Pages - Menu

Pages

மார்ச் 07, 2025

- பி(ர/ரே)மை -

 


சகாவே

தற்கொலைக்கும் 

முக்தியடைவதற்கும்

என்ன வித்தியாசம்


எங்கே போகிறோம் 

எதற்கு போகிறோம்

ஏன் போகிறோம்

என்கிற

தெளிவின் ஆழம்தான் 

இல்லையா


என்னை மறைத்துக்கொள்ள

எனக்கிருப்பது 

என் கவிதைகள்

மட்டுமே


என்னை கண்டுபிடிக்க

உனக்கிருப்பதும்

என் கவிதைகள் 

மட்டுமே


யாராவதென்னை

கண்டறியட்டும் என்றே

காலம் முழுக்க

மறைந்தாடுகிறேன்


நான் விலகி ஓடவில்லை

நமக்கிருக்கும் இடைவெளியின்

மீது வெளிச்சம் பாய்ச்சுகிறேன்


அது எவ்வளவு பிரகாசமோ

அவ்வளவு வலி

அது எவ்வளவு மங்கலோ

அவ்வளவும் வழி


ஒரே வரியில் ஆயிரம் அர்த்தங்கள்

வைப்பவன் ஞானி என்றால்

ஆயிரம் வரிகளை ஒரே அர்த்தத்தில் வைப்பவன் தீர்க்கதரிசி என்றாகக்கடவது


இதிலொரு பிரமை இருக்கிறது

இதிலேதான் பிரேமையும் இருக்கிறது



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக