Pages - Menu

Pages

ஜூலை 28, 2010

மரணம் நெருங்கியவனின் மன்றாடல்...













"மரணம் வந்தால் என் செய்வீர்..?"





"மரிப்பேன்.. வேறென்ன செய்ய..!"


இந்த கேள்வி பதிலோடு இனி;
பயணிக்க இயலாது...
மனம் திறந்த வாக்குமூலம் கொடுக்கின்றேன்,
நிறைவேற்றுங்கள்....
கடைசி ஆசை...

இதுவரை நான் சேமித்த;
பணத்தின் எண்ணிக்கை காட்டிலும்;
புத்தகங்கள்தான் அதிகம்.....
எனது படைப்பிற்காகவும்;

அவளிடம் படித்துக் காட்டவும்....

என்;
இறுதிச் சடங்கில் அவள் இருக்கமாட்டாள்,

அவள்.

இறுதி எனக்கில்லை என்பதை இன்னமும் நம்புகின்றாள்;

பாவம்....

'என்' பிறகு என் புத்தகங்களை

அவளிடம் கொடுத்துவிடுங்கள்,

என் மனைவியை விடவும்

அதனை அவள்;

அதிகம் நேசிப்பாள்;

நான் இல்லாத போதும்;

என் புத்தகங்கள் அவளோடு,

சண்டையிடும்;

சமரசம் செய்யும்;

கட்டிலில் படுக்கும்;

கட்டிப் பிடிக்கும்;

கோவம் கொடுக்கும்;

ஜோக்கும் அடிக்கும்;

அதிலும் நான் கோடிட்ட இடங்கள்.....

அவளை என்னோடு ;

பேசவைக்கும்

காதோரம் கூச வைக்கும்;

கவிபாட ஆசை வைக்கும்'

உடலோடு உரசவைக்கும்;
வார்த்தைகளால் அசரவைக்கும்;

இன்னும் இன்னும் எல்லாம் செய்யும்.,


என் துரோகம் உட்பட........

அப்போதும்,

எனக்காக எதையாவது செய்வாள்;

என் மனைவி மீது கோவம் கொள்வாள்....

அதும் என்னை புரியாமல் இருக்கின்றாளே எனதான்;

அவள் யார்..?

எல்லோர் வாழ்விலும் வந்து போகின்ற;
பெயர் குறிப்பிட தெரியாத;
பெயர் குறிப்பிட முடியாத;.........

அப்பாவி பெண்..!
இருக்கும் போது சொல்ல வக்கில்லாதவன்.....
இறுதி சடங்கிற்கு;
முன்னதாக சொல்வதில் கொஞ்சம் நிம்மதி;
மறவாமல் அவளிடம் புத்தகங்களைக் கொடுத்துவிடுங்கள்...












இப்படிக்கு தயாஜி

ஜூலை 01, 2010

ரசித்தவை 1

படைப்புலக பெண்பாரதியும்,, என்வரையில் முன்மாதிரியும் ஆகிய என்னவள் "கவிஞர் தாமரையின்" கவிதை இது.
'ஆண்கள் அறிக' என்ற தலைப்பில் ஆனந்த விகடன் இதழில் வெளிவந்த படைப்பு. (30062010)
இதை படிக்கும் போதே நான் செய்த தவறுகளையும், செய்யக்கூடாத தவறுகளையும் புரிந்துக் கொண்டேன். இதன் கடைசி நான்கு வாக்கியம் என்னுள், என் எண்ணத்துள்.... ஊசியை துளைத்தது.
'நன்றி கவிதாயினி தாமரை'
இப்படிக்கு தயாஜி.....