பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......
மழைவிடும் வரை
குடை என்பது கொடை
பெருங்கொடை
மழைவிட்ட பின்
அக்குடையே நமக்கு தடை
பெருந்தடை
இங்கு தடையாகும் ஏதொன்றும்
நமக்கொருநாளில்
பெருங்கொடையென இருந்ததை
அறிந்து கொள்
மனமே
அறிவில் கொள்
தினமே....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக