Pages - Menu

Pages

ஜனவரி 24, 2025

- பாவச்சுழல் -

 


தன்னைத்தானே 

தண்டிக்கும்

கண்ணீரில் கரையும்

கழுவேற்றிக்கொள்ளும்

மனிதனை

எல்லோருமே விரும்புகிறார்கள்


மன்னிப்பதை போல

அதில் 

எந்தவித சிரமமும் 

எந்தவொரு வருத்தமும்

எப்படியான துக்கமும்

குற்றவுணர்ச்சியும்

அவர்களுக்கில்லை


ஆகவே


தன்னைத்தானே 

தண்டிக்கும்

கண்ணீரில் கரையும்

கழுவேற்றிக்கொள்ளும்

மனிதனை எல்லோருமே

விரும்புகிறார்கள்


1 கருத்து: