பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

பிப்ரவரி 02, 2010

பிம்பங்கள்....




அவளை அவ்வளவு சீக்கிரத்தில் நான் மறக்கவில்லை. எப்படி மறப்பது..? அவளால் ஏற்பட்ட வலிதான் இன்னமும் இருக்கிறதே. அதற்கான காரணக் காரியங்களைப் பற்றி இப்போ பேச வேண்டாம். அதற்கான நேரம் இதுவல்ல.

ஏன் , இந்த பேருந்து நிலையத்தில் அவள். அதும் குடைகூட இல்லாமல். இவ்வளவு சோர்வா..? என்னை அறியாமலே அவள் அருகில் சென்றேன். நான் பார்த்து பரவசமடைந்த அவளின் முகம் கலையிழந்து காணப்படுகின்றது.
ஏதோ விரக்தியால் தாக்கப்பட்டவள் போல காட்சியளித்தாள்.

தயங்கியப்படி நான்,

“ம்,.. நீங்க அனு..?” முடிப்பதற்குள்

“அட... மணி தானே, (புன்னகை) எப்படி இருக்கிங்க எங்க இப்படி..? என்ன செய்றிங்க..?”

இப்படி படபடவென வெடிப்பது, அவளின் இயல்பாக இருந்தாலும் இன்று அதனுள் இருக்கும் போலியை என்னால் உணரமுடிந்தது.

“என்னங்க பட்டாசு மாதிரி வெடிக்கறிங்க. இன்னும் என்னை ஞாபகம் வச்சிருக்கிங்கலே சந்தோஷம்... இங்க என்ன செய்யறிங்க கல்யாணம் ஆச்சின்னு கேள்விப்பட்டேன்”

“கல்யாணம் ஆச்சி ஆனா அகாத மாதிரி..!”

அவளது புதிர் பேச்சி எனக்கு புரியாம பொச்சி. அவளிடமே விளக்கம் கேட்டேன்.

“என்னங்க புதிர் போடறிங்க..?”

“இந்த வாங்க போங்க எல்லாம் எதுக்கு..? ஒரே வயசுதானே ஆகுது.அதும் இப்படி பெசறது ரொம்ப அன்னியமா கேக்குது.. மணி”

மணி. அவளின் உதடுகள் உச்சரித்த வார்த்தை. இதற்காக தவம் கிடந்தவனாயிற்றே நான். எனக்கு இவ்வளவு இனிமையான பெயர் வைத்த பெற்றோர்க்கு கோவில்தான் கட்டனும். என்ன இடிச்சுடுவாங்க..?

“சரி அனு. வா போன்னே பேசுவோம். நீ சொன்னது புரியலையே..!”

பதில் சொல்வதற்கு முன் அந்த மான் விழி சுற்றும் முற்றும் நோட்டமிட்டது.

“மணி வரியா நாம அங்க உட்காந்து பேசலாம். எதும் வேலை இருக்கா..?”

அடக்கடவுளே இன்னிக்குன்னு பார்த்து ரிப்போட் எடுக்க என்னை போகச் சொன்னாரு ஆசிரியர். சரி மத்த நிருபர் யார்கிட்டயாச்சும் தகவலையும் போட்டோவையும் வாங்கி கொடுத்துடலாம்.

“இல்லையே.. இன்னிக்கு அவசர வெலை ஏதும் இல்லை. வா...”

இருவரும், ஒன்றாக அவள் காட்டிய இடம் நோக்கி நகர்ந்தோம். பக்கத்தில் இரண்டு பெண்கள் குடைபிடித்தவண்ணம் எங்களை கைகாட்டு பேசுவதை கவனிக்கவில்லை. நான் ஏன் கவனித்தேன்..?
அமர்ந்தோம் கொஞ்சம் இ..டை..வே..ளி விட்டு.

“அப்பறம் மாறன் கல்யாணம் ஆகிடுச்சா..? என்ன வேலை செய்ற..?”

“இன்னும் இல்லை. பத்திரிக்கை நிருபரா இருக்கேன். சரி ஏதோ புதிர் போட்டு விடை சொல்லாமலிருக்கே.. என்ன சொல்லு. அதுக்குதானே இங்க வந்திருக்கோம்”


“அட ஆமா மணி, சொல்றேன். தெரியும்தானே நான் பாதியிலேயே நிறுத்தினது”

“ஆமாம்”

எனக்கு, படிவம் ஒன்றில் அறிமுகமானவள் அனு. ஆறாண்டுகள் தமிழ் பள்ளியில் படித்து திடிரென்று மலாய் பள்ளியில் புதிய முகங்களுக்கு மத்தியில் பிதுங்கிய கண்களுடன் அமர்ந்திருந்த சமயம். எனது வகுப்பில், எனக்கு ஆறுதலாய் இருந்த ஒரே தமிழ் பெண் அனுதான். அதையும் தாண்டி அவளிடம் ஏதோ ஒன்று இருந்தது உண்மை.
இல்லாவிட்டால் நான் கவிதையை எழுதியிருக்கவே மாட்டேன். அதும் மூன்றாவது நாளில்.....

வகுப்பு நேரம் முடியும் தருணம் எல்லோரும் எழுந்து நின்று ஆசிரியர்க்கு விடைகொடுத்து புத்தகப்பையை கையில் எடுத்தனர்.
அவசர அவசரமாக ஒரு தாளை கிழித்துக்
( கிழித்தது லிம் சிங் ஹோகின் புத்தகத்திலிருந்து அவனுக்கு தெரியாமல் ) கவிதை எழுதினேன்,
கவிதையான்னு தெரியலை அவளோட பெயரை மூணு தடவை எழுதினேன்.

அப்பறம்,சரியா ஞாபகம் இல்லை. காதலி என்னைக் காதலி என முடித்திருந்தேன்.
நண்பன் ஹில்மி உதவுவதாக சொல்லியும் அநாவசியம் எனக் கருதி நானே அவளிடம் சென்று கொடுத்து, படித்து நாளை பதில் சொல் என்றேன்.

மறுநாள் காலை பள்ளி தொடங்கும் நேரம். அறிமுகமான நண்பர்களுடன் என்னை அறிமுகப்படுத்திக் கொண்டிருந்தேன். மின்னலென அருகிள் வந்தாள் அனு. முதல் நாள் இரவு நான் தூங்காததை கண்டுக்கொள்ளாத வண்ணம் கடிதத்தை கொடுத்தாள். படித்துவிட்டாய் பதில் என்ன என்றேன்.

எனக்கு தமிழ் தெரியாது நான் மலாய் ஸ்கூல் என்றாள். சிரித்துக் கொண்டே கடித்தை வாங்கி. ஏதும் பேசாமல் வந்துவிட்டேன். என்னையே கவனித்த நண்பர்கள்.
அவள் கொடுத்த கடிதத்தைப் பற்றிக் கேட்டனர். கோவமான முகத்தை அவர்களிடம் காட்டி கையில் இருந்த கடிதத்தை; ‘கிழிகிழி’ன்னு கிழிச்சி குப்பைத் தொட்டியில் போட்டுட்டு,
சொன்னேன், பாருங்கடா ஸ்கூலுக்கு படிக்க வந்தா அந்த அனு லவ் லெட்டர் கொடுக்குது. சிரிக்கும் போதே தெரிந்துவிட்டது யாரும் நம்பவில்லை என.


“சரி மணி அப்படின்னா அதுக்கப்பறம் நடந்ததை சொல்லட்டா..?”

“சரி ”

“நான் படிக்கும்போது ஒருத்தனை காதலிச்சேன். என்னோட உயிரே அவந்தான்னு நெனச்சேன். அப்பா இல்லாத குறையை அவன் இல்லாம பார்த்துகிட்டான். என்னைப் பார்க்காம அவன இருக்க முடியாது. பள்ளி முடியும் சமயம் சரியா வந்து என்னைப் பார்ப்பான். அவன்கிட்ட பேசினா நேரம் போறதே தெரியாது மணி. நீ கூட பார்த்திருப்பே பள்ளி பின்னால் கேட் இருக்குமே அங்கதான் பேசுவோம்.”

“தெரியும். ஆனால் சரியா ஞாபகம் இல்லை. தேவியும் அதைப்பத்தி என் கிட்டா ஒரு முறை கேட்டப்போ தெரியாதுன்னு சொல்லிட்டேன். தேவிக்கு அவரை பார்த்தாலே பிடிக்கலைன்னு சொன்னா..”

“அம்மாவும் அப்படித்தான். அவரை பிடிக்கவேயில்லை. அப்பா இல்லாததால் சீக்கிரம் சம்மதம் வாங்கலாம்னு நெனைச்சோம். எதுவுமே நடக்கலை.அம்மா ஒத்த கால்ல நின்னாங்க..”

“அம்மான்னா அப்படிதானே அனு... முதலில் சம்பதிக்க மாட்டாங்க , அப்பறம் சரியாகிடும்”

“நானும் அப்படித்தான் நெனைச்சேன்..! ஆனா எல்லா நேரத்திலும் எல்லாமும் சரியா நடக்குன்னு என்ன எழுதியா இருக்கு..?”

அனுவின் இந்த வார்த்தை, அவள் விரக்தியின் விளிம்பில் இருப்பதை உணர்த்தியது. மேற்கொண்டு எதும் கேட்க வாய் வரவில்லை எனக்கு. அவளே தொடர்ந்தாள்.

“அப்படி நெனைச்சுதான் நாங்க கல்யாணம் செய்யலாம்னு கிளம்பிட்டோம்”

சொல்லி முடிக்கவும் , கண்ணில் நீர் கசியவும் சரியாக இருந்தது. அதை துடைக்க கைப்பையிலிருந்து கைக்குட்டையை எடுக்க ஏதோ பொட்டம் வெளிவந்து விழுந்தது. அதை எடுத்து கைப்பையில் வைத்தவள் என்னைப் பார்த்து கண்ணீருடன் அசட்டு சிரிப்பு சிரித்தாள். அந்த பொட்டலம் எனக்கு பழக்கமான பொட்டமாக இருந்தது. இருந்தும் ‘வெளிச்சத்தில்’ தெரியவில்லை..!!

“அனு, நீ எந்த நம்பிக்கையில இப்படி கிளம்புன..”

“என்ன செய்யறது ஒரு வருட பழக்கம். நாங்க பல இடங்களில் திருட்டுத்தனமா சந்திச்சாலும் அவன் அத்துமீறி நடந்ததில்லை. இப்படி இருக்க அவனை எப்படி நம்பாம இருக்கிறது..? ”

அனு தொடர்ந்தால்.

“நானும் அவனும், அவனோட நண்பர்கள் ரெண்டு பேரு முன்னுக்கு கல்யாணம் செய்துகிட்டோம். அவர் எனக்கு தாலி கட்டிணதை வீடியோகூட எடுத்தாங்க தெரியுமா..?”

“வீடியோவா..?”

“ஆமா, அவங்க கல்யாணத்துக்கு வீடியோ படம் எடுக்கறவங்கன்னு அவருதான் சொன்னாரு. ஒரு ரூம் முழுக்க வீடியோ, சீடிங்க, ரெண்டு கம்பியூட்டர் எல்லாம் இருக்கும். அது அவங்க வேலை செய்யற இடம். தூசி ரொம்ப இருக்கும்னு என்னை உள்ளே அனுமதிக்கலை. பெரும்பாலும் அந்த கதவு பூட்டியே இருக்கும்”

கொஞ்சம் பெரு மூச்சி விட்டவள், மீண்டும்.....

“நாம இப்படியே இருந்தா உங்க அம்மா நம்மை ஏத்துக்க மாட்டாங்க... நாம நம்ம குழந்தையோட அவங்க முன் போஉ நின்னா அவங்களோட கல் மனசு கறையும் அப்படி இப்படின்னு என்னை சம்மதிக்கவச்சாரு...”

“..................................”


அமையானவள் தொடர்ந்தாள்.



“மணி அன்னிக்கு ராத்திரி அவர் நடந்துகிட்ட முறை அவை ‘இதில்’ கைத்தேர்ந்தவர் போல இருந்தது, விளக்கை அடைக்காம என்னை பயன் படுத்தினார். கொஞ்ச நாள் கழிச்சி என் கிட்ட ‘விட்டமின்’ மருந்தை கொடுத்து உடம்புக்கு நல்லதுன்னு சொன்னாரு. நானும் சாப்டு படுத்தேன்”

எனக்கு அதன் காரணம் புரியவில்லை.

“என்ன அனு..... எதுக்கு அந்த மாத்திரை.?”

“ம்.... என் உடம்பு வீக்கா இருக்கு சொல்லி கொடுத்தாரு. சாப்டதும் தூக்கம் வந்திடும். தூங்கிட்டேன். மறுநாள் குளிக்குபோது என்னாலயே நம்ப முடியலை என் உடம்பு ஒரே வலி. அங்கங்க நகக்கீரல் வேற... ”
“ஐயோ! என்ன அச்சி,..?”

“தெரியலை . ஒரே குழப்பம். அப்பறம் மறுநாள், அந்த மருந்தை சாப்பிடாம தூக்கம் வந்தமாதிரி படுத்திருந்தேன். கதவு திறக்கும் சத்தம் கேட்டு அவருதான்னு நெனைச்சி எழுந்தேன்..ஆனா... ஆனா.. அது வேற யாரோ”

கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள்.

“நான் கத்தினேன். நான் நம்பி வந்தவனும் அவனோட கூட்டாளிங்களும் உள்ளே வந்தாங்க.... எனக்கு என்ன செய்யறதுன்னு தெரியலை என்னை தொடவந்த அந்த ஆளை தள்ளிவிட்டு ஓட பார்த்தேன். மத்தவங்க என்னை புடிச்சி ஆளாளுக்கு அறைஞ்சாங்க..... நான் மயங்கிட்டேன்”

என்னால் அடுத்து அனு சொல்லப்போகும் விசியத்தை யூகிக்க முடியாமல், முழித்தேன்.அதை புரிந்துக் கொண்டவள்,

“நீ மட்டுமில்லை மணி யாருமே யோசிச்சிப் பார்க்காத ஒன்னு நடந்தது. மயக்கம் தெளிஞ்சதும் என்னை கைகால் , வாய் பொத்தி டி.வி முன்னுக்கு உட்கார வச்சிருந்தாங்க. அதில் நான் பர்த்தது என்ன தெரியுமா..? கல்யாணம் செய்துகிட்டவன் கூட நான் இருந்த அந்த ராத்திரி முழுக்க படமாகியிருந்தது. அதுமட்டுமா..! அவனோட கூட்டாளிங்களும் என்னை அனுபவிச்சதை பார்த்தேன். அவங்க கொடுத்தது போதை மாத்திரை. திருட்டு வீசீடி விக்கிற கூட்டம் அதுன்னு அப்பதான் தெரிஞ்சது. அதும் அவங்ககிட்ட இப்படி ஏமாந்த பொண்ணுங்க ரொம்ப பேராம். அவங்க கூட்டி வரவங்ககூட நான் , .. நான் சம்பதிக்கலைனா இந்த படத்தை எல்லோருக்கும் அனுப்பிடுவாங்க. எங்க வீட்டில தெரிஞ்ச என்ன ஆகும்னு தெரியுமான்னு மிரட்டினாங்க...”

“அய்யோ அப்பறம்..”

“இதுதான் வாழ்க்கைன்னு ஆகிடுச்சி. கொஞ்ச நாள் அங்கயே இருந்து வரங்களுக்கெல்லாம் ஒரு நாள் மனைவியா இருந்து. இப்போ தனியாவே... தொழில்; செய்ய ஆரம்பிச்சாச்சி.”

“என்ன அனு இப்படி சொல்ற..?”

“வேற என்ன செய்ய சொல்ற மணி..?”

“உன் பழைய வாழ்க்கையை மறந்து புதுசா வாழலாமே..”

“எதை நான் மறந்தாலும் , இந்த சமூதாயம் மறக்குமா.. சொல்லு. இப்படிப்பட்ட பொண்ணுங்களை சமுதாயம் எப்படி பார்க்கும் தெரியுமா..”

“ஏன்”

“நீயும் நானும் பேசும்போது அங்க ரெண்டு பொண்ணுங்க நம்மை கைகாட்டி ஏன் கிசிகிசுத்தாங்க தெரியுமா..? அதைவிடு,
முன்ன பின்ன தெரியாத ஒருத்தன் வரான். வந்து ஒரு ராத்திரிக்கு என்ன விலை கேக்கறான்.. இவங்களுக்கெல்லாம் எப்படி தெரியும். சொல்லு..?”

பதில் தெரியாததால் அவளெ சொன்னாள்.

“ஆபாசப்படங்கிறது எல்லா இடத்துலும் சாதாரணமா கிடைக்குது. ஸ்கூல் பிள்ளைங்க கைபேசி முதல் பொம்பளைங்க எல்லோரும் பார்க்கறாங்க... என் படத்தையும் பார்த்திருப்பாங்க.. ம் (யோசித்து) நீ மட்டும் என்ன யோக்கியமா.. சொல்லு மணி..?”

அவளின் இந்த கேள்வி என்னை அறைந்தார்போல இருந்தது.
கலங்கிய கண்ணைத் துடைத்துக்கொண்டே,

“அப்படியே யாரும் என்னைப் பத்தி தெரிஞ்சி கல்யாணம் செஞ்சா.. என்ன ஆகும் தெரியுமா..?”

இதற்கும் அவளே பதில் தந்தாள்.

“ஒருத்தனுக்கு தாலி கட்டி எல்லோருக்கும் மனைவியா இடுக்கனும். என்னை கட்டிக்கிட்டவறோட அண்ணனோ , தம்பியோ, பக்கத்துவீடோ, சொந்தக்காரங்களோ அந்த படத்தைப் பார்த்தா என்னை சும்மாவா விடுவாங்க.. என்னா என்னை கட்டிக்கிட்டவருக்குதான் அவமானம்..அப்படி இல்லாட்டியும் பத்து வருடம் கழிச்சி என் மகளோ, மகனோ இதை பார்த்தா என்ன ஆகும்..”

அனு சொல்வதை என்னால் மறுக்க இயலவில்லை. அதனால்தான் என்னவோ இன்றளவும் பல தவறுகள் திருத்தம் காணாமல் இருக்கின்றன. இருந்தும் இதற்கு விதிவிலக்காக சில பிரமுகர்கள்..! இருக்கத்தான் செய்கின்றார்கள். அதைப்பற்றி நான் சொல்லப் போவதில்லை. அவளை விட்டு பிரியும் அந்த நொடி ஏன் சந்தித்தோம் என முள்ளாய் குத்தியது.

விடைபெறும் நேரம் மனம் சொன்னார் போல, ஐம்பது வெள்ளியைக் கொடுத்து,

“ஏதும் நெனைச்சிக்காத அனு , வச்சிக்கோ..!!”

“சீ..சீ.. உனக்கு காசு வாங்க மாட்டேன் வா.. எங்க போலாம்..”

“இல்லை… அனு அதுக்கில்லை. உனக்கு சாப்பாடு வாங்கிக்கொடுக்கனும்னு நெனைச்சேன். கொஞ்சம் வேலை இருக்கிறது இப்பதான் ஞாபகம் வந்தது. கிளம்பனும் அதான். கொடுத்தேன். சாப்டு. என்ன..”

“நீ கேட்டதே போதும். தப்பா இருந்தாலும் உழைக்காம வரக் காசு வேணாம்..”

பேருந்தும் வந்தது. ஏறினேன். பேருந்து புறப்பட்டது. பேருந்திலிருந்து அவளை எட்டிப் பார்த்தேன். யாரோ அவளுடன் பேசிக்கொண்டிதான். அவளும் தன் கைப்பையில் இருந்து எதையோக் காட்டி சிரித்தாள். பின்னர் இருவரும் என் கண்ணை விட்டு மறைந்தனர்.

நான் இறங்கவேண்டிய இடம் வந்ததும் இறங்கினேன். பழுதுப் பார்க்கக் கொடுத்த மோட்டாரை வாங்கிய போது என் கைபேசி அலறியது. நண்பன் கேசவன். அவசியமில்லாமல் அழைக்க மாட்டான்.

“சொல்லுடா”

“மணி என்ன வேலையா..?”

“இனிமேல்தான் போகனும் . ஏன்.?”


“சரி ராத்திரி ஒரு இடத்துக்குப் போறோம்.எங்கன்னு கேட்காதா... போன தடவை மாதிரி பிரச்சனை வராது.. அப்பறம் ஒரு வீடியோ க்கிலிப் அனுப்பறேன் பாரேன்.. சரி . ராத்திரி வந்திரு”

அவன் அனுப்பிய வீடியோ கைபேசியில் வந்தது. அதில் ஒருத்தி அவளைச்சுற்றி மூன்று முகம் தெரியாத ‘நிச்சயம்’ ஆண்கள். அவள்.. அவள்.. அனு என் அனு..

மயக்க நிலையில் அவள் முழுவதுமாய் ஆடை இழந்திருந்தாள். ஒருவர் பின் ஒருவர் அவளை நெருங்க..... நேற்றுவரை ஆபாசப்படத்தை, காமத்தோடு பார்த்தவன், இன்று கருணையோடு பார்க்கின்றேன்.

இப்படி வெளிவர இயலாத ‘அனு’க்கள் எத்தனைப் பேர் இருக்கின்றார்களோ...?



ஆக்கம்------- தயாஜி வெள்ளைரோஜா

ஜனவரி 30, 2010

மின்னல் fm-ல் 2010


எங்கள் (நமது)
மின்னல் குடும்பம்........


e



நம்ம குடும்பம் பெரிசுதான் போங்க....!!!





நேற்று நான் படித்த புத்தகங்கள் என்னை இங்கே சேர்த்தது..
இன்று நான் படிக்கும் புத்தகங்கள் என்ன எங்கே
சேர்க்கப் போகின்றது....

ஜனவரி 17, 2010

இரு சூப்பர் ஸ்டார்கள்

(இருவரும் என் பாதையை மாற்றியவர்கள் )
ப்ளாஷ்பேக்: ரஜினி – சுஜாதா சந்திப்பு
பாட்ஷா படம் வெளிவரவிருந்த சமயம்… எல்லா பத்திரிகைகளும் போட்டி போட்டுக் கொண்டு ரஜினியின் பேட்டிகளை வெளியிட விரும்பினார்கள்.
அவரே தேர்ந்தெடுத்து, குமுதம் ஆசிரியராக இருந்த அமரர் சுஜாதாவுக்கு மட்டும் பேட்டியளித்திருந்தார். 1995-ல் வெளிவந்தது.
கேள்விகள் ஒவ்வொன்றுக்கும் ரஜினி அன்று தந்த பதில்கள் அத்தனை ஷார்ப்…


இரண்டு வாரங்கள் வெளியான பெரிய பேட்டி அது. அதன் சில முக்கிய பகுதிகளை மட்டும் ஃப்ளாஷ்பேக் பகுதியின் முதல் கட்டுரையாகத் தருகிறோம்.
சுஜாதா: எங்கோ பஸ் கண்டக்டராக இருந்தவரை, தமிழ்நாட்டின் ஃபோக் ஹீரோவாக உயர்த்தியது விதியா, தெய்வச் செயலா?
ரஜினி: தெய்வச் செயல்தாங்க. அதோட என் முயற்சியும் தன்னம்பிக்கையும் இருந்தது. கடவுளே எல்லாம் பாத்துப்பார்னு விட்டிருந்தா, நான் இன்னும் கண்டக்டராவே இருந்திருப்பேன். அந்த சூழ்நிலையில ஒரு பத்திரமான உத்தியோகத்தை விட்டுட்டு தைரியமா சென்னைக்கு வந்து ஒரு வாசல்ல காத்திருந்தது என் முயற்சிதான்…
(சுஜாதா: ‘அதுபோல இன்னொரு முயற்சி செய்தால் என்ன ஆகும் என்று வியக்கத் தோன்றுகிறது!’)
சுஜாதா: அரசியல் ஈடுபாடு எப்படியிருக்கு?
ரஜினி: கொஞ்சம்கூட இல்லை. எதுக்காக அரசியல்? பணம் – புகழ், ஜனங்களுக்கு நல்லது செய்யணும்… இதுக்காகத்தானே? ஆண்டவன் புண்ணியத்துல எனக்கு பணம் புகழ் ரெண்டுமே இருக்கு. ஜனங்களுக்கு நல்லது செய்யணும்னா, இப்ப இருக்கிற அரசியல் நிலைமைல யாராலயுமே ஜனங்களுக்கு நல்லது செய்ய முடியாது. இது நல்லா தெரியும்போது எதுக்காக அரசியலுக்கு வரணும்…?
சுஜாதா: அரசியலுக்கு வந்தா உங்க கைக்கு சக்தி வாய்ந்த பதவி வருமில்லையா?
ரஜினி: தனி மனிதனால ஒண்ணுமே சாதிக்க முடியாது. எல்லாமே மாறணும். ஒட்டுமொத்தமா மாறணும். புதுவெள்ளம்னு சொல்றாங்க இல்லையா… அதுமாதிரி… எல்லாமே மாறணும். இப்ப இருக்கிற சிஸ்டம்ல யாராலயும் ஒண்ணுமே பண்ண முடியாது. மொத்தமா மாறினாத்தான் உண்டு.
சுஜாதா: ஏதாவது பண்ணனும்னு நினைச்சு வர்றவங்ககூட கொஞ்ச நாளில் மாறிடறாங்க இல்லையா? சீக்கிரத்தில் அந்த க்ளீன் இமேஜ் மறைஞ்சு போயிடுது…

ரஜினி: ஆமாம்… எம்ஜிஆரையே எடுத்துக்கங்க… வந்த முதல் ரெண்டு வருஷத்துல எப்படி இருந்தார்? அதுக்கப்புறம் அவராலயே ஒண்ணும் செய்ய முடியலயே…
சுஜாதா: சுத்தி இருக்கிறவங்க விடாம சாப்பிட்டுர்றாங்க இல்லையா?
ரஜினி: யெஸ்… என்னன்னா… கொஞ்சம் நல்ல பேர் எடுக்கலாம். ‘அவரை விட இவர் பெட்டர்’னு (சிரிக்கிறார்)… ஆனா அது பிரயோஜனம் இல்லையே…ஸிஸ்டம் மாறணும்.
சுஜாதா: நீங்க ஒரு சக்தி. உங்க படம் ரிலீஸ் ஆகலேன்னு ஒரு ரசிகர் தற்கொலை செஞ்சிகிட்டதாக் கூட படிச்சேன். ஆனா அந்த இல்யூஷன் உங்ககிட்ட இல்லேங்கிறது தெரியும். ‘உலகமே நம்மை விரும்புது’ங்கற இல்யூஷன் இல்லை. ஆனா ரசிகர்கள் உங்களை நெருக்கமா உணர்றாங்க. Larger than life image… ரசிகனோட சப்ஸ்டிட்யூட்டா இருக்கிற ஒரு பெரிய Motivatibe Force உங்களோடது இல்லையா…? ‘அவங்கள்ல ஒருத்தர் நீங்க’ன்ற இமேஜ் இருக்கே, அதை பாஸிடிவ்வா மாத்தலாமில்லையா? உங்க ரசிகர் மன்றங்கள்ல என்ன பண்றாங்க?
ரஜினி: நிறைய பண்றாங்க… நற்பணி பண்றாங்க. சமூக சேவை பண்றாங்க. கண்தானம், முதியோர் உதவி, ரத்த தானம், வெள்ள நிவாரணம் மாதிர பலதும் பண்றாங்க.
சுஜாதா: நீங்க சொல்றதை அப்படியே கேக்குறாங்களா?
ரஜினி: நிச்சயமா… அவங்க எல்லாருக்குமே, நான் ஏன் அரசியலுக்கு வரமாட்டேங்குறேன்னு ஒரு ஆசை இருக்கு. ஏன் தெளிவாச் சொல்ல மாட்டேங்குறேன்னு நினைக்கிறாங்க. ஆனா ஆரம்பத்துலேர்ந்து நான் சொல்லிக்கிட்டே வந்திருக்கேன், எனக்கு அரசியல்ல ஈடுபாடு கிடையாதுன்னு. அதுமட்டுமில்ல… நான் எதிர்காலத்தைப் பத்தி யோசிக்க மாட்டேன். இன்றைய தேதிதான் எனக்கு முக்கியம். ஏன்னா நாளைக்கு இதுதான் நடக்கும்னு யாராலயும் சொல்ல முடியாது. நாளைய சூப்பர் ஸ்டார் யாரு, வில்லன் யாருன்னு இப்ப யாருமே சொல்ல முடியாது (சிரிக்கிறார்). It is Unpredictable..
சுஜாதா: ரசிகர் மன்றங்களுக்குன்னு ஏதாவது கைட்லைன் கொடுத்திருக்கீங்களா?
ரஜினி: ஆமாம்… முதல்ல வீடு, அப்பா, அம்மா, பொண்டாட்டி, குழந்தைகள்… இவற்றைத்தான் கவனிக்கணும். அதுக்கு அப்புறம் ரசிகர் மன்றத்துக்கு வாங்கன்னு சொல்லியிருக்கேன்.
சுஜாதா: ஸ்டாருக்கும் நடிகருக்கும் வித்தியாசம் இருக்கிறது. ஸ்டார் நடிகரால சில வித்தியாசமான ரோல்களைப் பண்ண முடியாது. ஷாரூக்கான் மாதிரி நெகடிவ் ரோல்களைப் பண்ண முடியாது. கமல்கிட்ட அந்தத் திறமை இருக்கு. பாதி நடிகர், பாதி ஸ்டார் மாதிரி. அல்பசே்சினோ, ராபர்ட் டி நீரோ, டஸ்டின் ஹாஃப்மேன் மாதிரி ஸ்டார்களெல்லாம் ரொம்ப வித்தியாசமா கட்டுப்பாடுகள் இல்லாம நடிக்கிறாங்க. பெண் வேஷம் கூடப் பண்றாங்க. உங்களால அப்படி வித்தியாசமா பண்ண முடியாதா… அல்லது தயாரிப்பாளர்கள் விடமாட்டேங்கறாங்களா?
ரஜினி: இல்லை… நானே அந்த மாதிரி செய்ய விரும்பறதில்ல. ஏன்னா, இதுல பெரிய அளவுல பணம் இன்வால்வ் ஆகியிருக்கு. அதில நான் ரிஸ்க் எடுக்க விரும்பல. என் படம் பெயிலியரானா அதோட பாதிப்பு ரொம்பப் பேருக்கு இருக்கும். என் இமேஜுக்குத் தகுந்த படம் பண்றதுதான் எல்லோருக்கும் நல்லது.
சுஜாதா: உங்க பேர்தான் Selling point… இல்லையா?
ஜினி: யெஸ்… யெஸ்…
சுஜாதா: மணிரத்னம், பாராதிராஜா போன்ற டைரக்டர்ஸ் எல்லாம் உங்களை வெச்சு ஒரு பெரிய சக்ஸஸ் கொடுக்க முடியலையே… ஏன்? உங்க சூப்பர் ஸ்டார் இமேஜை அவங்க சரியா புரிஞ்சுக்கலையா? நீங்க என்ன நினைக்கிறீங்க? அது பரிசோதனை முயற்சியா?
ரஜினி: ரஜினிகாந்த் படம்னா ரசிகர்கள் சில விஷயங்களை எதிர்பார்ப்பாங்க. கிம்மிக்ஸ் மாதிரின்னு வெச்சுக்கங்க. இன்டலிஜென்ட் டைரக்டர்ஸ் அவங்களோட தனித்துவம் இருக்கணும்னு நினைக்கிறாங்க. இதான் குழப்பம். ஆனா தளபதி, It was really did well… but not as expected!
ஆமா… ரஜினி படமா, மணிரத்னம் படமான்னு ரசிகர்கள் குழம்பிட்டாங்க. ரசிகர்கள் விரும்பறதைக் கொடுக்கிறதுதான் நல்லது. அடுத்தவங்க பணத்தை வச்சிக்கிட்டு நான் எக்ஸ்பரிமெண்ட் பண்ண முடியாதில்லையா? That is why I don’t want to take risk.
சுஜாதா: ஆனா ரஜினி, இதுமாதிரி லிமிட்டேஷன் இருந்தாலும் பல டெக்னிக்கல் முன்னேற்றங்களை insist பண்ணலாமே. ஒரு ஸ்டாண்டார்டு இருக்கணும்னு வற்புறுத்த முடியுமே உங்களால!
ரஜினி: ஓயெஸ்… பண்றேன். அண்ணாமலை, வீரா படங்கள்ல டெக்னிக்கல் தரத்துல நிறைய கான்சன்ட்ரேட் பண்ணியிருக்கேன். ஆனா மணிரத்னம் அளவுக்கு முடியாது. It may take some time. புதுசா வர்றவங்க என் இமேஜை மாத்தணும்னு நினைக்கிறாங்க. ஃபைட் வேண்டாம்னு சொல்வாங்க. யூஷுவலா செய்யறதை செய்ய வேண்டாம்பாங்க. அதுக்கு ரஜினிகாந்த் தேவையில்லையே…வேற யாரையாவது வச்சிக்கலாமே!
சுஜாதா: பொதுவா சராசரி வாழ்க்கையில டென்ஷன் இருக்கு. உங்களுக்கு படம் ரிலீஸாகும்போது டென்ஷன் ஏற்படுமா?
ரஜினி: இருக்கும். ஒரு வாரம் வரை இருக்கும். ரெண்டாவது வாரத்துல படம் எப்படின்னு தெரிஞ்சிடும். முதல்வாரத்துல வர்ற விமர்சனங்கள் தெளிவா இல்லாம குழப்பும். அப்புறம் சுலபமா தெரிஞ்சிடும். யாருக்கும் போன் பண்ணிக்கூடக் கேட்க மாட்டேன்.
தொகுப்பு: தயாஜி வெள்ளைரோஜா

நன்றி "எஸ்எஸ்"www.envazhi.com/?tag=sujatha

ஜனவரி 09, 2010

படித்ததைப் பகிர்கின்றேன்


திருக்குர்ஆனும் நானும்...."

- சுஜாதா -

திருக்குர்ஆனுடன் என் முதல் பரிச்சயம் என் தந்தை மூலம் ஏற்பட்டது. அவருக்கு நான் நாலாயிர திவ்யப் பிரபந்தப் பாசுரங் களை பெங்களூரில் படித்துக் காட்டிக் கொண்டு இருக்கும்போது,
திடீரென்று 'குர்ஆன் படிக்கலாம், அதில் என்னதான் சொல்லியிருக்காங்கன்னு பார்க்கலாம்டா' என்றார். நான் உடனே புத்தகக் கடைக்குப் போய்,
'தி மீனிங் ஆஃப் தி க்ளோரியஸ் குர்ஆன்' என்ற ஆங்கிலப் புத்தகத்தை வாங்கி வந்தேன்.
சில நாள்கள் நாலாயிர திவ்யப் பிரபந்தத்தைத் தள்ளிப்போட்டு, திருக்குர்ஆன் முழுவதும் படித்தோம்.
அதில் சொல் லியிருக்கும் கடவுள் கருத்துகள் நம்மாழ்வாரின் திருவாய்மொழியில் இருப்பதைப்போல் உணர்ந்தோம்.
'வாழ்வுக்கான நடை முறைக் குறிப்புகளும்,
எவரும் ஒப்புக்கொள்ளும்படியாக இருக்கிறதே! எந்த நாட்டுக்கும், எந்தச் சமயத்துக்கும் ஆட்சேபம் இருக்க முடியாதே!
இதில் வெறுப்பதற்கு என்ன இருக்கிறது!' என்று வியந்தோம்.
அதன்பின், பல்வேறு சந்தர்ப்பங்களில் ஜாஃபர்தீன் போன்ற நண்பர்கள் அனுப்பிய புத்தகங்களைப் படித்து வந்திருக்கிறேன்.
இஸ்லாமிய ட்ரஸ்ட் நிறுவனம் வெளியிட்டிருக்கும் 'அண்ணல் நபிகளார் வாழ்வினிலே' போன்ற புத்தகங்கள் தெளிவாக எழுதப் பட்டுள்ளன.
மலேசியப் பிரதமர் டாக்டர் மஹாதீர் முஹம்மதின் சொற்பொழிவுகளின் தொகுப்பான 'இஸ்லாமியச் சிந்தனைகள்',
நவீன உலக த்தின் முற்போக்குக்கு இஸ்லாம் தடையல்ல என்பதைத் தெளிவாக உணர்த்துகிறது. குறிப்பாக,
இங்கிலாந்தின் ஆக்ஸ்ஃபோர்டு ஆய்வு மையத்தில் அவர் ஆற்றிய உரையில், இஸ்லாம் எப்படித் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டது
என்பதைச் சொல்லியிருக்கிறார்.
இந்தியர்கள் அனைவரும் தவறாமல் படிக்க வேண்டும்.
எல்லா மதங்களும் நல்லதைத்தான் சொல்கின்றன. அவைகளின் ஆதார வார்த்தைகளில் பழுதில்லை.

அவற்றைக் கடைப்பிடிக் கும் மனிதர்களிடம்தான் வேறுபாடுகள் வளர்ந்திருக்கின்றன.இஸ்லாம் என்பதற்குக் கீழ்ப்படிதல், கட்டளைகளை நிறைவேற்றுதல் என்பது பொருளாகும்.
முழுமுதற் கடவுளாகிய அல்லாஹ் வுக்குக் கீழ்ப்படிந்து, அவனுடைய கட்டளைகளை நிறைவேற்றுதல். அந்தக் கட்டளை உணர நியமிக்கப்பட்ட இறைத் தூதர் தான் அண்ணல் நபி.
காளிதாசன் நாக்கில் சரஸ்வதி வந்ததும், அவன் சட்டென்று கவிபுனைய ஆரம்பித்தது போல, அண்ணல் குகையில் இருந்து வெளி வந்ததும் சொன்ன வசனங்கள் இறைவனின் வசனங்கள்.
அவற்றின் எளிமையும் நேரடியான தாக்கமும் பிரமிக்க வைக்கும்.'சிலைகள் உதவாதவை, அவற்றைக் கைவிடுங்கள்.
இந்த பூமி, இந்த நிலவு, கதிரவன், தாரகைகள், வானம், பூமியில் உள்ள சக்திகள் யாவும் ஒரே இறைவனின் படைப்புகள்.
அந்த இறைவனே உங்களையும் படைத்தான். அவனே உணவளிப்பவன். அவனே உயிரை வாங்கவோ, உயிரை அளிக்கவோ செய்கிறான். மற்ற அனைத்தையும் விடுத்து, அவனையே தொழுங்கள்!
''திடவிசும்பு எரி வளி நீர் நிலம்இவை மிசைபடர்பொருள் முழுதுமாய்அவைதொறும்உடல்மிசை உயிரெனக்கரந்தெங்கும் பரந்தனன்'- என்று நம்மாழ்வார் கூறியதும் அந்த இறைவனையே!
தற்பெருமை, கொடுமை, கோபம், பிறரைப் போல் பாவனை செய்தல், பிறர் துன்பத்தைக் கண்டு மகிழ்தல், பொய், கெட்டவற் றைப் பேசுதல்,
இரட்டை வேடம் போடுதல், புறம் பேசுதல், தகாத ஆதரவு, பாரபட்சம், பொருத்தமற்ற புகழ்ச்சி, பொய் சாட்சி அளித்தல், பரிகாசம், வாக்குறுதி மீறல், சண்டை சச்சரவு, வாக்குவாதம், குறை கூறல், ஆராயாமல் செய்திகளைப் பரப்புதல், பொறாமை, கெட்ட பார்வை இவைகளைத் தீயகுணங்களாகப் பட்டியலிடுகிறார் பெருமானார்.

கம்பீரம், நிதானம், எளிமை, தூய்மை, வணங்குவது, நாவடக்கம் போன்ற நல்ல குணங்களைக் கடைப்பிடிக்கச் சொல்கிறார்.
திருக்குர்ஆனை முதலில் இருந்து கடைசிவரை தேடிப் பார்த்தாலும், மற்றவர்பேரில் வெறுப்பை வளர்க்கும் வாசகங்கள் எதுவும் இல்லை.
பிரச்னை குர்ஆனில் இல்லை. நம்மிடம்தான்.
திறந்த மனதுடன் அதைப் படித்துப் பார்க்க விரும்பிய, என் கண்க ளைத் திறந்த என் தந்தையார் தீவிர வைணவர்
.'*****************


நன்றி: தினமணி, ரம்ஜான் மலர் - 2003/ சமரசம், மார்ச் 16-31 - 2008

தொகுப்பு தயாஜி வெள்ளைரோஜா

ஜனவரி 02, 2010

என் கவிதையானவளே....







கியாகிவள் ள்

கத்தாலக் கண்ணழகி
கார்மேகப் பொட்டழகி

இல்லாத இடையழகி
இருக்கின்ற தொடையழகி

சொல்லாத மொழியழகி
சொக்கத்தங்க ஸ்பரிசழகி

வற்றாத அன்பழகி
வாடாத இதளழகி

மான்தோற்கும் காலழகி
மணியான சிரிப்பழகி

ஒளிகொடுக்கும் தோளழகி
ஒய்யார நடையழகி

கேள்விக்குறி புருவழகி
கோவத்திலும் ஓரழகி

எழுதாத கவியழகி
எழுதவேண்டிய எழுத்தழகி

வெள்ளைத்தாள் மனதழகி
வெட்கப்படும் நிலவழகி

மொழிபேசும் விழியழகி
விலைபேசும் திமிரழகி

மதிப்போர்க்கு சாந்தழகி
மறுப்போர்க்கு வேறழகி

முகத்தில் பருழகி
முந்தானை முதுகழகி


காலோடு கொலுசழகி
கையோடு வளையழகி

கம்பன்விட்ட காவியழகி
கண்ணன்மறந்த துவாரழகி

ராமன்விடா வில்லழகி
ராத்திரிக்கு குளிரழகி

இசைக்கு இசையழகி
இலக்கியத்தில் கவியழகி

எப்படி அழகி...?-
நீ…….
எப்படியும் அழகி...!


இப்படிக்கு,
தயாஜி வெள்ளை
ரோஜா

டிசம்பர் 25, 2009

என் முதல் தவறு..






எப்படியெனத் தெரியவில்லை,
அது....!!
நடந்துவிட்டது

இன்னமும் எனக்கு குழப்பம் ஒயவில்லை....
என்ன செய்வது
நம்மை மீறிய
பல விசயங்களை
நாம்தான் சந்திக்கின்றோமே....

எனக்கு இது..!
தேவைதானா...
நானா இப்படி...??

இது என்ன,
தொற்று நோயா..?

பரம்பரை வியாதியா...?

இதன் ஆரம்பம் எங்கே..?

எல்லா கேள்விக்கும்ஒரே பதில்

""தெரியாது""

தற்காலிக பதில் மட்டுமல்லஎன் தற்காப்பு பதில்....

வெளியில் தெரிந்தால்
.....?.....?.........?......??...........

என்ன செய்ய...?
மறக்கவா...??
மறைக்கவா....?

தலைமறைவாகிவிட்டால்
எப்படி..?

சரி,,!
நடந்தது
நடந்துவிட்டது.....
என்னால் எப்படியோ,

இது என் அடையாளமாகட்டும்..
இதை அடைக்காக்கப் போவதும் இல்லை,

துணிவோடு ஏற்கின்றேன்
எதிர்ப்பையும் சமாளிகின்றேன்...

ஆம்..!!


"அது என் முதல் கவிதை"


இப்படிக்கு தயாஜி வெள்ளைரோஜா

எப்படி வெல்வது...


இங்கே வெளிச்சம்,
தேவையானதால்....
இருட்டு இல்லாமல் போய்விட்டது....

இப்படித்தான்
இங்கு பணம்
தேவையானதால்
என் குணம் நிராகரிக்கப்பட்டது......

விழிகள் தோறும்
வாசனை தெளித்தாள்...
என் விழியின் ஓரம்
வலியை விதைத்தாள்.....

கண்ணாடியும் என்னை
ஏளனம் செய்கிறது முன்னாடி....

என் காதலைஎப்படிச் சொல்ல....!!??

பணம் தந்தால்
பஞ்சணையில்.......
இல்லையெனில்
நஞ்சணையில்........

"மனைவியாகிவிடு"
என்றேன்

""ஒரு இரவுக்கு 100 வெள்ளி"
என்றாள்
அவளுக்கு தேவை
தாலியல்ல
ஆணுறை!!???


ஏன் இன்னமும் அவள் நினைவாய் நான்.

எப்படி ஜெயிப்பேன்..

"என் ஐம்பது வெள்ளி கொண்டு"



இப்படிக்கு,
தயாஜி வெள்ளைரோஜா

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்