Pages - Menu

Pages

நவம்பர் 18, 2025

- குற்றமே தண்டனை -


இன்று
கவிதைகளை திருடுவது
அவ்வளவு பெரிய குற்றமில்லை
என்றாலும்

எது கவிதையென்று
தெரியாமல் திருடுகிறவர்களை
எப்படித்தான்
மன்னிப்பது

அவர்கள் எழுதிய
கவிதைகளை
அவர்களையே
காலை மூன்று முறை
மதியம் இரண்டு முறை
இரவில் நான்கு முறை 
என
சாப்பாட்டிற்கு முன்
வாசிக்கச் சொல்லலாம்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக