்றதுதான் எல்லோருக்கும் நல்லது.
சுஜாதா: உங்க பேர்தான் Selling point… இல்லையா?
ஜினி: யெஸ்… யெஸ்…
சுஜாதா: மணிரத்னம், பாராதிராஜா போன்ற டைரக்டர்ஸ் எல்லாம் உங்களை வெச்சு ஒரு பெரிய சக்ஸஸ் கொடுக்க முடியலையே… ஏன்? உங்க சூப்பர் ஸ்டார் இமேஜை அவங்க சரியா புரிஞ்சுக்கலையா? நீங்க என்ன நினைக்கிறீங்க? அது பரிசோதனை முயற்சியா?
ரஜினி: ரஜினிகாந்த் படம்னா ரசிகர்கள் சில விஷயங்களை எதிர்பார்ப்பாங்க. கிம்மிக்ஸ் மாதிரின்னு வெச்சுக்கங்க. இன்டலிஜென்ட் டைரக்டர்ஸ் அவங்களோட தனித்துவம் இருக்கணும்னு நினைக்கிறாங்க. இதான் குழப்பம். ஆனா தளபதி, It was really did well… but not as expected!
ஆமா… ரஜினி படமா, மணிரத்னம் படமான்னு ரசிகர்கள் குழம்பிட்டாங்க. ரசிகர்கள் விரும்பறதைக் கொடுக்கிறதுதான் நல்லது. அடுத்தவங்க பணத்தை வச்சிக்கிட்டு நான் எக்ஸ்பரிமெண்ட் பண்ண முடியாதில்லையா? That is why I don’t want to take risk.
சுஜாதா: ஆனா ரஜினி, இதுமாதிரி லிமிட்டேஷன் இருந்தாலும் பல டெக்னிக்கல் முன்னேற்றங்களை insist பண்ணலாமே. ஒரு ஸ்டாண்டார்டு இருக்கணும்னு வற்புறுத்த முடியுமே உங்களால!
ரஜினி: ஓயெஸ்… பண்றேன். அண்ணாமலை, வீரா படங்கள்ல டெக்னிக்கல் தரத்துல நிறைய கான்சன்ட்ரேட் பண்ணியிருக்கேன். ஆனா மணிரத்னம் அளவுக்கு முடியாது. It may take some time. புதுசா வர்றவங்க என் இமேஜை மாத்தணும்னு நினைக்கிறாங்க. ஃபைட் வேண்டாம்னு சொல்வாங்க. யூஷுவலா செய்யறதை செய்ய வேண்டாம்பாங்க. அதுக்கு ரஜினிகாந்த் தேவையில்லையே…வேற யாரையாவது வச்சிக்கலாமே!
சுஜாதா: பொதுவா சராசரி வாழ்க்கையில டென்ஷன் இருக்கு. உங்களுக்கு படம் ரிலீஸாகும்போது டென்ஷன் ஏற்படுமா?
ரஜினி: இருக்கும். ஒரு வாரம் வரை இருக்கும். ரெண்டாவது வாரத்துல படம் எப்படின்னு தெரிஞ்சிடும். முதல்வாரத்துல வர்ற விமர்சனங்கள் தெளிவா இல்லாம குழப்பும். அப்புறம் சுலபமா தெரிஞ்சிடும். யாருக்கும் போன் பண்ணிக்கூடக் கேட்க மாட்டேன்.
தொகுப்பு: தயாஜி வெள்ளைரோஜா

நன்றி "எஸ்எஸ்"www.envazhi.com/?tag=sujatha

ஜனவரி 09, 2010

படித்ததைப் பகிர்கின்றேன்


திருக்குர்ஆனும் நானும்...."

- சுஜாதா -

திருக்குர்ஆனுடன் என் முதல் பரிச்சயம் என் தந்தை மூலம் ஏற்பட்டது. அவருக்கு நான் நாலாயிர திவ்யப் பிரபந்தப் பாசுரங் களை பெங்களூரில் படித்துக் காட்டிக் கொண்டு இருக்கும்போது,
திடீரென்று 'குர்ஆன் படிக்கலாம், அதில் என்னதான் சொல்லியிருக்காங்கன்னு பார்க்கலாம்டா' என்றார். நான் உடனே புத்தகக் கடைக்குப் போய்,
'தி மீனிங் ஆஃப் தி க்ளோரியஸ் குர்ஆன்' என்ற ஆங்கிலப் புத்தகத்தை வாங்கி வந்தேன்.
சில நாள்கள் நாலாயிர திவ்யப் பிரபந்தத்தைத் தள்ளிப்போட்டு, திருக்குர்ஆன் முழுவதும் படித்தோம்.
அதில் சொல் லியிருக்கும் கடவுள் கருத்துகள் நம்மாழ்வாரின் திருவாய்மொழியில் இருப்பதைப்போல் உணர்ந்தோம்.
'வாழ்வுக்கான நடை முறைக் குறிப்புகளும்,
எவரும் ஒப்புக்கொள்ளும்படியாக இருக்கிறதே! எந்த நாட்டுக்கும், எந்தச் சமயத்துக்கும் ஆட்சேபம் இருக்க முடியாதே!
இதில் வெறுப்பதற்கு என்ன இருக்கிறது!' என்று வியந்தோம்.
அதன்பின், பல்வேறு சந்தர்ப்பங்களில் ஜாஃபர்தீன் போன்ற நண்பர்கள் அனுப்பிய புத்தகங்களைப் படித்து வந்திருக்கிறேன்.
இஸ்லாமிய ட்ரஸ்ட் நிறுவனம் வெளியிட்டிருக்கும் 'அண்ணல் நபிகளார் வாழ்வினிலே' போன்ற புத்தகங்கள் தெளிவாக எழுதப் பட்டுள்ளன.
மலேசியப் பிரதமர் டாக்டர் மஹாதீர் முஹம்மதின் சொற்பொழிவுகளின் தொகுப்பான 'இஸ்லாமியச் சிந்தனைகள்',
நவீன உலக த்தின் முற்போக்குக்கு இஸ்லாம் தடையல்ல என்பதைத் தெளிவாக உணர்த்துகிறது. குறிப்பாக,
இங்கிலாந்தின் ஆக்ஸ்ஃபோர்டு ஆய்வு மையத்தில் அவர் ஆற்றிய உரையில், இஸ்லாம் எப்படித் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டது
என்பதைச் சொல்லியிருக்கிறார்.
இந்தியர்கள் அனைவரும் தவறாமல் படிக்க வேண்டும்.
எல்லா மதங்களும் நல்லதைத்தான் சொல்கின்றன. அவைகளின் ஆதார வார்த்தைகளில் பழுதில்லை.

அவற்றைக் கடைப்பிடிக் கும் மனிதர்களிடம்தான் வேறுபாடுகள் வளர்ந்திருக்கின்றன.இஸ்லாம் என்பதற்குக் கீழ்ப்படிதல், கட்டளைகளை நிறைவேற்றுதல் என்பது பொருளாகும்.
முழுமுதற் கடவுளாகிய அல்லாஹ் வுக்குக் கீழ்ப்படிந்து, அவனுடைய கட்டளைகளை நிறைவேற்றுதல். அந்தக் கட்டளை உணர நியமிக்கப்பட்ட இறைத் தூதர் தான் அண்ணல் நபி.
காளிதாசன் நாக்கில் சரஸ்வதி வந்ததும், அவன் சட்டென்று கவிபுனைய ஆரம்பித்தது போல, அண்ணல் குகையில் இருந்து வெளி வந்ததும் சொன்ன வசனங்கள் இறைவனின் வசனங்கள்.
அவற்றின் எளிமையும் நேரடியான தாக்கமும் பிரமிக்க வைக்கும்.'சிலைகள் உதவாதவை, அவற்றைக் கைவிடுங்கள்.
இந்த பூமி, இந்த நிலவு, கதிரவன், தாரகைகள், வானம், பூமியில் உள்ள சக்திகள் யாவும் ஒரே இறைவனின் படைப்புகள்.
அந்த இறைவனே உங்களையும் படைத்தான். அவனே உணவளிப்பவன். அவனே உயிரை வாங்கவோ, உயிரை அளிக்கவோ செய்கிறான். மற்ற அனைத்தையும் விடுத்து, அவனையே தொழுங்கள்!
''திடவிசும்பு எரி வளி நீர் நிலம்இவை மிசைபடர்பொருள் முழுதுமாய்அவைதொறும்உடல்மிசை உயிரெனக்கரந்தெங்கும் பரந்தனன்'- என்று நம்மாழ்வார் கூறியதும் அந்த இறைவனையே!
தற்பெருமை, கொடுமை, கோபம், பிறரைப் போல் பாவனை செய்தல், பிறர் துன்பத்தைக் கண்டு மகிழ்தல், பொய், கெட்டவற் றைப் பேசுதல்,
இரட்டை வேடம் போடுதல், புறம் பேசுதல், தகாத ஆதரவு, பாரபட்சம், பொருத்தமற்ற புகழ்ச்சி, பொய் சாட்சி அளித்தல், பரிகாசம், வாக்குறுதி மீறல், சண்டை சச்சரவு, வாக்குவாதம், குறை கூறல், ஆராயாமல் செய்திகளைப் பரப்புதல், பொறாமை, கெட்ட பார்வை இவைகளைத் தீயகுணங்களாகப் பட்டியலிடுகிறார் பெருமானார்.

கம்பீரம், நிதானம், எளிமை, தூய்மை, வணங்குவது, நாவடக்கம் போன்ற நல்ல குணங்களைக் கடைப்பிடிக்கச் சொல்கிறார்.
திருக்குர்ஆனை முதலில் இருந்து கடைசிவரை தேடிப் பார்த்தாலும், மற்றவர்பேரில் வெறுப்பை வளர்க்கும் வாசகங்கள் எதுவும் இல்லை.
பிரச்னை குர்ஆனில் இல்லை. நம்மிடம்தான்.
திறந்த மனதுடன் அதைப் படித்துப் பார்க்க விரும்பிய, என் கண்க ளைத் திறந்த என் தந்தையார் தீவிர வைணவர்
.'*****************


நன்றி: தினமணி, ரம்ஜான் மலர் - 2003/ சமரசம், மார்ச் 16-31 - 2008

தொகுப்பு தயாஜி வெள்ளைரோஜா

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்