Pages - Menu

Pages

ஜனவரி 17, 2025

நிறுவு


குற்றம் சொல்வதற்கு

எந்தவொறு ஆதாரக்கூறுகளும்

அவசியமற்றவை


சொல்லிக்கொண்டே

அடுக்கிக்கொண்டே

போய்க்கொண்டே இருக்கலாம்


ஆனால் அவற்றை

இல்லையென்று நிரூபிக்கத்தான்

இங்கு

படாதபாடு படவேண்டியுள்ளது


யோசித்துப்பார்த்தால்


குற்றம் சொல்லிச் சென்றவர்களைவிடவும் 

அதை 

இல்லையென்று நிரூபிக்கச் சொல்லி


காத்திருக்கும்

சமூகம்தான் எத்துணை

மோசமானது....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக