Pages - Menu

Pages

மார்ச் 13, 2025

- தாலாட்டு -

 

பூக்களை நேசிப்பவர்களுக்கு

பூந்தொட்டிகள் 

தேவையில்லை


மீன்களை நேசிப்பவர்களுக்கு

மீன் தொட்டிகள்

தேவையில்லை


பறவைகளை நேசிப்பவர்களுக்கு

கூண்டுகள்

தேவையில்லை


காதல் கவிதைகளுக்கு

காதல் தேவையில்லை என்பது போல


கவிதை எழுதுவதற்கு

கவிதையே தேவையில்லை என்பது போலவும்


ஒன்றைச் 

சொந்தம் கொண்டாட

வடிவமும் சிறையும் பூட்டும் அநாவசியம்


சில நிமிடங்களில் அதனுடன்

லயித்திருந்தாலே போதும்

அதுதான் அவசியம்

அதுதான் வசியம்


வாழ்நாளுக்கான நினைவுகளை

அது தந்துவிட்டு செல்லும்

அந்தத் தாலாட்டும் 

நாம்

வாழும் காலம் மட்டும்

பாடும்....



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக