Pages - Menu

Pages

நவம்பர் 29, 2025

- கவிதைகளே இவர்களுக்கு மன்னியும் -


சொல்ல முடியாத
சோகத்தைச் சுமந்தபடி
பாரம் தாங்காது

என்
விரல்கள் அழும்
கண்ணீர்த்துளிகளின் ஈரம்
ஒருபோதும்
காகிதத்தை நனைக்காமல்

கவிதைகளாய்ப்
பிறந்து அழுவதை
ஒரு தகப்பனாய்ப்
பார்த்து பூரிக்கின்றேன்

அந்த ஆராதனைகளுக்கே
எப்போதும்
அழுது கொண்டிருக்கிறேன்
சிலுவைகளுக்கும்
என்னை
முன்மொழிந்தபடி

கவிதைகளே
எங்களுக்கு தாயின் மடி


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக