பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

மார்ச் 31, 2011

ஆனாலும் நான் ஆண்


ஒருமுறைக்கு இருமுறை; பலமுறையாய்; ஒவ்வொருவரும் கேட்டார்கள்; உண்மையைச் சொன்னாலும்; உலகத்துக்காகச் சொன்னாலும்; உள்ளம் என்னமோ; ஒத்துக்கொண்டது; எனக்கான ஒருத்தியாய்; அவளை; ஒப்புக்கொண்டது; அவளும் பெண்தான்; அழகானப் பெண்ணல்ல; ஆசிர்வாதம் தவிர; அவள் தாய்தந்தையால்; வேறெதற்கும் வழியில்லை; ஆனாலும் மனம்; ஒத்துக்கொண்டது; எனக்கான ஒருத்தியாய்; அவளை; ஒப்புக்கொண்டது; இருந்தாலும் என் தோழி; தேவி; இதையெல்லாம் மறுத்திட்டாள்; அவளின் தேவை; அழகனுக்கு அழகி; அழகிக்கு அழகன்; அதில் நானும் ஒருவன்; அவள்வரையில் அழகன்; என் எண்ணம் சொன்னதும்; ஏற்காமல் அவள்; என்னை திட்ட வந்தாள்; இரண்டாடுக்கு பின்; என்னை பார்க்க வந்தாள்; நான் அனுப்பியக் குறுஞ்செய்தி; அவளுக்கு; கடுஞ்செய்தி; அதனால்தான் என்னவோ; நேற்றுவரைக்காதோடு பேசியவள்; இன்று; நேராக பார்க்க வருகின்றாள்; இந்த அழகனுக்கு; அந்த பெண்ணா; அம்மா அப்பாவின்; கேள்வி; அவளிடமும் இருந்தது..! ஆச்சர்யம்; நான் பார்த்தவள்; அழகில் மட்டுமல்ல; கண்; பார்வையிலும் குறைவுதான்; பார்ப்பதெல்லாம் அவளுக்கு; மங்கிய வெளிச்சம்தான்; எனக்குப் பொறுத்தமாய்; எத்தனையோபேர் இருப்பார்கள்தான்; அதோ; அவள் தேவி; என் தோழி; என்னைச் சந்திக்க வந்தவள்; என் எதிரிலேயே; தேடுகின்றாள்; என்; இரண்டாண்டு முந்தைய முகத்தை; தெரிந்திருக்க நியாமில்லைதான்; சமீபத்திய அம்மையால் முகம் உருமாறி; குழிகள் நிறைந்த தெருவாகியக் கதை; அவளுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லைதான்; ஒருவேளை; தெரிந்திருந்தாள்; ஒத்துக்கொண்டிருப்பாள்; ஆனால் அம்மாதான்; மங்கிய கண்ணை விட; இந்த அம்மை தழுப்புக்கு; ஆயிரம் அழகிகள் வருவார்கள்; எனப் புலப்புகின்றாள்; இதெற்கெல்லாம் காரணம்; ஆண்; அம்மைத்தழுப்பு ? ; ஆனாலும் நான்; ஆண்......!

மார்ச் 10, 2011

வாங்கியக் காதலிகள்.....



6-3-2011-கெடா சுங்கை பட்டாணி சென்றபோது வாங்கியக் காதலிகள்.....


1. அவதார புருஷன்
- வாலிபக் கவிஞர் வாலியில் படைப்பு. சில ஆண்டுகளுக்கு முன் என் ஆசிரியர் DR.சிவலிங்கம்-இடமிருந்து அரைமணிநேர இரவலில் என்னைக் கவர்ந்த புத்தகம். திறந்ததும் ராமரைப் படிக்காமல் இராவணன் குறித்து படித்தேன். வார்த்தை ஜாலத்தில் அப்படியே இழுக்கும் ஆற்றல் இன்னமும் வாலிக்கு இருப்பது உண்மை........

'இராவணன்'
இவனுக்கு;
இடக்கை வலக்கை -என
இருபது கை..!
இருபது கைக்குள் இருந்தது
இலங்கை..! அதற்கு
இவந்தான் கட்டிவிட்டான்
புகழ்-
சலங்கை......


2. இது சிறகுகளின் நேரம் !
- விகடனில் தொடராக வந்த தொடர். கவிக்கோ அப்துல் ரகுமான் எழுதியவை.

3. நீல வானமும் சில நட்சத்திரங்களும்
- மலையாளச் சிறுகதைகள்.
-தகழி, பி.கேசவதேவ், உறூப், வி.டி.நந்தகுமார் , மலயாற்றூர் ராமகிருஷ்ணன் , எம்.முகுந்தன் , கோபிக்குட்டன் ஆகியோரின் மலையாளச் சிறுகதைகளை மொழிபெயர்த்திருக்கின்றார் சுரா.

4. ஜாக்கிசான்
- திரைக்கு பின் ஜாக்கிச்சான் வாழ்க்கை குறித்த பதிவு.

5. முன்னோடி
6. மணலும் நுரையும்
-இரண்டு புத்தகமும் கலில் ஜிப்ரான் என்ற தீர்க்கதரிசியின் பதிவுகள்.

7. பாக்யராஜின் பதில்கள்
- பொதுவாகவே நான் பாக்யராஜின் ரசிகன். அவரது கேள்வி பதிகளில் அதிக நாட்டம் கொண்டவன்.

8. நாஸ்டர்டாமஸ் சொன்னார், நடந்தது
-குவைத் நாட்டின் மீது சதாம் ஹுஸைன் ஆக்கிரமிப்பு நடத்தியப் போது; சமீபத்தில் நியூயார்க் கட்டிடங்கள் மீது ஒசாமா பின் லெடன் தாக்குதல் நடத்திய போதும்; உலக மக்கள் பரவலாக பேசியது இவரைப் பற்றிதான்.... இந்த தீர்க்கதரசி யார்...?
இவர் இன்னும் என்னவெல்லாம் சொல்லியுள்ளார்..?


வாய்ப்பிருப்பின் படித்தவற்றை பகிர்கின்றேன்.

இப்படிக்கு;

தயாஜி

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்