பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......
வாழ்வதற்கான
பால பாடங்களில்
முதன்மையானது
எவ்வளவு வலித்தாலும்
கண்களைத் துடைத்துவிட்டு
எல்லா பற்களையும் காட்டி
"அப்பாவுக்கு வலிக்கல பொம்மி..."
என்றதும்
பொம்மி நம்பிவிடுவது போல
நாமுமே நம்மை
நம்பிவிட வேண்டும்
வலிக்கவில்லை என....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக