Pages - Menu

Pages

மார்ச் 26, 2025

- நிலமென்னும் நல்லூழ் -


ஒரு நிலத்தில்

பெரும்பான்மை மனிதர்கள் 

எதற்காக கொண்டாடப்படுகிறார்களோ

எவர்களை பந்தாடுகிறார்களோ

எப்படி ஏளனப்படுத்துகிறார்களோ


இன்னொரு நிலத்தில் 

சிறும்பான்மை மனிதர்கள் அதற்காகவே திண்டாடப்படுகிறார்கள்

அடுத்தடுத்து பந்தாடப்படுகிறார்கள்

அப்படியே ஏளனப்படுகிறார்கள்


நிலமென்பது 

எதையும் புதைப்பதற்கு  மட்டுமல்ல 

எவரும் கைக்கோர்த்து வாழ்வதற்கும் 

என்பதனை  

இன்னும் எத்தனை இலக்கியங்களில் சொன்னால் கேட்போம்


வீடும் வாசலும் 

வேறென்றபோதும்

நீயும் நானும் 

வாழும் தேசமென்பது ஒன்றுதானே


ஆதிக்கங்களை விரட்டிவிட்டு

இன்று

அரசியலில் சிக்கி கொண்டோம்


இது உன் தேசமும் அல்ல

இது என் தேசமும் அல்ல

உன்னை என்னையும் நம்பி

உயிர் விட்ட 

நம் முன்னோர்களின்  நேசம்


அது 

ஒருபோதும் பொய்க்காதிருக்கட்டும்....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக