Pages - Menu

Pages

மார்ச் 19, 2024

குரலற்ற கடலலை




உன்னோடு பேசுவதற்கு

என்

எல்லா வார்த்தைகளும்

ஏங்குகின்றன

எம்பி குதிக்கின்றன


நீ சொன்ன

ஒற்றைச் சொல்லின்

போதாமையால்

அவை

தினம் தினம் 

மௌனத்தற்கொலை

செய்கின்றன


நான் ஒருவனே

அந்த மரணங்களுக்கு

ஓசையற்ற ஓலம்


உன் பேரிரைச்சல்

என்றாவது ஒரு நாள்

என் நிசப்தத்தின்

வெறுமைக்கு முன்

மண்டியிடும்

தலைவணங்கும்....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக