Pages - Menu

Pages

டிசம்பர் 29, 2024

தீரா காதல்



 ஒரு நீண்ட கவிதை
யாரோ ஒருவரால் 
நினைக்கப்பட்டு
யாரோ ஒருவரால்
தொடங்கப்பட்டு
யாரோ ஒருவரால்
வாசிக்கப்பட்டு

ரசித்து
சிரித்து
அழுது
புலம்பி
ஆறுதல் தேடி
தோள் தட்டி
கண்ணீர் துடைத்து
மீண்டெழுந்து பின்

யாரோ ஒருவரால் 
தொடர்ந்து எழுதப்பட்டுக்கொண்டே
இருக்கிறது

இவ்வுலகில் எண்களுக்கு
வேண்டுமெனில்
முடிவின்மை இருக்கலாம்

ஆனால்
எவ்வுலகிலும் முற்றுபெறாமல்
தொடர்ந்து எழுதப்படுவது
தன்னைத்தானே வார்த்தெடுப்பது
எப்போழுதும் கவிதைகளே

தீரா நதியாய்ப்
பாய்ந்தோடும் 
தீரா கவிதையை
யாரால்தான் நிறுத்திவிட முடியும்

சுரக்கும் தாய்ப்பாலை
எந்தக் குழந்தைதான் மறுக்கும்....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக